Tuesday, December 28, 2021

Pancha puranam singing means what?

https://youtu.be/RAC12VgLjS0

பொதுவாக, கோயில்களில் ஆறு கால பூஜைகள், நான்கு கால பூஜைகள், இரண்டு கால பூஜைகள் என வசதிக்கேற்றபடி நடைபெறுவது உண்டு. சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், தூப, தீப ஆராதனை நடைபெற்ற பிறகு, வேதங்களை இசைப்பார்கள் வேதியர்கள். அவர்கள் முடித்த பிறகு திராவிட வேதமெனும் தமிழிசைப் பாக்களை ஓதுமாறு கூறுவார்கள். சிலர் பஞ்ச புராணம் பாடுங்கள் என்றும் கூறுவர்.

தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, பெரியபுராணம் ஆகிய ஐந்து நூல்களில் இருந்து ஒவ்வொரு பாடலைத் தேர்ந்தெடுத்துப் பாடுவதே பஞ்சபுராணம் ஓதுதல் ஆகும்.
மந்திர நாயகனான சிவனை பஞ்சபுராணம் என்னும் அஞ்சுபாடல் பாடி வழிபட்டால் கஷ்டங்கள் பஞ்சாய் பறந்திடும் என்பர். தினமும் உங்கள் பூஜை முடிக்கும் முன் ஓதி வருவது சிறந்த பலனை தரும்.

*இன்று ப்ரதோஷம். இந்த நன்னாளில் பஞ்சபுராணம் ஓதி / கேட்டு உளமார பரமேஸ்வரனை பிரார்த்தனை செய்வோம்.*

No comments:

Post a Comment