அழகான ஆன்மீகம்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
#ஸ்ரீமகாபெரிவாமகிமைகள் ..346
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
1956, அப்பா, கல்லூரி வேலையில் சேர்ந்தார்.
முதன் முதாலாகப் பெரியவாள் தரிசனத்துக்கு மடத்துக்குப் போனார். கூட்டம் அதிகமில்லை.
அப்பாவுக்கு அருமையான சந்தர்ப்பம். தன்னுடைய வடமொழிப் புலைமையை வெளிப்படுத்தி, பெரியவாளிடம் அங்கீகாரம் பெறத்துடித்துக் கொண்டிருந்தார். பொன்னான வாய்ப்பை நழுவ விடுவாரா?.
"அஹம் சிவசுப்ரமண்ய சாஸ்திரி, பச்சையப்பன் மஹாவித்யாலயே...!
பெரியவாளின் பார்வை, அவர் பேச்சுக்குத் தடை போட்டாற் போலிருந்தது.
ஆமாம். தடைதான்.
'சிகை இல்லாமல் சம்ஸ்கிருதத்தில் பேச வேண்டாம்' என்று, கடுமையான உத்திரவு.
அப்பா, ஸ்தம்பித்துப் போய்விட்டார். அவர், அப்போது கிராப்புத் தலை.'கிராப்புத் தலைக்குள் வடமொழி வாடிப் போய்விடுமா?
அப்பாவுக்கு இளமை முறுக்கு, வந்ததே கோபம்.
சுவாமிகள், என்ன, இப்படிச் சொல்லி விட்டார்கள்! பெரியவாளுக்கு இவ்வளவு உஷ்ணமாகப் பேசத் தெரியுமா...என்ன?.. சரி, தரிசனத்துக்குப் போனால்தானே இந்த சிகைப் பிரச்சினை? வேண்டாம். இந்த ஊரில் ஆயிரம் கோவில்கள் இருக்கின்றன. தெய்வ தரிசனம் செய்யவேண்டும் போலிருந்தால் கோவிலுக்குப் போகிறேன்? மடத்துக்குத்தான் போகணுமா,என்ன?.
பல வருஷங்கள்....மடத்துப் பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை, என் அப்பா!
அம்மாவால் அவ்வளவு வைராக்கியமாக இருக்க முடியவில்லை.'காஞ்சிபுரத்தில் இருப்பதே, மகா பெரியவாளை தினமும் தரிசனம் பண்ணுவதற்காகத் தானே? என்பாள்.
ஒரு தடவை, அம்மாவுக்குப் பிரசாதம் கொடுக்கும் போது, 'அவனுக்கு என்மேலே கோபம்; குடுமி வைத்துக்கொள்....என்றேன். வீம்பு வேண்டாம். தரிசனத்துக்கு வரச்சொல்லு' என்று உத்திரவாகியது.
அப்புறம், அப்பாவும் தரிசனத்துக்குப் போகத் தொடங்கினார். ஆனால் ஒவ்வொரு தடவையும், சிகை விஷயம் மட்டும் நினைவுக்கு வராமல் இருப்பதில்லை.
ஒரு நாள், பெரியவாளே சொல்லிவிட்டார்கள்; 'நீ, சிகை வைத்துக் கொள்ளணும்னு தான் என் அபிப்ராயம். அதனாலே, சங்கடப் பட்டுண்டே இருக்காதே. உனக்கு எப்போ சௌகரியப்படுகிறதோ, அப்போ சிகை வெச்சுக்கோ..'
அப்பாவுக்கும் சமாதானமாகிப் போய்விட்டது.
ஆனால், சிகை விஷயம் மறைந்து போய்விடவில்லை.அவ்வப்போது புகைந்து கொண்டு தான் இருந்தது.
பெரியவாளுக்கு டிரிக்கெல்லாம் தெரியும். 'நேரில் பார்த்துக் கேட்டால் தானே, இந்த சாஸ்திரிக்குக் கோபம் வருகிறது. அவனை வேறு விதமாக மடக்கிப் போடுகிறேன் பார்!'
கனவில் வந்து பேச ஆரம்பித்து விட்டார்கள் பெரியவாள். அப்பா என்ன செய்வார் பாவம்!. கனவு வராமல் தடுக்கமுடியுமா? நாளடைவில் பெரியவாளின் சொற்களில் மிரட்டல் அதிகமாகிவிட்டது-கனவில் தான்..
'நான் உயிரோடு இருக்கும் வரை, நீ சிகை வெச்சுக்கமாட்டே? அப்படித்தானே? உன்னை நான், சிகையோடு பார்க்கக் கூடாதுன்னு ஏன் பிடிவாதமா இருக்கே?"
அப்பா வெலவெலத்துப் போய்விட்டார்.
அப்பா ரொம்ப நாள் கழித்துச் சொன்னார்;
"சிகை வைத்துக் கொண்டால், இவ்வளவு கௌரவம் கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், நான் எப்போதோ சிகை வைத்துக் கொண்டிருப்பேன்.!"
Jaya Jaya Shankara Hara Hara Shankara
இந்தக் கனவு தோன்றி, பொழுதுவிடிந்த நாளே க்ஷவரம் செய்து கொள்வதற்கு ஏற்ற நாளாக இருந்தது நாள்,நட்சத்திரம் பார்த்துத்தான் அப்பா முடி நீக்கம் செய்து கொள்வார்.
அது அவர் காலம்.---(இது என் காலம்)..அமாவாசை அன்றைக்குக்கூட கன்னம்,முடிமழித்தல் கனஜோராய் நடக்கிறது.
பித்ருக்கள் கண்ணை மூடிக்கொண்டு சகித்துக்கொள்ளவேண்டும்.இல்லாவிட்டால் மாதாந்திர தாகசாந்தி கூட கிடைக்காது.
சிகை வைத்துக்கொண்டாகிவிட்டது...1976ல்.! கல்லூரிக்குப் போக வேண்டுமே? அவமானம்,வெட்கம் என்று எத்தனையோ உணர்ச்சிகள்.
குனிந்த தலை நிமிராமல்,(ஆக்ஸிடென்ட் ஏற்படாமல்) சைக்கிளில் ஏறிப்போனார்,கல்லூரிக்கு.
"அட ! என்னய்யா ! என்ன, ஆச்சு...?"
"பெரியவா ஆக்ஞை"
கையெடுத்துக் கும்பிட்டார்கள். கேலிக்கூத்தை எதிர்பார்த்துச் சென்றவருக்கு, ஏகமரியாதை. சென்றவிடமெல்லாம் சிறப்பு.
ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர காஞ்சி சங்கர காமகோடி சங்கர மகாபெரிவா சரணம் சரணம் சரணம் சரணம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
மகாபெரிவா மகிமைகள் தொடரும்....
அன்புடன் உங்கள் SV 😊😊tuft -Periyavaa
No comments:
Post a Comment