அஷ்டபதி 11
அஷ்டபதி 11
சகி கண்ணன் இருக்குமிடத்திற்கு செல்வதற்கு ராதையை தூண்டுகிறாள்
1.ரதிஸுகஸாரே கதமபிஸாரே மதன மனோஹர வேஷம்
ந குரு நிதம்பினி கமனவிலம்பனம் அனுஸர தம் ஹ்ருதயேசம்
ரதிசுகஸாரே- காதல் விளையாட்டுக்காக
அபிஸாரே- குறிக்கப்பட்ட இடத்திற்கு
கதம்- சென்றிருக்கும்
மதனமநோஹரவேஷம் –காமனைப்போல் அழகான உருவத்துடன் உள்ள
ஹ்ருதயேசம்- உன் உள்ளத்தில் குடிகொண்ட
தம் – அந்த கண்ணனை
அனுஸர – பின் தொடர்ந்து செல்
.நிதம்பினி- அழகான இடுப்பை உடையவளே
கமனவிலம்பனம் – செல்வதில் தாமதம்
ந குரு செய்யாதே
.
தீரஸமீரே யமுனாதீரே வஸதி வனே வனமாலீ கோபீபீனபயோதரமர்தனசஞ்சலதர யுகசாலீ (த்ருவபதம்)
வனமாலீ – வனமாலை தரித்தவனாய்
கோபீபீனபயோதரமர்தனசஞ்சலதர யுகசாலீ- கோபியருடன் விளையாடுவதில் இச்சை கொண்ட கண்ணன்
தீரஸமீரே- மென்மையான காற்று வீசும்
யமுனாதீரே – யமுனையின் தீரத்தில்
வஸதி – இருக்கிறான்.
2.நாமஸமேதம் க்ருதக ஸங்கேதம் வாதயதே ம்ருதுவேணும்
பஹுமனுதே அதனு தே தனுஸங்கதபவனசலிதம் அபி ரேணும்.( தீரஸமீரே)
ம்ருது வேணும்- மதுரமான புல்லாங்குழலை
நாமஸமேதம் க்ருதகசங்கேதம் –உன்பெயரைச்சொல்லி கூப்பிடுவதுபோன்ற பாவனையில்
வாதயதி- வாசிக்கிறான்.
தி – உன்னுடைய
தனுஸங்கத பவனசலிதம் – உன் மேனியைத்தழுவிய காற்றினால் கொணரப்பட்ட
ரேணும் அபி – மண்துகளைக்கூட
அதனு பஹுமனுதே – மிகவும் மேலானதாக நினைக்கிறான்
3. பததி பதத்ரே விசலிதபத்ரே சங்கித பவதுபயானம்
ரசயதி சயனம் ஸசகிதநயனம் பச்யதி தவ பந்தானம் .( தீரஸமீரே)
பததி பதத்ரே- ஒரு பறவை உட்காரும்போது
விசலிதபத்ரே – இலைகள் சலசலக்கையில்
சங்கித பவதுபயானம் – நீ வருகிறாயோ என சந்தேகித்து
ரசயதி சயனம்- உனக்கு மஞ்சத்தை விரிக்கிறான்.
ஸசகித நயனம் – கண்களில் எதிர்பார்ப்புடன்
தவ பந்தானம் – நீவரும் வழியை
பச்யதி- பார்க்கிறான்
4. முகரம் அதீரம் த்யஜ மஞ்ஜீரம் ரிபும் இவ கேளிஷு லோலம்
சல சகிகுஞ்சம் ஸதிமிர புஞ்சம் சீலய நீலநிசோலம் ( தீரஸமீரே)
கேலிஷு லோலம்- காதல் விளயாட்டில் அசைந்து
முகரம் அதீரம்-மிகவும் சப்தம் செய்யும்
மஞ்ஜீரம்- உன் காற்சலங்கையை
ரிபும் இவ – எதிரி என்று நினைத்து
த்யஜ- கழற்றிவிடு.
ஸதிமிரபுஞ்சம் – அடர்ந்த இருளான
குஞ்சம் – கொடிவீட்டிற்கு
நீல நிசோலம் - கருப்பு நிறமுள்ள வஸ்திரத்தை
சீலய – உடுத்திக்கொள்
சல சகி- செல் தோழி
அவள் செல்வதை யாரும் அறியாதிருக்கும் பொருட்டு இந்த அறிவுரை.
5. உரஸி முராரேருபஹிதஹாரே கன இவ தரளபலாகே
தடிதிவ பீதே ரதிவிபரீதே ராஜஸி ஸுக்ருதவிபாகே ( தீரஸமீரே)
ஸுக்ருதவிபாகே – உன்னுடைய நற்கர்மபலனாக
தரள பலாகே - சலிக்கும் கொக்குகள் போன்ற
உபஹித ஹாரே –மலைகளால் அலங்கரிக்கப்பட்ட
கன இவ முராரே: உரஸி- கறுத்த மேகம் போன்ற ஹரியின் மார்பில்
பீதே – பொன்வண்ணமான நீ
ரதிவிபரீதே – காதல் மேலிட்டு
தடித் இவ -மின்னலைப்போல்
ராஜஸி-பிரகாசிக்கிறாய்
6. விகளிதவஸனம் பரிஹ்ருதரஸனம் கடய ஜகனம் அபிதானம்
கிஸலய சயனே பங்கஜ நயனே நிதிம் இவ ஹர்ஷநிதானம் ( தீர ஸமீரே )
பங்கஜநயனே- ப்ங்கஜலோசனனாகிய கண்ணனிடம்
கிஸலயசயனே – தளிர்களால் ஆன மஞ்சத்தில்
பரிஹ்ருத ரஸனம்- ஒட்டியாணம் அற்ற
விகலித வசனம் – தளர்ந்த உடையுடன்
ஜகனம் அபிதானம் –இடை ஆபரணம் அற்ற உன்னை
ஹர்ஷநிதானம் – பெரும் மகிழ்ச்சியை கொடுக்கக்கூடிய
நிதிம் இவ –பெரும் நிதியைப் போல
கடய- சமர்ப்பிப்பாயாக.
6.ஹரிரபிமாநீ ரஜனிரிதாநீம் இயமபி யாதி விராமம்
குரு மம வசனம் ஸத்வரரசனம் பூரய மதுரிபுகாமம்(தீரஸமீரே )
ஹரி: - கிருஷ்ணன்
அபிமாநீ- பெருமை கொண்டவன்
இதாநீம் – இப்போது
இயம் ரஜனி: அபி- இந்த இரவும்
யதிவிராமம்- - முடிவை அடையப் போகிறது.
குரு மம வசனம் – என்சொல் கேட்பாயாக
ஸத்வரரசனம்- இது விரைவில் பயனை அளிக்கும்
மதுரிபுகாமம் – கண்ணனின் ஆவலை பூர்த்தி செய்.
8.ஸ்ரீஜயதேவேக்ருத ஹரிசேவே பணதி பரம ரமணீயம்
ப்ரமுதிதஹ்ருதயம் ஹரிமதிஸதயம் நமத ஸுக்ருதகமநீயம் (தீரஸமீரே )
ஸ்ரீஜயதேவே –ஸ்ரீஜயதேவரால்
க்ருத ஹரி சேவே- ஸ்ரீ ஹரியின் சேவையாக
பணிதம் – இது செய்யப்பட்டது.
பரமரமணீயம் – மிகவும் அழகிய
ப்ரமுதிதஹ்ருதயம்- மனதுக்கு ஆனந்தத்தைக்கொடுக்கும்
அதிஸதயம்- .மிகவும் தயை உள்ள
ஸுக்ருதகமநீயம் –நற் கர்மாவின் பலனாக உள்ள
ஹரிம் – ஹரியை
நமத – வணங்குவீர்.
No comments:
Post a Comment