ஒரே வரியில் அத்தனை தெய்வங்களையும் வர்ணிக்க முடியுமா?
முடியும்.
" சிரமாறு உடையான் "
1. சிரம் மாறு உடையான் - தலையது மாறி வேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும்.
2 . சிரம் ஆறு(6)உடையான் - ஆறு முகம் படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும்.
3 . சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும்.
4 . சிரம் மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம்
பிரம்மாவைக்குறிக்கும்.
5. சிரம் ஆறு(river) உடையான் - காவிரி ஆற்றில் தலை வைத்து சயனித்திருக்கும்
ஸ்ரீரங்கநாதரைக்குறிக்கும்
No comments:
Post a Comment