Friday, September 6, 2019

Vishnu Sahasranama 563 to 580 in tamil

Courtesy:Smt.Dr.Saroja Ramanujam

விஷ்ணு ஸஹஸ்ரநாமம்

563. பகவான் – பஜ்யதே இதி பக:.அஸ்ய அஸ்தி இதி பகவான். பஜிக்கப்படுபவன் 
பக என்பது ஐஸ்வர்யம் வீர்யம் , யசஸ்( புகழ்), ச்ரிய: அல்லது தேஜஸ், ஞானம் , வைராக்கியம் என்ற ஆறு குணங்களைக் குறிக்கும். அது உள்ளவன் பகவான். (விஷ்ணுபுராணம்)

இதைத் தவிர சிருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம், உயிர்களின் பிறப்பு , அழிவு , ஞானம் , அறியாமை இவை அறிந்தவன் பகவான் என்று இன்னொரு விளக்கம் விஷ்ணுபுராணத்தில் உள்ளது.

564. பகஹா-சம்ஹார காலத்தில் ஐச்வர்யம் முதலியவைகளை அழிப்பவர். 
565. ஆனந்தீ-ஆனந்தஸ்வரூபியாக இருப்பவர். 
566. வனமாலீ-வைஜயந்தி மாலை அணிந்தவர். வைஜயந்தி மாலை என்பது பஞ்ச பூதங்களின் சூக்ஷ்ம உருவைக் குறிக்கிறது. அதாவது பகவான் பிரபஞ்சத்தை சூக்ஷ்ம உருவில் தரிக்கிறார்
.
567. ஹலாயுத: - ஹல என்றால் கலப்பை . இது கலப்பையை ஆயுதமாகக் கொண்ட பலராமரின் நாமம்.பஞ்ச பூதங்களை பயிர்களைப்போல அபிவிருத்தி செய்யும் உழவனைப் போல் கலப்பையை தரித்தவர்.

568. ஆதித்ய: - அதிதியின் மகனான வாமனராக அவதரித்ததால் ஆதித்யன் என்ற பெயர். 
ஆ என்பது ஸங்கர்ஷணரின் பீஜ மந்திரம். இது பகவானின் வியூஹரூபத்தையும் பலராமரையும் குறிக்கும் . சூரிய மண்டலத்தில் பிரகாசிப்பவர் . ' த்யேய: ஸதா ஸவித்ருமண்டலவர்த்தீ நாராயண:' 
ஆத் இத்ய: - அகாரம் நாராயணனைக் குறிக்கும் அவரிடம் இருந்து, இத்ய: பெறுவது மோக்ஷம்

569. ஜ்யோதிராதித்ய: -சூரியனின் தேஜஸாக இருப்பவர்.
570.ஸஹிஷ்ணு: -அனைத்தையும் பொறுப்பவர். ராமனை 'க்ஷமயா பிரிதிவி ஸம: ,' பொறுமையில் பூமியைப் போன்றவர் என்று வால்மீகி வர்ணிக்கிறார். துஷ்டர்களுக்கும் திருந்த சந்தர்ப்பம் கொடுப்பவர். 
571. கதிஸத்தம: - எல்லோரும் சென்றடையக் கூடிய மிகச்சிறந்த இடமாக இருப்பவர். 
572. ஸுதன்வா-சார்ங்கம் என்னும் இந்திரிய ரூபமான வில்லை உடையவர். 
கோதண்டத்தை உடைய ராமருக்கும் இது பொருந்தும்.
573. கண்டபரசு: பர என்பது எதிரிகளைக் குறிக்கும் பரம் ச்ருணாதி இதி பரசு: . கண்ட என்றால் க்ஷத்ரியர்களை கொன்றதால் முனை மழுங்கிய கோடரியை உடைய பரசுராமர். அல்லது சத்ருக்களை கண்டிக்கும் கோடரியை உடையவர். 
ஸுதன்வா என்ற நாமத்தோடு சேர்த்து இதை அகண்ட பரசு: என்று பார்த்தால் துண்டிக்க முடியாத் கோடரியை உடையவர் என்று பொருள் கொள்ளலாம் (சங்கரர்)
574. தாருண:- தீயோர்ற்குக் கொடியவர். வெளிபகை உட்பகை இரண்டையும் பிளப்பவர்
575. த்ரவிணப்ரத: -பக்தர்கள் விரும்பிய செல்வத்தை அளிப்பவர்.
576.திவிஸ்ப்ருக்-திவி ஸ்ப்ருசதி இதி. த்ரிவிக்ரமராக வானளாவ உயர்ந்தவர். 
பாதோ அஸ்ய ஸர்வபூதானி த்ரிபாதஸ்யாம்ருதம் திவி- புருஷ சூக்தம். 
577.ஸர்வத்ருக் – அனைத்தையும் பார்ப்பவர்
578. வ்யாஸ:-வியாசர். கண்ணன் கீதையில் 'முநீனாம் அபி அஹம் வியாஸ:- முனிவர்களை நான் வியாசராக இருக்கிறேன்' என்று சொல்கிறான்.
வ்யாஸ: என்றால் வ்யஸ்தானி வேத புராணானி அனேன இதி வியாஸ:-வேத புராணங்களை விரிவுரை செய்தவர் என்று பொருள். சங்கரர் ஸர்வத்ருக் வ்யாஸ: என்று ஒரே நாமமாகச் சொல்கிறார். எல்லா ஞானங்களைப் பற்றியும் விரிவுரை செய்தவர் என்ற அர்த்தத்தில்.
579. வாசஸ்பதி: - வாக்குக்கு அதிபதி 
580. அயோனிஜ:-கர்பத்தில் பிறக்காதவர். பகவானின் அவதாரங்கள் தோன்றியவை . தேவகியும் கோசலையும் கர்பத்தில் அவரை சுமந்ததாகக் கருதியது அவருடைய மாயை.

  

No comments:

Post a Comment