Thursday, December 20, 2018

Tamil Jokes compiled

மனம் விட்டு சிரியுங்க😆
வியாதிகள் தீரும், ஆயுள் கூடும்👍

ஹலோ! யார் பேசுறது?
பெண்: நான் 'செல்லம்மா' பேசறேன்...
: நான் மட்டும் என்ன 'கோவமா' பேசறேன்? அட யாருன்னு சொல்லுமா.
-----------------------------நோயாளி; "கசப்பான மருந்து கூட உங்க கையால கொடுக்கிறப்போ
ஸ்வீட்டா இருக்கு..SISTER
நர்ஸ் : "கர்மம்.."கர்மம். நான் உண்மையிலேயே 'ஸ்வீட்'..தான் குடுத்தேன்,
இன்னிக்கு எனக்கு 'பர்த்டே'...."
-----------------------------
டாக்டர் : எங்க ஹாஸ்பிடல் விளம்பரத்துக்கு ஒரு பன்ச் டயலாக் சொல்லுங்க
விளம்பரதாரர்: கூட்டிட்டு வாங்க!! தூக்கிட்டு போங்க!!
-----------------------------
மனைவி: உன்னைக் கட்டினதுக்குப் பதிலா ஒரு எருமை மாட்டைக் கட்டியிருக்கலாம்.
கணவன்:ஆனா...அதுக்கு எருமை மாடு சம்மதிக்கணுமே?
---------------------------ஆசிரியர் : கஞ்சன் என்ற தலைப்பில் கட்டுரை எழுது
மாணவன் :சார், பேப்பர், இங்க் எல்லாம் வேஸ்ட் ஆகிடும். நான் சொல்றேன் கேட்டுக்கோங்க
---------------------------
முதலாளி: எங்கயாவது நீ குரங்கைப் பாத்துருக்கியா?
ஊழியர்: (தலையை குனிந்தபடி)- இல்லீங்க முதலாளி!
முதலாளி: கீழே பாக்காதே-. நேரா என்னைப்பாரு
-----------------------------
மருத்துவர்: "ஆபரேஷன் முடிந்து நீங்க நடந்தே வீட்டுக்குப் போகலாம்."
நோயாளி : "ஆட்டோவுக்குக் கூடக் காசு இருக்காதா டாக்டர்?"
----------------------------
டாக்டர் கிட்டேயும் கடவுள் கிட்டேயும் வம்பு பண்ண கூடாது.. ஏன்னா.. ??
கடவுளுக்கு கோபம் வந்தா டாக்டர் கிட்ட அனுப்பிடுவாரு...
டாக்டருக்கு கோபம் வந்தா கடவுள் கிட்டேயே அனுப்பிடுவாரு...
----------------------------
மனைவி: என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?
கணவன்: என்னம்மா விஷயம்?
மனைவி: நமக்கு கல்யாணம் பண்ணி வெச்ச புரோகிதர் மண்டையப் போட்டுட்டாராம்:(
கணவன்: ஹும்… செஞ்ச பாவம் சும்மா விடுமா? தெய்வம்னு ஒண்ணு இருக்குலே..
மனைவி: ????
-----------------------------நோயாளி - பத்தடி நடந்தாலே மூச்சு வாங்குது டாக்டர்

டாக்டர் :- அப்ப ஒன்பது அடிக்கு மேல நடக்காதயுங்க
-----------------------------
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
----------------------------
வங்கி மேலாளர் : மாட்டுக்கு லோன் வாங்கியிருந்தீங்க எப்படி கட்டுவீங்க?
கிராமத்தான் : கயிற்றாலே தான்
-----------------------------
"டாக்டர் எனக்கு தற்கொலை பண்ணிக்கணும் போல இருக்கு."
"அதெல்லாம் கூடாது.. ரொம்ப தப்பு. அப்புறம் நாங்கெல்லாம் எதுக்கு இருக்கோம்?"
-----------------------------
நோயாளி : டாக்டர் !என் மனைவிக்கு 2 நாளா பேசவே முடியலை.
டாக்டர் : 2 நாள் முன்னே அவள் என்ன சாப்பிட்டான்னு கேட்டு சொல்லுங்க.என்
மனைவிக்கும் வாங்கி கொடுக்கணும்.
----------------------------
அதோ போறாரே.. அவர் ஒரு "சைல்ட் ஸ்பெஷலிஸ்ட்.."..!
குழந்தைகளுக்கு நல்லா வைத்தியம் பார்ப்பாரா..?
இல்லே.. அவருக்கு 17 குழந்தைகள்..!
-----------------------------
"டாக்டர் எனக்கு கோபமே வர மாட்டேங்குது. யாரைப் பாத்தாலும், எதைப்
பாத்தாலும் சிரிச்ச மொகமாவே இருக்கேன்.அதுக்கு ஏதாவது மருந்து
குடுங்களேன்."
"கவலைப்படாதீங்க.. அதுக்கு நான் என்னோட பில் தர்றேன்."
----------------------------
 Sardar1) என்ன இது? ஒரு காலில் பச்சைக் கலர் சாக்சும், மற்றொரு காலில் வெள்ளைக்
கலர் சாக்சும் அணிந்திருக்கிறாய்.
Sardar 2) சொன்னால் ஆச்சரியப்படுவாய்! என் வீட்டில் இதுபோலவே இன்னொரு ஜோடியும் இருக்கிறது.

சிரிக்க மட்டுமே! 
வாய்விட்டுச் சிரித்தால் 
நோய்விட்டுப் போகும்!

                       1

சார்! நீங்க எந்தக் கடவுளைக் கும்புடுவீங்க .....?

கல்யாணத்துக்கு முன்னாடியா,  பின்னாடியா.....?

கல்யாணத்துக்கு முன்னாடிதான் சொல்லுங்களேன்.....

கல்யாணத்துக்கு முன்னாடி, 
எனக்கு முருகனைத்தான் 
ரொம்பப் பிடிக்கும் .....

அப்போ பின்னாடி.....?

அட, 
அதை ஏன் கேக்குறீங்க, கல்யாணத்துக்கு அப்புறம் 
நான் வேண்டாத தெய்வமே
இல்லை.....!!?!!?!!?

                  ****

                         2

சத்தியவான் சாவித்திரி ..... 
தன் கணவனை..... 
எமதர்ம ராஜாவிடமிருந்து 
தன் தந்திர வரங்களால் 
கடுமையாகப் போராடி மீட்டாள்.....

கதையின் கருத்து :--
ங்கொய்யால! 
ஒரு புருஷன... 
பொண்டாட்டிகிட்ட இருந்து .....
எமதர்மனால கூட 
காப்பாத்த முடியாது.....!!!

              *****
                         
                          3

மனைவி: 
ஏங்க!  உங்களைக் 
கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு 
என் புத்தியை 
செருப்பாலத்தான்  
அடிச்சுக்கோணும்.....!

கணவன்: 
செருப்பு இந்தா இருக்கு.....!  
புத்திக்கு எங்கே போவ!!?? 

                  *****

                             4

கணவன்:  
"என்ன சமைச்சிருக்கே ...? 
சாணி வரட்டி மாதிரி இருக்கு... 
நல்லாவேயில்லை"......

மனைவி:  
"கடவுளே! ..... 
இந்த மனுஷன் 
இன்னும் என்னவெல்லாம் 
சாப்பிட்டுப் பார்த்திருக்காரோ.....? 
தெரியலையே... ஏ...ஏ... ஏ....." !

                 ******

                             5

மனைவி என்பவள் திருக்குறள் போன்றவள்.....

அடேங்ங்ங்ங்ங்ங்ங்கப்பா! 
எவ்வளவு அதிகாரங்கள்.....?

                 *****

No comments:

Post a Comment