எதிரிலிருந்த பதார்த்தங்களை ஒரு தடவை நோட்டம்விட்ட ஸ்வாமிகள் சிரித்துக்கொண்டார். பிறகு கண்களை இடுக்கிக்கொண்டு
அந்த அம்மாவையே கூர்ந்து நோக்கியவர், நீ நீடாமங்கலம் மிராசுதார் கணேசய்யரோட ஆம்படையா[மனைவி] அம்புஜம்தானே?
ரெண்டு மாசத்துக்கு முன்னாடி வந்திருந்தே..ஏதோ சொல்லி துக்கப்பட்டுண்டே..இப்போ சந்தோஷமா பெரிய வாழத்தாரோட
நீ வந்துருக்கறதைப் பாத்தா காமாட்சி கிருபையில அதெல்லாம் நிவர்த்தி ஆயிருக்கும்னு படறது.சரிதானே!" என்று கேட்டார்.
அம்புஜம் அம்மாள் மீண்டும் ஒருமுறை ஸ்வாமிகளை நமஸ்கரித்துவிட்டு,"வாஸ்தவந்தான் பெரியவா. மூணு வருஷமா
எங்க ஒரே பொண் மைதிலிய அவ புக்காத்துல தள்ளி வெச்சிருந்தா. ரெண்டு மாசத்துக்கு முன்னாடி ஒங்ககிட்ட ஓடி வந்து இந்த
அவலத்தைச் சொல்லி அழுதேன்.நீங்கதான் இந்த ஊர் காமாட்சியம்மன் கோயில்ல அஞ்சு நாளக்கி,அஞ்சு பிரதட்சிணம்,
அஞ்சு நமஸ்காரம் பண்ணி..அபிஷேக ஆராதனையும் பண்ணச் சொன்னேள்.
"சிரத்தையா பூர்த்தி பண்ணிட்டுப் போனேன்.என்ன ஆச்சரியம் பாருங்கோ..பதினஞ்சு நாளக்கி முன்னாடி,ஜாம்ஷெட்பூர் டாடா
ஸ்டீல்ல வேல பாக்கற எம் மாப்ள ராதாகிருஷ்ணனே திடீர்னு வந்து மைதிலிய அழைச்சிண்டு போய்ட்டார். எல்லாம் அந்த
காமாட்சி கிருபையும்,ஒங்க அனுக்கிரகமும்தான் பெரியவா" என்று ஆனந்தக் கண்ணீர் மல்கக் கூறினாள்.
உடனே பெரியவா, "பேஷ்..பேஷ்..ரொம்ப சந்தோஷம்.தம்பதி க்ஷேமமா இருக்கட்டும். ஆமா…இவ்ளவு பெரிய வாழத்தார் எங்க
புடிச்சே. பிரமாண்டமா இருக்கே!" என்று கேட்டுவிட்டு இடிஇடியென்று சிரித்தார்.
அம்புஜம் அம்மாள் சிரித்துக்கொண்டே,"இது நம்ம சொந்த வாழைப் படுகையில வெளஞ்சது பெரியவா.அதான் அப்டி
பெரிய தாரா இருக்கு" என்று பவ்யமா பதில் சொன்னாள்.
ஸ்வாமிகள் மகிழ்வோடு," சரி…சரி..ஒம் பொண்ணு,மாப்ளய திருப்பியும் அம்மா காமாட்சிதான் சேத்து வெச்சிருக்கா,அதனால்
நீ இந்தப் பெரிய வாழத்தார எடுத்துண்டு போயி அவளுக்கு அர்ப்பணம் பண்ணிட்டு அங்க வர பக்தாளுக்கு விநியோகம்
பண்ணிடு" என்று கட்டளையிட்டார்.
உடனே அம்புஜம் அம்மாள், "இல்லே பெரியவா…இது இந்த சந்நிதானத்துலயே இருக்கட்டும். அம்பாளுக்கு அர்ப்பணிக்க
இதே மாதிரி இன்னொரு வாழத்தார் கொண்டு வந்திருக்கேன். பெரியவா…. நா உத்தரவு வாங்கிண்டு அம்பாளை தரிசனம்
பண்ணிட்டு பிரார்த்தனையைப் பூர்த்தி பண்ணிட்டு வந்துடறேன்" என்று நமஸ்கரித்தாள்.
"பேஷா,பிரார்த்தனையை முடிச்சுண்டு வந்து மத்யானம் நீ மடத்ல சாப்டுட்டுத்தான் ஊருக்கு திரும்பணும்..ஞாபகம்
வெச்சுக்கோ"என்று உத்தரவு கொடுத்தார் ஸ்வாமிகள்.
அன்று காமாட்சியம்மன் கோயிலில் அவ்வளவாகக் கூட்டமில்லை. காலை 11 மணி வழக்கத்தைவிட நேரமாகிவிட்டதால்
பேத்தியுடன் கோயிலை நோக்கி வேகமாக நடையைக் கட்டினாள் மீனாட்சி பாட்டி. கோயில் வாசலில் அர்ச்சனைத் தட்டு
வியாபாரம் செய்கிற கடைக்கு முன் நின்ற பாட்டி, பேத்தியிடம், "அடியே காமாட்சி, இன்னிக்கு பூர்த்தி நாள்டீ. அதனால
எல்லாத்தயுமே ஆச்சார்யாள் சொன்னபடி அஞ்சஞ்சாபண்ணிடுவோம். நீ என்ன பண்றே..அர்ச்சனைக்கு அஞ்சு தேங்கா,அஞ்சு ஜோடி
வாழப்பழம்,வெத்தல பாக்குனு எல்லாமே அஞ்சஞ்சா வாங்கிண்டு ஓடி வா,பார்ப்போம் என்று காசைக் கொடுத்தாள்.
பாட்டி சொன்னபடியே வாங்கி வந்தாள் பேத்தி. அம்பாளுக்கு அர்ச்சனை பண்ணி, கண்களில் நீர் மல்கப் பிரார்த்தித்துக் கொண்டாள்
பாட்டி: "அம்மா காமாட்சி, ஒன்னைத்தாண்டியம்மா பூர்ணமா நம்பிண்டிருக்கேன். ஒன்னையும் ஸ்வாமிகளையும் விட்டா
வேற கதி நேக்கு இல்லேடிம்மா.நீதான் எப்டியாவது அந்த எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிக்கு ஏற்பாடு பண்ணித் தந்து
பேத்தி கல்யாணத்தை நல்ல படியா முடிச்சு வெக்கணும்.."
பாட்டி விசும்ப, பேத்தியும் விசும்பினாள். பாட்டி முன் செல்ல பேத்தி பின் தொடர இருவரும் பிராகார வலத்தை ஆரம்பித்தனர்.
நான்காவது பிரதட்சிணம், வடக்குப் பிராகாரத்தில் வலம் வந்து கொண்டு இருந்தனர் இருவரும்.
"பாட்டீ…பாட்டீ….பாட்டீ…!" பேத்தியின் உயர்ந்த குரலைக் கேட்டுத் திரும்பிப் பார்த்த பாட்டி,ஆத்திரத்தோடு, "ஏன் இப்டி கத்றே?
என்ன பறிபோயிடுத்து நோக்கு? என்று கடுகடுத்தாள்.
"ஒண்ணும் பறிபோகலே பாட்டி,கெடச்சிருக்கு! இப்டி ஓரமா வாயேன் காட்றேன்!" என்று சொல்லி பாட்டியை ஓரமாக
அழைத்துப் போய்த் தன் வலக்கையைத் திறந்து காண்பித்தாள். பேத்தி.அதில் முகப்புடன் கூடிய அறுந்த இரட்டை வட
பவுன் சங்கிலி!
"ஏதுடி இது?" பாட்டி ஆச்சரியத்தோடு கேட்டாள். பேத்தி, "நோக்குப் பின்னால குனிஞ்சுண்டே வந்துண்டிருந்தேனா..
அப்போ ஓரமா கெடந்த இந்த சங்கிலி கண்ண்ல பட்டுது… அப்டியே 'லபக்'னு எடுத்துண்டுட்டேன். ஒருத்தரும் பார்கலே!
இது அறுந்துருக்கே பாட்டி..பவுனா..முலாம் பூசினதானு பாரேன்" என்றாள்.
அ'தைக் கையில் வாங்கி எடையைத் தோராயமாக அனுமானித்த பாட்டி, "பவுனாத்தான் இருக்கணும்னு தோண்றதுடி,காமாட்சி, எட்டு..எட்டரை பவுன் இருக்கும்னு நெனக்கிறேன்.இது பெரியவா கிருபைல காமாட்சியே நமக்கு அனுக்கிரகம் பண்ணியிருக்கா.சரி…சரி….வா, வெளியே போவோம்,மொதல்லே" என்று சொல்லியபடி அதைத்தன்
புடவைத் தலைப்பு நுனியில் முடிந்துகொண்டு, வேக வேகமாக வெளியே வந்துவிட்டாள்.அன்று பிரதட்சிணத்தில், "பஞ்ச
ஸங்க்யோபசார'த்தை [5 முறை வலம் வருவதை] மறந்து விட்டாள்.
மதியம் ஒரு மணி, ஆச்சார்யாளை தரிசிக்க மடத்தில் நான்கோ அல்லது ஐந்து பேரோ காத்திருந்தனர்.பேத்தியுடன் வந்த மீனாட்சி
பாட்டி ஸ்வாமிகளை நமஸ்கரித்து எழுந்தாள்.பாட்டியைப் பார்த்த ஸ்வாமிகள் சிரித்தார். ஸ்வாமிகளிடம் பவுன் சங்கிலி கண்டெடுத்த
விஷயத்தைச் சொல்லலாமா…வேண்டாமா என்று குழம்பினாள்.
அதற்குள் ஸ்வாமிகளே முந்திக்கொண்டு, "இன்னியோட நோக்கு காமாட்சியம்மன் கொயில்ல பஞ்ச ஸங்க்யோபசார பிரதட்சிணம்
கிரமமா பூர்த்தியாகி இருக்கணும்…..ஆனா ஒம் பேத்தி கைல கெடச்ச ஒரு வஸ்துவால அது பூர்த்தியாகாம போயிடுத்து!
அந்த சந்தோஷம்….நாலு பிரதட்சிணத்துக்கு மேல ஒன்ன பண்ண விடலே. காமாட்சி பூர்ணமா அனுக்கிரகம்
பண்ணிப்டதா நெனச்சுண்டு வேகமா வந்துட்டே… என்ன நான் சொல்றது சரிதானே?"என யதார்த்தமாகக் கேட்டார்.
பாட்டிக்குத் தூக்கிவாரிப் போட்டது. மென்று விழுங்கினாள். கை கால் ஓடவில்லை. "ஸ்வாமிகள் என்னை தப்பா
எடுத்துண்டுடப்டாது. பேத்தி கைல அது கிடச்ச ஒடனே, அம்பாளே அப்டி பிராகாரத்துல போட்டு பேத்திய எடுத்துக்கச்
சொல்லியிருக்கானு நெனச்சுண்டுட்டேன்….அந்த சந்தோஷத்துல இன்னொரு பிரதட்சிணம் பண்ணணும்கறதையும் மறந்துட்டேன்"
என்று தயங்கித்தயங்கிச் சொன்னாள்.
உடனே பெரியவா, "அது மட்டும் மறந்துட்டயே ஒழிய, அந்த வஸ்துவ எடுத்துண்டுபோய் காசுக்கடை ரங்கு பத்தர்ட்ட
எட போடறத்துக்கோ….அறுந்தத பத்த வக்கறத்துக்கோ மறக்கலியே நீ?" என்று சற்றுக் கடுமையாகக் கேட்டுவிட்டு,
"அது போகட்டும்…. எட போட்டயே….சரியா எட்டு இருந்துடுத்தோல்லியோ" என முத்தாய்ப்பு வைத்தார்.
கிடுகிடுத்துப் போய்விட்டனர் பாட்டியும் பேத்தியும். "நீங்க சொன்னதெல்லாம் சத்யம் பெரியவா" என்றாள் பாட்டி.
ஸ்வாமிகள் அமைதியாகக் கேட்டார், "நியாயமா சொல்லு, அந்த பதார்த்தம் யாருக்குச் சொந்தம்?"
"அம்பாள் காமாட்சிக்கு."
"நீயே சொல்லு…அத ரகசியமா எடுத்து ஒம் பொடவ தலப்ல முடிஞ்சிக்கலாமா?"
"தப்பு…தப்புதான்! என்ன மன்னிக்கணும், தெரியாம அப்டிப் பண்ணிப்டேன்" என்று மிகவும் வருத்தப்பட்ட பாட்டி,
அந்த ரட்ட வட பவுன் சங்கிலியை எடுத்து,கை நடுங்க ஸ்வாமிகளுக்கு முன்பிருந்த பித்தளை தாம்பாளத்தில்
வைத்தாள். சிரித்தார் ஸ்வாமிகள்.
இப்போது மணி இரண்டு, மீனாட்சி பாட்டியையும்,பேத்தியையும் எதிரில் அமரச் சொன்னார் ஸ்வாமிகள்.. அப்போது,கலையில்
புறப்பட்டுச் சென்ற நீடாமங்கலம் கணேசய்யரின் தர்மபத்தினி அம்புஜம் அம்மாள், சொகமே உருவாகத் திரும்பி வந்து
ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தாள்.பொலபொலவென்று கண்களில் நீர் வழிந்தது. இதைப் பார்த்த ஸ்வாமிகள்,
"அடடா…எதுக்கம்மா கண் கலங்கறே? என்ன நடந்தது?" என வாத்ஸல்யத்துடன் வினவினார்.
உடனே அம்புஜம் அம்மாள் கண்களைத் துடைத்துக்கொண்டே, "வேற ஒண்ணுமில்லே பெரியவா,ரண்டு மாசத்துக்கு முன்னாடி
ஒங்க உத்தரவுபடி காமாட்சியம்மன் கோயில்ல அஞ்சு நாள் சேவை பண்றச்சே,'பிரிஞ்சிருக்கிற எம் பொண்ணையும் மாப்பிள்ளையையும் ஒண்ணா சேத்து வெச்சயானா, எங்கழுத்துல போட்டுண்ருக்கற எட்டு பவுன் ரட்ட வட சங்கிலிய நோக்கு அர்ப்பணம் பண்றேன்'னு அம்பாள்ட்ட மனப்பூர்வமா பிரார்த்திச்சுண்டேன்.
தம்பதிய ஒண்ணா சேத்து வெச்சுட்டா அம்பாள். வேண்டிண்டபடி அந்த ரட்ட வடத்த சேத்துடலாம்னு கார்த்தால கோயிலுக்குப்
போனேன். அந்த செயின் கழுத்லேர்ந்து நழுவி எங்கேயோ விழுந்துடுத்து. போன எடத்தெல்லாம் தேடிப் பார்த்துட்டேன்.
ஒரு எடத்லயும் கிடைக்கலே…இப்ப என்ன பண்ணுவேன் பெரியவா?" என்று புலம்ப ஆரம்பித்துவிட்டாள்.
ஸ்வாமிகள் மீனாட்சி பாட்டியின் பக்கம் தன் பார்வையைத் திருப்பி, அர்த்தபுஷ்டியுடன் பார்த்தார். ஸ்வாமிகளை அப்படியே நமஸ்கரித்துவிட்டு, விருட்டென்று எழுந்தாள் பாட்டி. பெரியவாளுக்கு முன் பித்தளைத் தாம்பாளத்தில் இருந்த ரட்ட வட பவுன் சங்கிலியைக் கையில் எடுத்தாள். மகிழ்ச்சியுடன், "அம்மா பங்கஜம்… நீ தவறவிட்ட ரட்ட வடம் இதுவா பாரு?" என்று காண்பித்தாள்.
அதைக் கையில் வாங்கிப் பார்த்த அம்புஜம் அம்மாள் "இதேதான்….இதேதான்…..பாட்டி..இது எப்படி இங்கே வந்தது?
ஆச்சரியமா இருக்கே!" என்று வியந்தாள்.நடந்த விஷயங்கள் அத்தனையையும் ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் பாட்டி.
மீனாட்சி பாட்டியை கட்டியணைத்துக் கொண்ட அம்புஜம் அம்மாள் "பாட்டி, நீங்க கவலையே படாதீங்கோ. ஆச்சார்யாளுக்கு முன்னால ஒங்ககிட்ட இதத் தெரிவிச்சுக்கிறேன்.எட்டு பவுன்ல ஒங்க பேத்திக்கு புதுசா ரட்ட வட சங்கிலி போட்டுக் கல்யாணம் 'ஜாம்ஜாம்'னு நடக்கும், நா கழுத்தில போட்டுண்டிருந்த இந்த ரட்ட வடத்தத்தான் அம்பாளுக்கு அர்ப்பணிக்கறதா வேண்டிண்ருக்கேன். இன்னிக்கு சாயந்தரமே ஒங்களையும், பேத்தி காமாட்சியையும் இந்த ஊர் நகைகடைக்கு அழச்சிண்டு போய்,எட்டு பவுன் ரட்ட வட சங்கிலி ஒண்ணு வாங்கித் தரேன்.அதோட கல்யாணச் செலவுக்காக ஐயாயிர ரூபாயும் தரேன்"
என்று ஆறுதல் அளித்தாள். ஸ்வாமிகள் இந்த காட்சியை பிரத்யட்ச காமாட்சியாக அமர்ந்து பார்த்துக்கொண்டு இருந்தார். அனைவரும் ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்தனர்.
ஆச்சார்யாள்,மீனாட்சி பாட்டியைப் பார்த்து,, "இன்னிக்கு நீயும் ஒம் பேத்தியும் கொயில்ல அஞ்சு பிரதட்சிணம் பண்ணலே.
சாயந்தரமா போயி அஞ்சு பிரதட்சிணம்,அஞ்சு நமஸ்காரம் பண்ணி அம்பாள பார்த்துட்டு வாங்கோ" என்று விடை கொடுத்தார்.
மீனாட்சி பாட்டியும் அவள் பேத்தியும் அப்போது அடந்த சந்தோஷத்தையும் சிலிர்ப்பையும்
ஹர ஹர சங்கரா ஜெய ஜெய சங்கரா குருவே சரணம் குருவின் திருவடி சரணம்
No comments:
Post a Comment