Monday, April 29, 2024

Pitru karma upanyasam Musiri Yagnya rama fikahitar

श्री भद्र वाक्:
முசிறி *யக்ஞராம தீக்‌ஷிதர்* அவர்கள் *பித்ரு கர்மா* என்ற தலைப்பில் செய்த உபன்யாசம்- *2019 ல்* வாட்ஸ்அப்பில் பகிரப்பட்டது. ஒவ்வொரு பகுதியும் *பத்து நிமிட நேரத்தை* கொண்ட உபன்யாசம்.

*பகுதி 1:* ஜீவன் இறந்தவுடன் எங்கு செல்கிறது, அது நல் கதி அடைய  நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றிய *கருட புராணத்தின்* அறிமுகம்.

*பகுதி 2*: கருட புராணம் இரண்டு பகுதி. முதல் பகுதி என்பது ஆசார காண்டம், 2-ம் பகுதி உத்தர காண்டம் ( ஜீவனின் கதாகதி)

*பகுதி 3*: ஒருவருடைய ஆயுளை தீர்மானிப்பது எது? *கருடன் - பகவான் சம்பாஷனை*.

*பகுதி 4*: கருட பகவானின் கேள்விகளும் பகவானின் விளக்கங்களும். உடலில் உள்ள ஜந்து விதமான பிராணனின் முடிச்சும் ஜீவன் பிரியும்போது  அதன் சேர்க்கையும்.

*பகுதி 5*: ஜீவன் பிரிந்த முதல் நாள் என்ன ஆகிறது ?

*பகுதி 6*: *கல் ஊன்றுவதின் தாத்பர்யமும் , தண்ணீர் வைப்பதன் காரணமும்*. 9 வது நாளிலுருந்து செய்வது என்பது எந்த விதத்திலும் சரியல்ல. தினமும் செய்ய வேண்டும் நித்திவதி. ஒவ்வொரு நாளும் வளரும் அங்கங்கள்.*பத்து அன்று செய்ய வேண்டியது.*

*பகுதி 7*: இந்த பத்து நாளில் கோத்திரகாரர்கள் ஸ்னானம் மற்றும் சந்தி தவிர மற்ற காரியங்கள் தவிர்த்தல் அவசியம். *கருட புராணம் கேட்பது நல்லது.* 11 ம் நாள் செய்ய வேண்டிய *முக்யமான கார்யம் விசோசர்ஜனம்.*

*பகுதி 8 :*  *11ம் நாள் அன்று 2 வயதுள்ள காளைக்கு ரிஷப பூஜை செய்ய வேண்டும்*. ஜீவனிடம் உள்ள பிரேதம் அந்த காளையுடன் சென்று விடும். *பிரேத சரிரம் விடுபட வேண்டியது அவசியம்* ஜீவன் நல்கதி அடைய. எனவே இந்த மிக அவசியமான கர்மாவை கர்த்தாவானவர் கண்டிப்பாக செய்ய வேண்டும்.  12 ம் நாள் *சபிண்டிகரணம்* அவசியம். இன்றுதான் பித்ருக்களுடன் ஜீவன் சேர்க்கப்படுகிறார்.

*பகுதி 9* : உடல் உறுப்பு தானங்கள் பற்றிய விவகாரம்.

*பகுதி 10*: ஏகோதிஷ்டம் மற்றும் பார்வண சிரார்த்தம் விளக்கம்.

*பகுதி 11*: ஸ்ரார்த்த தினம் தீர்மானம் செய்யும் முறை.

*பகுதி 12* : ஸ்ரார்த்தம் செய்வதனால் ஏற்ப்படும் பலன்கள்

*பகுதி 13* : ஸ்ரார்த்த காலம் . ஜீவனை மட்டும் உத்தேசித்து இறந்த நாளிலிருந்து - 12 ம் நாள் வரை 100 ஸ்ரார்த்தம் செய்யப்படுகிறது. நாம் செய்கிறோம் ஆனால் அறிவதில்லை. மாத்யானிக காலத்திற்க்கு முன்னவே இந்த ஸ்ரார்த்தம் செய்யப்படவேண்டும்.

*பகுதி 14*: ஸ்ரார்ததில் கண்டிப்பாக இருக்க வேண்டிய 7 வஸ்துக்களும் பொருள்களும்.

*பகுதி 15-16:* ஸ்ரார்த்தம் செய்யும்போது *எப்படி பித்ருக்கள் வருகிறார்கள்* என்பதை பற்றிய சரித்திரம் .

*பகுதி 17-19* : ஸ்ரார்த்தின் பிரதான அம்சங்கள்- *ஹோமம், பிராமண போஜனம்* மற்றும் *பிண்ட பிரதானம்*.

*பகுதி 20*: பிண்ட பிரதானமும் அதன் தாத்பர்யமும். *பிண்ட பிரதானம் செய்யும் அன்னம் ஏன் சூடாக  இருக்க வேண்டும்*?.

*பகுதி 21* : பித்ரு நமஸ்காரத்தின் மூலமாக நாம் செய்யும் பிரார்த்தனை மந்திரத்தின் அர்த்தம்.

*பகுதி 22-24* : ஸ்ரார்த்ததின் மூன்று வகை

*பகுதி 25-29*: பீஷ்ம சரித்திரமும் அவருக்கு பித்ருக்களின் ஆசிர்வாதமும் 

*பகுதி 31-32*: கொள்ளு பேரனின் முக்யத்துவம்

*பகுதி 33- 37*: நாம் கொடுக்கும் அன்னம் எப்படி பித்ருக்களுக்கு போய் சேருகிறது ? அவர்கள் ஏற்கனவே பிறந்திருக்கலாம் - அவர்களுக்கு எப்படி சேருகிறது. 3 தலை முறை மட்டும் வருகிறார்களா மற்றவர்களும் வருவார்களா ?

*பகுதி 38* : நாம் கொடுக்கும் பிண்டம் யார் யாருக்கு எப்படி போய் சேருகிறது என்பதை பற்றிய விளக்கம்.

*பகுதி 39* : கர்தாவின் மனோபாவம் எப்படி இருக்க வேண்டும்?

*பகுதி 40-42*: ஸ்ரார்த்த பிராமணர்களை அழைக்கும் முறை , ஸ்ரார்த்த போஜனம் செய்யும் பிராமணர்கள் கடைபிடிக்க வேண்டிய நியமங்களை பற்றிய விளக்கம் .

*பகுதி 43-50* : ஏன் சில பேர் பிரேத சரிரத்துடன் இருக்கிறார்கள் என்பதை பற்றிய விளக்கமும் இந்த சரித்திரத்தை கேட்பதால் விளையும் பலன்களும்.

*பகுதி 51*: ஸ்ரார்த்தம் அன்று கர்த்தா இருக்க வேண்டிய நியமம், திரவிய ( பணம் ) சுத்தத்தின் அவசியம். இல்லை என்றால் நாம் செய்யும் ஸ்ரார்த்த பலன்  செல்லும் இடம் அதனால் பலன் அடைபவர்கள் பற்றிய விளக்கம் .

*பகுதி 52-54* : ஸ்ரார்த்திற்க்கு சாப்பிட வரும் பிராமணர்கள் கடைபிடிக்க வேண்டியவை மற்றும் அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய மந்திரங்கள். சாப்பிடும் முறை .

*பகுதி 55:* கர்மங்களின் அவசியம்

*பகுதி 56:* ஸ்ரார்ததிற்க்கு  தேவையான சாமான்கள். *இரும்பு, எவர்சில்வர் கூடவே கூடாது.* பச்சை தர்பையில் அமிர்தம் உள்ளது.

*பகுதி 57*:  எள்ளின் முக்கியத்துவம். எந்த வகை எள்ளை (கறுப்பு, வெள்ளை மற்றும் சிவப்பு எள்) உபயோகபடுத்த வேண்டும் என்பதை பற்றிய விளக்கம். பச்சை அரிசியை பயன்படுத்த வேண்டிய அவசியம்.

*பகுதி 58-65*: எள்ளின் அவசியத்தை பற்றிய *தட்ச-யக்ய சரித்திரம்*

*பகுதி 80 -90* - ஸ்ரார்த்தம் மந்திரத்தின் அர்த்தங்கள்.

*பகுதி 90*
சபிண்டிகரணத்தினரபோது வரும் 12- சிரவணர்களும் அதன் தாத்பரியமும்

*பகுதி 92* : *துவாதச சிரவணர்கள்தான்* யம சபையில் ஜீவனின் புண்ய பாப லிஸ்ட்டை சொல்பவர்கள். எனவே *சரம ஸ்லோகம்*  சவூண்டிகரணம் அன்று சொல்ல வேண்டும். *விஸ்வே தேவர்கள்* பற்றிய விளக்கம் . இந்த ஜீவனை உத்தேசித்து நாம் செய்யும் அனைத்தையும் ஜீவனிடம் கொண்டு சேர்பவர்கள்.

*பகுதி 93-94*: வராஹ ஸ்வாமி பித்ருக்களை உத்தேசித்து செய்யும் ஸ்ரார்த்தம். எதனால் பித்ருக்கள் எள் , தீர்த்ததில் திருப்தியடைகிறார்கள் என்பதை பற்றிய விளக்கம்.

https://drive.google.com/drive/folders/10YhNgiTSAVB7gEY0rADEJgCdR2wcaLiM

No comments:

Post a Comment