Monday, November 12, 2018

Srimad ramayana Dhyana slokas with meanings in tamil

Courtesy: Smt.Dr.Saroja Ramanujam

ராமாயண த்யான ஸ்லோகங்கள்

1. சுக்லாம்பரதரம் – வெள்ளை வஸ்திரம் தரித்தவரும்
விஷ்ணும் – எங்கும் நிறைந்தவரும்
சசிவர்ணம் –சந்திரனின் நிறம் உடையவரும்
ப்ரசன்னவதனம் – எப்போதும் சிரித்த முகமானவருமான விநாயகரை சர்வவிக்நோபசாந்தயே- எல்லா இடையூறுகளும் ஒழிய 
த்யாயேத்- த்யானிக்க வேண்டும்.

2. வாகீசாத்யா:- பிரம்மா முதலிய 
ஸுமனஸ: தூய சிந்தையுடைய வர்கள் ( தேவர்கள்) 
ஸர்வார்த்தானாம்- எல்லா விதமான செய்கைகளின் 
உபக்ரமே- ஆரம்பத்தில்
யம் நத்வா- யாரை வணங்கி 
க்ருதக்ருத்யா: ஸ்யு: - கார்ய சித்தியை அடைகிறார்களோ
தம் கஜானனம் – அந்த கணபதியை 
நமாமி-வணங்குகிறேன்

3. சதுர்பி: தோர்பி: யுக்தா- நான்கு கரங்கள் கொண்டவளும்
ஸ்படிக மணிமயீம் அக்ஷமாலாம் – ஸ்படிகத்தினால் ஆன பீஜமாலையையும் 
ஹஸ்தேன ஏகேன –ஒரு கரத்தினால் 
த்தானா- தரித்து
பத்மம் ஸிதம் அபி – மற்றொரு கரத்தினால் வெண் தாமரையும்
சுகம் புஸ்தகம் ச அபரேண- மற்றும் இரு கரங்களில் கிளியையும் புஸ்தகத்தையும் தரித்து
குந்தேந்து சங்கஸ்படிக மணி நிபா- மல்லிகை, சங்கு,ஸ்படிகம் இவைகளை ஒத்த 
பாஸா- ஒளியினால் 
பாஸமானா- பிரகாசிப்பவளும்
அஸமானா- தன்னிகரில்லாதவளும் ஆன
ஸா வாக்தேவதா – அந்த வாக்தேவதையான
இயம் - இவள் ( சரஸ்வதி) வதனே – என் நாவில் 
ஸர்வதா- எப்போதும் 
ஸுபிரசன்னா- அருள் பாலிப்பவளாக
நிவஸது- வஸிக்கட்டும்.

4.ராமராமேதி –ராமா ராமா என்று 
மதுராக்ஷரம்- மதுரமான நாமத்தை
கவிதாசாகாம் – கவிதை என்னும் கிளையில் 
ஆருஹ்ய- ஏறி 
மதுரம் – இனிமையாக 
கூஜந்தம்- கூவுகின்ற
வால்மீகி கோகிலம்- வால்மீகி என்ற குயலை 
வந்தே – வணங்குகிறேன்.

5. முனிஸிம்ஹஸ்ய -முனிவர்களில் சிம்ஹம் போன்ற 
கவிதாவனசாரிண- கவிதை என்ற காட்டில் சஞ்சரிக்கும் 
வால்மீகே: - வால்மீகியின் 
ராமகதாநாதம் - ராமகதை என்கிற கர்ஜனையை 
ஸ்ருன்வன்- கேட்டு 
கோ – எவர்தான் 
பராம் கதிம்- மேலான கதியை 
ந யாதி- அடைய மாட்டார்!

6. ய: - எவர் 
ஸததம்-எப்போதும் 
ராமசரிதாம்ருத ஸாகரம்- ராமசரிதமாகிய அமுதக் கடலை 
பிபன் – குடித்தும்
அத்ருப்த: -திருப்தி இல்லாமலிருக்கிறாரோ 
தம் முனிம் –அந்த வால்மீகி முனிவரை 
வந்தே – நமஸ்கரிக்கிறேன்.

7.கோஷ்பதீக்ருதவாராசிம்-கடல் எவருக்கு குளம்படி ஜாலம் போல் ஆயிற்றோ
மசகீக்ருதராக்ஷசம் – ராக்ஷசர்கள் எவருக்கு கொசு போன்று ஆயினரோ
ராமாயண மஹாமாலாரத்னம் – எவர் ராமாயணம் என்னும் மகத்தான ஹாரத்திற்கு பதக்கமாகிற ரத்தினம் போல் உள்ளவரோ
தம் அணிலாத்மாஜம் – அந்த ஹனுமானை 
வந்தே – வணங்குகிறேன்

8. அஞ்சனாநந்தனம்- அஞ்சனையின் புத்திரனும்
வீரம்- வீரனும் 
ஜானகி சோக நாசனம் – சீதையின் துக்கத்தைப் போக்கினவனும் 
அக்ஷஹந்தாரம் – அக்ஷ குமாரனை வதைத்தவனும் 
லங்காபயம்கரம்- இலங்கைக்கு அச்சத்தை விளைவித்தவனும் ஆன
கபீசம்- ஹனுமானை 
வந்தே – வணங்குகிறேன்

9. ஸிந்தோ: - சமுத்திரத்தின்
ஸலிலம் – நீரை
ஸலீலம் – விளியாட்டாகக் 
உல்லங்க்ய- தாண்டி 
ய: -எவன் 
ஜனகாத்மஜாயா: - சீதையினுடைய 
சோக வஹ்னிம்- சோகமாகிற நெருப்பை
ஆதாய – எடுத்து
தேனைவ- அதனாலேயே 
லங்காம் – இலங்கையை 
ததாஹா – கொளுத்தினானோ 
தம் ஆஞ்சநேயம்- அந்த ஆஞ்சநேயனை 
நமாமி- நமஸ்கரிக்கிறேன்

1௦.அதிபாடலானனம் – மிகவும் சிவந்த முகமும் 
காஞ்சனாத்ரி – தங்கமயமான மேருமலையைப் போல்
கமனீய விக்ரஹம்- அழகிய உருவத்தையும் உடைய
பாரிஜாததருமூல வாஸினம் – பாரிஜாத மரத்தின் கீழ் வசிக்கும்
பவமான நந்தனம் –வாயுபுத்திரன் ஆகிய 
ஆஞ்சநேயம் - - ஹனுமானை 
பாவயாமி- தியானிக்கிறேன்

11. யத்ர யத்ர – எங்கெல்லாம் 
ரகுநாதகீர்த்த்னம்- ராமன் புகழ் பாடப்படுகிறதோ 
தத்ர தத்ர- அங்கெல்லாம் 
க்ருதமஸ்தகாஞ்சலிம் – தலை மேல் கைகூப்பி 
பாஷ்பவாரிபரிபூர்ணலோசனம் – கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக நிற்கும் 
ராக்ஷஸாந்தகம் – ராக்ஷசர்களின் எமனான 
மாருதிம் – மாருதியை 
நமத – வணங்குவீர்.

12. மனோஜவம் – மனம் போல் துரிதமானவரும் 
மாருததுல்ய வேகம் – வாயு வேகம் கொண்டவரும்
ஜிதேந்த்ரியம் – இந்த்ரியங்களை அடக்கினவரும்
புத்திமதாம் வரிஷ்டம்-புத்திமான்களுள் சிறந்தவரும் 
வாதாத்மஜம் – வாயுவின் புத்திரனும்
வானர யூத முக்யம்- வானர சேனையின் முக்கியமானவரும் ஆன
ஸ்ரீராமதூதம் – ராம் தூதனான ஹனுமானுக்கு
சிரஸா நமாமி – தலை வணங்குகிறேன்.

13.புத்தி: - அறிவு
பலம் – பலம் 
யச: - புகழ் 
தைர்யம் – தைரியம் 
நிர்பயத்வம் – அச்சமின்மை 
அரோகதா- ஆரோக்கியம் 
அஜாட்யம் – சோம்பலின்மை 
வாக்படுத்வம் – வாக்கு வன்மை இவை
ஹனுமத் ஸ்மரணாத்- ஹனுமனை நினைக்க 
பவேத் – ஏற்படும்.

14.ய: -எவனொருவன்
அஹரஹ:- தினம் தினம் 
கர்ணாஞ்சலி சம்புடை: -செவிகள் என்கிற குவித்த கரங்களாகிய பாத்திரங்களால் 
வால்மீகே: - வால்மீகியினுடைய 
வதநாரவிந்த கலிதம் – வாக்கிலிருந்து ( கிளியின் வாயிலிருந்து விழுவதைப்போல்) 
ராமாயணாக்யம் மது – ராமாயணம் என்னும் தேனை 
ஸம்யக் – நன்றாக 
ஆத்ராத் – ஆவலுடன் 
பிபதி – பருகுகிறானோ 
ஸ: புமான் – அந்த மனிதன் 
ஜன்ம வ்யாதி ஜரா விபத்தி மரணை: - பிறப்பு , நோய், முதுமை , விபத்துக்கள் , மரணம் இவைகளால் 
அத்யந்த ஸோபத்ரவம்- மிகவும் தொல்லை கொடுக்கும் 
ஸம்ஸாரம் – சம்சாரத்தை 
விஹாய – நீத்து 
சாஸ்வதம்- நிரந்தரமான 
விஷ்ணோ: பதம் –விஷ்ணுவின் பதத்திற்கு 
கச்சதி- செல்கிறான்.

15. உபகத ஸமாஸ ஸந்தி யோகம் – சரியான பதப்பிரிவு, பதச்சேர்க்கை இவைகளுடன் கூடியதும்
ஸமமதுரோபநதார்த்த வாக்ய பந்தம் – மதுரமான பொருட்செறிவுடன் கூடிய வாககியங்களை உடையதும் 
முநிப்ரணீதம்- வால்மீகி முனிவரால் இயற்றப்பட்ட 
ரகுவர சரிதம்- ராமாயணத்தை 
நிசாமயத்வம் – அனுபவியுங்கள்

16. வால்மீகி கிரி ஸம்பூதா – வால்மீகி என்ற மலையில் உற்பத்தியாகி 
ராமஸாகர காமிநீ- ராமன் என்ற கடலை நோக்கிச் செல்லும்
ராமாயணமஹாநதீ- ராமாயணம் என்னும் மகாநதியானது
புவனம் – உலகத்தை 
புனாது-தூய்மையாக்குமாக .

17. ஸ்லோக ஸார ஸமாகீர்ணம்- ச்லோகங்களாகிற சாரம் நிரம்பியதும்( சாரம் என்றால் உப்பு என்றும் பொருள்) 
ஸர்ககல்லோல ஸம்குலம் – ஸர்கங்களாகிற அலைகளுடன் கூடியதும்
காண்டக்ராஹ மஹாமீனம் - காண்டங்கள் என்கிற முதலைகள் சுறாமீன்கள் இவற்றோடு கூடியதும் ஆன
ராமாயணார்ணவம் – ராமாயணம் என்னும் கடலை 
வந்தே – வணங்குகிறேன்

18. வேத வேத்யே- வேதங்களினால் அறியப்படுபவனான
பரே பும்ஸி- பரம புருஷன் 
தசரதாத்மஜே – தசரதர் மகனாக 
ஜாதே – ஜனித்தபோது 
வேதா:- வேதங்கள் 
ப்ராசேதஸாத் – வால்மீகியிடம் இருந்து 
ஸாக்ஷாத் ராமாயணகதா- ராமாயணத்தின் வடிவமாக 
ஆஸீத்- ஆயின.

19. வைதேஹீஸஹிதம் – சீதையுடன் கூட 
ஸுரத்ருமதலே – கல்பக வனத்தில்
ஹைமே- தங்க மயமான 
மஹாமண்டபே- மண்டபத்தில்
மணிமயே- ரத்தினங்கள் பதித்த
புஷ்பகமாஸனே - புஷ்பக விமானத்தின்
மத்யே – நடுவில் 
வீராஸனே – வீராசனத்தில்
ஸுஸ்திதம்- நன்கு அமர்ந்து இருப்பவரும் 
அக்ரே – முன்னால்
பிரபஞ்சனஸுதே- ஹனுமனுடனும்
முநிப்ய: - முனிவர்களுக்கு 
தத்வம்- தத்துவத்தை 
வாசயதி – கூறி 
வ்யாக்யாந்தம்- விளக்குபவரும் 
பரதாதிபி: - பரதன் முதலியவர்களால் 
பரிவ்ருதம் – சூழப்பட்டவரும் ஆன
ச்யாமளம்- நீலநிறம் கொண்ட 
ராமம் – ராமனைத்
பஜே – தொழுகிறேன்

2௦. வாமே – இடதுபக்கத்தில் 
பூமிஸுதா- சீதையுடனும் 
புரஸ்ச – முன்னால்
ஹனுமான்- ஹனுமனுடனும் 
பஸ்சாத்- பின்னால் 
ஸுமித்ரா ஸுத: - லக்ஷ்மணனுடனும்
சத்ருக்நோ பரதஸ்ச –சத்ருக்னன் பரதன் இவர்கள் 
பார்ச்வதளயோ: - இரு பக்கத்திலும் இருக்க 
வாய்வாதி கோணேஷு ச - அஷ்ட திக்குகளிலும் 
ஸுக்ரீவஸ்ச விபீஷணஸ்ச யுவராட் தாராஸுதொ ஜாம்பவான்- சுக்ரீவன், விபீஷணன், கிஷ்கிந்தை யுவராஜனான தாரையின் மைந்தன் அங்கதன், ஜாம்பவான் 
மத்யே – இவர்கள் மத்தியில் நீல ஸரோஜ கோமள ருசிம் – நீல நிறத்து தாமரைபோல அழகிய உருவத்துடன் விளங்கும்
ச்யாமளம் –சியாமளனான 
ராமம்- ராமனை 
பஜே- துதிக்கிறேன்

21. ஸலக்ஷ்மணாய – லக்ஷ்மணனுடன் கூடிய 
ராமாய – ராமனுக்கு 
நமோஸ்து- நமஸ்காரம்
தேவ்யை ஜனகாத்மஜாயை- ஜனகரின் புத்திரியான சீதாதேவிக்கு 
நமோஸ்து- நமஸ்காரம்
ருத்ரேந்த்ர யமாநிலேப்ய: - ருத்ரன், யமன், வாயு இவர்களுக்கு 
நமோஸ்து- நமஸ்காரம்
சந்த்ரார்க மருத்கணேப்ய: - சந்திரன் சூரியன். மருத்கணங்கள் இவர்களுக்கு 
நமோஸ்து- நமஸ்காரம்

22. ஸர்வாரிஷ்ட நிவாரகம்- அனைத்து கஷ்டங்களையும் போக்குகின்றவரும் 
சுபகரம்- நன்மை செய்பவரும்
பிங்காக்ஷம்- மஞ்சள் நிறமான கண்களை உடையவரும் 
அக்ஷாபஹம்- அக்ஷகுமாரனை வாதம் செய்தவரும்
ஸீதான்வேஷணதத்பரம்- சீதையைத் தேடுவதில் நாட்டம் உடையவரும் 
கபிவரம்- சிறந்த வானரரும்
கோடீந்து சூர்யப்ரபம்- கோடி சூர்யன் சந்திரன் இவர்களின் ஒளி பொருந்தியவரும் 
லங்காத்வீபபயம்கரம் – இலங்கைக்கு பயத்தை உண்டாக்கினவரும் 
ஸகலதம் – அனைத்தும் கொடுப்பவரும்
ஸுக்ரீவஸம்மாநிதம் – சுக்ரீவனால் கொண்டாடப்பட்டவரும் 
தேவேந்த்ராதி ஸமஸ்த தேவ வினுதம் – தேவேந்திரன் முதலிய எல்லா தேவர்களாலும் துதிக்கப்பட்டவரும் ஆன
காகுத்ஸ்த தூதம் பஜே- ராமதூதனை தியானிக்கிறேன்

  

No comments:

Post a Comment