Thursday, June 1, 2017

Samskrita quotes in tamil

courtesy:http://tamilandvedas.com/2015/10/04/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%88%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%87-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B9%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4/

சம்ஸ்கிருதப் பொன்மொழிகள்

1).ஜலே தைலம் கலே குஹ்யம் பாத்ரே தானம் மனாகபி

ப்ராக்ஞே சாஸ்த்ரம் ஸ்வயம் யாதி விஸ்தாரம் வஸ்து சக்தித: — சாணக்கிய நீதி

நீரில் எண்ணையும், கெட்டவர்களிடத்தில் சொன்ன ரகசியமும், தகுதியுள்ளோரிடத்தில் கொடுத்த தானமும், அறிஞர்களிடத்தில் சொல்லப்படும் நூலறிவும் இயற்கையாகவே பரவிவிடும்.

Xxxx

2).ஜீவந்தோபி ம்ருதா: பஞ்ச வ்யாசேன பரிகீர்த்திதா:

தரித்ரோ வ்யாதிதோ மூர்க்க: ப்ரவாசீ நித்யசேவக:

வறுமையில் வாடுபவன், நோயாளி, முட்டாள், பிறதேசம் சென்றவன், தினக் கூலி ஆகிய ஐவரும் இருந்தும் இறந்தவர்கள் என்று வியாசர் கூறியுள்ளார்.

Xxx

3).த்ரிசங்கு இவ அந்தரா திஷ்ட – சாகுந்தலம்

திரிசங்கு போல அந்தரத்தில் நில்

Xxx

4).ந கலு ச உபரதோ யஸ்ய வல்லபோ ஜன: ஸ்மரதி – சுபாஷித ரத்ன பாண்டாகாரம்

செவிடனுக்கு குயில்களின் ஆலாபனை, மகிழ்ச்சியை உண்டுபண்ணுவதில்லை அல்லவா?

  

தபால்தலைகளில் குயில்

Xxx

5).நக்ன  க்ஷபணகே தேஸே ரஜக: கிம் கரிஷ்யதி – சாணக்யநீதி

எல்லோரும் நிர்வாணமாக இருக்கும் இடத்தி வண்ணானுக்கு என்ன வேலை?

Xxx

6).ந வா அரே சர்வஸ்ய காமாய சர்வம் ப்ரியம் பவதி

ஆத்மனஸ்து காமாய சர்வம் சர்வம் ப்ரியம் பவதி

உடல் மீது , உருவம் மீது அன்பு இல்லை.

ஆத்மாவைக் கருதியே அன்பு இருக்கிறது

ஒப்பிடுக:— "முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து

அகநக நட்பது நட்பு" (குறள் 786)

Xxx

7).ந வ்ருதா சபதம் குர்யாத் – மனு ஸ்மிருதி

வீண் உறுதி மொழி எடுக்காதே

Xxx

crane india Afghanistan-stamp790parrots

8).ந வ்யாபார சதேனாபி சுகவத் பாடயதே பக:- ஹிதோபதேசம்

நூற்றுக் கணக்கான முறை முயற்சி செய்தாலும் கொக்கு, கிளி போலப் பேச முடியாது

Xxx

9).ந சா சபா யத்ர ந சந்தி வ்ருத்தா:

வ்ருத்தா ந தே யே ந வதந்தி தர்மம் – மஹாபாரதம்/ ஹிதோபதேசம்

எங்கே முதியோர் இல்லையோ அது சபையாகாது;

யார் தர்ம உபதேசம் செய்வதில்லையோ அவர்கள் மூத்தோர் அல்ல.

Xxx

10).ந ஹி மானுஷாத் ஸ்ரேஷ்டதரம் ஹி கிஞ்சித் – மஹாபாரதம்

மானுடப் பிறவிக்கும் மேலானது எதுவுமில்லை.

ஒப்பிடுக: அரிதரிது மானிடராய்ப் பிறத்தல் அரிது.

Xxx

11).ந ஹி சிம்ஹோ கஜாஸ்கந்தீ பயாத் கிரிகுஹாசய:

–ரகுவம்சம்

யானைமீது தாக்குதல் நடத்தவல்ல சிங்கமானது, யானைக்குப் பயந்து குகையில் அடைக்கலம் புகாது.

Xxx

12).நஹி அமூலா ப்ரசித்யதி – சு.ர.பா.

மூலகாரணமின்றி எதுவும் பிரபலமாகாது.

ஒப்பிடுக: நெருப்பின்றிப் புகையாது.

–சுபம்–

No comments:

Post a Comment