Thursday, March 25, 2021

Sri Chandrasekaramrutham - Periyavaa

Today's Sri Chandrasekaramrutham:

     வகிட்டிலே அம்பாள் குங்குமம் வைத்துக் கொண்டிருக்கிறாள். அதனால் தான் அம்பாளுடைய ஸாந்நித்யம் வேண்டும் என்கிறவர்கள் வகிட்டைக் கோணலும் மாணலுமாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். நேரே நடுவில் எடுத்துக் கொள்வார்கள். அங்கே குங்குமமும் வைத்துக் கொள்ள வேண்டும். அது தான் பதிவ்ரதா ஸ்த்ரீகளுக்குத் தெய்வ ஸாந்நித்யம் உள்ள இடம்.
     ஒவ்வொரு சரீரத்திலும் ஸாந்நித்யம் உள்ள இடம் ஒவ்வொன்று இருக்கிறது. பசு மாட்டுக்குப் பின்னாலே இருக்கிறது. அதனால் அதன் பின்னால் "கோபூஜை" பண்ணுகிறோம். யானைக்கு மஸ்தகத்தில் இருக்கிறது. வில்வத்திலே பின் பக்கம். அங்கே தான் லக்ஷ்மி வாஸம் செய்கிறாள் என்று சொல்வர்.
     அது போலவே, பதிவ்ரதா ஸ்த்ரீகளுக்குத் தெய்வ ஸாந்நித்யம் உள்ள இடம் "சீமந்தம்". ஆகையால், அந்த இடத்தில் குங்குமம் இட்டுக் கொள்வது வழக்கம். அப்புறம், சௌபாக்கியத்திற்காக மற்றும் அலங்காரத்திற்காக நெற்றியிலும் வைத்துக் கொள்வார்கள்.

No comments:

Post a Comment