Tuesday, November 21, 2017

An incident with Bhaskara rayar

அந்த தேவி உபாசகர் ஒரு முறை, செல்வந்தர் ஒருவரிடம் பணம் கடன் வாங்கி , குறிப்பிட்ட காலத்தில் திருப்பி தருவதாக பத்திரம் எழுதி கையொப்பமும் இட்டிருந்தார் ....
.ஆனால் அவரால் குறித்த காலத்தில் கடனை திருப்பி தர இயலவில்லை !...
அன்று அவர் பூஜையறையில் அம்பிகையை தியானித்தவாறு பூஜையில் ஆழ்ந்திருந்த அக்கணம் .
..கடன் கொடுத்த அந்த செல்வந்தர் அவர் வீட்டு வாசலில் வந்து அவர் பெயரை சொல்லி அழைக்க ....
அந்த தேவி உபாசகர் வெளியே வராததால் ...கோபம் கொண்ட செல்வந்தர் அவரை வாயில் வந்தபடி திட்டி கூச்சல் போட. ஆரம்பித்தார் !
அப்போது உள்ளிருந்து அந்த தேவி உபாசகரின் மனைவி வெளியே'' ..உங்களுக்கு பணம் தானே வேண்டும் ? ..கூச்சல் போடாதீர்கள் !..அரை நொடியில் பணத்துடன் வருகிறேன் ...''மிடுக்காக சொல்லி விட்டு வேகமாக அங்கிருந்து விரைந்தவள் , சொல்லி வைத்தாற்போல் அரை நொடியில் வந்தாள் , ஒரு சிறு பை சகிதம் 
.. .பின் புன்னகையுடன் அந்த பையை அவரிடம் நீட்டியவாறே,
'' இதோ பாருங்கள் ..இந்த பையில் நீங்கள் கடனாக கொடுத்த பணமும் அதற்குண்டான , வட்டியும் உள்ளன !''
!.என்றாள் .
..அடுத்த கணம் பத்திரத்தை அவளிடம் நீட்டிய செல்வந்தரை அவசரமாய் இடை மறித்தாள்அவள் !
'' ..பூஜை முடிந்ததும் நீங்கள் அவர் கையினால் பிரசாதம் பெற்றுக்கொண்டு ,பின் இந்த பத்திரத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் ! ''....
புன்னகை மாறாத முகத்துடன் சொல்லி விட்டு அந்த அம்மாள் உள்ளே செல்ல ..
..செல்வந்தரும் பை, பத்திரம் சகிதம் வீட்டுதிண்ணையிலேயே அமர்ந்து கொண்டார் ..
சற்ற்றைக்கெல்லாம் பிரசாத தட்டுடன் வெளியே வந்த அந்த தேவி உபாசகர் , அங்கே அமர்ந்திருந்த செல்வந்தரை கண்டு வியப்பு மேலிட ,
'' அடடே ...உங்களை கவனிக்க வில்லை ....மன்னியுங்கள் ! ''
பிரசாத தட்டை நீட்டியவாறு பேசியவரை பேச விடவில்லை அந்த செல்வந்தர் ..
'' முதலில் இந்த பத்திரத்தை வாங்கி கொள்ளுங்கள் ! ''...
பேசியவரை கண்டு தேவி உபாசகருக்கு ஏகத்துக்கு ஆச்சரியம் !.
.'' நான் இன்னும் உங்கள் கடனை அடைக்கவில்லையே ?..''
'பரிதாமாக கூறியவரை புன்னகையுடன் ஏறிட்டார் செல்வந்தர் ;
'' உங்கள் மனைவி சற்று முன்பு வந்து மொத்த கடனையும் அடைத்துவிட்டு , பத்திரத்தையும் உங்களிடம் கொடுக்க சொன்னார் !''
ஆச்சரியத்தில் ஆழ்ந்த தேவி உபாசகர் பின் மனைவியை அழைத்து , 
'' நீ இவரது கடனை அடைத்ததாக கூறுகிறாரே ...உண்மையா ?.....''
என்று வினவ ....அந்த அம்மையாரோ திகைப்புடன் ,
'' அய்யோ ...நான் பூஜையறையில் உங்களுடன் தானே இருந்தேன்...?..இது எப்படி சாத்தியம் ? ''
என்று அரற்றிய அக்கணம் ...
பூஜையறையிலிருந்து ஒரு அசரீரி !
'' நான் தான் பணம் தந்தேன் !''..
குரல் கேட்டு பூஜையறைக்கு அனைவரும் விரைய,
அங்கே அம்பிகையின் உருவத்தை தவிர வேறு எதுவும் இல்லை!
கடனை அடைக்க , தன் மனைவி உருவில் வந்தது சாட்ஷாத் அம்பிகையே என்றுணர்ந்த தேவி உபாசகரின் கண்களில் இப்போது தாரை தாரையாய் கண்ணீர் ! அருகே திக்பிரமையுடன் அவரது மனைவி !
'' உங்கள் மேன்மை தெரியாமல் தவறாக பேசி விட்டேன் ...மன்னியுங்கள் !'' 
கண்கள் பனிக்க , செல்வந்தர் அவரின் கால்களில் விழுந்தார் !
லலிதா சஹஸ்ரநாமத்திற்கு பாஷ்யம் எழுதிய தேவி உபாசகரான பாஸ்கரராயர் வாழ்வில் நடந்த உண்மை சம்பவம் இது ! தஞ்சை மாவட்டம் திருவாலங்காட்டுக்கு அருகே ,காவேரி ஆற்றங்கரையில் வசித்தவர் இவர் ! 
தஞ்சாவூர் மயிலாடுதுறை மார்க்கத்தில் , பாஸ்கர ராயபுரம் என்று ஒரு ஊர் இவர் பெயராலேயே இருக்கிறது.! 

No comments:

Post a Comment