இராமபிரானின் தாயான கௌஸல்யை காலமான சமயம் , ஸ்ரீராமர் அதிகமான தான தர்மங்களை செய்தாராம் ;
..பிறகு குருவான வசிஷ்டரை வணங்கி ,
" ஸ்வாமி ! நான் நிறைய தான , தர்மங்களை செய்தேன் . கோடி பசுக்களை ' கோதானம் ' செய்து விட்டேன் . இதனால் என் பிரியமான தாயின் மனம் மகிழ்ச்சி அடைந்திருக்கும் அல்லவா ?..''
என்று கேட்டாராம் .
அதற்கு வசிஷ்டர் ,
, " அப்பனே ! ஒரு சமயம் , உன் தாய் உன்னை வயிற்றில் சுமந்து கொண்டிருக்கும்போது , நான் எதிரில் வந்தேன் !..உடனே எனக்கு மரியாதை செய்யும் நிமித்தம் , ஆயாசத்துடன் தரையில் உட்கார்ந்திருந்தவள், உடனே , இடக்கையை தரையில் ஊன்றிக் கொண்டு , வெகு சிரமத்துடன் எழுந்து கொண்டாள் .! அந்த ஒரு சிரமத்துக்கு ஈடாகாது உன் கோதானம் " !
என்றாராம் !...
இராமபிரானின் கண்களில் தாரைதாரையாய் கண்ணீர் !!
No comments:
Post a Comment