Courtesy:smt.Padma Gopal
தனயனானேன்....தன்யனானேன்...)
அன்னை அணைப்பின் கதகதப்பில்−
அம்புலி, இங்கு உறங்குது!
அழுகையில்லை, பசியுமில்லை−
அவள் கரத்திடை, எல்லாம் மறக்குது!
ஆதிசேடன் அரவணையும்−
அத்தனை சுகம், இல்லையே;
அலைமகளின் மென்மடியும்−
ஆறுதலாய், இல்லையே!
நெஞ்சோரம் சாஞ்சிருக்க−
பஞ்சு மெத்தை, தோற்குது!
தஞ்சமாகும் அவள் தோளில்−
விஞ்சி வளப்பம் இருக்குது!
அவள் மூச்சுக் காற்று மேனி உரச−
அன்பின் அர்த்தம் தெரியுது;
அவள் ஏறி இறங்கும் மார்பு கூட்டில்−
அடைந்த ஆசை புரியுது!
தனயனாக தாயின் அன்பில்−
தோயும் இன்பம், பெரியது!
தரணியிலே, இதற்கொப்பு−
ஏதுமில்லை, விளங்குது!!
No comments:
Post a Comment