*மகாபாரதத்தில் ஐந்து தங்க* *அம்புகளின் கதை*:
மகாபாரதப் போரில் கௌரவர்கள் தொடர் தோல்வி அடைந்து கொண்டிருந்த போது ஒரு நாள் இரவு துரியோதனன் பீஷ்மர் தங்கியிருக்கும் இடத்திற்குச் சென்று நீங்கள் பாண்டவர்களின் மீது கொண்டுள்ள அன்பினால் போரில் உங்களுடைய முழுமையான பலத்தினைப் பயன்படுத்தி போரிடவில்லை என்று குற்றஞ்சாட்டினான்
இதனால் மிகுந்த கோபமடைந்த பீஷ்மர் ஐந்து தங்க அம்புகளை எடுத்து நாளை நடக்கவிருக்கும் போரில் இந்த ஐந்து அம்புகளால் பாண்டவர்கள் வீழ்த்தப்பட வேண்டும் என மந்திரித்தார்.
இந்த அம்புகளைக் கொண்டு பாண்டவர்களை வீழ்த்துவேன் என்று துரியோதனனிடம் பீஷ்மர் வாக்களித்தார்.
ஆனால் பீஷ்மரின் வார்த்தைகளில் நம்பிக்கை கொள்ளாத துரியோதனன் அந்த அம்புகளை என்னிடம் தாருங்கள்,நான் அதனைப் பாதுகாப்பாக வைத்து நாளை காலை தருகிறேன் என்று அந்த அம்புகளைக் கேட்கிறான்
ஒரு ஃபிளாஷ் பேக்
மகாபாரதப் போர் நடைபெறுவதற்கு சில காலத்திற்கு முன்னால் பாண்டவர்கள் ஒரு காட்டிற்கு நாடு கடத்தப்பட்டனர்.
அப்போது பாண்டவர்கள் தங்கியிருப்பதற்கு எதிரில் உள்ள குளத்தின் அருகில் துரியோதனன் தனது முகாமை வைத்திருந்தான்.
ஒரு முறை துரியோதனன் அந்த குளத்தில் குளிக்கும் போது மேலுலக இளவரசர் கந்தர்வர்களும் கீழே வந்தனர்.
அதில் அவர்களுடன் துரியோதனன் போரிட நேர்ந்தது.
இதில் துரியோதனனைக் காக்க அர்ச்சுனன் போரிட்டு துரியோதனனைக் காப்பாற்றினான்
இதில் துரியோதனன் நாணம் கொண்டான்.
ஆனால் அவன் சத்திரியன் என்பதால் கைமாறாக அர்ச்சுனனுக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டான்.
ஆனால் அர்ச்சுனன் அதை மறுத்து தனக்கு வேண்டுமென்பதைத் தேவையான நேரத்தில்
கேட்டுக் கொள்கிறேன்
என்று கூறிவிட்டான்.
மகாபாரதப் போர் நடக்கும் சமயத்தில் பீஷ்மர் துரியோதனனிடம் தங்க அம்புகளை அளித்த அந்த இரவில் கிருஷ்ணர் அருச்சுனனிடம் துரியோதனனிடம்
பெறாமல் இருந்த அந்த வரத்தை நினைவுபடுத்தி துரியோதனனிடம் இருக்கும் அந்த ஐந்து தங்க அம்புகளை வரமாக பெறச்சொன்னார்.
அருச்சுனனும் அவ்வாறே சென்று துரியோதனனிடம் வரமாக அந்த ஐந்து அம்புகளையும் கேட்டான்.
அதனால் துரியோதனன் மிகவும் அதிர்ச்சியடைந்தான்.
இருந்தாலும் தான் ஒரு சத்திரியன் என்பதால் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற அதற்கு ஒப்புக் கொண்டான்.
பின்பு தன்னிடம் தங்க அம்புகள் இருப்பதை யார் சொன்னது என்று கேட்டார்.
அதற்கு அருச்சுனன் கிருஷ்ணனைத் தவிர வேறு யார் கூறமுடியும் என்றான்.
பின்பு துரியோதனன் மீண்டும் பீஷ்மரிடம் சென்று மேலும் ஐந்து தங்க அம்புகளைத் தருமாறு கோரினான்.
இதற்கு பீஷ்மர் சிரித்துக் கொண்டு அவ்வாறு பெறுவதெல்லாம் சாத்தியமில்லாதது என்றார்.
பீமனால் ஏற்பட்ட மோசமான காயங்களுடன் துரியோதனன் போர்க்களத்தில் படுத்துக் கொண்டு மரணத்திற்காகக் காத்துக் கொண்டிருந்தாரன்.
அப்போது அவனால் பேச முடியாமல் தனது மூன்று விரல்களை உயர்த்திய நிலையிலேயே வைத்திருந்தான்.
அந்த மூன்று விரல்கள் உயர்த்தியதன் பொருளைப் புரிந்துகொள்ள அவனது ஆட்கள் முயற்சிகள் மேற்கொண்டும் பயனற்று போனது.
அவனது அவலநிலையைப் பார்த்த கிருஷ்ணர் துரியோதனனிடம், "உன்னுடைய மனதில்
உள்ள பிரச்சனைகளை நான் அறிவேன் .
அவற்றை நான் நிவர்த்தி செய்கிறேன்" என்றார்.
கேள்விகளும் அதற்கான பதில்களும்
கிருஷ்ணர் துரியோதனனின் மூன்று கேள்விகளைத் தனது ஞானத்தால் அறிந்துக் கொண்டார்.
அவை அஸ்தினாபுரத்தைச் சுற்றி ஒரு கோட்டையைக் கட்டாதது,
விதுரனைப் போரில் ஈடுபடச் செய்யாதது, துரோணரின் மரணத்திற்குப் பிறகு அஸ்வதாமனைத் தளபதியாக ஆக்காமல் இருந்தது.
ஆனாலும் இவற்றைச் செய்திருந்தால் முறியடிக்க வியூகங்களும் கிருஷ்ணரிடம் இருந்தது.
அவர் அளித்த பதில்கள் இவை தான்: நீங்கள் அங்கு ஒரு கோட்டையைக் கட்டியிருந்தால், குதிரையைக் கொண்டு கோட்டையைத் தகர்க்க நகுலனிடம் அறிவுறுத்தியிருப்பேன் என்றும் விதுரனைப் போரில் பங்கேற்கச் செய்திருந்தால் நானும் போரில் ஈடுபட்டிருப்பேன் என்றும், நீங்கள் அஸ்வதாமனைத் தளபதியாக நியமித்திருந்தால், நான் யுதிஷ்டிரனின் கோபத்தைத் தூண்டியிருப்பேன்.
கிருஷ்ணரின் இந்த பதில்களைக் கேட்ட துரியோதனன் மூன்று விரல்களையும் மூடிவிட்டு
சில நொடிகளில் அவன் மரணித்தான்.
நம்மில் பலருக்குத் தெரியாத விஷயம் நகுலன் தனது குதிரையை கனமழையில் கூட ஈரமாக்காமல் ஓட்ட முடியும் என்பது அதோடு நனையாமல் மட்டுமல்ல ஒரு துளிக்கும் இன்னொரு துளிக்கும் இடையில் வேகமாக பயணிக்கவும் முடியும்.
கவுரவர்கள் மற்றும் பாண்டவர்களில் நகுலனால் மட்டுமே இதனைச் செய்ய முடியும்.
யுதிஷ்டிரருக்குக் கோபம் வந்தால், அவரது கண் பார்வையால் அனைத்தையும் எரிக்க முடியும்.
No comments:
Post a Comment