Thursday, July 18, 2019

Is kaliyuga made for making adharma - Periyavaa

*கலி அதர்மத்திற்கே சங்கல்பிக்கப்பட்டதா*.

*ஶ்ரீகாஞ்சி மஹாப் பெரியவா வாக்கு*.

*ஆதாரம்*:
*தெய்வத்தின் குரல்*.
*பாகம்---5*.
*பக்கம்----345 to 350*.

*பகவத் சங்கல்பம் நமக்குப் புரியாது*.
*என்றாலும், அவன் (பகவான்) சஸ்திர வாயிலாகக் "கலி அதர்ம யுகம்" என்று நமக்குத் தெரிவிக்கும்போது, அப்படியே அதர்மத்தில் லோகம் நசித்துப் போவதற்காகத்தான் இந்த யுகம் அவனால் தீர்மானமாகப் சங்கல்பட்டு இருக்கிறதென்று அர்த்தம் கொண்டு விடக்கூடாது என்றே தோன்றுகிறது*.
*சறுக்காமாலை விளையாட்டுப் போலச் சறுக்கும் வரை சறுக்கட்டும் என்று பார்த்துக் கொண்டு இருந்தாலும், விழுந்து எலும்பை முறித்துக் கொள்ள விடாமல் தாங்கிக் கொள்ள வருவான்*;
*மஹான்களையும் அனுப்பி வைப்பான்*.

*ஒரு பக்கம் லஞ்சம், மோசடி, கொலை இன்னும் அநேக தகாத கார்யங்களுக்கான க்ளப்புகள், சூதாட்டங்கள் என்று இப்போது ஒரு பக்கம் பார்க்கிறோம் என்றால், இன்னொரு பக்கம் ப்ரவசனம், பஜனை, கும்பாபிஷேகம் என்றும் நிறையப் பார்க்கிறோம் அல்லவா*?

*கலி முடிகிறபோது கூட நல்ல வைதிகமான தர்ம வாழ்வு நடத்துபவர்கள் அடியோடு அஸ்தமித்து விடப் போவதில்லை*.

*கலியுக முடிவில் தாம்ரபரணி தீரத்தில், அதாவது நம்முடைய திருநெல்வேலி ஜில்லாவில், விஷ்ணுயசஸ் என்ற பிராமணருக்குப் புத்திரனாகப் "கல்கி" என்ற பெயரில் பகவான் அவதரிப்பான் என்று சொல்லி இருக்கிறது*.
*அப்படியானால், அப்போதும் வைதிக ஆசாரங்களைப் பின்பற்றும் ஸத்பிராமணர்கள் கொஞ்சமாவது இருந்து கொண்டு இருப்பார்கள் என்றுதானே அர்த்தம்*?

*கலியின் கொடுமையைப் புராணம் முதலானவற்றில் ஜாஸ்திப் படுத்தித்தான் சொல்லி இருக்கிறது*.
*போயே போய் விட்ட மாதிரிதான் வர்ணித்து இருக்கும்*.

*அக்னிஹோத்ரம் என்பது கர்மகாண்டத்தில் ப்ரவிருத்தி மார்க்கத்தில் வருவது*;
*ஸந்யாஸம் என்பது ஞானகாண்டத்தில் நிவ்ருத்தி மார்க்கமாக வருவது*.
*எனவே இந்த இரண்டும் போய்விட்டால் ஜனங்கள் உருப்பட வழியே இல்லை*.
*அதற்கு தர்ம சாஸ்திரக்காரர்கள் என்ன தீர்ப்புக் கொடுத்தார்கள்*?

*"கலியுகம், க்ருதயுகம் என்று போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம்*.
*எதுவரை வர்ண விபாகம் கொஞ்சமாவது இருக்கிறதோ, அதுவரை அக்னிஹோத்ரமும் ஸந்யாஸமும் இருக்கலாம்"*
*என்று தீர்ப்புக் கொடுத்தார்கள்*.

*அதனால், கலியிலும் இவையெல்லாம் மங்கிப் போனாலும், முழுக்க அணைந்து விடாமல் முணுக்கு முணுக்கு என்று எரிந்து கொண்டுதான் இருக்கும் என்று தெரிகிறது அல்லவா*?

*அணைந்து போகிற நிலைக்கு வரும்போது ஒரு மஹாபுருஷர் வந்து எண்ணெய் போட்டு, திரியைத் தூண்டிவிட்டு நன்றாகவே ஜொலிக்கச் செய்வார்*.

*க்ருதயுகமே வந்து விட்டதோ என்று நினைக்கிற மாதிரிகூடக் கொஞ்ச காலம் நன்றாகப் போகும்*.
*அப்புறம் மறுபடி மங்கல்*,
*மறுபடித் தூண்டி விடுவது என்று போய்க் கொண்டிருக்கும்*.

*"கலிதான் அதர்மயுகம் என்றால், நாம் அதர்மமாகத்தான் இருந்துவிட்டுப் போவோமே"*!
*என்று சொல்வது தப்பு*.

*"கலி அதர்ம ஆட்சியை ஆரம்பித்து விட்டான்"*
*என்று சாஸ்திரங்கள் தண்டோராப் போடுவதற்குத் தாத்பர்யம், கூடியமட்டும் தர்மத்தை ஜாக்ரதையாக ரக்ஷித்துக் கொள்வதற்குத்தோனே ஒழிய, இருப்பதையும் விட்டுவிட்டு வீணாகப் போவதற்கு இல்லை*.

*இந்த யுகத்தில் வரும் அதர்மப் பிரவாஹத்தை ஒருவன் எதிர்த்து நின்றால்தான், மற்ற யுகங்களில் செய்யும் தர்மானுஷ்டான பலனைவிடக் கோடி மடங்கு பலன் பெறலாம்*.

*க்ருதயுகத்தில் மனோநிக்ரஹம் என்ற சிரம ஸாத்யமான கார்யத்துடன் கூடியதான "தியானம்" செய்தும், த்ரேதாயுகத்தில் கஷ்டப்படுத்திக் கொண்டு "யாகங்கள்" செய்தும், த்வாபரயுகத்தில் விஸ்தாரமாக "அர்ச்சனை, பூஜை" என்று செய்துமே பெறக்கூடிய பலனை, இந்தக் கலியுகத்தில் சுலபமாக "பகவந்நாமா"வைச் சொல்லியே பெற்று விடலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்*.
*பயமுறுத்திய அதே சாஸ்திரங்களிலேயே ரொம்பவும்  ஆறுதலாகச் சொல்லி இருக்கிறார்கள்*.

*"கலியா அஸத்தான யுகம்"*.

*அதுதான் ஸத்தான யுகம்*.

*"கலி: ஸாது:*,
*கலி: ஸாது:"*
*என்று வியாஸாசார்யாள் இரண்டு தரம் உறுதிப்படுத்திச் சொல்லி இருக்கிறார்*.

No comments:

Post a Comment