#சந்தியாவந்தனம்
#சிறப்புகள்
சந்தியாவந்தனம்!
அதில் அவன் ஒரு நாளைக்கு மூன்று முறை சுமார் 100 கடவுளர், ரிஷிகள் பெயரைச் சொல்லுகிறான். தொல்காப்பியம் உரைக்கும் தமிழ் கடவுள்கள் இந்திரன், வருணன், விஷ்ணு பெயர்களையும் சங்கத் தமிழ் நூல்கள் போற்றும் சப்த ரிஷிக்களையும் , வரலாற்றுப் புருஷர்களான ஜனமேஜயன் முதலியோர் பெயர்களையும் சொல்கிறான். அவ்வளவு கடவுள் பெயரையும் சொல்லிவிட்டு அனத முழுமுதற் கடவுளான பிரம்மனும் நானும் ஒன்றே என்றும் சொல்லுகிறான். இது உபநிஷத மந்திரம் (அஸாவாதித்யோ பிரம்ம, பிரம்மைவாஹமஸ்மி)
சந்தியாவந்தனம்:-
சந்தியா வந்தனம் என்றால் என்ன?
அதற்க்கு முன் சந்தி என்றால் என்ன? என பார்ப்போம்
சந்தி என்றால் இரவும்- அதிகாலையும் .,காலையும் மதியமும்., மாலையும் இரவும் ஒன்றை ஒன்று சந்திக்கும் நேரம்
அப்படிபட்ட சந்தியாகாலத்தில் நமக்கு பிரத்திட்சமாக தோன்றும் ஜோதியான சூரியனை பிரார்த்தித்து செய்யக்கூடிய வந்தனம் சந்தியாவந்தனம் எனப்படும்.
அதாவது சந்தியாகலம் என்பது அதிகாலை, மத்யான்னம் சாயங்காலம் என்னும் மூன்று காலங்கள் ஆகும்.
சந்தியாவந்தனத்தில் நமக்கு ஆசமனியம் பிராணாயாமம் சங்கல்பம் அர்க்யப்ரதானம், காயத்ரீ ஜபம் மற்றும் உபஸ்தானம் என்ற ஆறு கர்மாக்கள் ப்ரதானமாக உள்ளன.
ஆசமனியம் எனபது சுத்த தீரத்த்தை அச்சுதாய நம :
அனந்தாய நம :
கோவிந்தாய நம: என கூறியவாறே மூன்று முறை தீர்த்தத்தை ஸவீகரிப்பது
பிராணாயாமம் என்பது
பலர் இப்போது செய்வது போல மூக்கை அடைத்து கொண்டு பின்பு காது பக்கம் கையை கொண்டு போவதல்ல
அது
பிராணாயாமம் என்பது நம்முடலில் செல்லும் மூச்சுக் காற்றை முறைபடைத்தி வெளியே விடுதல் என்பதர்தம்
அதாவது முதலில் மூச்சை நன்கு வெளியில் விட்டு பின்பு வலது பக்க துவாரத்தை கட்டை விரலால் அழுத்தி மூடிக்கொண்டு இடது பக்க மூச்சு துவாரத்தினால் மூச்சை உள்ளிழுத்து இடது பக்க மூக்கை மோதிரவிரலாலும் சுண்டுவிரலாலும் அடைத்துக் கொண்டு ( இதனை பூரகம் என்பர்)
"ஓம் பூ: ஒம் புவ: ஓம் ஸுவ: ஓம் மஹ: ஓம் ஜந: ஓம் தப: ஓகும் சத்யம்: ( அதாவது பூலோகம் ஸுவர்க்கலோகம் மஹரலோகம் சத்யலோஹம் என கூறப்படும் ஏழு லோஹங்களையும் நிணைத்து) ஓம் தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீமஹி தியோயோந ப்ரசோதயாத் ஓமாப: ஜ்தோதிரஸ அம்ரதம் ப்ரம்ம பூர்புவஸ்ஸுரோம்"
{என கூறி முடிக்கும் போது வலது காதை தொடவேண்டும்( மூக்கை தொடுவதால் ஏற்படும் அசுத்தத்தை நீக்க)
(எந்த ஒரு அசுத்த செயலை செய்யும் போது நீர் கிட்டவிட்டால் வலது காதை தொட்டால் நாம் சுத்தமாவதாக சாஸ்திரம் கூறுகிறது)}
என்று நிதானமாக சொல்லி முடிக்கும் வரை மூச்சை மூக்குனுள் வைத்து ( இதை கும்பகம் என்பர்) பின் மெதுவாக கட்டைவிரலை நீக்கி வலது பக்க மூக்கால் வெளியிடுவது ( இதை ரேசகம் என்பர்)
சங்கல்பம் என்பது
சந்தியாவந்தனம் எந்த நேரத்திற்காக செய்கிறோமோ அந்த காலத்திற்கான பிராத்தனை
அர்க்ய ப்ரதானம் என்பது தீர்தம் மூலம் சூரியனுக்கும் கேசவாதிகளுக்கும் தகப்பானாரில்லாதவர்கள் பிதுர்களுக்கும் மந்திரமாக அந்த தீர்த்தத்தை அர்பணிப்பது இதை கட்டை விரலும் ஆள்காட்டி விரலும் சேராமல் இரண்டு கைகளாலும் சூர்யனை பார்த்து விட வேண்டும்
அர்கயம் ஏன் விட வேண்டும்?
மந்தேஹர் என்ற பெயருள்ள முப்பது கோடி கோர வீர குரூர ராக்ஷஸர்கள் இந்த ஸந்தியா காலங்களில் சூரியனை விழுங்க வருவார்கள் அவர்களிடமிருந்து சூரியனை காப்பாற்ற தேவர்களுக்கு ரிஷிகளும் தபஸிகளும் ஸந்தியாகாலத்தில் அர்க்யத்தை விடுவர் அது வஜ்ராயுதமாக மாறி சூரியனுக்கு உதவுமாம் எனவே தான் பூமியில் பிராமணர்களும் மற்றவர்களும் செய்கிறார்கள் என்பர்
சந்தியா வந்தனத்தை யாரெல்லாம் செய்யலாம்?
உபவீதம் செய்து கொண்டவர்கள் ( பிராமணர்கள் வாணியன் குயவன் சத்ரியன் என எல்லோருமே) எல்லோருமே செய்யலாம்
காலங்களின் மாற்றத்தால் நம்மில் பெரும்பாலனவர்கள் உட்பட யாரும் செய்வதில்லை
#பலன்கள்:
நதி தீரத்தில செய்தால் 2 மடங்கு பலன் கிடைக்கும். பசுக்கள் கட்டின இடமானா 10 மடங்கு. அக்னி சாலை 100 மடங்கு; புண்ய க்ஷேத்திரமானால் 1000 மடங்கு; நல்ல புராதனமான பூஜைகள் வெகு காலம் நடந்த சகோவிலானால் கோடி மடங்கு.
இடத்தை சுத்தி செய்து கொண்டு நீரால் ப்ரோக்ஷணம் செய்து ஆசனத்தில் உட்கார வேண்டும்.
அனைவரும் சந்தியாவந்தனம் செய்வோம் என்று உறுதி எடுப்போம்
No comments:
Post a Comment