மனிதருள் ஒரு தெய்வம். J K SIVAN
ஷீர்டி ஸாயீ பாபா
11 ஸாயிபாபா ஒரு யுக புருஷ ஞானி
நான் மைலாப்பூரில் இருந்த காலத்தில் அடிக்கடி ஸாயிபாபா கோவிலுக்கு செல்வேன். அந்த கோவிலுக்கு எதிரே நான் வேலைசெய்த அலுவலகத்தின் பிரத்யேக மருத்துவர் டாக்டர் முத்து வைரு எங்களுக்கு இலவச மருத்துவ பார்வை இல்லம் இருந்தும். மாலை வேலைகளில் அங்கு தான் எங்கள் குடும்பத்திற்கான மருத்துவ ஆலோசனை பெறுவோம். முத்து வயிருவை பார்க்குமுன் ஸாயீ பாபாவை தரிசிப்பது வழக்கம். இன்னொரு அதிர்ஷ்டம் என் முதல் மகனை முதலில் ஸாயீ பாபா கோவிலை ஒட்டி அவர்கள் நடத்திய குழந்தைகள் பள்ளியில் தான் சேர்த்தேன். அவனை கொண்டுவிட அழைத்துவர போகும்போதெல்லாம் உள்ளே ஸாயிபாபா தரிசனம். அப்போதெல்லாம் அவ்வளவு கூட்டமே இருக்காது என்பதால் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் துனியை அருகே இருந்து தரிசிக்க முடிந்தது. இந்த ஆலயத்தில் ஆளுயர வெள்ளை சலவைக்கல் பாபாவை தொட்டு தரிசிக்கமுடியும், மாலை வஸ்திரம் அணிவிக்க முடியும். அங்கே ஒரு விளக்கமுடியாத தனித்துவமான சாந்நித்யம் நிச்சயம் உண்டு. துவாரகமாயி அன்னா, குருஸ்தான், நரசிம்ம சுவாமி சமாதிகள் உண்டு. 1941ல் நரசிம்மஸ்வாமியால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயம். தமிழ் நாட்டுக்கு பாபா அறிமுகமானதே அவருடைய அகில இந்திய சாய் சமாஜத்தினால் என்று சொல்லலாம். நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். இன்று லக் ஷோப லக்ஷம் பக்தர்கள் சாயிபாபா புகழ் பாடி மகிழ்கிறார்கள். இந்த ஆலயத்திற்கு வருவதற்கு பக்தர்களுக்கு எந்த கண்டிஷன், நிபந்தனையும் கிடையாது. குறிப்பிட்டா நாட்களில் நேரத்தில் கிருஸ்தவர்கள் பைபிளும், இஸ்லாமியர் குரானும் கூட ஓதுகிறார்கள். வேறு எந்த ஆலயத்திலும் இதை காணமுடியாது. ஸாயி பாபா தனது கைகளால் ஷீர்டியில் ஏற்றிய அக்னி இன்னும் இங்கே ஒரு பாகமாக ஒளியை வீசிவருகிறது. எத்தனையோ வருஷங்கள் ஓடிவிட்டது. என்றும் ஒளி வீசி பக்தர்களை மகிழ்வித்து ஞாயிறுகளில் அக்னி பூஜை நடக்கிறது. ஸாயீ பக்தர்கள் மட்டுமல்ல எல்லோருக்குமே இது ஒரு அமைதி பூங்கா.
ஷீர்டி பாபா ஒருநாள் மத்தியானம் ஆர்த்தி முடிந்தபின்னர் பக்தர்கள் தங்கள் விடுதிகளுக்கு திரும்பு முன்னர் அவர்களுக்கு ஒரு அறிவுரை வழங்கியது என்ன தெரியுமா ?
" உன் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் இரு, என்ன தோன்றுகிறதோ அதை செய், ஆனால் நீ என்ன நினைக்கிறாய், என்பது எனக்கு நன்றாக தெரியும் என்பதை மறவாதே. எல்லோர் மனத்திலும் இதய பீடத்திலும் உள்ளவன் நான். எல்லா உயிரினங்களுக்கும் உற்றவன். தாவர ஜங்கம வஸ்துக்கள், அசையும், அசையா அனைத்துமே என் கண்காணிப்பில் தான் உள்ளன. பிரபஞ்சத்தை இயக்குபவன் நான். தந்தையும் தாயுமானவன் நான். முக்குணங்களின் சங்கமம். புலன்களை கட்டுப்பாட்டில் வைப்பவன். ஸ்ருஷ்டி, ஸ்திதி ஸம்ஹார மூர்த்தி. என்னை அண்டினவனுக்கு எந்த தீங்கும் தீமையும் நேராது நெருங்காது. என்னை மறந்தவன் மாயை வசப்பட்டு அவஸ்தை படுவான். எறும்பு முதல் யானைவரையான சகல உருவங்களும் என் உருவமே'
11 ஸாயிபாபா ஒரு யுக புருஷ ஞானி
நான் மைலாப்பூரில் இருந்த காலத்தில் அடிக்கடி ஸாயிபாபா கோவிலுக்கு செல்வேன். அந்த கோவிலுக்கு எதிரே நான் வேலைசெய்த அலுவலகத்தின் பிரத்யேக மருத்துவர் டாக்டர் முத்து வைரு எங்களுக்கு இலவச மருத்துவ பார்வை இல்லம் இருந்தும். மாலை வேலைகளில் அங்கு தான் எங்கள் குடும்பத்திற்கான மருத்துவ ஆலோசனை பெறுவோம். முத்து வயிருவை பார்க்குமுன் ஸாயீ பாபாவை தரிசிப்பது வழக்கம். இன்னொரு அதிர்ஷ்டம் என் முதல் மகனை முதலில் ஸாயீ பாபா கோவிலை ஒட்டி அவர்கள் நடத்திய குழந்தைகள் பள்ளியில் தான் சேர்த்தேன். அவனை கொண்டுவிட அழைத்துவர போகும்போதெல்லாம் உள்ளே ஸாயிபாபா தரிசனம். அப்போதெல்லாம் அவ்வளவு கூட்டமே இருக்காது என்பதால் எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் துனியை அருகே இருந்து தரிசிக்க முடிந்தது. இந்த ஆலயத்தில் ஆளுயர வெள்ளை சலவைக்கல் பாபாவை தொட்டு தரிசிக்கமுடியும், மாலை வஸ்திரம் அணிவிக்க முடியும். அங்கே ஒரு விளக்கமுடியாத தனித்துவமான சாந்நித்யம் நிச்சயம் உண்டு. துவாரகமாயி அன்னா, குருஸ்தான், நரசிம்ம சுவாமி சமாதிகள் உண்டு. 1941ல் நரசிம்மஸ்வாமியால் நிர்மாணிக்கப்பட்ட ஆலயம். தமிழ் நாட்டுக்கு பாபா அறிமுகமானதே அவருடைய அகில இந்திய சாய் சமாஜத்தினால் என்று சொல்லலாம். நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார். இன்று லக் ஷோப லக்ஷம் பக்தர்கள் சாயிபாபா புகழ் பாடி மகிழ்கிறார்கள். இந்த ஆலயத்திற்கு வருவதற்கு பக்தர்களுக்கு எந்த கண்டிஷன், நிபந்தனையும் கிடையாது. குறிப்பிட்டா நாட்களில் நேரத்தில் கிருஸ்தவர்கள் பைபிளும், இஸ்லாமியர் குரானும் கூட ஓதுகிறார்கள். வேறு எந்த ஆலயத்திலும் இதை காணமுடியாது. ஸாயி பாபா தனது கைகளால் ஷீர்டியில் ஏற்றிய அக்னி இன்னும் இங்கே ஒரு பாகமாக ஒளியை வீசிவருகிறது. எத்தனையோ வருஷங்கள் ஓடிவிட்டது. என்றும் ஒளி வீசி பக்தர்களை மகிழ்வித்து ஞாயிறுகளில் அக்னி பூஜை நடக்கிறது. ஸாயீ பக்தர்கள் மட்டுமல்ல எல்லோருக்குமே இது ஒரு அமைதி பூங்கா.
ஷீர்டி பாபா ஒருநாள் மத்தியானம் ஆர்த்தி முடிந்தபின்னர் பக்தர்கள் தங்கள் விடுதிகளுக்கு திரும்பு முன்னர் அவர்களுக்கு ஒரு அறிவுரை வழங்கியது என்ன தெரியுமா ?
" உன் விருப்பம் போல் எங்கு வேண்டுமானாலும் இரு, என்ன தோன்றுகிறதோ அதை செய், ஆனால் நீ என்ன நினைக்கிறாய், என்பது எனக்கு நன்றாக தெரியும் என்பதை மறவாதே. எல்லோர் மனத்திலும் இதய பீடத்திலும் உள்ளவன் நான். எல்லா உயிரினங்களுக்கும் உற்றவன். தாவர ஜங்கம வஸ்துக்கள், அசையும், அசையா அனைத்துமே என் கண்காணிப்பில் தான் உள்ளன. பிரபஞ்சத்தை இயக்குபவன் நான். தந்தையும் தாயுமானவன் நான். முக்குணங்களின் சங்கமம். புலன்களை கட்டுப்பாட்டில் வைப்பவன். ஸ்ருஷ்டி, ஸ்திதி ஸம்ஹார மூர்த்தி. என்னை அண்டினவனுக்கு எந்த தீங்கும் தீமையும் நேராது நெருங்காது. என்னை மறந்தவன் மாயை வசப்பட்டு அவஸ்தை படுவான். எறும்பு முதல் யானைவரையான சகல உருவங்களும் என் உருவமே'
இந்த வாசகத்தை அறிந்த பின்னர் தபோல்கர் மனதில் ஒரு தீர்மானம் உருவாகியது. இனி என் ஒரே குரு சாயிபாபா தான். எனக்கு நல்ல வேலை , அதிக சம்பளத்துடன் குடும்ப செலவை சந்திக்க தேவை என்று எனக்காக சிஞ்சலிகார் பாபாவிடம் கேட்டபோது ''நிச்சயம் இவனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கும் ''என்று பாபா பதிலளித்தார் அல்லவா. அது என் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது. எப்போது எங்கே எந்த விதத்தில் அது நிறைவேறும் என்று எண்ணிக்கொண்டே இருந்தேன். பிற்காலத்தில் அது சாய்பாபா சேவையாக முழுநேர பணியாக அமைந்தது என் பாக்யம்.'' என்கிறார் சாய் சத் சரித்திரம் ஆசிரியர் தபோல்கர் எனும் ஹேமத் பந்த்.
சாய்பாபாவின் சரித்திரம் படிப்பவர்களுக்கு ஒரு தனி அனுபவம் கிட்டும். அலை பாயும் மனம் நிலையாக நிற்கும். தடைகள் நீங்கும். புலன்கள் வழி செல்லும் நாட்டம் குறையும். மனம் மேன்மேலும் சாயிபாபாவை நினைக்கவே தோன்றும். இயற்கையான அன்பு பரிமளிக்கும். பக்தி பெருகும். எந்த சாதனையும் தேடிப்போகவேண்டாம். பேசாமல் சாய் சரித்திரம் கேட்டாலே போதும். அறியாமையை அது போக்கும். முக்தி அளிக்கும். ஒரு கருமி எங்கே சென்றாலும் அவன் மனது அவன் புதைத்து வைத்த பணமூட்டை மேல் தானே இருக்கும். அப்படி மனது ஒருமைப்பாடோடு சாயிபாபாவோடு இணையும்.-- என்கிறார் தபோல்கர்.
No comments:
Post a Comment