7.5.21
*ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்*?.
ஆழ்வார் அருளிச்செய்த படியே திருவாழியோடு ஆழியான் ஆள்கின்றபோது நமக்கு குறையேது?
உன்னால் அல்லால் யாவராலும் குறை வேண்டேன் என்ற கணக்கிலே ஒருவரிடமும் கை நீட்டாதவர்கள் நம் பரமைகாந்திகள்.*தாளும் தடக்கையும் கூப்பி*என்கிறபடியே தேவதாந்த்ரங்களின் இருப்பிடத்துக்குச் செல்லாமல் நம் பெருமாளிடமே கேட்டு
பெறுவது நலம்.
பாம்பு, நோய், மனக்கவலை, விஷக்கடி, விஷக்ருமிகளால் தொல்லை,விஷஜுவரம் மேலும் இடி, மின்னல் பெருமழை பூகம்பம் நிலச்சரிவு பஞ்சம், பிறரால் தொல்லைகள் முதலானவைகள் ஏற்பட்டால்
பக்தி ஜ்ஞாநாதி வ்ருத்திம் பரிசரண குணாந்
ஸத் ஸம்ருத்திம் ச யுக்தாம்
நித்யம் யாசேதநந்யஸ் ததபி பகவதஸ்
தஸ்ய யத்வா ப்தவர்க்காத்
(ந்யாஸவிம்சதி--19வது ஸ்லோகம்.)
என்கிறமுறைப்படி எம்பெருமானிடமோ, எம்பெருமானின் ஆப்தர்களான அனந்தகருட விஷ்வக்ஸேந-சக்ராதிகளான பாகவதர்களிடமோ தான் நாம் இவைகளை நீக்கி அருள வேண்ட வேண்டும்.அந்த முறைப்படி ஷோடசாயுத ஸ்தோத்ரம் ஏற்பட்டது.
ஸ்வாமிஶ்ரீதேசிகன் பெருமாள் கோவிலில் எழுந்தருளியிருந்த காலத்தில் திருபுட்குழியில் ஒருவகையான ஜ்வரம்(கொள்ளை நோய்) ஏற்பட்டு பலர் மடிந்தனர். எந்த மருத்துவத்துக்கும்(அந்த காலத்தில்)
கட்டுப்படவில்லை. அப்போது பெரியோர்கள் ஶ்ரீஸ்வாமியைக் கிட்டி இதற்கு பரிகாரமாக தேவரீர் ஏதாவது செய்தருள வேண்டும் என்று விண்ணப்பிக்க ஸ்வாமிஶ்ரீதேசிகன் காஞ்சி ஶ்ரீதேவராஜன் சன்னதியில் அனந்த சரஸ்ஸின் கரையில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீசக்கரத்தாழ்வானைக் குறித்து இந்த ஷோடசாயுத ஸ்தோத்ரத்தை அருளினார். உடனே ஜ்வரம் அங்கு உள்ளவர்களுக்கு நீங்கி பரமபதித்தவர்கள் போக நீக்கியுள்ளார் உயிர் பிழைத்தனர். பிறகு அந்த ஜ்வரம் அங்கு தலைதூக்கவேயில்லை என்பது சரித்ரம்.
ந்யாஸவிம்சதி19வது ஸ்லோகத்தில் ஸ்வாமிஶ்ரீதேசிகன் தாமே சாதித்தருளியபடியே அனந்த கருட விஷ்வக்ஸேந சக்ராதிகளான எம்பெருமானின் ஆப்தர்களிடம் ப்ரார்த்திப்பது சாஸ்த்ர ஸம்மதமே.
நிஷித்தமான காம்யங்களே யாசிக்கத் தகாதவை என்பதையும், அநிஷித்த காம்யங்கள் பகவத் பாகவத ஆச்சார்ய
கௌங்கர்யோபயுக்தமாகில் அதை எம்பெருமானிடமோ எம்பெருமானின் ஆப்தவர்கங்களான பரமபாகவதர்களிடமோ யாசித்துப் பெறலாம் என்று சாஸ்திரம் உள்ள படியால் இது-நிஷித்தகாம்யரஹிதம் குருமாம் நித்யகிங்கரம் என்பதற்கு அனுகுணமானதே. காஞ்சி அனந்த ஸரஸ்ஸின் கரையில் ஸேவை சாதிக்கும் ஶ்ரீ திருவாழியாழ்வான் திருக்கைகளில் ஸேவையாகும் முறையில் இங்கு திருவாயுதங்கள்16வருணிக்கப்பட்டுள்ளன.
மேலும் இந்த்ரஜித்தின் நாகபாசங்களால் கட்டுண்ட போது இராமன் தனக்குள்ளே ஜபித்த மந்த்ரபலத்தினாலோ பண்டைய தோழமையினாலோ கருடன் விரைவில் எழுந்தருளி விஷத்தினின்று விடுவித்திருப்பதால் இந்த பெரியதிருவடிக்கு ஓர் உயர்ச்சியை இராமபிரான் அளித்தது தோற்ற ஆழ்வார*வலங்கொள் புள்ளுயர்த்தாய் என்னும் என்று அருளியபடி
ஸ்வாமி ஶ்ரீதேசிகன்ஸாதித்த கருடதண்டகமும் இப்போதைய சூழ்நிலையில் அநுசந்தித்தால் ஶ்ரீகருடபகவானும், சக்கரத்தாழ்வானும் நம்மை இப் பரவும் விஷக்காய்ச்சலிலிருந்து காக்கட்டும்.
ஶ்ரீமதே நிகமாந்த மஹாதேசிகாய நம:
*தாஸன் பத்மாரங்கநாதன்
No comments:
Post a Comment