Monday, June 18, 2018

Kumbhabhishekam terms and their meanings

#வாட்ஸப் #பதிவு 

கும்பாபிஷேகத்தின்போது விக்ரக பிரதிஷ்டையில் 
மேற்கொள்ளப்படும் சில முக்கியமான விஷயங்கள்:
* அனுக்ஞை (அனுமதி வாங்குதல்) –
-
செயல்களைச் செய்யும் ஆற்றல்மிக்க ஓர் ஆசாரியனைத்
தேர்ந்தெடுத்து இச்செயலை செய்வதற்கு இறைவனிடம்
அனுமதி பெற்று நியமனம் செய்தல்.
* சங்கல்பம் –
-
இளைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக
வைத்தல்.
* பாத்திர பூஜை –
-
இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்குண்டான பூஜை
பாத்திரஙகளை சுத்தம் செய்யும் பொருட்டு அந்தந்த
பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜை செய்தல்.
* கணபதி பூஜை –
-
செயல் இனிது நிறைவேற கணபதியை வழிபடுதல்.
* வருண பூஜை –
-
அவ்விடத்தை சுத்தம் செய்யும் பொருட்டு வருண
பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வழிபடுதல்.
* பஞ்ச கவ்யம் –
-
ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாகக் கிடைக்கும்
பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவற்றை வைத்து
செய்யப்படும் கிரியை.
* வாஸ்து சாந்தி –
-
தேவர்களை வழிபட்டு கும்பாபிஷேகம் எவ்வித இடையூறும்
இன்றி இனிது நிறைவேற; செயலுக்கும் செய்பவர்களுக்கும்
இடையூறு வராதபடி காக்கச் செய்யும் செயல்.
* பிரவேச பலி –
எட்டுத் திக்கிலும் உள்ள திக்பாலர்களுக்கு உரிய பிரீதி செய்து
அவர்களை அந்தந்த இடத்தில் இருக்கச் செய்தல்
(துர்தேவதைகளை வர விடாமல் காக்கும் பொருட்டு)
– மிருத்சங்கிரஹணம் (மண் எடுத்தல்) 
அஷ்ட திக்பாலரிடம் அனுமதி பெற்று சுத்தமான
இடத்திலிருந்து
மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.
(ஆலயம் நிர்மாணம் செய்ய பூமித் தாயான பூமாதேவியை
கஷ்டப்படுத்தினதன் காரணமாக பூமாதேவியை மகிழ்விக்கச்
செய்யப்படும் கிரியை)
 அங்குரார்ப்பணம் (முளையிடுதல்) –
-
எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளையிட்டு முளை
வளரச் செய்தல். இதில் பன்னிரு சூர்யர்களான வைகர்த்தன்,
விவஸ்வதன், மார்த்தாண்டன், பாஸ்கரன், ரவி, லோகப்பிரகாசன்,
லோகசாட்சி, திரிவிக்ரமன், ஆதித்யன், சூரியன், அம்சுமாலி,
திவாகரன் போனறவர்களையும் சந்திரனையும் வழிபடுதல்.
* ரக்ஷாபந்தனம் (காப்புக்கட்டுதல்) 
கிரியைகளைச் செய்யும் ஆசாரியனுக்கும், செய்யும்
கர்த்தாவுக்கும் எவ்வித இடையூறும் வராதபடி காத்தற்
பொருட்டு
அவன் கையில் மந்திரப் பூர்வமாகக் காப்பு (கயிறு) கட்டுதல்.
* கும்பலங்காரம் –
-
கும்பங்களை (கலசம்) இறைவன் உடம்பாக பாவித்து
அலங்காரம் செய்தல்.
* கலசாக்ர்ஷ்ணம் – (சக்தி அழைத்தல்)
விக்ரஹத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்கு
மந்திரபூர்வமாக அழைத்தல்.
* யாகசாலை பிரவேசம் –
-
கலசங்களை யாகசாலைக்கு எடுத்து வருதல்.
* சூரிய, சோம பூஜை –
-
யாகசாலையில் சூரியன், சந்திரனை வழிபடுதல்.
* மண்டல பூஜை –
அமைக்கப்பட்டிருக்கும் யாகசாலையை பூஜை செய்தல்.
* பிம்ப சுத்தி –
விக்ரகங்களை மந்திரபூர்வமாக சுத்தம் செய்தல்.
* நாடி சந்தானம் –
யாகசாலை இடத்திற்கும் மூலத் திருமேனிக்கும் தர்ப்பைக்
கயிறு, தங்கக்கம்பி, வௌ்ளிக் கம்பி அல்லது பட்டுக் கயிறு
இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல்,
(இறைவனின் சக்தியில் ஒரு பகுதியை இநத இணைப்பு
மூலமாக விக்ரகங்களுக்குக் கொண்டு சேர்த்தல்)
* விசேஷ சாந்தி –
-
முப்பத்தாறு தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது.
உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மா பித்ரு்களுக்கு அர்க்யம்
தருவது.
* பூத சுத்தி – 
-
இந்த பூத (மனித) உடம்பை தெய்வ உடம்பாக
மந்திர பூர்வமாக மாற்றி அமைத்தல்.
* ஸ்பர்ஸ ஆஹூதி –
-
முப்பத்தாறு தத்துவங்களை யாகத்திலிருந்து மூல
விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.
* அஷ்டபந்தனம் –
எட்டு மருந்துப் பொருள்களால் ஆன மருந்து சாந்தினால்
மூர்த்தியையும் பீடத்தையும் ஒன்று சேர்த்தல், இதை மருந்து
சாத்துதல் என்பர்.
* பூர்ணாஹூதி –
யாகத்தைப் பூர்த்தி செய்தல்.

No comments:

Post a Comment