Tuesday, November 17, 2020

Nammazhwar & madhurakavi Azhwar

ஸ்ரீமதே ராமாநுஜாய நம

"நம்மாழ்வாரும்.... மதுரகவியாழ்வாரும்..."

நம்மாழ்வார் அருளிச்செய்த திருவாய்மொழியை .... பட்டோலை கொண்டு பாவின் இன்னிசை பாடித் திரிபவர்.... மதுரகவி ஆழ்வார்...
நம்மாழ்வார் அருளிச் செய்துள்ள கருத்துக்களை.... தாம் பாடிய "கண்ணிநுண் சிறுத்தாம்பு" பிரபந்தத்தில் அருளிச்செய்தவைகளைக் காண்போம்.....

நம்மாழ்வார் பாடிய ...." நலங்கொள் நான் மறைவாணர்கள்" என்பதை....

"நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்"

என்று பாடியுள்ளார்....

2. நம்மாழ்வார் பாடிய....." அப்பொழுதைக்கப் பொழுது என் ஆராவமுதமே" என்றதை....

"அண்ணிக்கும் அமுதூறும் " என்றும்...

3. "அடிக்கீழ் புகுந்தேனே" என்பதை

"மேவினேன் அவன் பொன்னடி மெய்ம்மையே.... "என்றும்....

4. "பாடி இளைப்பிலும் " என்பதை

"பாடித் திரிவனே" என்றும்....

5. " உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் " என்பதை

"நம்பிக்கு ஆள் உரியன்" என்றும்...

6. "இங்கே திரிந்தேற்கு " என்பதை...

"திரி தந்தாகிலும் " என்றும்....

7. "தாயாய்த் தந்தையாய் " என்பதை...

"அன்னையாய் அத்தனாய்.. " என்றும்.....

8. "ஆள்கின்றான் ஆழியான் " என்பதை....

"என்னை ஆண்டிடும் தன்மையான் " என்றும்....

9. "எமர் கீழ்மேல் எழுபிறப்பும்" என்பதை....

"இன்று தொட்டு எழுமையும்.... " என்றும்....

10." பேரேனென்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்..." என்பதை....

"நிற்கப்பாடி என் நெஞ்சுள் நிறுத்தினார்..." என்றும்...


11." வழுவிலா அடிமை செய்ய வேண்டும்" என்பதை....

"ஆட்புக்க காதல் அடிமைப் பயனன்றே " என்றும்....

12."பொருளல்லாத என்னை அடிமை கொண்டான் " என்பதை....

" பயன் அன்றாகிலும், பாங்கு அல்லாராகிலும்.... செயல் நன்றாகத் , திருத்திப் பணிகொள்வான்" என்றும்...

13. "மலர் பாவைக்கன் என் அன்பேயோ..." என்பதை....

" தென்குருகூர் நகர் நம்பிக்கு அன்பனாய்.. " என்றும்....

14." வைகுந்தமாகும் தம்முரெல்லாம்..." என்பதை....

"நம்புவார்பதி வைகுந்தம் காண்மினே..." என்றும் பாடியுள்ளார்....

இவ்வாறு நம்மாழ்வார் பகவத் விஷயத்தை அனுபவித்த முறையிலேயே... ஆழ்வாரின் சீடர் மதுரகவியாழ்வாரும் அடியொற்றி.... அனுபவித்து இருப்பதை அடியோங்களும் படித்து இன்புறுவோம்.....

"நம்மாழ்வார் திருவடிகளே சரணம்"

"மதுரகவியாழ்வார் திருவடிகளே சரணம்"

"ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்"

அடியேன்

வகுளாபரணராமாநுஜதாசன்🙏🙏🙏

No comments:

Post a Comment