என்னுடைய நிலமையை ஶ்ரீ க்ருஷ்ணனிடம் இரகசியமாக எடுத்துக்கூறு என்று ஶ்ரீ லீலாசுகரின் ப்ரார்த்தனை ஶ்ரீக்ருஷ்ண கர்ணாம்ருத ஸ்லோகம். யாரிடம் ப்ராத்திக்கிறார் என்பது ஒரு சுவையான விஷயம் முரளி (புல்லாங்குழல்) ஶ்ரீ க்ருஷ்ணனை விட்டு பிரியாது அவன் இதழில் இருந்து வரும் அமுதத்தை இடைவிடாது பருகிக்கொண்டிருக்கும் பாக்யம் பெற்ற நீ இரகஸியமாக காதருகில் சென்று என் நிலையை விளக்கிக்கூறு. அருமையான ப்ரார்த்தனை அத்புதமாக நமக்காக பாடி அளித்திருக்கிறார் பாகவத ஸிம்மம் ஶ்ரீ செதலபதி சௌந்தர்ராஜ பாகவதர். இந்த ஸ்லோகங்களை பஜனைமார்க்கத்தில் கையாள்பவர்கள் மிகக்குறைவு. நாம் செய்த பாக்யம் இந்த மஹான் நமக்காக எப்படியெல்லாம் உழைத்துள்ளார்கள். இந்த ஸமூகம் இவரை எப்படி அங்கீகரித்து ஆதரிக்கும் என்று தெரியவில்லை அவரும் அதைப்பற்றி கவலைப்படாமல் எளிய ஜீவனம் நடத்தி தெய்வீக வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள். நம் கவலை நமக்கு வாருங்கள் குறைந்தது இதை கேட்டு ரஸிப்போம் சுவைப்போம் பகிர்ந்து கொள்வோம். ஶ்ரீ க்ருஷ்ணன் தன்னை நம்பியுள்ள இந்த பாகவதர்களை காத்து இரட்சிக்கும் கருணாமூர்த்தி.
அயி முரளி முகுந்த ஸ்மேர வக்த்ராரவிந்த ஸ்வஸன மதுர சம்ங்னே த்வாம் ப்ரணம்ய அத்ய யாசே அதர மணி சமீபம் ப்ராப்தவத்யம் பவத்வம் கதையரகஸி கர்ணேமத்தசாம் நந்தசூனோ 2-11
No comments:
Post a Comment