_*✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
*நம்பிக்கையின் உயரம்....*
_*ஒரு நபர் இரண்டு காரணங்களுக்காக மாறுகிறார்.*_
_*விருப்பத்திற்குரியவர் ஒருவர் தங்கள் வாழ்க்கையில் வரும் போதும்.*_
_*விருப்பத்திற்குரிய ஒருவர் தங்கள்*_
_*வாழ்க்கையை விட்டு வெளியேறும் போதும்.*_
_150 ஆண்டுகளுக்கு முன்பு_
_குதிரை வண்டி தான்_
_போக்குவரத்துக்கு பயன்பட்டது._ அப்படியொரு _குதிரை வண்டியில் ஒரு சிறுவன் பள்ளிக்குச் செல்வது வழக்கம்._ _ஒரு முறை வகுப்பில் ஆசிரியர் மாணவர்களிடம்_ _நீங்கள் பெரியவனானதும்_ _என்னவாக ஆசைப்படுகிறீர்கள் என்று_ _கேட்டார். அதற்கு ஒவ்வொரு_ _மாணவரும் வக்கீல், ஆசிரியர், மருத்துவர் என சொல்லி கொண்டே வந்தனர்._
_*அப்போது ஒரு மாணவன் கூறினான் "நான் குதிரை வண்டிக்காரனாவேன் ".*_ _*சுற்றியிருந்த மாணவர்கள் எல்லாம் சிரித்தனர்,*_ _*ஆசிரியரும் அவனைக் கேலி செய்து உட்காரச் சொன்னார்.*_
_அந்த சிறுவன் வீட்டிற்குச் சோகமாக வந்ததைப் பார்த்து தாய் என்னவென்று கேட்க, நடந்ததை கூறினான் அந்தச் சிறுவன். அதைக் கேட்ட அந்த தாய் மகன் மீது கோபம் கொள்ள வில்லை, அந்த தாய் கேட்டார் *" நீ ஏன் குதிரை வண்டிக்காரனாக ஆசைப்படுகிறாய், அதற்கு என்ன காரணம்"._
_*அந்தச் சிறுவன் கூறினான் "தினமும் பள்ளிக்குச் செல்லும் போது குதிரை வண்டிக்காரன் குதிரை ஓட்டுவதைப் பார்ப்பேன், அவர் குதிரை ஓட்டுவது அழகாக இருக்கும். *எனக்கும் அதுபோல் குதிரை வண்டி ஓட்ட வேண்டும் என்று ஆசை, அதனால் தான் அப்படிக் கூறினேன்".*_
_இதைக் கேட்ட தாய் வீட்டினுள் சென்று ஒரு மகாபாரத படத்தை எடுத்து வந்தார், அதை மகனிடம் காட்டி *" நீ குதிரை வண்டிக்காரனாக வேண்டும் என்று சொன்னது தவறில்லை, ஆனால் நீ எப்படிப்பட்ட குதிரை வண்டி ஓட்டுபவனாக இருக்க வேண்டும் தெரியுமா – மகாபாரதத்தில் அர்ஜுனனுக்கு தேர் ஓட்டினானே கிருஷ்ணன், அந்த கிருஷ்ணன் போன்ற தேர் ஓட்டியாக இருக்க வேண்டும்"_ _என்றார்._
_*அந்தச் சிறுவன் தான், தற்போது உலகெங்கிலும் உள்ள ஶ்ரீ இராமகிருஷ்ண மடத்தை ஸ்தாபித்த சுவாமி விவேகானந்தர்.*_
_நாம் செய்வதை தான்_
_வரும் தலைமுறை கவனித்து வளர்கிறது._
_*கவனமாக இருந்தால் தான்*_
_*நல்ல*_ _*தலைமுறையை உருவாக்க முடியும்.*_
_பிள்ளைகளின் எதிர்காலம்_
_வேறு எங்கும்_ _இல்லை, நம் கைகளில் தான் இருக்கிறது._
_*(நல்ல பிள்ளையாக, புள்ளைங்களாக) வருவதற்கும் நம்மைச் சுற்றியுள்ள சூழ்நிலையே காரணமாக அமைகிறது.*_
_உயர்ந்த எண்ணங்களே உயர்ந்த மனிதர்களை உருவாக்குகிறது. ஆனால் பெரும்பான்மை மக்கள் என்ன நினைக்கிறார்கள் – உயர்ந்த எண்ணங்களால் என்ன பயன். உயர்ந்த எண்ணங்களால் என்ன கிடைக்கும், ஊரார் என்ன நினைப்பார்கள், இவற்றை எல்லாம் கருதி உயர்ந்த எண்ணங்களை (அறம்) சமரசம் செய்து கொள்கிறோம்._
_*ஆனால் நம் எண்ணங்கள் நம்மோடு முடிவதில்லை. நம் எண்ணங்கள் தான் நாளைய தலைமுறைக்கான விதைகள்.*_
_*நம் எண்ணங்கள் மீதான நம்முடைய நம்பிக்கையின் உயரம் தான் - நாளை மரமாக வளரக்கூடிய இளைய தலைமுறையின் உயரம்.*_
_சரியாக புரிந்து கொள்ளவில்லை என்றாலும் பரவாயில்லை*_
_யாரையும் தவறாக எண்ணாமல் இருந்தாலே உறவுகள் சிறக்கும்..!_
_*ஒவ்வொரு*_
_*மனிதனுக்கும்*_
_*வாழ்க்கையில்*_
_*இனிமையான*_
_*வேளைகள் சிலவே தான்....*_
_*எஞ்சிய,*_
_*வாழ்க்கை எல்லாம்*_
_*அந்த நினைவின்*_
_*பிரதிபலிப்பு மட்டும் தான்...*_
_நமது வலிமிகுந்த காலத்தில் கூட..._
_அடுத்தவர்களுக்கு வலி நிவாரணியாக நம்மை வைத்திருப்பது தான் கடவுள் நமக்கு கொடுத்த வரம்..._
_*பெரும்பாலானவர்களின் மனம் பிறர் முன் தாங்கள் மிகவும் சிறப்பான வாழ்வை வாழ்வதாக காட்டிக் கொள்ளவே விரும்புகிறது.*_
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*படித்ததில் பிடித்தது*
No comments:
Post a Comment