2
ஸ்ரீ ராம ஜயம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்ததி அஷ்டகம் --5
இப்பொழுது நாம் இதிலுள்ள ஐந்தாவது ஸ்லோகத்துக்கு வருவோம். அது :
" தேஹம் ,பிராணம் அபி , இந்திரியாணி அபி, சலாம் புத்திம் , ச சூன்யம் விது :
ஸ்த்ரீ பாலாந்த ஜடோபமா: த்வஹமிதி ப்ராந்தா ப்ருசம் வாதின :
மாயா சக்தி விலாஸ கல்பித மஹா வ்யாமோஹ ஸம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே "
இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ பகவத்பாதர்கள் சார்வாகர் களையும், பௌத்தர்களையும்
சாடுகிறார்கள். சார்வாகர்கள் என்றால், சாரு (அழகிய) சொற்கோர்வையால்
மற்றவர்களுக்கு தவறான கருத்துக்களை சொல்லி அவர்களை அவற்றை நம்பவைத்து
ஏமாற்றுபவர்கள்.தற்காலத்தில் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று
சொல்பவர்கள். நிரீஸ்வர வாதிகள் என்று இவர்களை சொல்வார்கள்.
பௌத்தர்கள் சூன்யத்தை நம்புபவர்கள். சூன்யத்திலிருந்து தான் எல்லாம்
தோன்றிற்று என்று வாதிடுபவர்கள்.அவர்கள் வேதத்தையும், வேதம் சார்ந்த
எதையும் நம்புவதில்லை.
சரீரம், பிராணன்கள் ,இந்திரியங்கள், சதா சலித்துக்கொண்டிருக்கும் புத்தி
என்கிற ஜடரூபமான இவைகளையெல்லாம் தன் மனப்பிராந்தியால் ஆத்மா என்று
சொல்லிதன் வாக்கு வன்மையால் நன்றாக வாதிடும் இச்சார்வாகர்களையும்,
இவையெல்லாம் சூன்யத்திலிருந்து தான் தோன்றின என்று வாதிடும்
பௌத்தர்களையும் ஸ்ரீ பகவத்பாதர்கள் ஒன்றும் அறியாத ஸ்த்ரீகளுக்கும் ,
பாலகர்களுக்கும் ஒப்பிடப்படவேண்டியவர்கள் என்று சொல்லுகிறார்கள்.
(ஸ்ரீ பகவத்பாதர்கள் தனது 16-வது வயதிலிருந்து தன் 29 1/2 வயது வரை தேச
சஞ்சாரம் மேற்கொண்டிருந்ததாகத்தெரிகிறது. அது சமயம் அவர்களுடன் இந்த
சார்வாகர்களும், பௌத்தர்களும் வாதிட்டிருக்கவேண்டும். அதைத்தான் அவர்கள்
இங்கு சொல்வதாகத்தெரிகிறது. கடைசி இரண்டரை வருஷங்கள் காஞ்சியில் மடத்தில்
இப்பொழுதுகாணும் அறையில் தங்கியதாகவும் அறியப்படுகிறது. அந்த அறையை
இன்னும் பிரகாசமாக நாம் வைத்துக்கொள்ளவேண்டும். ஸ்ரீ மடத்துக்கு வரும்
ஒவ்வொரு சிஷ்யரும் அந்த அறையை க்கண்டு செல்லுமாறு வைத்துக்கொள்ளவேண்டும்.
அறையின்முகப்பில் தங்கத்தாலான திருவாசியை வைக்கவேண்டும். பிரதிதினமும்
அவர்களுடைய சந்நிதியில், தோடகாஷ்டகம் பாடப்படவேண்டும். வியாழக்கிழமை
சதஸ் அவர்களது சந்நிதியில் நடக்கவேண்டும். தினமும் அவர்களுக்கு அன்ன
நிவேதனமும் தீபாராதனையும் காட்டப்பட வேண்டும்.)
இவையெல்லாம் , அதாவது சார்வாகர்களாலும்,பௌத்தர்களாலும் மஹா
வ்யாமோஹத்தால் ( மோஹம் என்பது உள்ளதை தவறாகப்புரிந்துகொள்வது. அந்ததவறால்
நன்கு ஈர்க்கப்பட்டு, உள்ளதை மறைப்பது என்பது .வ்யாமோஹம் என்பது நன்றாக
மோஹமடைவது. மஹா வ்யாமோஹம் என்பது அதற்கும் மேல் ). ஸ்ரீ பகவத்பாதர்கள்
இது மாயையின் சக்தியின் ப்ரபாவத்தால் ஏற்பட்டது என்று சொல்கிறார்கள்.
இந்த மஹா வ்யாமோஹத்தை சம்ஹரிக்கும் குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு
இந்த என் நமஸ்காரங்கள்.
ச.சிதம்பரேசன் 16ஜூன் 2018
ஸ்ரீ ராம ஜயம்
ஸ்ரீ தக்ஷிணாமூர்ததி அஷ்டகம் --5
இப்பொழுது நாம் இதிலுள்ள ஐந்தாவது ஸ்லோகத்துக்கு வருவோம். அது :
" தேஹம் ,பிராணம் அபி , இந்திரியாணி அபி, சலாம் புத்திம் , ச சூன்யம் விது :
ஸ்த்ரீ பாலாந்த ஜடோபமா: த்வஹமிதி ப்ராந்தா ப்ருசம் வாதின :
மாயா சக்தி விலாஸ கல்பித மஹா வ்யாமோஹ ஸம்ஹாரிணே
தஸ்மை ஸ்ரீ குரு மூர்த்தயே நம இதம் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தயே "
இந்த ஸ்லோகத்தில் ஸ்ரீ பகவத்பாதர்கள் சார்வாகர் களையும், பௌத்தர்களையும்
சாடுகிறார்கள். சார்வாகர்கள் என்றால், சாரு (அழகிய) சொற்கோர்வையால்
மற்றவர்களுக்கு தவறான கருத்துக்களை சொல்லி அவர்களை அவற்றை நம்பவைத்து
ஏமாற்றுபவர்கள்.தற்காலத்தில் கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்று
சொல்பவர்கள். நிரீஸ்வர வாதிகள் என்று இவர்களை சொல்வார்கள்.
பௌத்தர்கள் சூன்யத்தை நம்புபவர்கள். சூன்யத்திலிருந்து தான் எல்லாம்
தோன்றிற்று என்று வாதிடுபவர்கள்.அவர்கள் வேதத்தையும், வேதம் சார்ந்த
எதையும் நம்புவதில்லை.
சரீரம், பிராணன்கள் ,இந்திரியங்கள், சதா சலித்துக்கொண்டிருக்கும் புத்தி
என்கிற ஜடரூபமான இவைகளையெல்லாம் தன் மனப்பிராந்தியால் ஆத்மா என்று
சொல்லிதன் வாக்கு வன்மையால் நன்றாக வாதிடும் இச்சார்வாகர்களையும்,
இவையெல்லாம் சூன்யத்திலிருந்து தான் தோன்றின என்று வாதிடும்
பௌத்தர்களையும் ஸ்ரீ பகவத்பாதர்கள் ஒன்றும் அறியாத ஸ்த்ரீகளுக்கும் ,
பாலகர்களுக்கும் ஒப்பிடப்படவேண்டியவர்கள் என்று சொல்லுகிறார்கள்.
(ஸ்ரீ பகவத்பாதர்கள் தனது 16-வது வயதிலிருந்து தன் 29 1/2 வயது வரை தேச
சஞ்சாரம் மேற்கொண்டிருந்ததாகத்தெரிகிறது. அது சமயம் அவர்களுடன் இந்த
சார்வாகர்களும், பௌத்தர்களும் வாதிட்டிருக்கவேண்டும். அதைத்தான் அவர்கள்
இங்கு சொல்வதாகத்தெரிகிறது. கடைசி இரண்டரை வருஷங்கள் காஞ்சியில் மடத்தில்
இப்பொழுதுகாணும் அறையில் தங்கியதாகவும் அறியப்படுகிறது. அந்த அறையை
இன்னும் பிரகாசமாக நாம் வைத்துக்கொள்ளவேண்டும். ஸ்ரீ மடத்துக்கு வரும்
ஒவ்வொரு சிஷ்யரும் அந்த அறையை க்கண்டு செல்லுமாறு வைத்துக்கொள்ளவேண்டும்.
அறையின்முகப்பில் தங்கத்தாலான திருவாசியை வைக்கவேண்டும். பிரதிதினமும்
அவர்களுடைய சந்நிதியில், தோடகாஷ்டகம் பாடப்படவேண்டும். வியாழக்கிழமை
சதஸ் அவர்களது சந்நிதியில் நடக்கவேண்டும். தினமும் அவர்களுக்கு அன்ன
நிவேதனமும் தீபாராதனையும் காட்டப்பட வேண்டும்.)
இவையெல்லாம் , அதாவது சார்வாகர்களாலும்,பௌத்தர்களாலும்
வ்யாமோஹத்தால் ( மோஹம் என்பது உள்ளதை தவறாகப்புரிந்துகொள்வது. அந்ததவறால்
நன்கு ஈர்க்கப்பட்டு, உள்ளதை மறைப்பது என்பது .வ்யாமோஹம் என்பது நன்றாக
மோஹமடைவது. மஹா வ்யாமோஹம் என்பது அதற்கும் மேல் ). ஸ்ரீ பகவத்பாதர்கள்
இது மாயையின் சக்தியின் ப்ரபாவத்தால் ஏற்பட்டது என்று சொல்கிறார்கள்.
இந்த மஹா வ்யாமோஹத்தை சம்ஹரிக்கும் குருவான ஸ்ரீ தக்ஷிணாமூர்த்திக்கு
இந்த என் நமஸ்காரங்கள்.
ச.சிதம்பரேசன் 16ஜூன் 2018
No comments:
Post a Comment