शालितण्डुलमाहृत्य पृष्टं सम्यक् प्रकल्पयेत्।
त्रिपादं गुळसंयुक्तं तदर्धं नाळिकेरकम्।।
तदर्धं मुद्ग संयुक्तं अष्टांशं आज्यसंयुतम्।
एलकं जीरकं चैव हिंगुम् युक्त्वा प्रकल्पयेत्।।
गौरीञ्च दापयेत् पश्चात् भक्तानां दापयेत् ततः।।
மேற்கண்ட ஸ்லோகமானது உத்தராகமத்தில் திருவாதிரையன்று பரமேஸ்வரனுக்கு நிவேதிக்கப்படும் களியை எவ்வாறு பக்வம் செய்யவேண்டும் என்பதற்கான ஸ்லோகமாகும். அந்த ஸ்லோகத்தின் ஸாராம்ஸம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கையால் குத்தப்பட்டு நுனிமுறியாமல் எடுக்கப்பட்ட அரிசியை குருணையாக்கி. அவ்வாறு குருணையாக்கியதின் ஒரு பங்கு அரிசி குருணையை எடுத்து, அதில் முக்கால் பங்கு நல்ல பாகு வெல்லம் சேர்த்து, அதனுடைய அரைபங்கு தேங்காய் சேர்த்து, அதனினும் அரை பங்கு பயத்தம் பருப்பு சேர்த்து. அரிசிகுருணையின் அளவின் எட்டு பங்கு சுத்தமான பசு நெய் சேர்த்து, அதனுடன் ஏலக்காய், ஜீரகம், (பெருங்காயமும்) சேர்த்து பக்வம் செய்து பரமேஸ்வரனுக்கு அதிகாலை சூர்யோதயத்திற்குள் நிவேதிக்க வேண்டும்.
பரமேஸ்வரனுக்கு நிவேதனம் செய்ததை, அம்பாளுக்கு நிவேதித்து, ஈஸ்வர ப்ரஸாதமாக பக்தர்கள் அனைவரும் க்ரஹித்துக்கொள்ளவேண்டும் என கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment