Sunday, April 25, 2021

Story of Narada

நாரதர்!
நாரதர் என்றால் என்ன! முன் ஜென்ம விருப்பம்!
வேத வித்துக்களிடம் பணி புரிந்த வேலைக்காரின் மகனாகப் பிறந்து அவர்களுக்கு பணிவிடை செய்து வந்ததால் பிரம்ம வித்தையை உபதேசம் பெற்று எதையும் அர்ப்பணமாக செய்து வர பக்தியும் ஞானமும் வளர்ந்தது. தாயார் இறந்துவிட வடக்கே புறப்பட்டுச் சென்று ஓர் நதியில் நீராடி நீரை அருந்தி உபதேச மந்திரத்தை ஜபித்து கிருஷ்ணனை தியானிக்க உள்ளத்தில் தோன்றி மறைந்து விட்டார். பின்னர் இப்பிறவியில் என்னைக் காணும் தகுதி உனக்கில்லை என் அசரீரி எழுந்தது. உள்ளத்தை இருத்தி பற்றின்றி இருக்க பஞ்சபூத சரீரம் விழ புண்ணிய சரீரம் கிடைத்தது.
சத்ய யுகத்தில் சாரஸ்வதன் என்பவன் அவந்தி நகரில் வாழ்ந்திருந்தான். ஒருநாள் அமைதியாக அமர்ந்திருந்தவனுக்கு வாழ்க்கை நிலையில்லாதது, பயனற்றது எனதோன்றியது. எதனால் இந்த எண்ணம் வந்தது என அவனுக்குத் தெரியவில்லை. தனது செல்வங்கள் எல்லாவற்றையும் தனது புத்திரர்களிடம் அளித்துவிட்டு ஸ்ரீமன்நாராயணனை நோக்கி தியானம் செய்ய ஆரம்பித்தான். தன் முன் தோன்றிய பகவானிடம் என்னை தங்களுக்குள் இனைத்துக் கொள்ளுங்கள் என வேண்டினான். சாரஸ்வதா சிறந்த பக்திமானான நீ இன்னும் பல ஆண்டுகள் வாழவேண்டியுள்ளது. உனது முன்னோருக்கு நீ தர்ப்பணமாக அளித்த உணவும் நீரும் எனக்கு மகிழ்வைத் தந்தன. அதனால் உனக்கு நாரதன் என்ற பெயரை அளிக்கின்றேன். (நாரதர்-நீர் அளித்தவர்) சிறிது காலத்தில் சாரஸ்வதன் இயற்கையெய்தி பிரம்ம லோகத்தில் இருந்தான். பின்னர் பிரம்மாவின் புத்திரனாக தோன்றி பகவான் அளித்த பெயரால் நாரதன் என அழைக்கப்படலானான்.
மனிதர்கள் எதனால் நரர்கள் எனப்பட்டனர்! ஐம்பூதங்களும் ஒரு மனித உடலில் பரவியிருந்தாலும் நீரின் அளவே அதிகமாகும். பிராண ஆதாரம் நீராகும். அதனால்தான் மனிதர்கள் நரர்கள் எனப்பட்டனர். அந்த நீரில் உறைபவனான விஷ்ணுவை நாராயணன் என்றனர்
நாரதர் பெற்ற சாபங்கள்!
பிரம்மாவின் மூச்சுக்காற்றில் கலந்து மாரீசி போன்ற ஒன்பது முனிவர்களுடன் மானச புத்திரனாக தோன்றினார் நாரதர், பிரம்மன் நாரதரை அழைத்து மற்றவர்களைப் போலவே நீயும் எனக்கு படைப்புத் தொழிலில் உதவி செய்ய வேண்டும் எனக் கேட்க, தந்தையே என் மனம் மோட்ஷத்தை அடைய விரும்புகின்றது. பிரம்மச்சாரிய விரதத்தை கடைபிடிக்கும் வழிமுறைகளை எனக்கு தாங்கள் போதிக்க வேண்டும் என்றார். கோபம் கொண்ட பிரம்மன் நாரதா நீ மேற்கொள்ள என்னும் பிரம்ச்சரிய விரதம் அழிந்து குடும்பஸ்தனாக இருந்து பல சிக்கல்களுக்கு ஆளாக வேண்டும், கந்தர்வ குலத்தில் பிறந்து பல பெண்களை மணந்து அவதிப்பட்டபின் ஒரு முனிவரின் சாபம்பெற்று தாழ்குலத்தில் மானிடனாக பிறந்த பின்னரே உனக்கு சாப விமோசனம் கிட்டும் எனச் சாபம் கொடுத்தார்.

பிரம்மனின் சாபப்படி கந்தர்வர்களில் சிறந்த இசைமேதையான உபன் மகனாக உபவருக்கன் என்ற பெயரில் பிறந்து மகதி என்ற யாழ் கொண்டு பாடும் பேராற்றல் பெற்றிருந்தான். முனிவர்கள் உபவருக்கனை தங்கள் ஆஸ்ரமத்திற்கும் யாக சாலைக்கும் அழைத்து சாமகானம் இசைத்துப் பாடச் சொல்லி ஆனந்தப்பட்டனர்.

பிரம்மசிரேஷ்டிரர் முனி தன் யாகசாலைக்கு உபவருக்கனை அழைக்க சாமகான வேதத்தை யாழிசையுடன் இசைத்துக் கொண்டிருக்கும்போது அங்கிருந்த இளம் பெண் இந்த இசையில் மயங்கியிருக்க அவளைப் பார்த்த உபவருக்கனும் மயங்கியதால் இசையில் தடுமாற்றம் ஏற்பட பிரம்மசிரேஷ்டர் உபவருக்க என இடி குரலில் அழைத்து சாம வேதகானத்தில் பிழையை உண்டாக்கியதால் நீ ஈன குலத்தில் மானிடனாய் பிறப்பாய் என சாபமிட்டார்.
முனியின் சாபத்தைப் பெற்றதால் வருத்தமுற்ற உபவருக்கன் யோகத்தில் ஆழ்ந்து தன் உயிரை விட்டான். கன்யாகுப்ஜ நாட்டில் தருமியன்-கலாவதி என்ற தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். அவர் பிறந்ததும் நாட்டில் சுபிட்சமாக மழை பொழிந்ததால்- நீரை வர்ஷித்ததால் அவனுக்கு நாரதர் எனப் பெயரிட்டனர். தாய் தந்தையர் இறக்க காட்டில் தவம் மேற்கொண்டார். நாராயணர் தோன்றி நாரதா நீ இப்பிறவியில் என்னைக் காணமுடியாது. அடுத்த பிறவியில் உன் எண்ணம் நிறைவேறும் என்றதால் தெளிந்த நாரதர் மீண்டும் யோகத்தில் அமர்ந்து தன் உயிரை விட்டார்.
உடலைக் களைந்து சுய ரூபம் அடைந்து சத்ய லோகமடைந்து தந்தை பிரம்மனை வணங்கி, கையிலையில் சிவனை வணங்கி மோட்சம் பெறும் வழியைக் கேட்டார். பிரமச்சரிய விரதம் கொண்டு மனதையும் ஐம்புலன்களையும் அடக்கி இன்சொல் கூறி அறவழியில் நடந்து இறைவனுக்கு நிவேதனம் செய்த உணவை மட்டும் உண்டு சதா இறைவனின் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்றார்.
அதன்படி சதா சர்வ காலம் இறைவனை நினைத்து திருநாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்த நாரதர் பத்திரிகாசிரமம் சென்று நாராயணனை தரிசிக்க அவர் நாரதரை பூலோகத்தில் சிருஞ்சியர் மகள் சுவர்ணகிரீயை மணந்து வாழ அறிவுருத்த அவ்வாறே சுவர்ணகிரீயை மணந்து வாழ்ந்து கொண்டிருந்த நாரதருக்கு அங்குவந்த சனத்குமாரர் தாரக மந்திரத்தை உபதேசித்தார்.
நாராயணனின் தாரக மந்திரத்தை உபதேசம் பெற்றதும் நாரதர் பற்றற்ற நிலையை அடைந்து கானகம் சென்று தவமேற்கொண்டார். மகாவிஷ்ணு காட்சியளிக்க இசையில் வல்லவராக வரம் பெற்றார்.
தன் தாயையும் தந்தையையும் வணங்கி தாயிடம் உள்ளது போன்ற வீணையையும் அதை மீட்டும் ஞானமும் பாடும் திறமையும் பெற்றார். அவரின் இசை நாரத கானம் என்றாயிற்று.
நாரதர் திரிலோக சஞ்சாரி எப்படி ஆனார்!
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.

No comments:

Post a Comment