தொடர்- 6
*கணபதி தியானம் :-*
"சுக்லாம் பரதரம்" என்று தொடங்கும் மந்திரத்தை சொல்லி மகா கணபதியை தியானித்து சிரசில் உள்ள அமிர்தம் எல்லா நாடிகளிலும் இறங்கி பாய்வதாக எண்ணி *சிரத்தின் இரு புறமும் முஷ்டிகளால் ஐந்து முறை மெதுவாக குட்டிக் கொள்ளவேண்டும்*. தலையில் குட்டிக்கொள்வது கணபதி ஆராதனையில் விசேஷமான அம்சம்.
சுக்லாம் பரதரம் விஷ்ணும்
சசிவர்ணம் சதுர்ப்புஜம் !
ப்ரஸன்ன வதனம் த்யாயேத்
ஸர்வ விக்நோப சாந்தயே !!
*எங்கும் நிறைந்தவரும் அன்பர்க்கு உகந்த வடிவம் ஏற்பவரும் வெண்மையான ஆடை உடுத்தியவரும் நிலவு போன்ற ஒளியுள்ளவரும் நான்கு கைகளுள்ளவரும் ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக த்யானம் செய்யவேண்டும்.*
*பிராணாயாமம் :-*
அஷ்டாங்க யோகத்தில் இதனை பதஞ்சலி முனிவர் நான்காவது அத்யாயத்தில் அமைத்துள்ளார். மனித உடல் செம்மையாக இயங்க மனித உடலில் 108 இடங்களில்
உயிர்க்காற்று நின்று இயங்குகின்றது இதுவே உயிர்நிலை ஓட்டம் என அழைக்கப்படுகிறது மனித உடலில் உள்ள 10 வாயுக்கள் மேற்சொன்ன 108 மையங்களில் உள்ள உயிர்க்காற்றை இயக்குவதாக சித்தர்கள் கண்டு பிடித்துள்ளனர். சித்தர்களின் கணக்குப்படி முன்சொன்ன 108 இடங்களில் உள்ள அகப்பிராணனை இந்த தச வாயுக்களும் எவ்வாறு இயக்குகின்றது என்பதே பிராணாயாமத்தின் உட்பொருள்.
சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. *12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும்* என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.
இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் . எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைக்கப்படுகறது.
வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும்.
எனவே இதை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைக்கப்படுகிறது.
இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைக்கப்படுகிறது.
*பிராணாயாமத்தில் மூன்று வகை செயல்பாடுகள் உண்டு.*
*ஆள்காட்டி விரலையும் நடுவிரலையும் மடக்கி கட்டை விரல் பவித்திர விரல்களால் மூக்கை இருபுறமும் தொட்டுக்கொண்டு வலப்புறம் அழுத்தி இடதுபக்கம் மெதுவாக மூச்சை இழுத்து பின் இருபுறமும் அழுத்தி மூச்சை நிறுத்தி முடிவில் வலது பக்கம் மெதுவாக மூச்சை விட வேண்டும்*.
*இதில்
இழுப்பது பூரகம்
நிறுத்துவதே கும்பகம்
விடுவது ரேசகம்*.
பூரக கும்பக ரே சக மூன்றும் சேர்ந்தது ஒரு பிராணாயாமம். *இதன் கால அளவு 1:3:2 என்ற விகிதத்தில் இருத்தல் சிறந்தது.*
"ஓம் பூ: ஓம் புவ: ஓ৺ம் சுவ: ஓம் மஹ: ஓம் ஜன: ஓம் தப: ஓ৺ம் சத்யம்
ஓம் தத்சவிதுர்வரேண்யம் | பர்கோ தேவஸ்ய தீமஹி தியோ யோ ந: பரசொதயாத் ॥"
என்ற மந்திரத்தை ஸ்மரித்துக் கொண்டு பிராணாயாமம் செய்ய வேண்டும்.
ஓங்காரமே பூலோகம், ஓங்காரமே புவர்லோகம், ஓங்காரமே சுவர்லோகம், ஓங்காரமே மஹர்லோகம், ஓங்காரமே ஜனலோகம், ஓங்காரமே தபோலோகம், ஓங்காரமே சத்தியலோகம், ஓங்கார பொருளான எந்தப் பரமாத்மா நம்முடைய புத்தி சக்திகளைத் தூண்டுகிறாரோ அந்த அனைத்தையும் படைக்கிறவரான பகவானுடைய சிறந்த ஜோதி ஸ்வரூபத்தை த்யானிப்போம். ஓங்காரமே ஜலமும் ஒளியும் ரசம் பொருந்திய அனைத்தையளிக்கும் பூமியும், உயிருக்கு ஆதாரமான வாயுவும், எங்கும் பரந்த ஆகாசமும், பூ: புவ: சுவ: என்ற வ்யாஹ்ருதீகள் குறிப்பிடும் மனம் புத்தி அஹங்காரம் என்ற தத்துவங்களாக குறிப்பிடப்படுகிறது
*தொடர்-7*
சங்கல்பம்:-
பிராணாயாமத்திற்கு பிறகு ஸங்கல்பம் செய்து தான் எந்தக் கர்மத்தையும் செய்ய ஆரம்பிக்க வேண்டும். ஸங்கல்பத்தில் இடது கை கீழும் வலது கை மேலுமாக வலது தொடை மீது வைத்துக் கொள்ள வேண்டும்.
*"ஸங்கல்போ வாவ மனசோ பூயான் யதாவை ஸங்கல்பயதே அத மனஸ்யதி,அதவாசமீரயதி, தாமுநாம்னீரயதி, நாம்னி மந்த்ரா ஏகம் பவதி, மந்த்ரேஷு கர்மாணி*,
*--- உபநிஷத்*
சங்கல்பம் மனதிலும் பெரியது. எப்போது ஒருவன் சங்கல்பிக்கிறானோ அப்போது தெளிவாக சிந்தித்து தீர்மானிக்கிறான். தீர்மானத்தை பேச ஆரம்பிக்கிறான், பேச்சு பெயர் வடிவாகிறது , பெயர் வடிவில் மந்திரங்கள் ஒடுங்குகின்றன. மந்திரங்களில் கருமங்கள் ஒடுங்குகின்றன.
யஜுர் வேதம் :-
மமோபாத்த ஸமஸ்த்த துரித க்ஷய த்வாரா ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம் ப்ராத சந்த்யாமுபாசிஷ்யே ||
(மாத்யானிகம் கரிஷ்யே ||) (சாயம் சந்த்யாமுபாசிஷ்யே ||
பொழிப்புரை: என்னால் செய்யப்பட்ட பாவங்களை நசிக்க செய்வதன் மூலம் ஈஸ்வரனின் அருளுக்கு பாத்திரமாகும் பொருட்டு காலையில் (நடுப்பகலில்; மாலையில்) சந்த்யா தேவியை உபாசிக்க ஆரம்பிக்கிறேன் ..
வைஷ்ணவ சம்பிரதாயம் :-
மமோபாத்த ஸமஸ்த (ஸ்ரீபகவதாக்ஞயா பகவத் கைங்கர்யம் என்று தென்கலையாரும், ஸ்ரீபகவதாக்ஞயயா ஸ்ரீமந் நாராயண ப்ரீத்யர்த்தம் என்று வடகலையாரும்) துரிதக்ஷயத்வாரா ஸ்ரீ பரமேச்வர ப்ரீத்யர்த்தம் (காலையில்) ப்ராதஸ்ஸந்த்யாம் உபாஸிஷ்யே என்றும் (மத்தியானத்தில்) மாத்யாஹ்னிகம் கரிஷ்யே என்றும் (சாயங்காலத்தில்) ஸாயம் ஸந்த்யாம் உபாஸிஷ்யே, என்றும் சங்கல்பம் செய்த பின் ஓம் என்று பவித்ரவிரலால் ஜலத்தில் எழுதி ஸ்ரீ கேசவாய நம: என்று நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளவும்.
தொடர்-10
*புனர்மார்ஜனம் :-*
ப்ரயோகம்- முதலில் ததிக்ராவ்ண்ண மந்திரங்களாலும் ,பின்னர் ஆபோஹிஷ்டா தொடங்கி 7 மந்திரங்களாலும் பவித்ர விரலால் ப்ரோக்ஷித்து கொண்டு, "யஸ்ய க்ஷயாய ஜிந்வத: என்ற மந்திரத்தால் பாதங்களை தொட்டு
ஆபோ ஜநயதா ச ந:" என்ற மந்திரத்தால் ஆத்ம பரிஷேஷனம் செய்து கொள்ள வேண்டும்.
"ததிக்ராவ்ண இதி மந்த்ரஸ்ய வாமதேவ ரிஷி: அனுஷ்டுப் ச்சந்த:
ததிக்ராவா தேவதா ப்ரோக்ஷணே வினியோக:"
ததிக்ராவ்ண்ண மந்திரத்திற்கு வாமதேவர் ரிஷி. அனுஷ்டுப் சந்தஸ்.
ததி க்ராவா என்பது தேவதை. ப்ரோக்ஷணத்தால் இந்த மந்திரம் வினியோகிக்கப் படுகிறது.
"ததிக்ராவிண்ணோ அகாரிஷம் | ஜிஷ்ணோரஶ்வஸ்ய வாஜிந: |
ஸுரபிநோ முகாகரத் ப்ரண ஆயூகும்ஷி தாரிஷத் |"
--------தைத்ரிய ஸம்ஹிதை.
ஜயசீலரும், ஜகத்வ்யாபியும், அன்னமுள்லவரும் ஆகிய ததிக்ராவா எனும் தேவதைக்கு ஸ்திதிகளைச் செய்கிறோம். அவர் எங்கள் முகத்தை வாஸனையுள்ளதாக செய்யட்டும். வாழ்க்கையும் உபத்ரவமில்லாமல் நடத்தப் படட்டும். தீர்க்காயுஸ் உள்ளதாகச் செய்யட்டும்.
"ஆபோஹிஷ்டா மயோ புவ: | தாந ஊர்ஜே ததாதந | மஹேரணாய சக்ஷஸே | யோ வ: ஶிவதமோ ரஸ: | தஸ்ய பாஜயதேஹ ந: | உஶதீரிவ மாதர: தஸ்மா அரங்கமாமவ: |
யஸ்ய க்ஷயாய ஜிந்வத: ஆபோ ஜநயதா ச ந:"
(ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:)
ஓம் பூர்ப்புவஸ்ஸுவ:)
ஓ ஜலதேவதையே ! தாங்கள் இன்பத்தைத் தருவதாக இருக்கிறீர். அப்படி இன்பம் தரும் நீர் எங்களுக்கு அதிகமாகவும் ப்ரகாஸமாகவும் இருக்கின்ற அறிவு உண்டாவதற்காக அன்ன ரஸத்தை அளியும். ! உம்மிடம் எந்த ரஸம் மிகச்சிறந்ததாக இருக்கிறதோ அந்த ரஸத்தை அன்புள்ள தாய் மகனுக்கு அளிப்பதுபோல் எங்களுக்கு அளியும். அந்த ரஸமானது ஸ்திரமாக இருக்க வேண்டுமென்று விரும்புகிறீர்களோ, அந்த ரஸத்தைப் பெறுவதற்காக உங்களை விரைவாக வந்தடைகிறோம். ஓ ஜலதேவதையே ! எங்களை நல்ல பிறப்புள்ளவர்களாகச் செய்யும். !
தொடரும்.....
No comments:
Post a Comment