திவ்யபிரபந்தத்தில் கிளிகள் பற்றி ஸ்ரீஆண்டாள்/ ஆழ்வார்கள் அலற்றியது. 🙏
எல்லே! *இளங்கிளியே* இன்னம் உறங்குதியோ, இன்னடிசிலோடு பாலமுதூட்டி* எடுத்த என் *கோலக்கிளியை**
உன்னொடு தோழமை கொள்வன், *பைங்கிளி* வண்ணன் சிரீதரன் என்பதோர்* பாசத்து அகப் பட்டிருந்தேன்* , *கூட்டில் இருந்து கிளி* எப்போதும் கோவிந்தா! கோவிந்தா! என்று அழைக்கும்* ,
*செவ்வாய்க்கிளி* நான்மறை பாடு* தில்லைத் திருச்சித்ரகூடம் சென்று சேர்மின்களே.
பண்டு இவன் ஆயன் நங்காய்! படிறன் புகுந்து*
என் மகள்தன் தொண்டை அம் செங் கனி வாய்* நுகர்ந்தானை உகந்து
அவன்பின் கெண்டை ஒண் கண் மிளிர* *கிளிபோல்* மிழற்றி நடந்து
முற்றிலும் *பைங் கிளியும்** பந்தும் ஊசலும் பேசுகின்ற*
சிற்றில் மென் பூவையும் விட்டு அகன்ற செழுங் கோதைதன்னை
மான்போலும் மென் நோக்கின் செய்ய வாயார் மரகதம்போல் *மடக்கிளியைக்* கைமேல் கொண்டு
தேன்போலும் மென் மழலை பயிற்றும் நாங்கூர்த் திருத்தெற்றியம்பலத்து என் செங்கண்மாலே.
பந்தோடு கழல் மருவாள் *பைங்கிளியும்* பால் ஊட்டாள் பாவை பேணாள்*
வந்தானோ திருவரங்கன் வாரானோ?' என்று என்றே வளையும் சோரும்*
இனம்மேவு வரிவளைக்கை ஏந்தும் கோவை* ஏய்வாய மரகதம்போல் *கிளியின்இன் சொல்**
அனம்மேவு நடைமடவார் பயிலும் செல்வத்து* அணிஅழுந்தூர் நின்றுஉகந்த அமரர் கோவே.
உய்வான் உனகழலே தொழுது எழுவேன்* *கிளிமடவார்* -
செவ்வாய் மொழி பயிலும் சிறுபுலியூர்ச் சலசயனத்து*
சொல்லாய் *பைங்கிளியே* ,
சுடர்ஆழி வலன்உயர்த்த,*
மல்லார்தோள் வட வேங்கடவனைவர,*
சொல்லாய் *பைங்கிளியே*
சொல் எடுத்துத் *தன் கிளியைச்* சொல்லே என்று* துணை முலைமேல் துளி சோர சோர்கின்றாளே!
மெல் விரல்கள் சிவப்பு எய்தத் தடவி ஆங்கே* *மென் கிளிபோல்* மிக மிழற்றும் என் பேதையே.
நுமதுவாயோ அதுஅன்றி வல்வினையேனும் *கிளியும்* எள்கும்-
ஆயோ?* அடும் தொண்டையோ, அறையோ இது அறிவு அரிதே.
தீரா உடம்பொடு பேதுறுவேன் கண்டுஇரங்கி*
ஏரார் *கிளிக்கிளவி* எம்அனைதான் வந்து என்னைச்*
சீரார் செழும்புழுதிக் காப்பிட்டு
தளிர் நிறத்தால் குறைவில்லாத் தனிச் சிறையில் விளப்பு உற்ற,*
*கிளிமொழியாள்* காரணமாக் கிளர் அரக்கன் நகர் எரித்த,*
ஒருவண்ணம் சென்று புக்கு எனக்கு ஒன்று உரை *ஒண்கிளியே**
செரு ஒண் பூம் பொழில் சூழ் செக்கர் வேலைத் திருவண்வண்டூர்
மழறு தேன் மொழியார்கள் நின் அருள் சூடுவார் மனம் வாடி நிற்க* எம்-
குழறு பூவையொடும்* *கிளியோடும்* குழகேலே*.
பூவை *பைங்கிளிகள்* பந்து தூதை பூம் புட்டில்கள்,*
யாவையும் திருமால் திருநாமங்களே கூவி எழும்,
கையமர் சக்கரத்து என் கனிவாய்ப் பெருமானைக் கண்டு*
மெய்யமர் காதல் சொல்லி *கிளிகாள்* ! விரைந்து ஓடிவந்தே?
இடைஇல்லையான் *வளர்த்தகிளிகாள்** பூவைகள்காள்! குயில்காள்! மயில்காள்*
உடையநம்மாமையும் சங்கும் நெஞ்சும் ஒன்றும் ஒழியஒட்டாது கொண்டான்*அடையும் வைகுந்தமும் பாற்கடலும் அஞ்சனவெற்பும் அவைநணிய*
கடையறப்பாசங்கள் விட்டபின்னை அன்றி அவன்அவை காண்கொடானே.
நன்குஎண்ணி நான்வளர்த்த *சிறுகிளிப்பைதலே**
இன்குரல் நீ மிழற்றேல் என்ஆர்உயிர்க் காகுத்தன்*
நின்செய்ய வாய்ஒக்கும் வாயன் கண்ணன்கை காலினன்*
நின்பசும்சாம நிறத்தன் கூட்டுண்டு நீங்கினான்.
ஒழிவுஇன்றித் திருமூழிக்களத்துஉறையும்* ஒண்சுடரை
ஒழிவுஇல்லா அணிமழலைக் *கிளிமொழியாள்* அலற்றியசொல்*
வழுஇல்லா வண்குருகூர்ச் சடகோபன் வாய்ந்துஉரைத்த*
அழிவுஇல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே.
எளிதாயினவாறுஎன்று என்கண்கள் களிப்பக்*
களிதாகிய சிந்தையனாய்க் களிக்கின்றேன்*
*கிளிதாவிய* சோலைகள்சூழ் திருப்பேரான்*
தெளிதாகிய சேண்விசும்பு தருவானே.
शुकवाक्म्रृतम् श्रवणसुकम्- श्रीमद् भागवतम्
( கிளிமொழியால் சொல்லப்பட்ட செவிக்கினிய கண்ணமுது ஸ்ரீமத் பாகவதம்). அடியேன் தாஸன். ஸர்வம் ஸ்ரீதேசிகார்ப்பணம். 🙏🙏🙏🙏
No comments:
Post a Comment