Thursday, August 3, 2017

How to do puja?

*இப்படியும் பூஜிக்கலாம் !! எப்படி பூஜிக்கிறோம் என்று நீங்கள் அறிவிர்கள் !! ( இப்படித்தான் பூஜிக்கவேண்டும் என்று உங்களுக்கு வலியுறுத்த முடியாது !! உங்களுக்கான தனிதன்மை ஒவ்வொவருக்கும் உண்டு என்பதே மெய் !! இப்படியும் பூஜிக்கலாம் என்ற உற்றவன் உணர்த்தலே பதிவாக )*

நமச்சிவாய 
நமது எண்ணம் என்று கருதுவதை கொண்டே நாம் செய்யும் பூஜையும் அதன் வெளிப்பாடான செயல்களும் அமையும் !! அந்த எண்ணத்தை இறைவனோடு ஒன்றி நாம் பூஜிக்கும் செயல்களில் பதிந்து !! நம் எண்ணமும் செயலும் சிவத்தோடு ஒன்றி செய்யும்போது நமது சிந்தை சிதறாமல் இறையோடு கலந்த நிலையில் பிரதிபலிக்கும் !! நாமும் தெளிவுற வேண்டிய யாவும் நாம் சிந்தையுள் நிறையும் !! சிவமே நாம் சிந்தையை ஆளும் !! அங்கனம் செய்ய நாம் செய்யும் பூஜை வான் மண்டலத்தில் இறையோடு நமது எண்ணத்தையும் எண்ணத்தின் வேண்டலை கலக்கசெய்து !! யாருமூலம் எங்கனம் எப்படி எதன்வழியே வெளிப்பட வேண்டுமோ அங்கனம் வெளிப்படும் !!

*இறைவனை பூஜிக்க தொடங்கும்போது *: இறைவா ஏதோ என்னுள் உன்னால் விளைந்த அறிவாலே உன்னை பூஜித்து என்னை சீர்படுத்தவே முயல்கிறேன் எதற்கும் துணை நிற்கும் நின் மாபெரும் கருணை இதற்கும் முன்னிற்று துணைபுரிய வேண்டும் !! என்ற சங்கல்பம் செய்துகொண்டு பூஜிக்க தொடங்குங்கள் !!

*விளக்கு ஏற்றும்போது* : ஜோதிவடிவான பரம்பொருளே !! என்னையே எண்ணெய் யாக்கி !! என் வினையையே திரியாக்கி !! அதில் சுடராக உன்னையே ஏற்றுகிறேன் !! என்னுள் எது ஒளிவிட வேண்டுமோ அதை ஒளிரசெய்து !! என்னுள் என்ன எரிந்து அழியாவேண்டுமோ அதை எரித்து அழித்து !! என்னையும் நின்னால் மிளிரசெய்யவே இந்த விளக்கை ஏற்றுகிறேன் என்று உங்கள் எண்ணத்தை செய்யும் செயலில் பதிந்து விளக்கை ஏற்றுங்கள் !!
*அபிஷேகம் செய்யும்போது* : நின் திருவருளால் நின் தன்மையாக எனக்கு நீ அருளிய இந்த திருமேனியில் என் ஆன்மாவை அதனுள் நிறுத்தி அபிஷேகம் செய்கிறேன் !! என் ஆன்மா மாயையில் சூழ்ந்து !! மலங்கள் சூழ்ந்தும் !! இருக்கிறது !! அதை உன்னுள் நிறுத்தி அபிஷேகம் செய்யும்போது அதிலிருந்து விலகவேண்டியத்தை விலகசெய்து !! மெய்யாகி நீயே என்னுள் இருந்து !! நான் உணரும்வண்ணம் வெளிபடவேண்டும் என்று எண்ணத்தை அத்திருமேனியுள் நிறுத்தி அவனோடு நீங்கள் என்று அனுபவித்து செய்யுங்கள் !!

*மலர் இடும்போது* : அந்த மலரை தங்கள் கையில் வைத்து !! இறைவா என்னுள் மலரவேண்டியது எத்தனையோ உள்ளது !! அது எப்போது எப்படி மலரவேண்டும் என்று அறிந்தவன் நீயே !! நான் மலர்ந்ததாக கருதுவதில் கூட மலாரது நிறைய உண்டு !! நானே மலர்ந்துவிட்டேன் என்ற அகந்தையால் மலர்விடாது இருக்கிறேன் !! அதையாவும் மலரவைப்பவன் நீயே !! மலர செய் !! மணக்கவும் செய் !! என்ற எண்ணத்தை பதிந்து மலரை சூட்டுங்கள் !!

*தூபம் காட்டும்போது* : பெருமானே என்னுள் எது எதுவோ மணக்கிறது ?! எது மணக்கவேண்டுமோ அதை அறிந்து மணக்கசெய்கிறவன் நீயே !! ஆதலால் என்னுள் எது மணந்தாலும் வெளிபட்டாலும் உன்னால் !! நீயே காரணம் என்ற எண்ணமே என் சிந்தையாளவேண்டும் என்று தூபம் காட்டுங்கள் !!

*திருமுறை பாடும்போது* : பெருமானே நீயே நின் அடியார்கள் சிந்தையுள் நின்று !! நீயே சொல்லாய் வார்த்தையை உணர்வாய் வெளிப்பட்ட திருமுறையை எனக்கு நீ அளித்த அறிவுகொண்டு !! நீ எனக்கு அறிவுறுத்திய விதம் பாடுகிறேன் ? படிக்கிறேன் ? அதை ஏற்றுக்கொண்டு அவர்கள் அனுபவித்த திருவருள் துளியை எனக்கும் கொஞ்சமாவது உணருமாறு உணர்த்தியாளு சிவமே !! என்று எண்ணத்தை சிவத்தின் மீது நிறுத்தி பாடுங்கள் !!

*நெய்வேத்தியம் படைக்கும்போது* : இறைவா நீ அளித்த இந்த உடலுக்கு என்ன தேவை ! எப்போது தேவை ! எப்படி தேவை !! என்று நான் என்று கருதும் ? எனக்கு முன்னே நீ அறிந்து அருளிகொண்டே இருக்கிறாய் !! நானும் நின்னை உணராதே அனுபவித்துக்கொண்டே இருக்கிறேன் !! உன்மூலமே கிட்டியது உன்னால் என்று உணர்ந்தே உனக்கே சமர்பிக்கிறேன் அதில் நான் என்ற ஆணவத்தையும் சேர்த்தே சமர்பிக்கிறேன் !! ஏற்றுக்கொண்டு எதிலும் நின்னை மறவாதிருக்க அருள்வாய் என்று படைத்தவனுக்கு படையுங்கள் உங்கள் அன்பையும் கலந்து !!

*தீபாராதனை காட்டும்போது* : திருவின் உருவாக எதையோ எத்தனையோ கண்டாலும் கொண்டாலும் !! என்னுள் சுடர்விடும் ஜோதியாய் நீயே இருக்கிறாய் !! நின் வெளிப்பாட்டை அகமாக ! புறமாக !! எப்போதும் ! எங்கும் உணர்வே !! உணர்வில் உணர்விப்பத்தையும் உணரவே !! சுடர்விடும் ஜோதியாய் உன்னை வணங்கி !! என்னுள் நிறுத்துகிறேன் !! என்று  தீபாராதனை காட்டுங்கள் !!

இப்படித்தான் இதுதான் என்று சொல்ல ஏதுமில்லாதவன் தயவால் என்னுள் அவனாலே விளைந்ததை பதிந்துள்ளேன் !!

உங்களுள் வெளிப்படும்படியே அவன் மிளிர்வான் !! 

பூஜித்து பாருங்கள் !!

திருச்சிற்றம்பலம் 

நற்றுணையாவது நமச்சிவாயவே 

*குமாரசூரியர்_அங்கமுத்து*

No comments:

Post a Comment