Monday, November 1, 2021

Kurai onrum illai part57 in Tamil

குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் தொடர்ச்சி 
பகுதி ( 57 )
முக்கூர் லஷ்மி நரசிம்மாசார்யார்
யானையை முதலை பிடித்து தண்ணீருக்குள் இழுக்கிறது. யானையோ கரைப் பக்கம் இழுக்கிறது . இரண்டும் சண்டை போடுகிற காட்சியை சுக பிரும்ம மஹரிஷி விவரிக்கிறார். பரீக்ஷித் அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறார் .. விஷ்ணு தர்மத்தில் வருகிற சுலோகம் அது ...
விஷ்ணு தர்மம் என்று ஒரு க்ரந்த்ம் - விஷ்ணு புராணம் மாதிரி....
பரீக்ஷித்திற்கு சந்தேகம் ஏற்படுகிறது..
' சுவாமி இப்படி எத்தனை நாள் ஒன்றை ஒன்று இழுத்தது '.. ? என்றான்
'ஒரு நாளா! இரண்டு நாளா ... கதையை சொல்லி முடிக்க! ஆயிரம் வருஷ காலம் ' என்கிறார் சுகப் பிரும்ம மஹரிக்ஷி.
ஆயிரம் வருஷ காலம் இது உள்ளே இழுக்க, அது வெளியே இழுக்க, இப்படியே சண்டை போடுகின்றன..
முதல் ஐந்நூறு வருஷமும் ஒருவிதமான சண்டை....
அடுத்த ஐந்நூறுவருஷம் வேறுவிதமான சண்டை.. ! முதல் ஐந்நூறு வருஷம் ' நான் எனக்கு உரியவன் என்ற நிலையிலே சண்டை. நடந்தது . அதுதான் அகங்காரம் . எனக்கு எல்லாம் தெரியும் 'என்ற எண்ணம் .
' இந்த முதலை என்ன முதலை? இதைப் பிடித்துஇழுத்து காலால் தேய்த்து, இருக்கிற இடம் தெரியாமல் பண்ணிவிட மாட்டேனா' என்கிற அகங்காரம் . அந்த சக்தி எனக்கு உண்டு என்கிற அகங்காரத்துடன் 499 வருடங்கள் சண்டை போட்டது. ஐந்நூறாவது வருடம் வந்தது.. அப்போது யானையின் கால்களை மீன்கள் குத்தி குத்தி அழுக ஆரம்பித்தது. நிற்க முடியாமல் அதன்
எலும்பெல்லாம் வெளியே தெரிந்தது. ஜலத்திலேயே அது விழுந்து விடும் போலிருந்தது..
தன்னை ரக்ஷித்துக் கொள்ளும் சக்தி தன்னிடம் இல்லை என்பதை ஐந்நூறாவது வருஷத்தில் தெரிந்து கொண்டது யானை.
கரையைத் சுற்றி அதன் பத்தினிகள், அத்தனை உறவுகளும் 500 வருஷமாக அந்த யானை படும் அவஸ்தையை எல்லாம் பார்த்துக் கொண்டு நிற்கின்றன. அப்போது அந்த யானை தன் உறவினரை பார்த்து, ' நான் அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிறேனே.. நீங்களெல்லாம் எனக்கு உபகாரம் பண்ணக் கூடாதா ' என்று கேட்கிறதாம் .
அந்த தீனமான பார்வையை பார்த்து உபகாரம் பண்ணனும் என்கிற எண்ணமே அவற்றுக்கு 500 வருஷம் கழித்து தான் வந்ததாம் ! ஒவ்வொரு யானையும் துதிக்கையை நீட்டி முதலையிடம் சிக்கிய யானையை இழுக்க ஆரம்பித்ததாம். அப்போதும் முதலையிடம் சிக்கிய யானை வெளியே வரவில்லையாம்...இழுக்கப்பட்ட யானைகளெல்லாம் தண்ணீரில் விழ ஆரம்பித்து விட்டன.!! அவை பயத்தில் காப்பாற்றும் முயற்சியை விட்டு விட்டு கரைக்கு வந்து விட்டன.
'என்ன செய்வது. விதி வலியது. முதலை பிடித்து இழுக்க நீ இப்படி ஜலத்திலே சாக வேண்டும் என்று பகவான் எழுதி விட்டான் . நாம் என்ன பண்ண முடியும்..'என்று கரையேறி. யானைகள் அழ ஆரம்பித்தன.
ஆனால் விதியை ஜெயித்து அந்த யானை வெளியே வரத்தான் செய்தது.. எப்படி?
அதை நாளை பார்க்கலாம் !!!
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.

No comments:

Post a Comment