Tuesday, August 23, 2022

Sudhama story

🍊 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சரித்திரம் X 🍊
********************************
🍁 கிருஷ்ணர் எப்படி சுதாமாவை வரவேற்றார் ??🍁
🍒 துள்ளிக்குதித்து எழுந்தார் கிருஷ்ணர். ஒரு ஏழை நண்பனைக் காண அம்பு போல பாய்ந்து நண்பரைக் காணச்சென்றார். சுதாமா, உம்மை பார்த்து எவ்வளவு நாளாயிற்று ?
🍒 உம்மை மீண்டும் சந்திக்க நான் என்ன தவம் செய்தேனோ ? என் பாக்கியம் தான் என்னே என்று நெக்குருகிப் போன அவர் சுதாமாவை அணைத்தார். அந்த அணைப்பிலேயே சர்வ வறுமையும் அழிந்து போனது. இது எப்படி…
🍒 கிருஷ்ணரின் மார்பில் உறைபவள் அல்லவா மகாலட்சுமி. அவளது பார்வை சுதாமாவின் மேல் பட்டு விட்டது. வறுமை நீங்கி விட்டது. சுதாமாவுடன் வந்தவர்களுக்கம் தனி அறைக் குள் ஒதுக்கப்பட்டு விருந்து உபசாரம் தடபுடலா யிற்று.
🍒 கிருஷ்ணர் சுதாமாவுக்கு தனி மரியாதை செய்தார். சுதாமா ஒரு பிராமணர் என்ற முறையிலே, அவருக்கு பாதபூஜை செய்து, தீர்த்தத்தை தலையில் தெளித்துக் கொண்டார்.
🍒 ருக்மணியும் அவ்வாறே செய்தாள். பின்னர் தனது பஞ்சணையிலேயே அமரச்சொன்ன கிருஷ்ணர், "சுதாமா... அவந்தியில் இருந்து என்னைக் காண நடந்தே வந்தீரா, உமது கால் கள் எவ்வளவு வலித்திருக்கும் என்றவராய் அவரின் கால்களைபிடித்து விட்டபடியே பேசினார்.
🍒 நீண்ட நாள்களுக்கு பிறகு நண்பர்கள் சந்திக்க நேர்ந்தால், பள்ளியில் சக மாணவர்களுடன் செய்த குறும்பு, ஆசிரியருக்கு தெரியாமல் செய்த சேஷ்டைகள், நெகிழ்வான நிகழ்வுகள் என பல விஷயங்களைப் பற்றி பேசத்தானே செய்வோம். கிருஷ்ணர் சுதாமாவுடன் அந்த நிகழ்ச்சிகளையெல்லாம் நினைவு கூர்ந்தார்.
🍒 பின்னர் " சுதாமா... நம் பழைய நினைவுகள் பற்றியே பேசிக்கொண்டிருந்து விட்டேன். வீட்டைப்பற்றி விசாரிக்கவே இல்லை.
மன்னியார் சவுகரியமாக இருக்கிறாரா ? பிள்ளைகள் கல்விக்கூடம் செல்கிறார்களா ?" என்று குசலம் விசாரித்த கையுடன், 
🍒 "சுதாமா.. என் மன்னி என் மீது மிகுந்த பாசம் கொண்டவராயிற்றே.. எனக்காக பலகாரம் கொடுத்து அனுப்பியிருப்பாரே.. சுதாமா.. அதைக் கொண்டு வந்துள்ளீரா ?.." என்றதும், இங்குள்ள செல்வச் செழிப்பைப் பார்த்து அர ண்டு போயிருந்த சுதாமா, தன் கிழிந்த அங்க வஸ்திரத்தை மறைத்தார். விடுவாரா மாயக் கண்ணன், அதை அப்படியே பறித்து விட்டார்.
🍒 அவசர அவசரமாக பொட்டலத்தைப் பிரித்தார். ஒரு பிடி அவலை வாயில் போட்டார். அவல் வாய்க்குள் போனதோ இல்லையோ, அவந்தி யிலுள்ள சுதாமா வீடு மட்டுமல்ல…. அவரது ஊரிலுள்ள எல்லா குடிசைகளுமே மாளிகைக ளாகி விட்டன. எல்லாருமே செல்வத்தில் திளைத்தனர். இது இங்கிருக்கும் அப்பாவி சுதாமாவுக்கு எப்படி தெரியும் ?
🍒 இதற்குள் இன்னொரு பிடி அவலை எடுத்த வாயில் போடச் சென்ற போது, ருக்மணி தடு த்து விட்டாள். ஒரு இனிய கிருஷ்ண பக்தன் தனக்கு கிடைக்கப்போகும் பணத்தால் மனம் மாறி, பக்தியை மறந்து உலக இன்பங்களில் மூழ்கி விடலாம் இல்லையா ?
🍒 அதனால், அதில் இருந்து சுதாமரை காப்பாற் றினாளாம் அந்த தேவி. பின்னர் அங்கிருந்து விடைபெற்றார் சுதாமர். அவர் கிருஷ்ணரிடம் செல்வத்தைக் கேட்கவுமில்லை. அந்த மாயக் கள்ளன் நண்பனின் வறுமையைப் பற்றி எல்லாம் அறிந்திருந்தும் கேட்கவில்லை.
🍒 ஆனால், நண்பன் கொண்டு வந்த அழுக்குத் துணியில் இருந்த அவலை மட்டும் எடுத்துக் கொண்டார். பிறர் பொருளுக்கு யாரொருவன் ஆசைப்படுகிறானோ, அவன் அவ்வாறு பெற்றதை ஆண்டவன் ஏதாவது ஒரு வழியில் பறித்து விடுவான்
🍒 சுதாமரின் வாழ்விலும் இதுவே நிகழ்ந்தது. பால்யத்தில், இவர்கள் சாந்தீபனி முனிவரிடம் பாடம் கற்று வந்த போது, ஒருநாள் முனிவரின் மனைவி, இரண்டு குழந்தைகளையும் அழை த்து, சமையலுக்கு விறகு பொறுக்கிவர அனுப் பினாள். போகும்போது, இருவரும் சாப்பிட்டுக் கொள்ளுங்கள் எனசொல்லி, வெல்லம் கலந்த அவலைக் ஒரே பொட்டலமாகக் கொடுத்தாள்.
🍒 விறகு வெட்டிக்கொண்டிருந்த நேரத்தில், பசி யெடுக்கவே, குசேலர் பொட்டலத்தை பிரித்தார். சாப்பிட்டார். கிருஷ்ணரை அழைத்த அவரு க்குரிய பங்கை கொடுத்திருக்க வேண்டாமோ. ஆசையோ, பசியோ முழுமையாக சாப்பிட்டு விட்டான்.
🍒 அன்று கிருஷ்ணர் அதற்காக ஏதும் சொல்ல வில்லை. பகவான், உடனே எதையும் தட்டிக் கேட்க மாட்டார். இப்போது அவருடைய நேரம். அன்று தர வேண்டிய தனக்குரிய பங்கை எத்தனையோ வருடங்கள் கழித்து, இன்று கட்டாயமாக பெற்றுக் கொண்டார். 
🍒 உலகத்தில் பிறந்த யாராக இருந்தாலும், அடுத் தவன் பொருளை வலுக்கட்டாயமாக பறித்தா ல், அவன் இறந்தாலும் சரி, அவனுடைய வம்ச த்தில் வருபவனாவது நிச்சயமாக அதற்கு பதில் சொல்ல வேண்டிய காலம் வரும்.
🍒 ஒரு வழியாக சுதாமா அவந்தி வந்து சேர்ந்தார்.
🍒 அவந்தியில் அவர் மனம் எப்படி இருந்தது ??
     ஹரே ராம ஹரே ராம ஹரே ஹரே...
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே...
ஸ்ரீ கிருஷ்ணா உன் திருவடிகளே சரணம்.
           🍒 அவந்தியில் அவர் மனம் எப்படி இருந்தது ??
🍒 அங்கு வைத்து ஏதும் தரமறுத்த அந்த கள்வன் கண்ணன், குசேலர் ஊருக்குள் நுழைந்ததும், அடையாளமே தெரியாமல் உருமாறி விட்டார். உடலெங்கும் நகைகள் பளபளத்தன. கிழிந்த வஸ்திரம் பட்டு வஸ்திரமானது.
🍒 பகவானின் இந்த விளையாட்டில் அவருக்கு விருப்பமில்லை. இருந்தாலும், கிருஷ்ண நாம த்தை விடாமல் சொன்னபடி வீட்டை தேடியலை ந்தார். சுசீலை அவரை ஒரு மாடத்தில் நின்று அழைத்தாள். நம் வீடு இதுதான்.. இங்கே வாருங்கள் என்றாள்.

🍒 குழந்தைகள் தங்கம், வைரம், மாணிக்கச் சிறு தேர் ஓட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். இவ்வளவு வறுமையிலும், அவர் வீட்டில் கூலி யை என்றாவது ஒருநாள் வாங்கிக் கொள்ள லாம் என்று வேலை செய்து வந்த வேலைக்கா ரியின் கழுத்திலேயே நூறு பவுனுக்கு குறை யாமல் தொங்கியது.
🍒 இப்படி அதிசயங்களை நுகர்ந்தபடியே, வீட்டு க்குள் நுழைந்த சுதாமர், நடந்ததை அறிந்தார்.
🍒கிருஷ்ணா..ஏ மாயவனே.. என் ஆத்ம நண்பனே, அடேய்.. இந்த அழியும் செல்வத்தை நாடியா உன்னை நாடி வந்தேன். ஏ கயவனே என்னை ஏமாற்றி விட்டாயடா. நான் உன்னிடம் செல்வத்தை கேட்டேனா. என் பக்திக்கு மரியாதை அவ்வளவு தானா, தாமோதரா.. என் இதய த்தில் உறைபவனே .. பக்தன் என்றால் யார் தெரியுமா உனக்கு ?

🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿

🍒 யார் ஒருவன் தன் கஷ்டத்தை கடவுளிடம் கூட சொல்லமாட்டோனோ, அதை அவன் கொடுத்த வரப்பிரசாதமாக எண்ணி, அதையும் அனுபவி த்து ரசித்து வாழ்கிறானோ அவனே பக்தன். உன்னிடம் நான் தினமும் என்ன கேட்கிறேன் . அழியா உலகான வைகுண்டத்தில் ஒரு இடம் உன் கமல பாத தரிசனத்தை தினமும் காணும் பாக்கியம். இந்த நிரந்தரச் செல்வத்தை நாடிய ல்லவா வந்தேன்.. பரந்தாமா.. இந்த செல்வம் எனக்கு வேண்டாமடா... என்னை உன்னோடு சேர்த்துக் கொள், எனக் கதறினார்.
🍒 நண்பனின் கதறல் கண்டு கிருஷ்ணர் பொறு ப்பாரா ! வந்து விட்டார் சங்கு சக்ர காதாதாரி யாய் குசேலர் அவருடன் ஐக்கியமானார்.
🍒 பகவான் கிருஷ்ணரின் இந்த வரலாற்றை படித்தவர்கள் இதிலுள்ள கருத்துக்களை பின் பற்றி நடந்தால், இப்பிறவியில் எல்லா இன்ப மும், பிறப்பற்ற நிலையும் பெறுவது உறுதி..
      🍅 ஸ்ரீ கிருஷ்ண சரிதம் முற்றும்..🍅
   🌹🍒ஸ்ரீவைஷ்ணவிஸம் முகநூலிலிருந்து எடுத்தது.

No comments:

Post a Comment