*ஸம்ஸ்க்ருத வினோதம்: விடுகதையா? ஸ்லோகமா?*
*அம்பாளைத் துதிப்பதற்கு ஸம்ஸ்க்ருதத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது. இது பார்ப்பதற்கு ஒரு பெரிய விடுகதை போல் அமைந்துள்ளது.*
*ஒரு பெரிய முடிச்சு எப்படி ஒவ்வொன்றாக அவிழுமோ அது போல இந்த ஸ்லோகத்தின் அர்த்தம் மிக அழகாக அவிழ்ந்து கொண்டே செல்கிறது.*
*அது எப்படி என்று கீழே பாருங்கள்!*
गोग-ज-वाहन-भोजन-भक्ष्यो-द्भूत-प-मित्र-सपत्न-ज-शत्रोः ।
वाहन-वैरि-कृतासन-तुष्टा मामिह पातु जगत्त्रय-जुष्टा ॥
(கோ³க³-ஜ-வாஹன-போ⁴ஜன-ப⁴க்ஷ்யோ-த்³பூ⁴த-ப-மித்ர-ஸபத்ன-ஜ-ஶத்ரோ꞉ ।
வாஹன-வைரி-க்ருʼதாஸன-துஷ்டா மாமிஹ பாது ஜக³த்த்ரய-ஜுஷ்டா ॥)
* கோ³க³: (गोगः)
* ரிஷபத்தின் மீது செல்பவர் யார்?
சிவன் (शिवः).
* கோ³க³-ஜ: (गोगजः)
* அவரிடமிருந்து (சிவனிடம்) பிறந்தவர் யார்?
கார்த்திகேயன் (कार्तिकेयः).
* கோ³க³ஜ-வாஹன: (गोगजवाहनः)
* அவரின் (முருகனின்) வாகனம் எது?
மயில் (मयूरः).
* கோ³க³ஜவாஹன-போ⁴ஜனம் (गोगजवाहनभोजनम्)
* அதற்கு (மயிலுக்கு) உணவு எது?
பாம்பு (सर्पः).
* கோ³க³ஜவாஹனபோ⁴ஜன-ப⁴க்ஷ்ய: (गोगजवाहनभोजनभक्ष्यः)
* விளக்கம்: பாம்புகள் "வாயு பக்ஷக:" (காற்றை உண்பவை) என்று அழைக்கப்படும்.
வாயு / காற்று (वायुः).
*கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴த: (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतः)
* வாயுவினால் தோன்றியவர் (வாயுபுத்திரர்) யார்?
ஹனுமான் (हनुमान्).
* கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴த-ப: (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपः)
* ஹனுமானால் காக்கப்படுபவர் அல்லது ஹனுமானுக்குத் தலைவன் யார்?
ஸுக்ரீவன் (सुग्रीवः).
* கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தப-மித்ரம் (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रम्)
* அந்தச் ஸுக்ரீவனின் நண்பன் யார்?
ஶ்ரீராமர் (रामः).
*கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தபமித்ர-ஸபத்ன: (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रसपत्नः)
* ராமரின் விரோதி யார்?
ராவணன் (रावणः).
* கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தபமித்ரஸபத்ன-ஜ: (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रसपत्नजः)
* ராவணனின் மகன் யார்?
இந்த்ரஜித் (इन्द्रजित्).
* கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தபமித்ரஸபத்னஜ-ஶத்ரு: (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रसपत्नजशत्रुः)
* இந்திரஜித்தின் எதிரி யார்?
இந்திரன் (इन्द्रः).
* கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தபமித்ரஸபத்னஜ-ஶத்ரோ: வாஹனம் (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रसपत्नजशत्रोः वाहनम्)
* இந்த்ரனின் வாகனம் எது?
யானை / ஐராவதம் (गजः / ऐरावतः).
* கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தபமித்ரஸபத்னஜ-ஶத்ரோ: வாஹனவைரீ (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रसपत्नजशत्रोः वाहनवैरी)
* யானைக்குப் பரம எதிரி (கஜாரி) யார்?
சிங்கம் (सिंहः).
* கோ³க³ஜவாஹனபோ⁴ஜனப⁴க்ஷ்யோத்³பூ⁴தபமித்ரஸபத்னஜ-ஶத்ரோ꞉ வாஹனவைரிக்ருதாஸனா (गोगजवाहनभोजनभक्ष्यौद्भूतपमित्रसपत्नजशत्रोः वाहनवैरिकृतासना)
* அந்தச் சிங்கத்தையே தனது ஆஸனமாகக் (வாஹனமாகக்) கொண்டவள் எவளோ அவள்.
*ஸ்ரீ துர்கா தேவி! (ஸிம்ஹ வாஹினி).*
துஷ்டா மாமிஹ பாது ஜக³த்த்ரய-ஜுஷ்டா"
(तुष्टा मामिह पातु जगत्त्रय-जुष्टा)
மூன்று உலகங்களாலும் வணங்கப்படுபவளான அந்த தேவி, மகிழ்ச்சி கொண்டவளாக இந்த ஸம்ஸாரத்தில் இருந்து என்னைக் காக்கட்டும்!
No comments:
Post a Comment