Friday, April 6, 2018

On sandhyavandanam - various quotes in sanskrit

(1).सन्ध्यामुपासते ये तु सततं शंसितव्रताः।
विधूतपापास्ते यान्ति ब्रह्मलोकं सनातनम् ।।
यमः आह्निकभास्करे ।

ஸந்த்யாவந்தனத்தை  எவர்கள் எப்போதும் விருப்பத்துடன் , ( என்றுமே விடக்கூடாது என்கிற நிஷ்டையுடன்
செய்கின்றனரோ) அவர்கள் எல்லாவிதபாபங்களில் இருந்தும் விடுபட்டு ஶாஶ்வதமான ப்ரஹ்மலோகத்திற்கு ( மோக்ஷத்திற்கு) செல்வர்......


(2).सन्ध्याहिनः अशुचिर्नित्यमनर्हः सर्वकर्मसु ।
यदन्यत् कुरुते कर्म न तस्य फलभाग्भवेत् ।।
दक्षवचनम्  आह्निकभास्करे |
 ஸந்த்யாவந்தனம் செய்யாதவன் 
எப்போதும் ஶுத்தமற்றவன் ஆவான் .
வேறு கர்மாக்களில் அவனுக்கு அர்ஹதை இல்லை..
வேறு ஏதேனும் கர்மாக்கள் ( நித்ய, நைமித்திக , காம்ய,)
செய்தாலும் அது பலனை அளிக்காது......

(3).संध्या येन न विज्ञाता संध्या येनानुपासिता।
जीवमानो भवेच्छूद्रः मृतःश्वानोsभिजायते।।
गोबिलः आह्निकभास्करे |

 ஸந்த்யாவந்தனமானது எவனால் அறிந்துகொள்ளப்படவில்லையோ 
எவனால் செய்யப்படவில்லையோ 
அவன் வாழ்கையில் ஶூத்ரனாகவும்,
இறந்து மறுபிறவியில் நாயாக பிறப்பான ......

(4).ब्रह्मणो हृदयं विष्णुः 
विष्णोश्च हृदयं शिवः।
शिवस्य हृदयं सन्ध्या
तेनोपास्याद्विजोत्तमैः।
संवर्त वचनम् ।   दीक्षितीये।।

 ப்ரஹ்மாவின் ஹ்ருதயம் விஷ்ணு
விஷ்ணுவின் ஹ்ருதயம் ஶிவன்
ஶிவனின் ஹ்ருதயம் ஸந்த்யை, ஆதலால் ப்ராஹ்மணர்களால்
ஸந்த்யாவந்தனத்தை  எப்போதும் விடாமல் அனுஷ்டிக்கவேண்டும்..........

(5).गृहेत्वेकगुणा संध्या गोष्ठे दशगुणास्मृता।
शतसाहस्रिका नद्यां अनन्ता विष्णुसन्निधौ।।. व्यासः|

 வீட்டில் செய்யப்படும் சந்த்யாவந்தனம் செய்வதனால் ஒரு மடங்கும்,
பசுக்கொட்டிலில் செய்வதனால் பத்து மடங்கும்,
நதியில் செய்வதனால் லக்ஷம் மடங்கும், விஷ்ணு ஸந்நிதியில் 
எண்ணற்ற மடங்கும் பலன் ஏற்படும்.

No comments:

Post a Comment