Monday, April 9, 2018

Lord Rama and go dhanam

இராமபிரானின் தாயான கௌஸல்யை காலமான சமயம் , ஸ்ரீராமர் அதிகமான தான தர்மங்களை செய்தாராம் ;
..பிறகு குருவான வசிஷ்டரை வணங்கி ,
" ஸ்வாமி ! நான் நிறைய தான , தர்மங்களை செய்தேன் . கோடி பசுக்களை ' கோதானம் ' செய்து விட்டேன் . இதனால் என் பிரியமான தாயின் மனம் மகிழ்ச்சி அடைந்திருக்கும் அல்லவா ?..''
 என்று கேட்டாராம் .
அதற்கு வசிஷ்டர் , 
, " அப்பனே ! ஒரு சமயம் , உன் தாய் உன்னை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்போது ,  நான் எதிரில் வந்தேன் !..உடனே எனக்கு மரியாதை செய்யும்   நிமித்தம் , ஆயாசத்துடன் தரையில்  உட்கார்ந்திருந்தவள்,  உடனே , இடக்கையை  தரையில் ஊன்றிக் கொண்டு , வெகு சிரமத்துடன் எழுந்து கொண்டாள் .! அந்த ஒரு சிரமத்துக்கு ஈடாகாது உன் கோதானம் " !
 என்றாராம் !...
இராமபிரானின் கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் !!

No comments:

Post a Comment