Thursday, March 19, 2020

why God gives trouble?

ஒரு கட்டுமான எஞ்சினியர்…
13 வது…  மாடியிலே வேலை செய்து கொண்டு இருந்தார்… 
.
ஒரு முக்கியமான வேலை…
.
கீழே ஐந்தாவது மாடியில் வேலை செய்து கொண்டு இருந்த கொத்தனாருக்கு ஒரு  முக்கியமான செய்தி சொல்ல வேண்டும்…
.
செல் போனில் கொத்தனாரை கூப்பிட்டார் எஞ்சினியர்..
.
போனை எடுக்கவில்லை..
.
என்ஜினியரும் உரக்க கத்திப் பார்த்தார்..
.
அப்பொழுதும்.. கொத்தனார்.. மேலே பார்க்கவில்லை.
.
 இவ்வளவுக்கும்…
கொத்தனார் வேலை செய்யும் இடத்தில் இருந்து , அவரால் என்ஜினியரை
நன்றாகப் பார்க்க முடியும்…
.
எஞ்சினியர் என்ன செய்வதென்று
யோசித்தார்… 
.
ஒரு பத்து ரூபாய் நோட்டை எடுத்து, 
மேலே இருந்து,கொத்தனார் அருகில் போட்டார்…
.
ரூபாயைப் பார்த்த கொத்தனார், 
அதை எடுத்து பையில் போட்டுக்
கொண்டார்…
.
 ஆனால் சற்றும் மேல் நோக்கிப் பார்க்கவில்லை…
.
என்ஜினியருக்கு ஒரே கோபம்..
.
இருந்தாலும் பொறுத்துக் கொண்டு…
.
ஒரு ஐநூறு ரூபாயை கொத்தனார் மேல் போட்டார்…
.
 அதையும் எடுத்து சட்டைப் பையில் வைத்துக்கொண்டு… கொத்தனார் மும்முரமாக இருந்தார்… 

எஞ்சினியர்.. பொறுமை இழந்து 
ஒரு சின்ன கல்லை எடுத்து,
கொத்தனார் மீது போட்டார்… 
.
அது அவரது தோள் மீது பட்டு நல்ல வலியோடு, 
மேலே பார்த்தார்…
.
அப்பொழுதுதான் எஞ்சினியர் தன்னை
அழைத்தார் என்பதை உணர்ந்தார்…
.
மனிதனும் அப்படித்தான்….

மேலே இருந்து இறைவன் அவனை அழைப்பது அவனுக்கு புரிவதில்லை… உலக மாயைகளில், சிக்கித் தவிக்கின்றான்...

இறைவன் அவனுக்கு அருட்கொடைகளை அளிக்கின்றான்...

அப்பொழுதும் அவன் இறைவனை
ஏறிட்டுப் பார்ப்பதில்லை...

ஆனால் ஒரு துன்பம் நேரும் பொழுதுதான் இறைவனை ஏறிட்டுப் பார்க்கின்றான்.
.

No comments:

Post a Comment