Thursday, October 24, 2019

Chandrasekaramrutham -Periyavaa

Today's Sri Chandrasekaramrutham:

* இத்தனை பிரச்சாரம், சண்டை, பண உதவி செய்து மற்ற மதத்தினர், நம்மவர்களை இழுத்தாலும், இன்னும் பல கோடி மக்கள் நம்மிடையே இருக்கக் காரணம், நம் மதத்தில் யாரோ எங்கோ ஒரு மஹான் இருக்கிறார் என்பதே.
* கல், மண், செம்பு முதலிய எந்த பிம்பத்தில் வைத்துக் கூப்பிட்டாலும் ஆண்டவன் வருவான்.
* நிறைவேறாத ஆசையின் இரண்டு உருவங்கள் தான் துக்கமும், கோபமும்!
* நம்மிடமே ஏராளமான தோஷங்களை வைத்துக்கொண்டு இன்னொருத்தருக்கு உபதேசம் செய்தால் அது பிரயோஜனப்படாது.
* ஒரேடியாக ஸ்தோத்திரம் செய்து (புகழ்ந்து) ஒருவரை அகங்காரத்துக்கு ஆளாக்கி விடக்கூடாது.
* ஆரம்பம் என்றிருந்தால் அதற்கு முடிவும் இருக்க வேண்டும் என்பது பொது விதி.

No comments:

Post a Comment