கவிகாளமேகத்திடம், புலவர் ஒருவர், திருமாலின் பத்து அவதாரங்களையும் ஒரே வெண்பாவில் பாட முடியுமான்னு கேட்க..?
ஒரு வெண்பா என்ன? அரை (பாதி)வெண்பாவிலேயே பாடுகிறேன் என்று சொல்லிப் - #பாடியும் காட்டினாராம்.
"மெச்சுதிரு வேங்கடவா வெண்பாவிற் பாதியில் என்
இச்சையில் உன்சன்மம் இயம்பவா? - மச்சாகூர்
மாகோலா சிங்காவா மாராமா ராமாரா
மாகோபா லாமாவா வா"
அட என்னங்க இது.....மாராமா ராமாரா-ன்னு நாக்கு குழறுது..?
பதம் பிரிங்க; புரியும்!
மச்சா-கூர்மா-
கோலா-சிங்கா-வாமா-ராமா-ராமா-
ராமா-கோபாலா-மாவா வா
(கோலா =வராகம்
வாமா =வாமனா
ராமா-ராமா-ராமா =பரசுராமா-ராமா-பலராமா-ன்னு மூன்று இராமன்கள்
மா-வா =குதிரையின் மேல் வரும் கல்கி...
என்ன ஒரு தமிழ் விளையாட்டு?
இன்னொரு தரம், இன்னொருதரம் என படிக்கப்படிக்க நாக்குழறாம வேகமா சொல்ல வரும் அழகே - தமிழழகு
No comments:
Post a Comment