Friday, February 28, 2020

gitanjali

கீதாஞ்சலி J K SIVAN
ரவீந்திரநாத் தாகூர்

32. By all means they try to hold me secure who love me in this world. but it is otherwise with thy love which is greater than theirs, and thou keepest me free.Lest I forget them they never venture to leave me alone. But day passes by after day and thou art not seen.
If I call not thee in my prayers, if I keep not thee in my heart, thy love for me still waits for my love.

தாகூரின் எழுத்து ஆங்கிலத்திலேயே இப்படி வியக்க வைக்கிறதே, அவரது தாய் மொழியில் அவர் படைத்த கீதாஞ்சலி பாடல்களின் உணர்ச்சிகளை எப்படி விவரிப்பது? சும்மாவா வெள்ளைக்காரன் நோபல் பரிசு கொடுப்பான். அது என்ன நம்ம ஊர் டாக்டர் பட்டமா? தெருவில் போகிறவனுக்கு கூவி கூவி கொடுக்க?

கிருஷ்ணா, இதை நினைத்து பார்க்கும்போது நான் எவ்வளவு உனக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன் என்று தெரிகிறது. இந்த உலகத்தில் எல்லாவிதத்திலும் என்னை சேர்ந்தவர்கள், என் மீது பந்தம் பாசம் நேசம் எல்லாம் கொண்டவர்கள், என்னென்ன காரணத்துக்காகவோ என்னை விரும்பியவர்கள் என்னை தங்கள் பக்கம் கெட்டியாக இழுத்துக் கொள்ள துடிக்கிறார்கள். பிடித்து வைத்துக் கொள்ள அலைகிறார்கள். ஆனால் உன்னால் நான் பிழைத்தேன்.
ஆனால் நான் செய்த புண்யம் உனக்கு என் மீது அன்பு இருந்ததால் நான் பிழைத்தேன். நீ என்னிடம் காட்டும் பந்தம், பரிவு, பாசம், அவர்கள் அத்தனை பேரின் மொத்த பாசத்தை, பந்தத்தை விட அதிகம், சக்தி வாய்ந்தது என்பதால் என்னை அற்புதமாக உன் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டாய். அதனால் மற்ற பந்தங்கள், தொடர்புகளிலிருந்து விடுபட்டு விட்டேன். என்னை சுதந்திரனாக உலவ வைத்து விட்டாய். ஆம் இது நீ என்னிடம் வைத்துள்ள பாசம், நேசம் மற்றவர்கள் என் மேல் வைத்ததைவிட எத்தனையோ மடங்கு பெரியது. அதிகம். அது ஒன்றாலேயே தான்.

நான் சொன்ன அத்தனை பந்தங்களும் என்னை தனியாக விடுவதாகவே இல்லை. என்னால் அவர்களை மறக்க முடியவில்லையா? அல்லது அவர்களால் என்னை விட முடியவில்லையா? . காலம் நகர நகர உன்னை என்னால் காண முடியாவிட்டாலும் நான் உன்னை பிரார்த்திக்கா விட்டாலும், உன்னை என் மனதில் நிலையாக நிறுத்திக் கொள்ளாவிட்டாலும் நீ எவ்வளவு பொறுமையாக ஒருநாள் நான் உன் மேல் பக்தியும் அன்பும் கொள்வேன் என்று காத்திருக்கிறாய்!!! எவ்வளவு பொருத்தமாக உனக்கு காக்கும் கடவுள் என்று பெயர்? என்னை பொறுத்தவரை நீ காத்திடும் கடவுள் மட்டும் அல்ல, காத்திருக்கும் கடவுளும் தான்.

No comments:

Post a Comment