Wednesday, May 1, 2024

summer water in srirangam

*கோடை ஜலம்*

ப்ரணவாஹார விமானத்தின் கீழ் அரவணைத்துயிலும் அரங்கனின் மூலஸ்தானம் ஒட்டியது *திருவண்ணாழி பிரதக்ஷணம்*!

இந்த பிரதக்ஷணம் முழுதும் சுமார் மூன்றடிஆழத்திற்கு அகழியாக அமைந்துள்ளது. கோடைக்காலத்தில் பெருமாளை வெப்பத்திலிருந்து பாதுகாக்க அமைக்கப்பட்டது தான் இந்த அகழி! 

இதைத்தாண்டி ஸேவித்த பின் நாம் வரும் 2ம் பிரகாரம் *அகளங்கன் திருச்சுற்று!* 
இதில் ஸேனைமுதலியார் ஸந்நிதியின் வலப்புறத்தில் ஒரு கிணறு. 

கோடை பூச்சாற்று உத்ஸவம் தொடக்க நாள் முதல், 48 நாட்கள் இந்த கிணற்றில் இருந்து தண்ணீர் மண் பானையில் மொண்டு திருவண்ணாழி பிரதக்ஷணம் பின்னால் உள்ள துவாரத்தின் வழியே அகழி ரொம்பும் வரை சேர்ப்பர்!

சுமார் 150-200 வரை மண் பானையில் கிணற்றின் கீழேயிருந்து ஒருவர் எடுத்து கிணற்றின் பாதியில் நிற்கும் ஒருவரிடம் சேர்க்க, அதை அவர் கிணற்றின் மேலே நிற்பவரிடம் சேர்க்க, அதை அவர் மூன்று நபர்களின் கை மாறி அந்த அகழி துவாரத்தில் சேர்ப்பர்! 

இது தினமும் மதியம் ஆரம்பித்து சுமார் 3-4 மணி நேரமாகும் அகழி ரொம்ப. இதற்கு பெயர் *கோடை ஜலம்* இந்த ஜலத்தை மதியம் நிறப்பி இரவு அரவணைக்குப் பிறகு வெளியேற்றுவர்-அதில் நீராடும் வழக்கம் உண்டு!
இதுபோல் தொடர்ந்து 48 நாட்கள் இதைத் தொடர்வர்!

இந்த கைங்கர்யத்தை ஸ்ரத்தையாக செய்பவர்கள், கிணற்றிலும்|கிணற்றின் மேலும் இந்த பக்கம் மூன்று மூன்று பேர் அந்த பக்கம் மூன்று மூன்று பேர் ஜலம் எடுப்பதும்|கொடுப்பதும், எதிர்வரிசையில் காலி பானை கீழே இறக்குவதும் மெய்சிலிர்க்கும்!
🙏
"கைம்மானை மழகளிற்றைக் கடல்கிடந்த கருமணியை*
மைம்மான மரகதத்தை மறையுரைத்த திருமாலை*
எம்மானை எனக்கு என்றும் இனியானைப் பனிகாத்த அம்மானை*
யான்கண்டது அணநீர்த் தென்னரங்கத்தே!"
திருமங்கையாழ்வார்
(பெரிய திருமொழி)
🙏🙏

No comments:

Post a Comment