Wednesday, February 15, 2017

Renunciation of bhoga is yoga - Yoga vaasishtam

Courtesy:Sri.Harihara Sarma

தினமொரு சுலோகம்

நாள் 186

பந்தங்களைய  நிராகரித்தலே முக்தி

 

ஶ்ருயதாம் ஞானஸர்வஸ்வம் ஶ்ருத்வா சைவாவதார்யதாம்

போகேச்சாமாத்ரகோ பந்தஸ்த த்யாகைகேன மோக்ஷ உச்யதே !

श्रुयताम् ज्ञानसर्वस्वम् श्रुत्वा चैवावधार्यताम्

भोगेच्चामात्रको बन्धस्त त्यागो मोक्ष उच्यते 

வஸிஷ்டர் தொடர்ந்தார்:" இராமாஅஞ்ஞானமும் மோகமும் நிறைந்த மனதை வென்று தன் கட்டுபாட்டிற்குள் வைப்பவர்கள்தான் உண்மையில் வீரர்கள்பிறப்புஇறப்பு என்ற க்கர சுழற்சியில் அடைபட்டு  கிடக்கும் 

இந்த திருசிய பிரபஞ்சத்தில் அனுபவிக்க வேண்டி வருகின்ற சுகதுக்கங்களுக்கான ஒரே ஒரு மருந்து மனக்கட்டுப்பாடு தான்.

நான் எல்லா அறிவுகளுக்கும் மையமானதைப் பற்றி  சொல்கிறேன்கேள்அதைக் கேட்டு  நீ உன் வாழ்க்கையை நறுமணம் நிறைந்ததாகாக்குவாய்பந்தம் என்பது சுகத்தை அடைவதற்கான ஆஸக்தி தான்.அதை நிராகரித்தல் தான்முக்தி.

ஆகவே  சுகபோகம் தரும் எல்லா இடங்களையும் நஞ்சை உமிழ்கின்ற இடங்களாக்க்  கண்டு அவைகளை ஒதுக்கி தள்ளவேண்டும்ண்மூடித்தனமான  தியாகம் நல்லதல்இந்திரிய சுகங்களின் குணநலன்களை திவீரமாக ஆராய்ந்து அதன்விளைவுகளைத் உணர்ந்தஅவைகளின் மீதுள்ள ஆர்வத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்அப்பொழுது  தான்  ஆனந்தமாக வாழமுடியும்.

பவித்தரமாக குணங்களை போற்றி வளர்பபதன் மூலம் எல்லாத் தவறான புரிதல்களும் நீங்கி மனம் மாசற்றதாகின்றது;மாறுகின்றது.அங்கு எந்த ஆசைகளும் இல்லாதாகிறது.எந்தவொரு இரட்டைகளின் 

தாக்கமும்  இராதுஅமைதின்மையும் பயமும் மோகங்களும் மனதிலிருந்து மறைந்துமனம் ஒருஅமைதி பூங்காவாகும்.தவறான சிந்தைகளோஆசாபாசங்களோ,துன்பங்களோ அங்கிராது.  அம்மாதிரி மனம் தன்னுடையசந்தேகம் என்ற துர்புத்திரனையும்,வன் மனைவிகளான ஆர்வங்களையும் வெளித்தள்ளுகின்றது.என்னே ஒரு எதிர்மறை!ஆத்ம போதம்தான் உதயமாவதற்கும் அந்த வேட்கை 

வளருவதற்கும்,உதவியாயிருந்த ஆசைகளையும்,எண்ணங்களையும் ( ஆத்ம போதம் வேண்டுமென்ற வேட்கை உட்பட )உதயமானவுடன் இல்லாமலாகிவிடுகிறதுசுயரூப விசாரணையின் மூலம் மனம் தேகாபிமானத்தை துறக்கிறது.அஞ்ஞானம்நிறைந்த மனம் வளர்கிறது

பெரிதாகிறது.விவேகம் உதயமாகிவிட்டாலோ மனமே ல்லாமலாகிவிடுகிறது. மனம் தான் பிரபஞ்சம்.( மனம் 

அழிந்து விட்டால் விசுவம் இல்லாதாகும்இந்த மலைகளும் மடுக்களும்கடலும் நதியும் ஆகாயமும் கடவுளும் மித்திரமும்,சத்துருவும் எல்லாம் மனம் தான்.அனந்தாவபோதம்தானே மறதிக்கு ஆட்பட்டுமாற்றங்களுக்கு ஆட்பட்டுஉபாதைகளுக்குகீழ்ப்படிந்துமனமாக மாறுகிறது.அது தான் பிறப்புஇறப்பிற்கு காரணமாகிறது.இது தான் ஜீவாத்மா எனப்படுவதும்அதாவது ,னந்தாவபோதத்தின் ஒரு  பகுதி போத மனமாய்,மனோ வாசனைகளால் மூடப்பட்டுஒரு புது பிறவியெடுக்கிறது.அது தான்ஜீவாத்மா.இந்த ஜீவாத்மா 

அனந்தாவபோதம் என்ற சத்தியத்திலிருந்து வெகு தூரம் விலகி வாசனைகளுக்கு ஆட்பட்டுஇந்த பிரபஞ்சமெனும் மாயையில்மூழ்கி விடுகிறது.உண்மையில்,ஆத்மா என்பது ப்ராணனோ,தேகமோஅதன் 

அங்கங்களோ அல்ல.அது ஆகாயம்!  முடிவும் ஆரம்பமும்

ல்லாமலிருக்கிறது.அது எல்லாவற்றிலிருந்தும் சுதந்திரமாக இருக்கிறது."

ஹரி ஹர சர்மா,வில்லா 68, நானா நானி ஹோம்ஸ்,தொண்டாமுத்தூர்,
கோயம்புத்தூர்
visit ramanahari.blogspot.in ,rhsar.blogspot.in harikrishnablogdotcom.wordpress.com, forother writings

No comments:

Post a Comment