Tuesday, September 15, 2020

Will you show mercy - Poem on Krishna

courtesy:smt.Padma Gopal

சற்றே இரங்குவாயோ?..)

சுற்றிச் சுற்றி ஓய்ந்து விட்டேன்:
சொந்தம் தெரியல!
பற்ற உந்தன் தாள்மறந்தேன்;
பயமும் அறியல!

கற்ற கல்வி ஏதொன்றும்−
கைவரவில்ல!
உற்ற துணை நீயென்று−
உருதொழவில்ல!

பற்றுவிட்டு ஒழிப்பதற்கோ−
புத்தியுமில்ல!
புற்றீசல் போலஆசை−
தெளியவுமில்ல!

அற்றைத் திங்கள் அபயமென்று−
அலறவுமில்ல!
இற்றையநாள் இன்பம் விழைய−
ந்யாயமுமில்ல!

பெற்றவனே, என்று இன்றே−
வந்தடைந்தேனே;
சற்று என்மேல் இரங்கி நீயும்−
சரண்ஏற்பாயா?..

Image may contain: 1 person

No comments:

Post a Comment