அஷ்டபதி-1
1.பிரளய பயோதிஜலே த்ருதவான் அஸி வேதம்
விஹித வஹித்ர சரித்ரம் அகேதம்
கேசவாத்ருத மீனசரீர
ஜெயஜகதீசஹரே
பிரளயபயோதிஜலே- பிரளயகால வெள்ளத்தில்
மீன சரீர- மீன் உருக்கொண்டு
கேசவ- கிருஷ்ணா
அகேதம்- சிரமம் இன்றி
விஹிதவஹித்ரசரித்ரம்- ஒரு ஓடத்தைப்போல சஞ்சரித்து
வேதம்-வேதங்களை
த்ருதவான் அஸி- மீட்டாய்
ஜெய ஜகதீசஹரே – உலகநாயகனே , நாராயணா உனக்கு ஜெயம் உண்டாகட்டும்.(இது ஒரு மங்களாசாசனம் )
வேதங்கள் கடலினில் ஹயக்ரீவாசுரனால் மூழகடிக்கப் பட, ஞானம் தர்மம் இவை வேதத்தின் வழிகாட்டுதல் இன்றி அதர்மத்தில் மூழ்கின. மஹாமத்ஸ்யமாக நாராயணன் வேதங்களை வெளிக் கொணர்ந்தார் என்பது மத்ஸ்யாவதாரம். ஸர்வஞத்வம் ஸர்வவ்யாபித்வம் இவையே மஹாமத்ஸ்யம். இறைவன் அருளால் மட்டுமே இந்த சம்சாரத்தைக் கடக்க இயலும்.ஆகையால் இறைவனே துக்க சாகரத்தைக் கடக்கும் ஓடமாகி துக்கமற்ற (அகேதம் ) கரையில் நம்மை சேர்க்கிறான்.
2. க்ஷிதிரதிவிபுலதரே தவ திஷ்டதி ப்ருஷ்டே
தரணி தரண கிண சக்ரகரிஷ்டே
கேசவத்ருத கச்சப ரூப
க்ஷிதி: இந்த பூமி
விபுலதரே – விசாலமான
தவ ப்ர்ஷ்டே – உன் முதுகில்
திஷ்டதி – நிற்கிறது.
தரணி தரண- பூமியை சுமப்பதால்
கிணசக்ர கரிஷ்டே –உன் முதுகில் வட்ட வடிவமான வடுக்கள் அழகு செய்கின்றன.
கேசவ –கேசவா
த்ருதகச்சப ரூப- ஆமை உருக் கொண்டவனே
இந்த ஸ்லோகம் கூர்மாவதாரத்தைக் குறிப்பிடுகிறது. ஆனால் மந்தரமலையைத் தாங்கியதைக் கூறாமல் கவி உலகத்தையே தாங்கும் ஆதி கூர்ம வடிவினையே குறிப்பிடுகிறார். இதன் சாராம்சம் என்ன வென்றால் இந்த உலகத்தையே தாங்குபவன் இந்த மந்தர மலையை முதுகில் தாங்கினான் என்பது ஒரு பொருட்டல்ல என்பது.
தேசிகர் தசாவதார ஸ்தோத்ரத்தில் இவ்வாறு குறிப்பிடுகிறார். கூர்மாவதாரத்தில் தேவர்களும் அசுரர்களும் மந்தர மலையை பகவான் முதுகில் ஏற்றிக் கடைந்தபோது அது அவருக்கு முதுகு சொறிவதைப்போல பரம சுகமாக இருக்க ஆனந்தமாகத் தூங்கினாராம். அவர் மூச்சுக்காற்று கடல் அலைகளை ஊஞ்சல் போல ஆடவைத்ததாம் . அது திருமகளுடன் அவர் ஊஞ்சலாடுவது போல இருந்ததாம்.
கூர்மாவதாரத்தில் பகவானுடைய முதுகு ஒரு லக்ஷ யோசனைகள் பரப்பைக் கொண்டதாக இருந்தது என்று பாகவதம் சொல்கிறது.
3.வஸதி தசன சிகரே தரணீ தவ லக்னா
சசினி களங்க கலேவ நிமக்னா
கேசவ த்ருத ஸூகர ரூப
ஜெய ஜகதீச ஹரே
கேசவ –கேசவா
த்ருத ஸூகர ரூப – வராக உருக் கொண்டவனே
தவ தசன சிகரே- உன் கோரைப்பல்லின் நுனியில்
வஸதி லக்னா- ஒட்டிக்கொண்டு இருந்த
தரணீ- பூமியானது
சசினி – சந்திரனில்
நிமக்னா- உள்ளே ஒளிந்த
களங்க கலா இவ – களங்கம் போல இருந்தது
வராஹப் பெருமானின் கோரைப்பல் வளைந்து சந்திரன் பிறை போல இருந்தது, அதில் தாங்கிய பூமி பிறையினுள் களங்கம் போல் தெரிந்தும் தெரியாமலும் இருந்தது,
தேசிகர் இதை வர்ணிக்கிறார் . வராஹப்பெருமான் மிக வேகத்துடன் வெளிக்கிளம்பின போது எல்லா ஜீவராசிகளையும் தன்னுள் கொண்ட பூமி அவர் பல்லில் ஒட்டிக்கொண்ட கோரைக்கிழங்கு போல் இருந்ததாம்.
4. தவகரகமலவரே நகம் அத்புத ச்ருங்கம்
தலித ஹிரண்யகசிபு தனுப்ருங்கம்
கேசவ த்ருத நரஹரிரூப
ஜெய ஜகதீச ஹரே
கேசவ- கேசவா
த்ருத நரஹரி ரூப- நரசிங்க ரூபம் கொண்ட
தவ கரகமலவரே –உன் தாமரைக்கரத்தில்
அத்புத ச்ருங்கம் – மலைச் சிகரத்தைப்போன்ற
நகம் – நகம்
தலித ஹிரண்ய கசிபுதனு – ஹிரண்யனின் உடலைக் கிழித்த
ப்ருங்கம்- வண்டு ஆனது.
இந்த ச்லோகம் அத்புத ரசத்தைவெளிப்படுத்துகிறது.
1. தாமரை போன்ற கைகளில் மலைச்சிகரத்தைப் போன்ற நகங்கள் ஒரு அத்புதம்
2. சாதாரணமாக வண்டுதான் தாமரை இதழ்களைத் துளைத்துக்கொண்டு உள்ளே செல்லும். ஆனால் இங்கு தாமரையின் முனைகள் வண்டைத் துளைப்பது இன்னொரு அத்புதம் .
இது கவியின் கற்பனை வளத்தைக் காட்டும் அருமையான வரிகள்.
இந்த அஷ்டபதி விரிவான விளக்கத்தை உடையதாகையால் இரண்டு பகுதிகளாகப பதிவிடப படுகிறது.
5.ச்சலயஸி விக்ரமனே(णे) பலிம் அத்புத வாமன
பதநக நீரஜனிதஜனபாவன
கேசவ த்ருதவாமன்ரூப
ஜெயா ஜகதீச ஹரே
கேசவ – கேசவா
த்ருதவாமன ரூப – வாமனன் உருக் கொண்டவனே
விக்ரமனே(णे)-மூன்று அடிகள் எடுப்பதில்
ச்சலயஸி- பலியை வஞ்சித்தாய்
பதநக நீர ஜனித ஜனபாவன- உன் நகத்திலிருந்து பெருகிய நீர் மக்களை புனிதப்படுத்தியது.
வாமனனாக வந்து மூன்றடி மண் கேட்டு த்ரிவிக்ராமனாக் வளர்ந்ததை வஞ்சித்தாய் என்று கூறுகிறார்.
த்ரிவிக்ரமனின் பாதம் பிரம்ம லோகத்தை அடைய பிரம்மா தன் கமண்டலுவில் இருந்து நீரைத் தெளித்து பாதத்தை அலம்புகிறார் . அந்த பாதத்தில் இருந்து விழுந்த நீரே கங்கை ஆயிற்று. பிறகு பகீரதன் மூலம் பூமிக்கு வந்து மக்களை புனிதப்படுத்துகிறது.
7.க்ஷத்ரிய ருதிரமயீ ஜகத் அபஹத பாபம்
ஸ்னபயஸி பயஸி சமித பவதாபம்
கேசவ த்ருத ப்ருகுபதிரூப
ஜெயா ஜகதீசஹரே
கேசவ – கேசவா
த்ருத ப்ருகுபதிரூப – பரசுராமனாக வந்து
க்ஷ்த்ரியருதிரமயீ-க்ஷத்ரியர்
பயசி- நீரில்
ஜகத் – உலகத்தை
ஸ்னபயஸி- நீராட்டி
அபஹதபாபம்- அதன் பாவங்களைப் போக்கி
சமித பவதாபம்- சம்சார துக்கத்தைப் போக்கினாய்
பரசுராமர் குருக்ஷேத்ரத்தில் க்ஷத்ரியர்களின் குருதியால் ஒரு தடாகத்தை உண்டாக்கினார். அதில் ஸ்நானம் செய்தால்எல்லா பாவங்களும் தீரும் என்றும் சம்சார துக்கம் போகும் என்றும் சொல்லப்படுகிறது. இதைத்தான் கவி இங்கே குறிப்பிடுகிறார்.
8.விதரஸி திக்ஷு ரனே(णे) திக்பதிகமநீயம்
தசமுக மௌலிமணிம் ரமணீயம்
கேசவ த்ருத ராம சரீர
ஜெய ஜகதீச ஹரே
கேசவ – கேசவா-
த்ருத ராம சரீர – ராமனாக வந்து
ரமணீயம்-அழகான
தசமுகமௌலி மணிம் - ராவணனின் பத்து தலைகளிலும் இருந்த மணிகளை
திக்பதி கமநீயம் –பத்து திக்பாலகர்களும் விரும்பும்படி
ததாஸி- - கொடுத்தாய்
ராவணனைக் கொன்றபின் அவனுடைய பத்து தலைகளிலும் இருந்த மணி மகுடங்களை அவனால் துன்புறுத்தப்பட்ட திக்பலகர்களுக்கு கொடுத்தான் என்று பொருள்.
9.வஹஸி வபுஷி விசதே வஸனம் ஜலதாபம்
ஹலஹதிபீதி மிலித யமுனாபம்
கேசவ த்ருத ஹலதர ரூப
ஜெய ஜகதீச ஹரே
கேசவ – கேசவா
ஹலதரரூப – பலராமனாய் வந்து
விசதே – வெண்மையான
வபுஷி – உடலில்
ஜலதாபம் – நீருண்ட மேகம் போன்ற
வசனம் – உடை
வஹஸி- தரித்துள்ளாய்
ஹலஹதிபீதி- உன்னுடைய கலப்பைக்கு பயந்து
மிலித யமுனாபம் – யமுனையே உன்னிடம் அடைக்கலம் புகுந்தது போல் இருக்கிறது.
பலராமர் வெண்மை நிறம் கொண்டவர் ( ஆதிசேஷனின் நிறம்).கருப்பு ஆடை அணிந்தவர் .கண்ணன் கருமை நிறம் . தங்க நிற ஆடை அணிந்தவன் . இங்கு ஒருசமயம் பலராமர் மதுரையில் இருந்து கோகுலம் வருகிறார். அப்போது அவர் யமுனையில் ஜலக்ரீடை செய்ய ஆவல் கொண்டு யமுனையை தன் இருப்பிடத்திற்கு வரும்படி அழைக்க யமுனை வராததால் கோபம் கொண்டு கலப்பையால் யமுனையை இழுக்கிறார். இந்த சம்பவம் இங்கே நினைவுகூரப் படுகிறது.
10.நிந்தஸி யக்ஞவிதே: அஹஹ ஸ்ருதிஜாதம்
ஸதய ஹ்ருதய தர்சித பசுகாதம்
கேசவ த்ருத புத்த சரீர
ஜெய ஜகதீச ஹரே
கேசவ- கேசவா
ஸதய ஹ்ருதய- தயை உள்ளம் கொண்டவனே
த்ருத புத்த சரீர- புத்தர் உருக்கொண்டு
ஸ்ருதிஜாதம் – வேத பிரமாணமான
யக்ஞவிதே:-யக்ஞங்களில்
தர்சித- காணப்பட்ட
பசுகாதம் – பசுக்கொலையை
நிந்தஸி- நிந்தித்தாய்
புத்தர் வேதத்தின் விரோதி அல்ல. அஹிம்சை கொள்கை உள்ள அவர் பசுக்கொலையை தான் கண்டித்தார். அவர் காலத்தில், வேதமுறைகள் சரியாக அனுஷ்டிக்கப் படவில்லை.,பேராசை கொண்ட பண்டிதர்கள் பசுக்கொலையை பெருவாரியாக மேற் கொண்டனர். புத்த அவதாரத்தின் மூலம் ," எல்லா உயிரிலும் நானே இருக்கிறேன்" என்று கூறிய கண்ணனின் தயை சொல்லப் படுகிறது .
10.ம்லேச்ச நிவஹ நிதனே கலயசி கரவாளம்
தூமகேதும் இவ கிமபி கராளம்
கேசவ த்ருத கல்கி சரீர
ஜெயஜயதேவ ஹரே
கேசவ – கேசவா
த்ருத கல்கி சரீர- கல்கி அவதாரத்தில்
ம்லேச்ச நிவஹ நிதனே – துஷ்டர்களை அழிப்பதற்கு
கிமபி கராளம்- கடுமையான
தூமகேதும் இவ –தூமகேதுவைப் போல
கலயஸி கரவாளம் – கத்தியை எடுக்கிறாய்.
ஸ்ரீஜயதேவகவேரிதம் உதிதம் உதாரம்
ச்ருணு ஸுகதம் சுபதம் பவ சாரம்
கேசவ த்ருத தச வித ரூப
ஜய ஜகதீச ஹரே
கேசவ- கேசவா
த்ருத தசவித ரூப – பத்து அவதாரம் எடுத்தவனே
ஸ்ரீஜயதேவகவே: ஜெயதேவகவியின்
உதிதம் – படைப்பான
ஸுகதம் – சுபதம்- சுகத்தையும் நலனையும் அளிக்கும்
பவசாரம்- வாழ்க்கையின் சாரமாகவும் உள்ள
இதம் உதாரம் – இந்த துதியை
ச்ருணு- கேள்
ஜெய ஜெகதீச ஹரே – உலக நாயகனாகிய உனக்கு மங்களம்
முடிவில் ஒரே ஸ்லோகத்தில் பத்து அவதாரத்தையும் வர்ணிக்கிறார்
.
வேதான் உத்தரதே ஜகன்னிவஹதே பூகோளம் உத்பிப்ரதே
தைத்யம் தாரயதே பலிம் சலயதே க்ஷத்ரக்ஷயம் குர்வதே
பௌலஸ்த்யம் ஜெயதே ஹலம் கலயதே காருண்யம் ஆதன்வதே
ம்லேச்சான் மூர்ச்ச்யதே தசாக்ருதிர்க்ருதே க்ருஷ்ணாய தஸ்மை நம:
வேதான் உத்தரதே -வேதத்தைக் காத்து( மத்ஸ்யம்)
ஜகன்னிவஹதே -உலகைத் தாங்கி( கூர்மம்)
பூகோளம் உத்பிப்ரதே -பூமியை வெளிக் கொணர்ந்து ( வராஹம்)
தைத்யம் தாரயதே -அசுரனை பிளந்து ( நரசிம்மம்)
பலிம் சலயதே -பலியை வஞ்சித்து( (வாமனன்)
க்ஷத்ரக்ஷயம் குர்வதே -க்ஷத்ரியர்களை அழித்து ( பரசுராமர்)
பௌலஸ்த்யம் ஜெயதே- ராவணனை வென்று( ராமர்)
ஹலம் கலயதே- கலப்பையைத் தாங்கி(பலராமர்)
காருண்யம் ஆதன்வதே- கருணை உருவாகி( புத்தர்)
ம்லேச்சான் மூர்ச்ச்சயதே –துஷ்டர்களை அழித்து
தசாக்ருதி: க்ருதே- இவ்வாறு பத்து அவதாரம் எடுத்த
க்ருஷ்ணாய தஸ்மை நம:- கிருஷ்ணனை வணங்குகிறேன்.
No comments:
Post a Comment