*பிராமணனை காப்பாற்றும் ஆயுதம் தர்ப்பை* 👇
______________*___________
" *வஜ்ரோ யதா சுரேந்த்ரஸ்ய சூலம் ஹஸ்த ஹரஸ்ய ச*
*சக்ராயுதம் யதா விஷ்ணோ: ஏவம் விப்ரகரே குச:"*
- *அதர்வண வேதம்.*
*அதர்வண வேதம் தர்ப்பையின் பெருமையை பலவாறு கூறுகிறது.*
*இந்திரன் கையில் உள்ள வஜ்ராயுதம், சிவன் கையில் உள்ள சூலாயுதம், விஷ்ணு கையில் உள்ள சக்ராயுதம் ஆகியனவற்றுக்கு எவ்வளவு சக்தி உண்டோ அவ்வளவு சக்தி பிராமணன் கையில் உள்ள தர்ப்பைப் புல்லுக்கு உண்டு.*
பாதாளத்தில் மூழ்கிக் கிடந்த பூமியை இந்த ஆதி ஸ்வேத வராஹ மூர்த்தி மேலே எடுத்து அதைத் தன் சக்தியால் ஜலத்தின் மீது நிலை நிற்கச் செய்தபோது ,தன் சரீரத்தை உதறும் காலத்தில் அந்தச் சரீரத்திலுள்ள ரோமங்கள் பச்சை நிறமுடைய தர்ப்பங்களாகவும் நாணல்களாகவும் விளைந்தன.
அந்த தர்ப்பங்களாலும் நாணல் களாலும் யஜ்ஞங்களுக்கு விரோதி களான ராக்ஷஸர்களை அழித்து ரிஷிகள் யஜ்ஞங்களால் பகவானை ஆராதித்தார்கள். ஆகவே தான் அவைகள் மிகவும் புனிதமாக கருதப்படுகிறது தர்ப்பை
*தர்ப்பையில் ஏழுவகை உண்டு.அவை,* 👇
1)குசை
2)காசம்
3)தூர்வை
4)விரிகி
5)மஞ்சம்புல்
6)விசுவாமித்திரம்
7)யவை
என்பவை.
தோற்றத்தைப்பொறுத்து இவை ஆண், பெண், அலி என மூன்று வகைப்படும்.
நுனிப்பகுதி பருத்துக் காணப்படுவது பெண்தர்ப்பை எனவும், அடிப்பகுதி பருத்திருந்தால் அது அலி தர்ப்பை எனவும், அடிமுதல் நுனி வரை ஒரே சமமாக இருந்தால் ஆண் தர்ப்பை எனவும் கூறப்படுகிறது.
*பெரும்பாலும் யாரும் அலி தர்ப்பையை உபயோகப்படுத்துவது இல்லை .*
*ஆண்தர்ப்பையில் மிகவும் கூர்மையானது வசிஷ்டம் என்றும் மிருதுவாக இருப்பது விஸ்வா மித்ரம் என்றும் கூறுவார்கள். இவை இரண்டுமே விசேஷ குணம் உடையவை* .
இந்த தர்ப்பையை எல்லாவிதமான கிரியைகளுக்கும் கை விரலில் மோதிரமாக அணிந்து கொள்ளும் வழக்கம் புராண காலத்திலிருந்தே உள்ளது.
*அதர்வண வேத்உ சொல்கிறது ,*
" **பூதப் பிரேத பிசாசாஸ்ச யே சான்யே ப்ரம்மராக்ஷசா:*
*விப்ராங்குலி குசான் த்ருஷ்ட்வா தூரம் கச்ச அதோ முகா:"**
*பிராமணன் விரலில் உள்ள "விப்ர+அங்குலி+குசான் "தர்ப்பையைப் பார்த்தவுடன் பூதங்கள், ஆவிகள், பிசாசுகள், பிரம்ம ராக்ஷஸர்கள் ஆகியோர் பயந்துகொண்டு தலை குனிந்தவாறு ஓடிப் போய் விடுவார்கள் .*
*கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராம்மணன் அஹங்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாபங்களை அழிப்பான் என்கிறது.*
*இதனாலேயே இந்த தர்ப்பையினால் செய்யப்படும் மோதிரம் போன்ற அமைப்பு பவித்ரம் என்று அழைக்கிறோம்.*
*பவித்ரம் என்றால் பரம சுத்தமானது என்று அர்த்தம்*
*இந்த பவித்ரம் செய்யப்படும் கர்மாவுக்கு ஏற்ப தர்ப்பை புல்லின் எண்ணிக்கை மாறுபடுகிறது. அவை :-*
*1) ப்ரேத கார்யங்களில் ஒரு தர்ப்பை*
*2) சுப கர்மாவில் 2 தர்ப்பை*
*3) பித்ரு கர்மாவில் 3 தர்ப்பை*
*4) தேவ கர்மாவில் 5 தர்ப்பை*
*5) சஷ்டியப்த பூர்த்தி போன்ற சாந்தி கர்மாவில் 6 தர்ப்பை*
*தேவ கார்யங்களுக்கு கிழக்கு நுனியாகவும் பித்ரு கார்யங்களில் தெற்கு நுனியாகவும் உபயோகப் படுகிறது.*
*ஹோமங்களில் பரிஸ்தரணம், ஆயாமிதம், ப்ரணீதா போன்றவை களிலும் தர்ப்பங்கள் இடம் பெற்றுள்ளன, ச்ராத்த மற்றும் தர்ப்பண காலங்களில் ஸ்தல சுத்தி, ஆஸனம், கூர்ச்சம் போன்றவைகள் தர்ப்பங் களினால்தான் செய்யப் படுகின்றன.*
*குறிப்பாக தர்ப்பங்களில் தர்ப்ப கூர்ச்சத்தினால்தான் (அல்லது தர்ப்ப ஸ்தம்பம்) ப்த்ருக்களை ஆவாஹணம் செய்யச் சொல்லி யுள்ளது.*
**கலச ஸ்தாபனம் போது மாவிலை கொத்து தேங்காயுடன் தர்ப்ப கூர்ச்சம் வைப்பது இன்றி யமையாதது.*ஏனென்றால் தர்ப்பை வழியாக ப்ராண சக்தி கும்பத்துக்குள் வருகிறது* .*
*கல்யாணத்தில் கல்யாண பெண்ணிற்கும், சீமந்தத்திற்கும் அதே மாதிரி உபநயனத்தில் வடுவிற்கும் இடுப்பில் தர்ப்பங்களினாலான கயிற்றை மந்த்ர பூர்வமாக கட்டும் ப்ரயோகமும் இருந்து வருகின்றது.*
*உபயோகப்படுத்தும் தர்ப்பங்களின் நுனி உடையாமல் இருக்க வேண்டும். ப்ரயோகங்களில் நுனி இல்லாத தர்ப்பங்கள் ஆஸனத்தைத் தவிர மற்றதுக்கு உபயோகப் படுவதில்லை.*
*தர்ப்பத்தினாலான ஜப ஆஸனம் (பாய்) மிகவும் விசேஷம். தர்பாஸனத்தில் அமர்ந்து செய்யும் பூஜை மற்றும் ஜெபங்களுக்கு பலமடங்கு சக்தி உண்டு.*
*கர்மாக்களின் துவக்கத்தில் கணவன் ஸங்கல்பம் செய்யும் போது மனைவி கணவனை நேரிடையாக தொட்டுக் கொள்வதில்லை. தர்ப்பங்களினால் தான் கணவனை ஸ்பரிக்கச் சொல்லியுள்ளது. தர்ப்பங்கள் தான் அவர்களுக்கு அங்கே இணைப்பாக உபயோகப் படுத்தப்படுகிறது.*
*க்ரஹண காலங்களில் (சூர்ய மற்றும் சந்திர) இல்லத்தில் ஏற்கெனவே பக்குவமாக்கி இருக்கும் பதார்த்தங் களிலும் குடிநீரிலும், தர்ப்பங்களைப் போட்டு வைத்தால் எந்த தோஷமும் அவற்றுக்கு ஏற்படாது.*
**ப்ராம்மணனுக்கு தர்ப்பை புல் ஒரு ஆயுதம். முனிவர்களும், ரிஷிகளும் தர்ப்பைப் புல், தண்ணீர், மந்திர சக்தி மூன்றையும் இணத்து செயற்கரிய செயல்களைச் செய்தனர்.*
*வரம் கொடுத்தனர், சாபம் கொடுத்தனர், அஸ்திரங்களைப் பிரயோகித்தனர்.*
*பிரபஞ்சத்தில் ப்ராண சக்தியை கடத்தும் சக்தி தர்ப்பைக்கு உண்டு.அதனாலயே சங்கல்பத்தில் "தர்பான் தாரயமான: " என்று விரலில் இடிக்கிக்கொண்டு ப்ராணாயாமம் செய்கிறார்கள்* .**
*குசபாணி சதா திஷ்டேத் பிராம்மணோ டம்பவர்ஜித:*
*ச நித்யம் ஹந்தி பாபானி தூல ராசிமிவாநல:*
*கையில் தர்ப்பைப் புல்லுடன் உள்ள பிராம்மணன் அஹங்காரம் இல்லாமல் இருப்பானாகில், அக்னியைக் கண்ட பனி ஒழிவது போல அவன் பாபங்களை அழிக்கவல்லான் .*
*தர்பை ஒரு மிகச்சிறந்ந மின்கடத்தி ! அது ஆற்றலையும் கடத்தவல்லது !* *தர்பையை உபயோகப்படுத்திய பின் அதை நன்கு பிரித்து வடக்கே போட வேண்டும் ! பின்பு கண்டிப்பாக ஆசமனம் செய்தால் தான் நாம் தர்பையை உபயோகித்து செய்த கர்மா பலன் அளிக்கும் !*
*பிராமணனுக்கு ஆயுதமே தர்பை தான் !*🙏🙏🙏🙏🙏
No comments:
Post a Comment