Thursday, October 30, 2014

Ummaachi

Courtesy: Sri.Sivan krishnan

உம்மாச்சி  


குழந்தைகளை  பொறுத்தவரை  கடவுள்  என்றால்  உம்மாச்சி  என்று  சொன்னா தான்  புரியும். ஏனோ  தெரியவில்லை,  நிறைய பேர்  குழந்தைகளுக்கு  கடவுளைப்   பற்றிய  ஒரு பயத்தை உண்டு பண்ணிவிடுகிறார்கள்.   உம்மாச்சி  நீ  என்ன  பண்றேன்னு  பார்த்துண்டே  இருக்கும். தப்பு  பண்ணா  கண்ணைக் குத்திடும்.''    உம்மாச்சி  ரொம்ப  நல்லது  ஒண்ணுமே  பண்ணாது. உன்னை மாறி குட்டிப்  பாப்பான்னா  ரொம்ப புடிக்கும்  என்று  சொல்லலாமே..   உம்மாச்சியை  எதுக்கு  அது  இதுன்னு  சொல்லணும்.  உம்மாச்சியை  அவர்  என்று கூட  சொல்லலாமே!

இதுவரை தப்பாக சொன்னவர்கள்  இனிமேல்  மாற்றிக்கொள்ளலாம் என்று  வேண்டுகிறேன்.   மஹா  பெரியவாவை  குழந்தைகளுக்கு எத்தனையோ  பேர்'' உம்மாச்சி  தாத்தா''  என்று  அறிமுகம்  செய்வது அறிந்திருக்கிறேன். 

இது  அவருக்கு  எதிரேயே  நடந்திருக்கிறது.   


சுருக்கமாக  பெரியவா  சொன்னதை சொல்கிறேன்.


"எல்லோரும் காலையில் எழுந்ததும் நாராயண ஸ்மரணம் செய்யவேண்டும்மாலையில்பரமேசுவரனை தியானிக்க வேண்டும்மஹாவிஷ்ணுஉலகைப் பரிபாலிப்பவர்காலையில் உலககாரியங்களைத் தொடங்கும்முன் அவரை ஸ்மரிக்க வேண்டும்பரமேசுவரனிடம் உலகமெல்லாம்லயித்து ஒடுங்குகின்றனமாலையில் நம் வேலைகள் ஒய்கின்றனநாம் பார்த்துக் கொண்டிருக்கும்உலகம் இருளுக்குள் ஒடுங்குகிறதுபட்சிகள் கூட்டில் ஒடுங்குகின்றனஊரெல்லாம் மேய்ந்தபசுக்கள் கொட்டிலுக்குத் திரும்பி வந்து ஒடுங்குகின்றன.


நாமும்வெளியில் திரியும் எண்ணங்களை யெல்லாம் அப்போது இதயத்துக்குள் திருப்பிபரமேசுவரனை ஸ்மரிக்க வேண்டும்தோஷம் என்றால் இரவுஇரவு வருவதற்கு முற்பட்ட மாலைவேளை ப்ரதோஷம்.  பிரதோஷத்தில் பரமேசுவரனை நினைக்க வேண்டும்.

ஈஸ்வரனை எப்போதும் அம்பாளோடு சேர்த்தே தியானிக்க வேண்டும்ஈசுவரன் சிவன்எனப்படுகிறார்அம்பாளுக்கு சிவா, சிவே என்று பெயர்.

வேதத்தில் ஸ்ரீ ருத்ரம் சொல்கிறதுபயங்கர ரூபம் கொண்ட ருத்திரனுக்கு பரம மங்களமான ஒருல்வரூபம் உண்டுஅதற்கு சிவா என்று பெயர்அந்த சிவா தான் உலக தாபத்துக்கெல்லாம்ஒளஷதமாக இருக்கிறதுருத்திரனுக்கும் ஒளஷதம் அந்த சிவாவே.


ருத்ரன் ஆலஹாலத்தை உண்டு பிழைத்திருப்பதற்குக் காரணம் இந்த சிவா என்கிற அம்பாளானமிருத ஸஞ்சீவினிதான். ''அம்மாஉன் தாடங்க மகிமையால் அல்லவா பரமேசுவரன் விஷத்தைஉண்டும் கூட அழியாமல் இருக்கிறார்?''  என்று ஆச்சாரியாள் ஸெளந்தரிய லஹரியில் கேட்கிறார்.


அப்படிப்பட்ட சிவனோடு சிவாவையும் சேர்த்துச் சொன்னது மட்டுமல்லநம் தேசக்குழந்தைகளும்அநாதி காலமாக நமக்கு அப்படியே உத்தரவு போட்டிருக்கின்றனநம்மைப் போலக் கல்மிஷங்கள்இல்லாமல்நம்மைப் போலப் பாபங்கள் இல்லாமல் இருக்கிற குழந்தைகளின் வாக்கியமும் நமக்குஆக்ஞைதான்.


குழந்தைகள் நமக்குக் கட்டளை இடுவது என்ன?   


குழந்தைகள் ஸ்வாமியை ''உம்மாச்சி''  என்றே சொல்லும்குழந்தைகளின் பரம்பரையில் சில தனி வார்த்தைகள் உண்டுஇவை ஆயிரக்கணக்கான வருஷங்களாக வந்துகொண்டிருக்கின்றன.பெரியவர்களின் வார்த்தைகளும்அவற்றின் அர்த்தங்களும் மாறும்குழந்தைமொழிமாறுவதில்லைஉம்மாச்சி என்ற குழந்தை மொழிக்கு ஸ்வாமி என்று அர்த்தம்


என்னிடம் குழந்தைகளை அழைத்து வருகிறவர்கள்கூடஉம்மாச்சித் தாத்தாவுக்கு நமஸ்காரம் செய்என்று அவற்றிடம் சொல்லிக் கேட்டிருப்பீர்கள்இதென்ன உம்மாச்சி?  இதன் சரியான மூலம் என்ன?  என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.


திருச்சி மலைக்கோட்டைக்குப் போயிருந்தேன்அங்கே உள்ள கோயில் ஸ்ரீ பாதந்தாங்கிகளில்திருநல்லத்திலிருந்து (கோனேரிராஜபுரம்வந்திருக்கிறவர்களும் இருந்தார்கள்அவர்களில்ஒருவரை ஒருவர் உம்மாச்சி என்று கூப்பிடுவதைக் கேட்டேன்திருநல்லத்தில் ஸ்வாமியின் பெயர்உமாமகேஸ்வரன் என்பதுஎனக்கு உடனே விஷயம் பளிச்சென்று புரிந்ததுஉம்மாச்சுஉம்மாச்சிஎல்லாம் உமாமகேசனைக் குறிப்பனவே என்று தெரிந்துகொண்டேன்ஆககுழந்தைகளின்பாஷையிலிருந்தே அவர்கள் மிகப் பழங்காலத்திலிருந்து உமாதேவியுடன் சேர்ந்தமகேசுவரனைத்தான் ஸ்வாமியாக நினைக்கிறார்கள் என்பது தெரிய வந்தது.


குழந்தைகளால் சொல்லப்படுகிற ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம்குழந்தைகளிடம் காமமும்குரோதமும் நிலைத்திருப்பதில்லைஇந்த விநாடி ஆசைப்பட்டு வாங்கிய பொருளை அடுத்த வினாடிகீழே போட்டுவிட்டுப் போய்விடும்இந்த விநாடி கோபித்துக்கொண்ட ஒருவரிடம் அடுத்த விநாடியேஆசையோடு ஒடி ஒட்டிக் கொள்ளும்குழந்தைக்கு மோச எண்ணம் இல்லைகபடம் இல்லை.இதனால்தான் உபநிஷத்துக்களும் நம்மைக் குழந்தையாக இரு என்று உபதேசிக்கின்றன.குழந்தையே தெய்வம் என்றால் உமாமகேசுவரன் என்று சொல்கிறதென்றால்அந்தக் கட்டளையைநாம் ஏற்கவேண்டும்வேத்ததின் பாஷையும் குழந்தையின் பாஷையும் ஒன்றாகச் சொல்வதுபோல்,எல்லோரும் சாங்காலத்தில் அம்பிகை ஸஹிதனான ஈசுவரனை தியானிப்போமாக!

நம:பார்வதீ பதயே:ஹர ஹர மஹாதேவா! "

 

No comments:

Post a Comment