கிருஷ்ணானந்த லஹரி- அலை 1
ஆனந்தலஹரீ , ஆனந்தக்கடல், சௌந்தர்யலஹரீ, அழகுக்கடல், பிரேமலஹரீ, அன்புக்கடல் எல்லாம் சேர்ந்ததுதான் கண்ணன்.
அந்தக்கடலில் மூழ்கிக் குளிப்போமா? அங்கங்கு தேசிகர் , லீலாசுகர், மற்றும் பாகவதம் ஆகிய திட்டுகளில் இளைப்பாறலாம்.
வம்சீ விபூஷித கராத் கமனீய காத்ராத்
பீதாம்பராத் அருணபிம்பபலாதரோஷ்டாத்
பூர்ணேந்து சுந்தரமுகாத் அரவிந்தநேத்ராத்
க்ருஷ்ணாத் பரம் கிமபி தத்வம் அஹம் ந ஜானே-
மதுசூதன சரஸ்வதி
குழல் அலங்கரித்த கரத்தை உடையவனும், அழகிய உருவத்தை உடையவனும் பீதாம்பரம் அணிந்தவனும் சிவந்த கோவைப்பழம் போன்ற உதடுகள் உடையவனும், பூரண சந்திரன் போல முகத்தானும், தாமரைக் கண்களைக் கொண்டவனும் ஆன கிருஷ்ணனைத் தவிர வேறு எந்த உண்மைத் தத்துவத்தையும் நான் காணவில்லை -
என்று சிறந்த அத்வைத ஞானியும் கிருஷ்ண பக்தருமான மதுசூதன சரஸ்வதி கூறுகிறார்.
வம்சீ – குழல்
விபூஷித- அலங்கரிக்கும்
கராத் – கரத்தை உடையவனும்
கமனீய – அழகிய
காத்ராத் – உருவம் கொண்டவனும்
பீதாம்பராத் -பீதாம்பரம் தரித்தவனும்
அருணபிம்பபல- சிவந்த கோவைக்கனி போன்ற
அதரோஷ்டாத்-கீழுதட்டை உடையவனும்
பூர்ணேந்து –பூரண சந்திரன் போல்
ஸுந்தரமுகாத்- அழகிய முகத்தை உடையவனும்
அரவிந்தநேத்ராத்-தாமரை போல் கண் படைத்தவனும் ஆன
க்ருஷ்ணாத் பரம்- கிருஷ்ணனைத்தவிர
கிமபி தத்வம்- வேறு எந்த உண்மைப் பொருளையும்
அஹம்- நான்
ந ஜானேஅறியவில்லை
அது மட்டுமா? அவர் இன்னும் கூறுகிறார்.
யோகிகள் ஏதோ ஒரு நிர்குண நிச்சல தத்துவத்தை மனதை பிரயாசையினால் அடக்கி ஜோதி மயமாகக் காண்கிறார்கள். அவர்கள் அதையே பார்க்கட்டும். நமக்கு இங்கே யமுனை நதிக்கரையில் ஓர் நீல ஒளிமயான் வஸ்து ஓடிக் கொண்டிருக்கிறதே அதுவே போதும் என்கிறார்.
கிருஷ்ணனை நாம் இப்போது மந்தார மரத்தின் கீழ் நிற்பவனாகக் காண்போம்.
மன்மதனைப்போல் அழகு. கோவைக்கனி போன்ற அவன் உதடுகளில் இருந்து குழலின் மூலம் இனிய கீதம் தவழ்ந்து புவனமனைத்தும் சூழ்கிறது.
பசுக்கள், கோபியர், கோபர்கள் இவர்கள் மத்தியில் நின்று குழலூதும் கண்ணனை நாமும் கோவிந்தா தாமோதரா மாதவா என்று கூவுவோமா?
மந்தாரமூலே மதனாபிராமம்
பிம்பாதராபூரித வேணுநாதம்
கோகோபகோபீ ஜனமத்ய ஸம்ஸ்தம்
கோவிந்த தாமோதர மாதவேதி
.இந்த கோவிந்தா தாமோதர மாதவ ஸ்தோத்ரம் கிருஷ்ணகர்ணம்ருதம் எழுதிய லீலாசுகர் செய்தது,. இந்த அழகான ஸ்லோகங்கள் சில நாம் இங்கு பார்க்கலாம்.
கிருஷ்ணானந்த லஹரி -அலை 2
கௌரவர் சபை.
திரௌபதி துச்சாதனனால் இழுத்துவரப்படுகிறாள். தீயவன் துரியோதனன் அவள் ஆடையைக்களைய உத்தரவிடுகிறான். தருமமறிந்த பீஷ்மர் முதலானவர் வாய் மூடி மௌனிகளாய் அமர்ந்திருக்க அவளுடைய கணவன்மார் செயலற்று திகைத்திருக்க திக்கற்றவளாய் கண்ணா என்று அலறுகிறாள். ( எழுதும்போதே விழிகள் ஈரமாகின்றன.)
அக்ரே குரூணாம் அத பாண்டவானாம்
துச்சாசனேனாஹ்ருத வஸ்த்ரகேசா
கிருஷ்ணா ததாவோசத் அனன்ய நாதா
கோவிந்தா தாமோதர மாதவேதி
அக்ரே குரூணாம் – கௌரவர் முன்பும்
அத பாண்டவானாம் – பாண்டவர்கள்
துச்சாசனேன – துச்சாதனனால்
ஆஹ்ருத வஸ்த்ர கேசா- வஸ்திரத்தையும் அவள் முடியையும் பற்றி இழுக்கப்பட்டபோது
கிருஷ்ணா- திரௌபதி
அனன்ய நாதா- காக்க ஒருவரும் இன்றி திக்கற்று
கோவிந்த தாமோதர மாதவ இதி- கோவிந்தா தாமோதரா மாதவா என்று
அவோசத் – கூவினாள்
அதிசயத்திலும் அதிசயமாக அவள் சேலை வளரவளர துச்சாதனன் கை சோர்ந்து விழுந்தான் என்பதை நாம் அறிவோம். இதன் மூலம் 'கௌந்தேய பிரதிஜாநீஹி ந மே பக்த: ப்ரணயச்யதி' "என் பக்தனை ஒருநாளும் கைவிடமாட்டேன்" என்று கீதையில் கூறப்போகும் சொல்லை மெய்ப்பித்தான் கண்ணன்.
இதில் ஒரு சந்தேகம் வரலாம். என் கண்ணன் அவள் இருகைகளையும் விட்டுக் கதறும் வரை தாமதித்தான் என்று, இதற்கு சாதாரணமாகக் கூறப்படும் பதில் என்னவென்றால் அவள் அதுவரை தன்னைக் காத்துக்கொள்ள தானாகவே முயன்றாள். அது முடியாமல் போக கண்ணனைக் கூப்பிட்டாள் என்று.
என் மனதினால் அந்த சமாதானததை ஏற்றுக்கொள்ள முடியவில்ல. கருணைக்கடலான கண்ணன் அவ்வளவு நேரம் அவளைத் துன்பப்பட விட்டிருப்பானா என்று தோன்றிற்று. நினைத்துப் பாருங்கள். ஒரு சேலையை உருவ எத்தனை நாழிகை பிடிக்கும்? அதனால் இவ்வளவும் சில நொடிகளுக்குள் நிகழ்ந்திருக்கவேண்டும் என்று தோன்றுகிறது.
நாமும் அவனை திரௌபதி கூப்பிட்டதுபோல அழைப்போமா?
ஹே க்ருஷ்ண விஷ்ணோ மதுகைடபாரே
பக்தானுகம்பின் பகவன் முராரே
த்ராயஸ்வ மாம் கேசவ லோகநாத
கோவிந்த தாமோதர மாதவேதி
ஹே கிருஷ்ண- ஹே கிருஷ்ணா
விஷ்ணோ- விஷ்ணுவும் நீயே
மதுகைடபாரே – மதுகைடபரை அழித்தவனே
பக்தானுகம்பின்- பக்தர்களிடம் கருணை கொண்டவனே
பகவன் முராரே – பகவானே முரனை அழித்தவனே
கேசவ - கேசவா
லோக நாத – உலகுக்கெல்லாம் நாதனே மாம்- என்னை
த்ராயஸ்வ –காப்பாற்று.
கோவிந்த தாமோதர மாதவேதி- உன்னை கோவிந்தா தாமோதரா மாதவா என அழைக்கின்றேன்.
அவன் கண்டிப்பாக வருவான்.
கிருஷ்ணானந்த லஹரி 3
ஆயர்பாடியில் இடைப்பெண்கள் கிருஷ்ணனுடைய லீலைகளைப் பேசி பேசி மகிழ்வார்கள். ஒருநாள் கிருஷ்ணன் கோவர்தன கிரியை தூக்கியதைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார்கள்.
" நம் கண்ணன் இந்திரனுக்கு பூஜை வேண்டாம் என்று தடுத்து கோவர்தனத்தை பூஜை செய்யும்படி கூறினானே!" என்று ஒருத்தி கூற, "ஏன் அவ்வாறு கூறினான்" என்று இன்னொருத்தி சொல்ல, முதல் பெண்" ஏன் கூறக்கூடாது? கோவர்தனம்தானே மேகத்தை தடுத்து மழை பொழியச் செய்கிறது " இந்திரன் என்ன செய்கிறான் ? என்று சொல்ல, அந்த சம்பவத்தை இன்னொரு முறை விளக்க்கமாகக் கூற எல்லோரும் வேண்டினர்.
நாமும் அவள் என்ன சொன்னாள் என்பதை வேதாந்த தேசிகர் சொற்கள் மூலம் காண்போமா?
இந்திரன் கோபம் கொண்டு ஏழு நாட்கள் பிரளய காலம் போல் மழை பெய்யச் செய்தான். அப்போது,
ஸ லீலயா மேருமிவ த்விதீயம் கோவர்தனம் கோபகுலப்ரதீப:
நவ ப்ரரூடம் நிஹிதைக ஹஸ்த: நாகோ நலஸ்தம்பம் இவ உஜ்ஜஹார
ஸ; கோபகுலப்ரதீப: - கோபர்களின் குலவிளக்கான கண்ணன்
லீலயா- விளையாட்டாக
மேருமிவ த்விதீயம் – இன்னொரு மேருமலையைப் போல் உள்ள
கோவர்தனம் – கோவர்தன மலையை
நவப்ரரூடம்- புதிதாக முளைத்த
நலஸ்தம்பம் – கோரைப்புல்லை
நாக: இவ- ஒரு யானை பிடுங்குவது போல் ( அவ்வளவு எளிதாக)
உஜ்ஜஹார- உயரத்தூக்கினான்.
கண்ணன் சுண்டு விரலால் கோவர்தனத்தைத் தூக்குவது போல்தான் படங்களிலும் , ஏன், பிருந்தாவனத்தின் சிற்பங்களிலேயே காண்கிறோம். இது தவறு. Dramatic effect க்காக சித்தரிக்கப்பட்டது.
கண்ணன் தன் கையால் மலையின் உச்சியைப் பிடித்து அதைப் பேர்த்து தலைகீழாகப் பிடித்தான் என்பதற்கு சான்று பாகவதத்தில் உள்ளது.
பாகவதத்தில் பின்வருமாறு வர்ணிக்கப் படுகிறது.
இத்யுக்த்வா ஏகேன ஹஸ்தேன க்ர்த்வா கோவர்தனாசலம்
ததார லீலயா க்ருஷ்ண: ச்சத்ராகமிவ பாலக:
இதி உக்த்வா- ( நான் காப்பாற்றுகிறேன் ) என்று சொல்லி
பாலக: க்ருஷ்ண:- பாலகனான கிருஷ்ணன்
ஏகேன ஹஸ்தேன- ஒரு கையால்
லீலயா- விளையாட்டாக
க்ருத்வா – பிடித்து
சத்ராகம் இவ – ஒரு குடையைப் போல்
ததார – தாங்கினான்
மேலும் கிருஷ்ணன் கோபர்களைப் பார்த்து,
'யதோபஜோஷம் விசத கிரிகர்தம் ஸகோதனா: '
"உங்கள் இஷ்டப்படி பசுக்களுடன் மலை குகைகளில் புகுந்து கொள்ளுங்கள்" என்று.
இது மலை தலைகீழாக இருந்தால்தான் சாத்தியம்.
வியாக்யானம் செய்பவர்களும் ஆழ்வார்களும் இதை ஒட்டியே தான் சொல்லி இருக்கின்றனர்.
தேசிகர் சொல்கிறார் அந்த மலையில் தவம் செய்துகொண்டிருந்த முனிவர்கள் தாங்கள் தலைகீழாக இருப்பதையும் அறியாமல் தவத்தை தொடர்ந்தனர் என்று. பசுக்களும் மேலே இருந்த புற்களை தலை நீட்டி மேய்ந்தன.
தேசிகர் மேலும் கண்ணனின் கைகளை வர்ணிக்கிறார்.
'அபுக்ன ரக்தாங்குலி பஞ்சரம்' -அவன் தாமரைக்கைகள் சிவந்து ஒரு குடையின் உள்ளே இருக்கும் கூடு போல காணப்பட்டன. ரத்னோர்மிகா ரச்மி சலாகம் அந்த: - அவனுடைய விரல் மோதிரங்களின் கிரணங்கள் அந்த கூட்டிலிருந்து குடையை இணைக்கும் கம்பிகள் போல இருந்தன. என்று.
பெரியாழ்வார் இதை பத்து பாசுரங்கள் மூலம் வர்ணித்திருக்கிறார்.
'அதில் தடங்கை விரல் ஐந்தும் மலரவைத்து' என்கிறார். மேலும்,
செப்பாடுடைய திருமாலவந்தன் செந்தாமரைக் கைவிரல் ஐந்தினையும்
கப்பாக எடுத்து நெடுந்தோள் காம்பாக கொடுத்துக் கவித்த மலை ,
என்று சொல்லி , அந்த மலையைச் சுற்றி நீர் விழுவது ஒரு குடையின் விளிம்பில் கட்டப் ;பட்ட முத்துச்சரம் போல் இருந்தது என்கிறார்.
இதை எல்லாம் விரிவாகச் சொன்ன அந்த கோபிகை மேலும் சொன்னாள். ". அந்த மழை நிற்காமல் இருந்திருக்கக் கூடாதா? யாருக்கும் பயப்படாமல் கண்ணனின் அருகாமையிலேயே இருந்திருக்கலாமே." என்று. மற்றவர்களும் அதை ஆமோதித்தனர்.
எல்லோரும் சேர்ந்து பாடினர்.
கோவிந்த கோவிந்த ஹரே முராரே
கோவிந்த கோவிந்தமுகுந்த கிருஷ்ணா
கோவிந்த கோவிந்த ரதாங்கபாணே
கோவிந்த தாமோதரமாதவேதி
கிருஷ்ணானந்த லஹரி- அலை 4
கோகுலத்தில் கண்ணன் பிறந்த பின்பு பாலும் தயிரும் ஏராளம்.
'வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்' பாலாய் சொரிந்தன.
பானு ஒரு இளம் கோபி. தினம் காலையில் அவள் தாய் தயிர் கடைந்து வெண்ணை எடுத்தபின் அதை எடுத்துக்கொண்டு போய் சுற்றி இருக்கும் தெருக்களில் விற்று வருவது அவள் பழக்கம்.
அன்று கண்ணனின் லீலைகளைப் பற்றி தோழிகளுடன் வெகு நேரம் பெசிக்கொண்டிருந்ததில் அவன் நினைவாகவே உறங்கிவிட்டாள். அவள் தாய் தன் வேலை எல்லாம் முடித்துக் கொண்டு வந்து பார்க்க அவள் எழுந்திருகாததைக் கண்டு ,
" பானு எழுந்திரு , தயிர் விற்கப் போகவேண்டாமா?" என்று எழுப்பினாள்.
அதற்கு அவள் " அம்மா கண்ணனை நினைத்துக்கொண்டே உறங்கிவிட்டேனா என் கனவில் வந்து அவன் எவ்வளவு விளையாடினான் தெரியுமா? அதுதான் எழுந்திருக்கவே மனம் இல்லை." என்றாள்.
" உன் கண்ணன எப்போதோ எழும்து மாடு மேய்க்க போயாகி விட்டது. " என்றாள் அவள் அன்னை.
"ஒ! இதோ நானும் எழுந்துவிட்டேனே ! என்று எழுந்த பானு தயாராகி, தயிர் , மற்றும் வெண்ணை அடங்கிய பானைகளை தலையில் சுமந்து கிளம்பினாள்.
அவள் விற்கப் போகும்போது அவளுடைய குரலால் வெளியில் வந்த ஜனங்கள் அவளைப் பார்த்து வாய் பொத்தி சிரித்தனர்.
ஏன் தெரியுமா? பிலவமங்களர் சொல்வதைக் கேளுங்கள்.
விக்ரேதுகாமா கில கோபகந்யா
முராரி பாதார்பிதசித்தவ்ருத்தி
தத்யாதிகம் மோஹவசாத் அவோசத்
கோவிந்தா தாமோதர மாதவேதி
கோபகந்யா- இந்த கோபகன்னிகை
தத்யாதிகம் - தயிர் முதலியவைகளை
விக்ரேதுகாமா- விற்க எண்ணி
முராரி- கண்ணனின்
பாதாரோ பித்த – பாதங்களில் ஈடுபட்ட
சித்தவ்ருத்தி- எண்ணத்தை உடையவளாய்
மோஹவசாத் – அவனிடம் ஏற்பட்ட மயக்கத்தினால்
கோவிந்தா தாமோதர மாதவேதி – தயிர் , பால் வெண்ணை என்று கூவுவதற்கு பதில் கோவிந்தா தாமோதரா மாதவா என்று கூவினாள்.
வாருங்கள் நாமும் அவ்வாறே என்ன செய்தாலும் அவன் நாமத்தைக் கூறியவாறே செய்வோம்.
கிருஷ்ணாநந்த லஹரி-அலை5
சிலர் உரலில் தான்யம் இடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த ச்ரமம் தெரியாமல் இருக்க அவர்கள் கண்ணனின் லீலைகளை பாடியவாறே தம் வேலையை செய்துகொண்டிருந்தனர்.
இதை பில்வமங்களர் பின்வருமாறு கூறுகிறார் .
உலூகலே ஸம்ப்ருத தண்டுலம் ச
ஸங்கட்டயந்த்யோ முஸலை: ப்ரமுக்தா:
காயந்தி கோப்யோ ஜனிதானுராகா
கோவிந்த தாமோதர மாதவேதி
உலூகலே- உரலில்
ஸம்ப்ருத – குவிக்கப்பட்ட
தண்டுலம்- நெல்லை
முஸலை:- உலக்கைகளால்
ஸங்கட்டயந்த்ய: - இடித்துக் கொண்டிருந்த
ப்ரமுக்தா: - முதிர்ந்த
கோப்ய:-கோபியர்
ஜனிதானுராகா- கண்ணன் மேல் உதித்த அன்பு காரணமாக
கோவிந்த தாமோதர மாதவேதி – கோவிந்தா தாமோதரா மாதவா என்று.
காயந்தி – பாடுகின்றனர்
இதைப் பார்த்துக்கொண்டிருந்த இளம் கோபிகைகளுக்கு கண்ணன் உரலில் கட்டுண்ட சம்பவம் நினைவுக்கு வருகிறது.
அவர்கள் சம்பாஷணையிலேயே இதை அனுபவிப்போம்.
.
"ஆனாலும் கண்ணன் விஷமக்காரன். தாய் பால் கொடுத்துக்கொண்டிருக்கையில் விட்டு விட்டு அவசர வேலையாக உள்ளே சென்றபோது தயிர்ப் பானையை உடைத்து விட்டானே. "
" அது மட்டுமா ? எல்லோர் வீட்டிலும் புகுந்து வெண்ணை திருடியதிலேயே அவன் தாய்க்கு கோபம். இப்போது செய்த விஷமத்தால் அவனை உரலில் கட்டிப் போட்டுவிட்டாள்"
" போடி! கண்ணன் எப்போ வருவான் வெண்ணை எடுப்பான் என்று எல்லோரும் காத்துக்கொண்டிருக்கிறோம். ஒரு சில சிடுமூஞ்சிகள் தான் யசோதையம்மாவிடம் புகார் செய்தனர்."
ஆனால் அவனைக்கட்டிப்போட்டதில் அவன் ஒன்றும் கவலைப்படவில்லை . ஏற்கெனவே அந்த உரலில் கொஞ்சம் வெண்ணெய் ஒளித்து வைத்திருந்தான் . அதை தின்று கொண்டு இருக்கையில்தான் அவனைக் கட்ட கயிறு தேடினாள் அவன் தாய்."
"ஆனால் என்ன அதிசயம் ! எந்தக் கயிறும் போதவில்லையாமே? "
" ஆமாம் . கண்ணனைக் கட்டமுடியுமா? அவனே மனது வந்து தாய் படும் கஷ்டத்தைக் கண்டு கட்டுப்பட்டான். "
"அதற்குப் பிறகு அவன் செய்த காரியத்தைப் பார்த்தாயா? உரலை இழுத்துக் கொண்டு போய் மருதமரங்களையே சாய்த்து விட்டானே"
"ஆமாம் நம் கண்ணனால் முடியாதது ஒன்று உண்டா?"
"அந்த மரம் விழுந்த ஓசையை எல்லோரும் கேட்டோம். என்ன நடந்தது என்று பார்த்தால் இரண்டு மரம் விழுந்து கிடந்தது. நடுவில் கண்ணன் சிரித்துக்கொண்டு உரலில் கட்டிய படியே நின்றான்."
"நந்த கோபர் வந்து அவனை அவிழ்த்துவிட்டார் . யசோதை அம்மாவிற்கு தான் செய்த காரியத்தைக் குறித்து வெட்கமாகப் போய்விட்டது."
வாருங்கள் நாமெல்லாம் அவன் புகழ் பாடுவோம் என்று சொல்லி எல்லோரும் 'கோவிந்தா தாமோதரா மாதவா என்று பாடினர்.
இந்த சம்பவத்தை அடியார்கள் எப்படி அனுபவித்தனர் என்று பார்ப்போம்.
நாராயண பட்டாத்ரி சொல்கிறார்
பந்தும் இச்சதி யம் ஏவம் ஸஜ்ஜன:
தம் பவந்தம் ஆயி பந்தும் இச்சதி (நாரா- 47.7)
"எவனை நல்லோர் தம் பந்துவாக எண்ணுகிறார்களோ அப்படிப்பட்ட உன்னை கட்ட நினைக்கிறாளே" என்கிறார்.
இங்கு பந்த் என்ற சொல் பந்து , உறவினர் என்ற அர்த்தத்திலும் பந்தம் , கட்டு எனற அர்த்தத்திலும் சிலேடையாக பயன்படுத்தப் படுகிறது
தேசிகர் சொல்கிறார் ,
கண்ணனை தாய் ஏதோ ஒரு புண்ணியம் செய்த உரலில் கட்டினாள் , 'உலூகலே குத்ரசித் ஆத்தபுண்யே' , அந்த உரல் எவ்வளவு புண்ணியம் செய்தது, என்கிறார்.
லீலாசுகர் கிருஷ்ண கர்ணாம்ருதத்தில் ஒருபடி மேலே போய்
வரமிமம் உபதேசம் ஆத்ரியத்வம்
நிகமவநேஷு நிதாந்த சார கின்னா:
விசினுத பவனேஷு வல்லவீனாம்
உபநிஷதர்த்தம் உலூகலே பத்தம்
நிகமவநேஷு- வேதமாகிய காடுகளில்
நிதாந்த சார கின்னா:- மிகவும் அலைந்து களைப்படைந்தவர்களே
இமம்- இந்த
வரம் உபதேசம் – சிறந்த உபதேசத்தை
ஆத்ரியத்வம் – செவி மடுத்துக் கேளுங்கள்
வல்லவீநாம் – கோபியருடைய
பவனேஷு – வீடுகளில்
உபநிஷத் அர்த்தம் – உபநிடதத்தின் பொருளான பிரம்மத்தை
விசினுத – தேடுங்கள்
உலூகலே பத்தம்- அது அங்கே உரலில் கட்டுண்டு இருக்கிறது.
'பிரமனும் இந்த்ரனும் மனதில் பொறாமை கொள்ள
உரலில் கட்டி வாய் பொத்தி கெஞ்ச வைத்தாய் கண்ணனை
என்னதவம் செய்தனை யசோதா' என்ற பாபநாசம் சிவனின் கீர்த்தனை நினைவுக்கு வருகிறதல்லவா!
கிருஷ்ணானந்த லஹரி - அலை 1௦
கண்ணன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருக்கிறான். ஸ்நானம் செய்யவில்லை ஒன்றும் சாப்பிடவில்லை.
யசோதை அவனை கூப்பிடுகிறாள்.
இதை பில்வமங்களர் சொற்களால் கேட்போம்.
க்ரீடந்தம் அந்தர்வ்ரஜம் ஆத்மனம் ஸ்வம்
ஸமம்வயஸ்யை: பசுபாலபாலை:
ப்ரேம்ணா யசோதா ப்ரஜூஹாவ க்ருஷ்ணம்
கோவிந்த தாமோதர மாதவேதி
க்ரீடாபரம் போஜனமஜ்ஜனார்த்தம்
ஹிதைஷிணீ ஸ்திரீ தனுஜம் யசோதா
அஜுஹாவத் பிரேமபரிப்லுதாக்ஷீ
கோவிந்த தாமோதர மாதவேதி
யசோதா- யசோதை
அந்தர்வ்ரஜம்- ஆயர்பாடியில்
ஆத்மனம் ஸ்வம்-தன்னிச்சையாக
ஸமம்வயஸ்யை: - தன் நண்பர்களான
பசுபாலபாலை:- இடைச்சிறுவர்களோடு
க்ரீடந்தம்- விளையாடிகொண்டிருந்த
க்ருஷ்ணம்- கிருஷ்ணனை
ப்ரேம்ணா – அன்போடு
ப்ரஜூஹாவ- அழைத்தாள்
கோவிந்த தாமோதர மாதவேதி- கோவிந்தா தாமோதரா மாதவா என்று
க்ரீடாபரம் – விளயாட்டில் மும்முரமாக இருந்த
தனுஜம்- பிள்ளையை
போஜனமஜ்ஜனார்த்தம் – ஸ்நானம் செய்யவும் உணவு உண்ணவும்
ஹிதைஷிணீ ஸ்திரீ- அவன் நன்மையை விரும்பிய பெண்மணியான
பிரேமபரிப்லுதாக்ஷீ- அன்பு நிரம்பிய கண்கள் கொண்ட
யசோதா-யசோதை
அஜுஹாவத்-அழைத்தாள்
கோவிந்த தாமோதர மாதவேதி- கோவிந்தா தாமோதரா மாதவா என்று
கண்ணன் வந்தால்தானே ? அதற்கு தாய் எப்படி அவனை வரவழைக்கிறாள் என்று பார்ப்போம்.
" கண்ணா உன் மேனி எங்கும் புழுதி மண்ணில் விளையாடியதால். நீ குளிக்க விட்டால் உடம்பு அரிக்கும். இரவு முழுதும் தூங்க முடியாமல் கஷ்டப்படுவாய் "
யாரிடம்? ' ப்ருத்வீ ரேணுரணு: பயாம்ஸி கணிகா: ' – இந்த பூமி உன் மேனியில் ஒரு தூசி கடல்கள் ஒரு துளி, என்று குலசேகரர் வர்ணித்த பெருமானிடம்!
அவன் வரவில்லை. பிறகு நீ வந்தால் உனக்கு லட்டு கொடுப்பேன் என்று ஆசை காட்டுகிறாள். திருமலையில் அவன் கொடுக்காத லட்டா?
பிறகு அவனிடம் " நீ ஸ்நானம் செய்யா விட்டால் உன் அழுக்கு உடம்பைப் பார்த்து எல்லா கோபியரும் சிரிப்பார்கள் ," என்று சொல்லுகிறாள். அதற்கும் அவன் அசையவில்லை.
கடைசியில் நப்பின்னை சிரிப்பாளே என்று சொல்லி அவனை அழைத்து வருகிறாள். அதற்கு அவன் " நான் அவ்வளவு அழுக்க்காகவா இருக்கிறேன்? ' என்று சொல்கிறான்.
" உன் மேனி தூசி படிந்து இருந்தாலும் எனக்கு அது பொன்மேனி. ஏனென்றால் நீ என் விலையில்லா மாணிக்கம்.
ஆனால் மற்றவர் அறியாமையினால் உன் மேல் தோற்றத்தைப் பார்த்து உன்னை எடை போட்டுவிடக் கூடாதல்லவா ?" என்று சொன்ன அந்த தாய் மனம் அவனுடைய அன்பர் மனம்.
பெரியாழ்வார் இந்த சம்பவத்தை பத்து பாசுரங்களில் அழகாக விவரிக்கிறார்.
உலகம் உண்டவன் ஆழ்கடலை அளந்தவன் அவனை ஒரு கை தண்ணீரால் குளிப்பாட்டிய யசோதையின் பாக்கியத்தை என்ன வென்று சொல்வது!
கிருஷ்ணாநந்த லஹரி - அலை 9
ஒரு கோபிகை தயிர்கடையும்போது கண்ணனைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள், "சரியாக தயிர் கடையும் சமயத்தில் வந்து நிற்பானே இன்னும் காணோமே " என்று.
\
வெளியில் வந்து பார்க்கும்போது எல்லோரும் அவன் பெயரையே சொல்லிப் பாடிக்கொண்டிருந்தார்கள். அவளும் சேர்ந்து பாடினாள்.
கண்ணன் வரக்காணோம். அவன் இருக்குமிடம் தேடிச்சென்று அவனைக் கூப்பிட்டால் அந்த குறும்புக்காரப்பிள்ளை வந்தால்தானே ! அவளை அலைக்கழித்து விளையாடினான் அந்த தீராத விளையாட்டுப்பிள்ளை.
பிறகு அவள் வீட்டினுள் சென்று வெண்ணை உருண்டையுடன் வெளியே வந்து கோவிந்தா தாமோதரா மாதவா என்று கூப்பிட்டாள்.
இதை பில்வமங்களர் வர்ணிக்கிறார்
க்வசித் ப்ரபாதே ததி பூர்ணபாத்ரே
நிக்ஷிப்ய மந்தம் யுவதிர் முகுந்தம்
ஆலோக்யகானம் விவிதம் கரோதி
கோவிந்ததாமோதரமாதவேதி
க்வசித்-ஒருசமயம்
ப்ரபாதே-காலையில்
மந்தம் ததி –கடையப்பட்ட வெண்ணையை
பூர்ணபாத்ரே –நிறைந்த பாத்திரத்தில்
நிக்ஷிப்ய-வைத்து
யுவதி: - ஒரு பெண்
முகுந்தம் –கண்ணனை
ஆலோக்ய-பார்த்து
விவிதம் –பலவிதமாக
கானம் கரோதி-பாடினாள்
கோவிந்ததாமோதரமாதவேதி-கோவிந்தா தாமோதரா மாதவா என்று.
அந்த மாயப்பிள்ளை அவளை கவனித்தால் தானே ! கையில் ஒரு கங்கணத்தை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். கையில் பந்து வெண்ணையுடன் அவனருகில் சென்று அந்த கோபிஅவன் கண்ணை தன கையால் மூடி "கண்ணா என் கையில் என்ன இருக்கிறது என்று சொல்" என்றாள்.
பில்வமங்களர் சொல்கிறார்
நிஜாங்கணே கங்கண கேளி லோலம்
கோபீ கிருஹீத்வா நவநீதகோளம்
அமர்தயத் பாணிதலேன நேத்ரே
கோவிந்ததாமோதரமாதவேதி
நிஜாங்கணே- தன் வீட்டின் வெளியே
கங்கண கேளி லோலம்-கையில் ஒரு கங்கணத்தை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த கண்ணனை
கோபீ- கோபி
நவநீதகோளம்-வெண்ணை உருண்டையை
கிருஹீத்வா –எடுத்துக் கொண்டு
பாணிதலேன-தன கையால்
நேத்ரே-அவன் கண்களை
அமர்தயத்-மூடினாள்
கோவிந்ததாமோதரமாதவேதி- கோவிந்தா தாமோதரா மாதவா(என் கையில் என்ன இருக்கிறது சொல் ) என்று.
கண்ணன் அசரவில்லை. அவளைக் கெஞ்ச வைத்து வெண்ணையை உட்கொண்டான். ஒருவேளை களவாடித் தின்றால் தான் வெண்ணெய் ருசிக்குமோ? அந்த வெண்ணை கள்வனைப் பிறகு காண்போம்.
கிருஷ்ணானந்த லஹரி - அலை 6
மாதவி என்கிற கோபச்சிறுமியிடத்தில் ஒரு அழகான கிளி இருந்தது. அது அவள் கையில் வந்து உட்காரும் . அவள் அதற்கு பழம் கொடுப்பாள். ஒரு நாள் அவளுக்கு அந்த கிளிக்கு பேசச் சொல்லிக் கொடுக்கவேண்டும் என்று தோன்றியது.
என்ன வார்த்தை முதலில் சொல்லிக் கொடுப்பது? வேறு என்ன, வார்த்தை பிருந்தாவனத்தில், எல்லா உயிர்களையும் மயக்கும் கண்ணனின் பெயரைத்தவிர?
அவள் கோவிந்தா என்று பலமுறை அந்தக் கிளியிடம் கூறினாள். ஆனால் அந்த பொல்லாத கிளி அவள் கையில் இருந்த பழத்திலேயே கவனமாய் இருந்தது. உடனே அவள் அந்தப் பழத்தை மறைத்துக் கொண்டு மறுபடியும் முயன்றாள். கிளி கோ என்று சொல்ல முயற்சித்தது. அப்போது அவள் ஒரு சிறு துண்டு பழத்தைக் கொடுத்தாள்.
மேலும் பழம் கிடைப்பதற்காக அந்தக் கிளி முழு நாமத்தையும் சொல்லிற்று. இப்படியே அடுத்த நாள் தாமோதரா என்றும் அதற்கடுத்த நாள் மாதவா என்றும் கிளிக்கு கற்பித்தாள். அதற்குப்பிறகு அவளைக்கண்டாலே கிளி கோவிந்தா தாமோதர மாதவா என்று கூவ ஆரம்பித்தது. ஏனென்றால் பழம் கிடைக்க வேண்டுமே!
இதை பில்வமங்களரின் சொற்களில் காண்போமா?
காசித் கராம்போஜபுடே நிஷண்ணம்
க்ரீடாசுகம் கிம்சசுகரத்ன துண்டம்
அத்யாபயாமாஸ ஸரோருஹாக்ஷி
கோவிந்த தாமோதர மாதவேதி
காசித் ஸரோருஹாக்ஷி- ஒரு கமலநயனம் கொண்ட கோபி
கராம்போஜபுடே – அவள் தாமரைக்கையில்
நிஷண்ணம்- உட்கார்ந்த
கிம்சசுகரத்ன துண்டம் –சிவப்பு ரத்தினம் போன்ற அலகை உடைய
க்ரீடாசுகம் – அவளுடைய செல்லக் கிளியை
கோவிந்த தாமோதர மாதவேதி - கோவிந்தா தாமோதரா மாதவா என்று
அத்யாபயாமாஸ- கற்பித்தாள்
இதைக் கண்டு அங்குள்ளோர் எல்லோரும் கிளி வளர்த்து அதற்கு கிருஷ்ண நாமங்களை கற்பிக்க ஆரம்பித்தனர். அது முதற்கொண்டு பிருந்தாவனமெங்கும் 'கோவிந்தா தாமோதரா மாதவா என்ற நாமம் ஒலிக்கத் தொடங்கியது.
இதை பில்வமங்களர் எப்படி சொல்கிறார் என்று கேட்போமா?
க்ருஹே க்ருஹே கோபவதூ சமூஹ:
பிரதிக்ஷணம் பிஞ்சர சாரிகானாம்
ஸ்கலத்கிரம் வாசயிதும் பிரவ்ருத்தோ
கோவிந்த தாமோதர மாதவேதி
க்ருஹே க்ருஹே- ஒவ்வொரு வீட்டிலும்
கோபவதூ சமூஹ:-கோபியர்
பிரதிக்ஷணம் – எப்பொழுதும்
பிஞ்சர சாரிகானாம் – கூட்டிலிருந்த கிளிகளுக்கு
ஸ்கலத்கிரம் – கொஞ்சம் கொஞ்சமான சொற்களால்
கோவிந்த தாமோதர மாதவேதி - கோவிந்தா தாமோதரா மாதவா என்று
வாசயிதும்- கற்பிக்க
பிரவ்ருத்த:- முயன்றார்கள்
இன்னொரு கோபி பார்த்தாள். இவர்கள் எல்லோரையும் விட சிறந்ததான நாமோச்சாரணம் செய்யும் கிளியை பழக்க எண்ணி, ஒரு கிளியைப் பிடித்து பகவானின் நாமங்களை சொல்லுவோர்க்கு சிறந்த இருப்பிடம் வேண்டும் என்று நினைத்தவள் போல் அதை ரத்தினங்களால் ஆன கூட்டில் வைத்து அதற்கு கோவிந்த தாமோதர மாதவ என்ற நாமங்களுக்கு மேல் ஆனந்த கண்ட, வ்ரஜ சந்திர, கிருஷ்ண என்ற நாமங்களையும் கற்பித்தாள்.
பில்வமங்களர் சொல்கிறார்,
கோபீ கதாசித் மணிபிஞ்சரஸ்தம்
சுகம் வசோ வாசயிதும் பிரவ்ருத்தா
ஆனந்த கண்ட வ்ரஜசந்த்ர கிருஷ்ண
கோவிந்த தாமோதர மாதவேதி
கோபீ கதாசித் – இன்னொரு கோபி
மனணிபிஞ்சரஸ்தம்- ரத்தினங்களால் ஆன
சுகம் –கிளியை
வசோ வாசயிதும் – பேசச் சொல்வதற்கு
பிரவ்ருத்தா- முயன்றவளாய்
ஆனந்த கண்ட வ்ரஜசந்த்ர கிருஷ்ண - ஆனந்த கண்ட,( ஆனந்த வடிவானவனே) வ்ரஜசந்த்ர , (யாதவகுல சந்த்ரனே )கிருஷ்ணா
கோவிந்த தாமோதர மாதவேதி - கோவிந்தா தாமோதரா மாதவா
இதி வசோ வாசயிதும் – என்று சொல்லக் கற்பிப்பதற்கு
பிரவ்ருத்தா- முயன்றாள்
மண்டன மிஸ்ரரின் வீட்டில் இருந்த கிளிகள் வேதத்தை சொல்லிக்கொண்டிருந்தனவாம். அப்படி இருக்கையில் பிருந்தாவனத்தின் கிளிகள் கண்ணன் நாமத்தை கூறியதில் வியப்பு ஒன்றும் இல்லை.
கிருஷ்ணானந்த லஹரி அலை 8
கண்ணன் துயில் எழுந்து அழுகிறான் பாலுக்காக. பாற்கடலில் துயில் கொள்பவன் தாய்ப்பாலுக்காக அழுகிறான்.
யசோதை குழந்தையை மடியில் வைத்து பாலூட்டும்போது கண்ணன அவள் முகத்தைப் பார்த்து சிரிக்கிறான். அவளும் மனம் மகிழ்ந்து கோவிந்தா தாமோதரா மாதவா என்று கொஞ்சுகிறாள்.
பில்வமங்களர் இதை வர்ணிக்கிறார்.
அங்காதிரூடம் சிசுகோபகூடம்
ஸ்தனம் தயந்தம் கமலைககாந்தம்
சம்போதயன் ஆஸ முதா யசோதா
கோவிந்தா தாமோதரமாதவேதி
அங்காதிரூடம்- மடியில் அமர்ந்து
ஸ்தனம் தயந்தம் – முலைப்பால் குடிக்கும்
சிசுகோபகூடம் – இடையன் வேஷத்தில் உள்ள
கமலைககாந்தம் –லக்ஷ்மீகாந்தனான கண்ணனை
முதா- சந்தோஷத்துடன்
யசோதா- யசோதை
கோவிந்தா தாமோதரமாதவேதி – கோவிந்தா தாமோதரா மாதவாஎன்று
சம்போதயன் ஆஸ- கூப்பிட்டுக் கொஞ்சி மகிழ்கிறாள்
இந்தக் காட்சியை அடியார்கள் கற்பனை செய்து மகிழ்கிறார்கள்.
நாராயண பட்டாத்ரி சொல்கிறார்.
நிபாயயந்தீ ஸ்தனம் அங்ககம் த்வாம்
விலோகயந்தீ வதனம் ஹஸந்தீ
தசாம் யசோதா கதமாம் ந பேஜே
ஸ தாத்ருச: பாஹி ஹரே கதான் மாம் ( நாரா- 41-1௦)
அங்ககம் – மடியில் உள்ள
த்வாம்- உன்னை
நிபாயயந்தீ ஸ்தனம்- பால் கொடுத்துக்கொண்டு
வதனம் - - உன் முகத்தை
விலோகயந்தீ- பார்த்துக் கொண்டு
ஹஸந்தீ- சிரித்து மகிழ்பவளாய்
யசோதா- யசோதை
கதமாம் தசாம்- எந்த ஆனந்த நிலையைத்தான்
ந பேஜே – அனுபவிக்கவில்லை ?
தாத்ருச: ஹரே – அப்படிப்பட்ட அனுபவத்தை அளித்த கிருஷ்ணா
மாம் – என்னை
கதாம் – நோயினின்று
பாஹி- காப்பாற்று
தமிழ் தியாகராஜர் என்று போற்றப்பட்ட பாபநாசம் சிவன் அவர்கள்
' ஈரேழு உலகங்கள் படைத்தவனை கையில் ஏந்தி பாலூட்டி தாலாட்டி சீராட்ட என்ன தவம் செய்தனை யசோதா ' என்று பாடுகிறார் .
கிருஷ்ணாநந்த லஹரி - அலை 9
ஒரு கோபிகை தயிர்கடையும்போது கண்ணனைப்பற்றியே நினைத்துக் கொண்டிருந்தாள், "சரியாக தயிர் கடையும் சமயத்தில் வந்து நிற்பானே இன்னும் காணோமே " என்று.
\
வெளியில் வந்து பார்க்கும்போது எல்லோரும் அவன் பெயரையே சொல்லிப் பாடிக்கொண்டிருந்தார்கள். அவளும் சேர்ந்து பாடினாள்.
கண்ணன் வரக்காணோம். அவன் இருக்குமிடம் தேடிச்சென்று அவனைக் கூப்பிட்டால் அந்த குறும்புக்காரப்பிள்ளை வந்தால்தானே ! அவளை அலைக்கழித்து விளையாடினான் அந்த தீராத விளையாட்டுப்பிள்ளை.
பிறகு அவள் வீட்டினுள் சென்று வெண்ணை உருண்டையுடன் வெளியே வந்து கோவிந்தா தாமோதரா மாதவா என்று கூப்பிட்டாள்.
இதை பில்வமங்களர் வர்ணிக்கிறார்
க்வசித் ப்ரபாதே ததி பூர்ணபாத்ரே
நிக்ஷிப்ய மந்தம் யுவதிர் முகுந்தம்
ஆலோக்யகானம் விவிதம் கரோதி
கோவிந்ததாமோதரமாதவேதி
க்வசித்-ஒருசமயம்
ப்ரபாதே-காலையில்
மந்தம் ததி –கடையப்பட்ட வெண்ணையை
பூர்ணபாத்ரே –நிறைந்த பாத்திரத்தில்
நிக்ஷிப்ய-வைத்து
யுவதி: - ஒரு பெண்
முகுந்தம் –கண்ணனை
ஆலோக்ய-பார்த்து
விவிதம் –பலவிதமாக
கானம் கரோதி-பாடினாள்
கோவிந்ததாமோதரமாதவேதி-கோவிந்தா தாமோதரா மாதவா என்று.
அந்த மாயப்பிள்ளை அவளை கவனித்தால் தானே ! கையில் ஒரு கங்கணத்தை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்தான். கையில் பந்து வெண்ணையுடன் அவனருகில் சென்று அந்த கோபிஅவன் கண்ணை தன கையால் மூடி "கண்ணா என் கையில் என்ன இருக்கிறது என்று சொல்" என்றாள்.
பில்வமங்களர் சொல்கிறார்
நிஜாங்கணே கங்கண கேளி லோலம்
கோபீ கிருஹீத்வா நவநீதகோளம்
அமர்தயத் பாணிதலேன நேத்ரே
கோவிந்ததாமோதரமாதவேதி
நிஜாங்கணே- தன் வீட்டின் வெளியே
கங்கண கேளி லோலம்-கையில் ஒரு கங்கணத்தை வைத்துக்கொண்டு விளையாடிக் கொண்டிருந்த கண்ணனை
கோபீ- கோபி
நவநீதகோளம்-வெண்ணை உருண்டையை
கிருஹீத்வா –எடுத்துக் கொண்டு
பாணிதலேன-தன கையால்
நேத்ரே-அவன் கண்களை
அமர்தயத்-மூடினாள்
கோவிந்ததாமோதரமாதவேதி- கோவிந்தா தாமோதரா மாதவா(என் கையில் என்ன இருக்கிறது சொல் ) என்று.
கண்ணன் அசரவில்லை. அவளைக் கெஞ்ச வைத்து வெண்ணையை உட்கொண்டான். ஒருவேளை களவாடித் தின்றால் தான் வெண்ணெய் ருசிக்குமோ? அந்த வெண்ணை கள்வனைப் பிறகு காண்போம்.
கிருஷ்ணானந்த லஹரி - அலை 1௦
கண்ணன் தன் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டு இருக்கிறான். ஸ்நானம் செய்யவில்லை ஒன்றும் சாப்பிடவில்லை.
யசோதை அவனை கூப்பிடுகிறாள்.
இதை பில்வமங்களர் சொற்களால் கேட்போம்.
க்ரீடந்தம் அந்தர்வ்ரஜம் ஆத்மனம் ஸ்வம்
ஸமம்வயஸ்யை: பசுபாலபாலை:
ப்ரேம்ணா யசோதா ப்ரஜூஹாவ க்ருஷ்ணம்
கோவிந்த தாமோதர மாதவேதி
க்ரீடாபரம் போஜனமஜ்ஜனார்த்தம்
ஹிதைஷிணீ ஸ்திரீ தனுஜம் யசோதா
அஜுஹாவத் பிரேமபரிப்லுதாக்ஷீ
கோவிந்த தாமோதர மாதவேதி
யசோதா- யசோதை
அந்தர்வ்ரஜம்- ஆயர்பாடியில்
ஆத்மனம் ஸ்வம்-தன்னிச்சையாக
ஸமம்வயஸ்யை: - தன் நண்பர்களான
பசுபாலபாலை:- இடைச்சிறுவர்களோடு
க்ரீடந்தம்- விளையாடிகொண்டிருந்த
க்ருஷ்ணம்- கிருஷ்ணனை
ப்ரேம்ணா – அன்போடு
ப்ரஜூஹாவ- அழைத்தாள்
கோவிந்த தாமோதர மாதவேதி- கோவிந்தா தாமோதரா மாதவா என்று
க்ரீடாபரம் – விளயாட்டில் மும்முரமாக இருந்த
தனுஜம்- பிள்ளையை
போஜனமஜ்ஜனார்த்தம் – ஸ்நானம் செய்யவும் உணவு உண்ணவும்
ஹிதைஷிணீ ஸ்திரீ- அவன் நன்மையை விரும்பிய பெண்மணியான
பிரேமபரிப்லுதாக்ஷீ- அன்பு நிரம்பிய கண்கள் கொண்ட
யசோதா-யசோதை
அஜுஹாவத்-அழைத்தாள்
கோவிந்த தாமோதர மாதவேதி- கோவிந்தா தாமோதரா மாதவா என்று
கண்ணன் வந்தால்தானே ? அதற்கு தாய் எப்படி அவனை வரவழைக்கிறாள் என்று பார்ப்போம்.
" கண்ணா உன் மேனி எங்கும் புழுதி மண்ணில் விளையாடியதால். நீ குளிக்க விட்டால் உடம்பு அரிக்கும். இரவு முழுதும் தூங்க முடியாமல் கஷ்டப்படுவாய் "
யாரிடம்? ' ப்ருத்வீ ரேணுரணு: பயாம்ஸி கணிகா: ' – இந்த பூமி உன் மேனியில் ஒரு தூசி கடல்கள் ஒரு துளி, என்று குலசேகரர் வர்ணித்த பெருமானிடம்!
அவன் வரவில்லை. பிறகு நீ வந்தால் உனக்கு லட்டு கொடுப்பேன் என்று ஆசை காட்டுகிறாள். திருமலையில் அவன் கொடுக்காத லட்டா?
பிறகு அவனிடம் " நீ ஸ்நானம் செய்யா விட்டால் உன் அழுக்கு உடம்பைப் பார்த்து எல்லா கோபியரும் சிரிப்பார்கள் ," என்று சொல்லுகிறாள். அதற்கும் அவன் அசையவில்லை.
கடைசியில் நப்பின்னை சிரிப்பாளே என்று சொல்லி அவனை அழைத்து வருகிறாள். அதற்கு அவன் " நான் அவ்வளவு அழுக்க்காகவா இருக்கிறேன்? ' என்று சொல்கிறான்.
" உன் மேனி தூசி படிந்து இருந்தாலும் எனக்கு அது பொன்மேனி. ஏனென்றால் நீ என் விலையில்லா மாணிக்கம்.
ஆனால் மற்றவர் அறியாமையினால் உன் மேல் தோற்றத்தைப் பார்த்து உன்னை எடை போட்டுவிடக் கூடாதல்லவா ?" என்று சொன்ன அந்த தாய் மனம் அவனுடைய அன்பர் மனம்.
பெரியாழ்வார் இந்த சம்பவத்தை பத்து பாசுரங்களில் அழகாக விவரிக்கிறார்.
உலகம் உண்டவன் ஆழ்கடலை அளந்தவன் அவனை ஒரு கை தண்ணீரால் குளிப்பாட்டிய யசோதையின் பாக்கியத்தை என்ன வென்று சொல்வது!
கிருஷ்ணானந்த லஹரி அலை 11
கோபியர் தயிர் கடைகின்றனர் . கண்ணன் அங்கு வந்து வெண்ணை தருமாறு கேட்கிறான். அப்போது அவர்கள் " நீ நாட்டியமாடினால்தான் வெண்ணை கிடைக்கும் ," என்று கூறுகின்றனர்.
கண்ணன் அவர்களை திருப்திப் படுத்த எவ்வாறு நாட்யம் ஆடினான் என்று வேதாந்த தேசிகர் யாத்வாப்யுதயத்தில் வர்ணிக்கிறார்.
ய ஏஷ லோகத்ரயசூத்ரதார
பர்யாய பாத்ராணி சராசராணி
ஆனர்தயதி அத்யத்புத சேஷ்டிதோ அஸௌ
நநர்த்த கேலம் நவநீதகாங்க்ஷீ
ய: எவன்
லோகத்ரயசூத்ரதார: - மூவுலகத்திற்கும் சூத்ரதாரனோ
பர்யாய பாத்ராணி – நாடகபாத்திரங்கள் சராசராணி- சராசரங்களோ
ஆனர்தயதி- அவைகளை ஆட்டுவிப்பவ்னாய் ,
அத்புத சேஷ்டித:-அரற்புதமானசெய்கையுடைவனாய் இருக்கிறானோ
அஸௌ- அவன்
கேலம் – விளையாட்டாகவே
நவநீதகாங்க்ஷீ- வெண்ணையை விரும்பி
நநர்த்த – நடனமாடினான்
எவனொருவன் மூவுலகத்திலும் உள்ள சேதன அசேதனங்களை ஒரு சூத்திரதாரனைப்போல் அந்தந்த பாத்திரங்களில் ஆட்டுவிக்கிறானோ அந்த அற்புதமான விளையாட்டுடையவன் வெண்ணையை விரும்பி அழகாக் நாட்டியம் ஆடினான் .
அப்போது அவன் உடலெங்கும் தயிர் துளிகள் நிறைந்தன. இதை தேசிகர் பாற்கடலில் உள்ள பாற்துளிகளாகக் காண்கிறார்.
பாற்கடலில் பால் மட்டுமே கிடைக்கும் . ஆனால் இங்கு ஆயர்பாடியில் தயிர் வெண்ணை நெய் முதலியவை கிடைக்குமே என்ற ஆசையில்தான் கண்ணனாக அவதரித்தானோ என்று அன்பர்கள் வியப்புறுகின்றனர்.
இந்த இடத்தில் குலசேகரரின் சொற்களைப் பார்ப்போமா?
க்ஷீரசாகரதரங்க சீகராஸாரதாரக்ருதசாருமூர்த்தயே
போகிபோகசயநீயசாயினே மாதவாய மதுவித்விஷே நம:
மது என்ற அரக்கனைக் கொன்ற மாதவன் பாற்கடலில் சேஷ சயனத்தில் உடல் முழுவதும் பாற்கடலின் அலைகளின் துளிகளால் சூழப்பட்ட நீல மேனியில் , நக்ஷத்திரங்கள் சூழ்ந்த ஆகாயம் போல் காணப் படுகிறான் . அவனுக்கு நமஸ்காரம்.
கண்ணனின் நாட்டியத்தை லீலாசுகர் வேறுவிதமாகக் காண்கிறார் .
வதனே நவநீத கந்த வாஹம்
வசனே தஸ்கர சாதுரீ துரீணம்
நயனே குஹனாஸ்ரு ஆச்ரயேதா: சரணம் கோமளதாண்டவம் குமாரம்
கண்ணன் முகத்தில் வெண்ணை வாசம். " கண்ணா வெண்ணை உண்டாயா," என்று கேட்கும் தாயிடம் "இல்லவே இல்லை," என்னும் கள்ளத்தனமான சாதுர்யப் பேச்சு.
"பொய் சொல்லாதே " என்றால் கண்களில் பொய்க் கண்ணீருடன் பார்க்கும் பார்வையில் தாய் மனம் கனிந்துவிட, அவளை இன்புறுத்த அழகாக நாட்டியம் ஆடுகிறான்.
வதனே – முகத்தில்
நவநீதகந்தவாசம்- வெண்ணை வாசம் வீசுகிறது.
வாசனே – சொற்களில்
தஸ்கரசாதுரீதுரீணம்- கள்ளத்த்னமான் சாதுர்ய பேச்சு.
நயனே – கண்களில்
குஹனாஸ்ரு- பொய்க் கண்ணீர்
கொமலதாண்டவம் அழகாக நாட்டியம் ஆடும்
குமாரம்- கண்ணனை
சரணம் ஆச்ரயேதா: - சரணம் அடைவோமாக.
கண்ணன் பார்த்தான். வெண்ணையை அடைய இவர்களை நாட்டியம் ஆடி மகிழ்வித்து கஷ்டப் படுவானேன் என்று. பிறகு அவனாகவே புகுந்து வெண்ணையை களவாட ஆரம்பித்தான் . அந்த நவநீதசோரனை ப பிறகு காண்போம்.
கிருஷ்ணானந்த லஹரி - அலை 12
இப்போது வெண்ணை கள்வனைக் காண்போமா?
லீலாசுகர் சொல்கிறார்
ததிமதநநிநாதை: த்யக்தநித்ர: ப்ரபாதே
நிப்ருதபதம் அகாரம் வல்லவீனாம் ப்ரதிஷ்ட:
முககமலஸமீரை: ஆசு நிர்வாப்ய தீபம்
கபளித நவநீத: பாது கோபாலபால:
தயிர் கடையும் சப்தம் கேட்டு கண்ணன் விழித்துக் கொண்டுவிட்டான். ஆயர்பாடியில் விடிய்முன்பே எழுந்து தயிர் கடைவது வழக்கம். எல்லோரும் வீட்டுத் தாழ்வாரத்தில் தயிர் கடையும்போது கண்ணன் சப்தம் செய்யாமல் அவர் வீட்டினுள் புகுந்து வெண்ணை வைத்திருக்கும் இடத்தை அடைந்து அங்குள்ள தீபங்களை வாயால் ஊதி அணைத்து வெண்ணையை உட்கொள்கிறான்.
ததிமதநநிநாதை: - தயிர்கடையும் சப்தத்தால்
த்யக்தநித்ர: - தூக்கம் கலைந்து
ப்ரபாதே- விடியற்காலையில்
நிப்ருதபதம் – மெல்ல அடிமேல் அடி வைத்து
அகாரம் வல்லவீனாம் – கோபியரின் வீட்டில்
ப்ரவிஷ்ட: - நுழைந்து
முககமலஸமீரை: - தன் கமலவாயை ஊதி
ஆசு நிர்வாப்ய தீபம் – விளக்கை உடனே அணைத்து
கபளித நவநீத: வெண்ணையை உண்ட
பாது கோபாலபால: -பால கோபாலன் நம்மை க் காப்பானாக.
ஒருமுறை ஒரு கோபி அவனை கையும் களவுமாய் பிடித்துத தன் வீட்டில் கட்டிப் போட்டுவிட்டு யசோதையிடம் குறை கூற வருகிறாள். அப்போது கண்ணன் அங்கு இருப்பதைக்கண்டு உடனே தன வீட்டிற்குச் சென்று அவன் எப்படி தப்பி வந்தான் என்று பார்க்க அவன் அங்கே அப்படியே இருப்பதைக்கண்டு வியப்புறுகிறாள்.
இவ்வாறு கண்ணன் பல மாயங்களை செய்தபோதும் அவனுடைய தெய்வீகத் தன்மையை கோபியர்கள் அறிந்தாரில்லை . எல்லாம் தங்கள் பிரமை என்றே நினைத்தார்கள். ஏனென்றால் கண்ணன் அவர்களை அப்படி நினைக்க வைத்தான்.
ஒரு சமயம் கண்ணன் வெண்ணெய் பானையுள் கைவிட அங்கு அந்த வீட்டு கோபி வந்துவிட்டாள். அப்போது அவளுக்கும் கண்ணனுக்கும் நடந்த சம்பாஷணையை லீலாசுகர் சொற்களில் காண்போமா?
"கஸ்த்வம் பால- குழந்தாய் யார் நீ?
ராமானுஜ: - நான் பலராமனின் தம்பி
கிம் இஹ தே- இங்கு எங்கு வந்தாய் ?
மன்மந்திரசங்கயா – என் வீடு என்று நினைத்துக் கொண்டேன்
யுக்தம் தத்- அது சரி
நவநீதபாத்ரவிவரே – ஆனால் வெண்ணெய் சட்டியுள்
ஹஸ்தம் – கையை
கிமர்த்தம் - எதற்காக
ந்யசே: - நுழைத்தாய்?
மாத: - தாயே
கஞ்சன- ஒரு
வத்சகம் –கன்றை
ம்ருகயிதும்- தேடுவதற்காக
மா கா விஷாதம் க்ஷணாத்- வருத்தம் அடையாதீர்கள்
இத்யேவம் – இவ்வாறு
வரவல்லவீ- ஒரு சிறந்த கோயபியிடம்
பிரதிவச: - மறுமொழி கூறின கண்ணன்
ந: - நம்மை
புஷ்ணாது - காப்பாற்றட்டும்.
இன்னொரு சமயம் கண்ணன் வெண்ணை திருடுவதற்காக ஒரு வீட்டில் புகுந்தான். அங்கு வெண்ணை கட்டிய உறியில் நிறைய மணிகளைக் கட்டித் தொங்கவிட்டிருந்தார்கள். கண்ணன் வந்து அதைத் தொட்டால் அவை அடிக்கட்டும் என்று. கண்ணன் அந்த மணிகளைப் பார்த்து அடிக்காதேயுங்கள் என்று கேட்டுக் கொண்டான் . அவைகளும் சம்மதிக்க அவன் வெண்ணையை எடுத்து ஒரு கவளம் உட்கொண்டபொது எல்லா மணிகளும் சேர்ந்து அடிக்க ஆரம்பித்தன. கண்ணன் "இது நியாயமா?" என்று கேட்க அவை " இறைவனுக்கு நைவேத்யம் ஆகும்போது மணி அடிப்பதுதானே நியாயம்? "என்றன . அப்புறம் என்ன நடந்திருக்கும் அன்று ஊகிக்கலாம் .
No comments:
Post a Comment