Tuesday, November 23, 2021

Acharya pillai

ஸ்ரீ நாயனாராசார்யன் பிள்ளை திருநட்சித்திரம் --ஆவணி ரோகிணி
(இன்று 30/08/2021)
🙏🙏🌵🌺🌻🌼🌸🌹🙏

ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அவதரித்த பேறுடைய, ஆவணி ரோகிணியில், பல மகான்கள் அவதரித்துள்ளார்கள்.
ஸ்ரீபெரிய வாச்சான் பிள்ளை மற்றும் ஸ்ரீபெரும்புதூர் ஒண்ணான அப்பன் திருவேங்கட ராமநுஜ எம்பார் ஜீயர் ஸ்வாமி ஆகியோரைப் பற்றி முந்தைய பதிவுகளில் பார்த்தோம்.பெரிய வாச்சான்
பிள்ளையின் ஸ்வீகார புத்திரரான ஸ்ரீ நாயனார் ஆசார்யர் பிள்ளையும் இதே திருநட்சித்திரத்தில் அவதரித்தது ஒரு அபூர்வமான வைபவம்.

நாயானாராசார்யன் பிள்ளை தனியன்:
          🔊📢📣📯🎺🎷🔔
"ஸ்ருத்யர்த்த ஸாரஜநகம் ஸ்ம்ருதிபாலமித்ரம் பத்மோல்லஸத் 
பகவதங்க்ரி புராண பந்தும்|
ஜ்ஞாநாதிராஜம் அபயப்ரதராஜபுத்ரம்
அஸ்மத்குரும் பரமகாருணிகம் நமாமி |!"

"வேதப்பொருள்களின் ஸாரத்தைக் கடைந்து எடுப்பவராய், ஸ்ம்ருதிகளாகிற தாமரைகளுக்கு இளஞ்சூரியனாய், ஸ்ரீய:பதியின் திருவடிகளுக்குப் பழைய உறவினராய், ஞானங்களுக்குப் பேரரசராய், அபயப்ரதராஜரின் பிள்ளையாய், பரமகாருணிகரான என் ஆசார்யனை வணங்குகிறேன்"

தம்முடைய திருத்தகப்பனாரும் ஆசார்யருமான பெரியவாச்சான் பிள்ளையிடம் சகல சாஸ்திரங்களையும் கேட்டு அறிந்தார்.
பிள்ளை லோகாசார்யார் மற்றும் அழகிய மணவாள பெருமாள் நாயனார் போன்றோர் வாழ்ந்த சம காலத்தில் இவரும் வாழ்ந்தார்.

மற்ற திருநாமங்கள்:

ஸுந்தர வரராஜாசார்யர்(அழகிய மணவாளப்பெருமாள் நாயனார்)
சௌம்யவரேஸ்வரர்.
இவருடைய பாண்டித்வத்யத்தைப் போற்றும்படி"ஸ்ரீ ரங்கராஜ தீக்ஷிதர்" என்றும் அழைக்கப்பட்டார்.

அருளிச்செய்த கிரந்தங்கள்:
     📚📔📕📖📗📘📙📚
1.சரம உபாய நிர்ணயம் - எம்பெருமானாரே உத்தாரக ஆசார்யர் என்னும் பரம ரஹஸ்யத்தை விளக்கும் மிக அற்புதமான கிரந்தம்.நம்முடைய ஸம்ப்ரதாயத்தில் எம்பெருமானாருக்கு உள்ள சிறப்பான நிலையையும் காட்டுவதாக உள்ளது.

2. சதுஸ்லோகி வ்யாக்யானம் - இந்த கிரந்தத்தில் பிராட்டி பற்றிய பூர்வாசார்ய நிர்ணயத்தை மிக விரிவாக விளக்கியுள்ளார்.

3 தத்வ ஸங்க்ரஹம் - பிராட்டி விஷயமாக மற்றொரு கிரந்தம்.

4. முக்தபோகாவளி: முக்த போகாவளி
யின் ஆழ்ந்த அர்ததங்களையும் கருத்துக்
களையும் கண்ட பெரியவாச்சான் பிள்ளை, அதை மிகவும் புகழ்ந்து நம்முடைய சம்பிரதாயத்தின் ஸாரத்தை மேலும் அவருக்கு விவரமாக கற்பித்தார்.

5. ஜ்ஞாநார்ணவம்

6 தத்வத்ரய விவரணம்

7 அணுத்வபுருஷகாரத்வஸமர்த்தனம்

8 சரமரஹஸ்யத்ரயம்---
மற்றும் பல கிரந்தங்கள்.

சிஷ்யர்கள் : 
பெரிய வாச்சான் பிள்ளையின் சிஷ்யர்களான வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர், ரங்காசார்யார், பரகாலதாஸர் போன்றோர் பகவத் விஷயங்களை நாயனாராச்சான் பிள்ளையிடமிருந்தே கற்றுக் கொண்டனர்.இவருக்கென்று மேலும் பல சிஷ்யர்களும் இருந்தனர்.

(--அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்)

No comments:

Post a Comment