Monday, July 25, 2022

Accolade to New president -Sanskrit

नवराष्ट्रपतिमहोदयानामभिनन्दनाष्टकम्
********************************
(१)
शान्ता कान्ता गुणैर्या घनवनमहिला ह्यौडिशाराज्यकन्या
नम्रा कम्रापि वाचा सकलजनसुहृत् कर्मशीला सुशीला।
श्रेष्ठा निष्ठावती यातिसरलहृदया भारते राष्ट्रमुख्या
सेयं देशे विदेशे जयतु निजपदाद् द्रौपदीमुर्मुनाम्नी।।
(२)
जाता यापि मयूरभञ्जधरणौ सान्तालवंशे वने
कन्धानां कुलवर्धनाय निरता कन्धस्य कन्या यतः।
वन्यानां प्रविकाशनाय सततं यस्याः सुचेष्टाखिला
वाणब्रह्मतमा पदेन गरिमा राष्ट्रस्य मुख्याभवत्।।
(३)
शिक्षामाप्य सुशिक्षिका पुनरियं तद्राजनीतिं गता
सभ्या सा च विधायिका स्वनगरे श्रेष्ठापि कार्येभवत्।
नेत्री तत्र च भाजपाजनगणे मन्त्री बभूवोत्कले
लेभे मानदराज्यपालपदवीं तद्झाडखण्डे ततः।।
(४)
राष्ट्रस्वार्थैकचित्ता शमविनयनता राष्ट्रमानप्रदात्री
यस्याः कीर्तिर्विनन्द्या वनजनवनिता 
स्वार्थचिन्ताविहीना।
राष्ट्रोन्नत्त्यै समानां मतमपि दधती याति राष्ट्राधिपार्थं
हिन्दुस्थानस्य मुख्या भवति गुणयुता द्रौपदी नाम मुर्मुः।।
(५)
मोदी यद्गुणदर्शको हितकरो यस्याश्च मोदप्रद
स्तद्भावं परिगृह्य सर्वसुहृदो गायन्ति तन्नाम च।
राज्यस्य प्रमुखः सुनीतिनिपुणस्तस्या नवीनः प्रियः
साभूद् राष्ट्रपतिस्ततो बहुमतैर्देशे गुणिद्रौपदी।।
(६)
दिल्लीसिंहासने त्वं नवघनरुचिरा प्रास्य देशस्य कार्यं 
दृष्ट्वा नीतिं विधाय प्रबलहितकृते शासनं संधरिष्ये।
नीतेस्ते देशभक्तेर्नयनपथगतादुत्कलीयाः प्रफुल्लाः
सन्तो गास्यन्ति कीर्तिं जयतु जयतु हि द्रौपदी वन्यजन्मा।।
(७)
पैदापोसीसुता त्वं रिपुगणरहिता रायिरङ्गस्य नारी
राष्ट्राध्यक्षेण देशे निवससि सरला रायिसीनानिवासे 
मिथ्यानिन्दातिदूरा विगतकुटिलता राजधर्मातिसाध्वी
कुर्मः सुस्वागतं ते प्रणमनसहितं द्रौपदीमुर्मुभागे !।।
(८)
श्रुत्वा ते विजयं विमुग्धजनता स्फोटैर्मुहुर्नृत्यति 
ग्रामे ते लडुकं सुरस्य निकटे संपूज्य वै वण्ट्यते।
धन्येयं वसुधौडिशा च मनुजा धन्या अरण्यौकस
स्त्वत्कीर्त्तिः परिराजतां प्रतिदिनं नौमि व्रजः सादरम्।।
                (व्रजकिशोरः)

Shiva pancakam - Sanskrit

श्रीशिवपञ्चकम् 
*************
(१)
कैलासौकाः कमनकमनः कोटिकन्दर्पकाशः
कण्ठेकालः करककरजः कम्रकंकालमालः।
क्रीडाक्लान्तः कलिकलुषकृत् कालकालः करालः
कान्ताकान्तः कलयतु कुलं नौमि तं कृत्तिकायम्।।
(२)
चूर्णीचूडं चिकुररुचिरं चर्मचेलं प्रचण्डं
चन्द्रापीडं चतुरचरितं चन्दनाचर्च्चिताङ्गम्।
चञ्चच्छूलं चपलचरणं चारुरूपं चरेशं
चण्डीनाथं चरचयचरं नौमि चण्डेश्वरं तम्।।
(३)
दक्षद्वेषं दलितदनुजं दग्धकन्दर्पदर्पं
दुर्भाग्यघ्नं द्विरदवदनप्राणदं दन्तिदण्डम्।
दुर्गादारं दरदमनकं दीनबन्धुं दयालुं
दैन्यं द्यन्तं दहननयनं नौमि तं देवदेवम्।।
(४)
नित्यानन्दं नटननिपुणं नन्ददं नन्दिनाथं
नागानन्दं नगपतिनतं नायकं नाकवन्द्यम्।
नीलप्राशं नगनिलयिनं निर्जरं निर्जराणां 
नग्नाकारं नरमुनिनुतं तं निलिम्पं नमामि।।
(५)
पांशुप्रेमी पटविरहितः पर्वती पावकाक्षः
पत्नीसक्तः प्रमथगणपः पार्वतीपुत्रपालः।
पापध्वंसी पतितजनताप्राणपाता पिनाकी
पृथ्वीपूज्यः प्रभुपशुपतिः पञ्चवक्त्रः प्रपातु।।
                     (व्रजकिशोरः)

Rare Purushottama Stavam From Narada Puranam

Dear All,

Greetings. As Ashadhi/Devashayana Ekadashi falls on Sunday (10-Jul-2022), I am delighted  to share a very rare hymn on Lord Vishnu taken from Brihan Naradiya Mahapuranam, Uttara Bhaga and Chapter 61 (titled Purushottama Abhishekam). The very long brief Phalashruti after this hymn mentions that one who has the Darshan of Abhishekam of Lord Purushottama in Puri and recites this hymn will be bestowed with more benefits than donating hundreds of cows in Pushkara, hundreds of girls for marriage, etc.

Ashadhi Ekadashi is celebrated in a big way in Pandharpur in Maharashtra! May We pray to Lord Vittala with this beautiful hymn!

With best regards and Pranams,
K. Muralidharan Iyengar (Murali)

Wednesday, July 20, 2022

Lalita sahasranama learning link

*பெரியவா குரல் - தர்ம ப்ரசார வைபவம்*

_ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஸம்பூர்ண பாராயணம் - பயிற்சி_

பெரியவா சரணம்!

காஞ்சி பெரியவா ஃபோரம் வழங்கும் "தர்ம ப்ரசார வைபவத்தில்" இன்று நாம் காணவிருக்கும் நிகழ்ச்சி - *ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஸம்பூர்ண பாராயணம் - எளிமையான பயிற்சி வகுப்புகள் *

வீடியோ லிங்க்: 

ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாம ஸ்தோத்ர ஸம்பூர்ண பாராயணம் PDF டவுன்லோட் லிங்க்: 

_வழங்குவோர்: பெரியவா குரல் குழுமம்_ | https://t.me/perivakural

*An initiative of Kanchi Periva Forum - www.periva.org | www.anusham.org | www.mahaswami.org*

Saatvik food for Brahmin yatris at Tirunelveli

Dear All,
Namaskarams. 
With the begin blessings of swamigal and elders and well wishers, ANNAPURNA TRUST, Tirunelveli is starting to offer satvik food for Brahmin Yathris from outside Tirunelveli from 06.07.2022. 
The place would be in Viveka Samvardhani Sabha situated at No 70, Sanyasi Grammam Street, Mela Veeraragavapuram, Near Meenakshipuram Water tank, Tirunelveli Junction - 627 001  
The lunch will be served from around 11 to 3 in the noon. Tiffin can also be arranged for night on demand.
Brahmin Yathris would have to contact Sri Sundar 98421-61068 before 9 am confirming the lunch requirement along with the number of Yathris expected in the noon. Alternative contact could be 
1. Srinivasan 9843134152
2. Sundarraman 9443614330 or
3. Natarajan 9344463519
Please pass on this information to the respective circles for the benefit of the community.Free

Tuesday, July 19, 2022

Aadi special

ஆடி ஸ்பெஷல் ! 

ஆடி மாத சிறப்புகள்!

தெய்வீகப் பண்டிகைகள் தொடங்கு கின்ற மாதம் ஆடி மாதம். ஆடி மாதத்தை அம்மன் மாதம் என்றும் அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்து கூறுவார்கள். அந்தளவிற்கு வீடுகளிலும், கோயில்களிலும் விழாக்களும், விரத வழிபாடுகளும் களை கட்டி விடும். அம்பாள், ஆண்டாள், சக்தி ஸ்தலங்களில் சிறப்பு பூஜைகள், ஹோமங்கள் என்று பக்தி மணம் கமழும். ஆடி மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகள் மிக விசேஷமானவை.

பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்த மாதம். பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன், ஆடி மாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என வரம் கொடுத்தார். சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். ஆடி மாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகி விடுகிறார் என்பது ஐதீகம். இம்மாதத்தில் ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இதுவே தேவர்களின் பகல் காலமாகும். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம். இதுவே தேவர்களின் இரவுக் காலமாகும். நம்முடைய ஒரு வருட காலம் என்பது தேவர்களின் ஒரு நாள்தான். ஆடி மாதம் தேவர்களின் மாலை நேர ஆரம்பமாகும்.

'ஆடி செவ்வாய் தேடிக் குளி' என்பது பழமொழி.
அதாவது விரதம் இருந்து எண்ணெய் தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி வழிபாடு செய்வதால் திருமண பாக்யம் கைகூடும், நீண்ட காலமாக குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்போருக்கும் நல்ல அறிவாற்றல், புத்தி கூர்மையுடன் கூடிய குழந்தை பிறக்கும் என்பது நம்பிக்கை. ஆடி வெள்ளி அன்று அம்பாள் குளிர்ந்த மனத்துடன் வேண்டும் வரங்களை நல்குவாள் என்பது தொன்று தொட்டு வரும் நம்பிக்கை. ஆடி ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனைகளையும் நேர்த்திக் கடன்களையும் செலுத்தும் நாளாக கருதப்படுகிறது.

அலகு குத்தி காவடி எடுத்தல், பால்குடம் எடுத்தல், பொங்கல் வைத்து வழிபடுதல், சிறப்பு பூஜைகள் செய்தல், தீ மிதித்தல், கூழ் ஊற்றுதல், அம்மன் கோயில்களுக்கு சென்று வழிபடுதல் என்று இந்த மாதம் முழுவதும் வழிபாடு மாதமாகிறது! ஆடிப் பிறப்பு, ஆடி அஷ்டமி, ஆடிச் செவ்வாய் ஆடி வெள்ளி, ஆடி ஞாயிறு தவிர ஆடி அமாவாசை, ஆடிப்பூரம், ஆடிக்கிருத்திகை, ஆடித்தபசு ஆடி பவுர்ணமி, ஆடிப்பெருக்கு, வரலட்சுமி விரதம் என்று பலப்பல விசேஷ நாட்கள் இந்த மாதத்தில் வருகின்றன. ஆடியின் சிறப்பு அளவில்லாதது; அனைத்து நலன்களையும் வழங்குவது.

இதில் ஆடி அமாவாசை முக்கியமானது. அன்றைய தினம் கடல், நதிகள் உள்ளிட்ட புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்க்கு திதி கொடுப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகிறது.அவரவர் குடும்ப வழக்கப்படி வீட்டில் படையல் இட்டு வழிபட்டு முன்னோர் நினைவாக இல்லாதோர், இயலாதோர், முதியோர், ஆதரவற்றோர் இல்லங்களில் அன்னதானம், உடை, போர்வை போன்றவற்றை வழங்குவது பல்வேறு பாவங்களை நீக்கி புண்ணிய பலன்களை சேர்க்கும்.

ஆடிப்பெருக்கு என்பது ஆடி மாதம் 18ஆம் நாள் கொண்டாடுவது.ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதை அதுக் குறிக்கும். இதனை பதினெட்டாம் பெருக்கு என்றும் கூறுவார்கள். தென்மேற்கு பருவத்தில் ஆற்றின் நீர்பிடி இடங்களில் பெய்த மழையினால் ஆறுகளில் புதுப்புனல் பொங்கிவரும். இதனையே ஆற்றுப்பெருக்கு எனக்கூறுவர். இதனால் உழவர்கள் இந்நாளில் நம்பிக்கையுடன் பட்டம் பார்த்து விதை விதைப்பர். நெல்,கரும்பு முதலியவற்றை ஆடி மாதம் விதைத்தால் தை மாதத்தில் அறுவடை செய்ய முடியும். அதற்கு வற்றா நதிகளை தங்கள் கடவுளாக போற்றி மகிழ்ந்து, பூசைகள் செய்து பின் உழவு வேலையை தொடங்குவார்கள்.இதனையொட்டியே ஆடிப்பட்டம் தேடிவிதைஎன்ற பழமொழியும் வந்தது. 'ஆடிப்பெருக்கு' அன்று பெண்கள் தாலிக்கயிறு மாற்றி புதுக்கயிறு அணிவார்கள்.

நதிகள் ஓடும் இடங்களில் இன்றும் மக்கள் ஆற்றங்கரைகளில் கூடி ஆற்றுப் பெருக்கைக் கண்டு களிப்பர். இந்து சமயத்தவர் கோயில்களில் சென்று வழிபாடு செய்வர். அன்றைய நாள் பெண்கள் ஆற்றில் குளித்து ஆற்றங்கரையில் ஒவ்வொருவரும் பூஜை செய்ய ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டு அந்த இடத்தை சுத்தம் செய்து, பசு சாணத்தால் மெழுகி அதன் மேல் வாழை இலையை விரித்து, பிள்ளையார் சிலை வைத்து அதன் முன் அகல்விளக்கு ஏற்றி வைப்பர். வழிபாட்டில் வெற்றிலை, பாக்கு, பழம் படைத்து, பத்தி, கற்பூரம் காட்டி, தடங்கல் இல்லாத விளைச்சலுக்கு விநாயகரை வழிபடுவர். ஆற்றினை வழிபட்டு வாழை மட்டையில் விளக்குகள் ஏற்றி, அதை ஆற்றில் விடுவார்கள். இப்படி செய்தால், நீர் வளம் பெருகியது போல், அவர்கள் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியும் செல்வமும் பெருகும் என்ற ஆழ்ந்த நம்பிக்கையில் இச்சடங்குகளை செய்வார்கள். அது மட்டும் அல்லாமல் தங்கள் வீட்டில் பல விதமான கலப்பு சாதங்கள் (தேங்காய் சாதம், சர்க்கரைப் பொங்கல், எலுமிச்சம் பழம் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம்) செய்து அதை ஏதாவது ஆற்றங்கறையில் வைத்து குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சேர்ந்து மகிழ்ச்சியாக உணவை சாப்பிடுவார்கள். இப்பொழுதெல்லாம் ஆற்றில் நீர் வரத்தும் குறைந்து விட்டது, நகரங்களில் மக்கள் அதிகமாகக் குடியேறி இருப்பதால் பழக்கமும் குறைந்து வருகிறது.

திருநெல்வேலி அருகில் உள்ள சங்கரன்கோவிலில் ஆடி தபசு பிரசித்தி பெற்றது. சங்கன், பதுமன் என்ற இரு நாக அரசர்கள் சிவபெருமானையும், திருமாலையும் முழுமுதற்கடவுளாக வழிபட்டு வந்தனர். ஒருநாள் இருவருக்கும் சிவபெருமான் பெரியவரா அல்லது திருமால் பெரியவரா என சண்டை மூண்டது. அனைத்தையும் அறிந்த ஆதிசக்தியிடம் விடைபெறுவதற்காக கைலாசம் சென்று முறையிட்டனர். சிவபெருமானே திருமால் என்பதை சங்கனுக்கும் பதுமனுக்கும் உணர்த்த விரும்பிய ஆதிசக்தி கோமதியம்மனாக வடிவமெடுத்து சிவபெருமானை நோக்கி கடுந்தவம் இருந்தார். கோமதி அம்மனின் தவத்துக்கு இரங்கிய சிவபெருமான், புன்னை வனத்தில் சங்கர நாராயணராக ஆடி பவுர்ணமியன்று காட்சியளித்தார்.

ஆடி கிருத்திகை முருகனுக்கு மிகவும் உகந்த நாள். அன்றைய தினம் காவடி எடுத்து, பாலாபிஷேகம் செய்து செந்தில் ஆண்டவனை வணங்குவர். ஆறு கார்த்திகைப் பெண்கள், முருகனை சரவணப் பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தனர். ஈசன் அருளால் ஆறு நட்சத்திரங்களின் தொகுப்பாக, கிருத்திகை நட்சத்திரமாக வானில் இடம் பெற்றனர். அவர்களை சிறப்பிக்கும் வண்ணம் ஆடிக் கிருத்திகை விழா கொண்டாடப்படுகிறது. முருகனின் கரத்தில் இருக்கும் வேல், சக்தி ஆயுதம் எனப்படும். அம்பிகையின் அம்சமே வேல் என்றும் சொல்வர். அதனால் சக்திதரனாகிய முருகனுக்கும் ஆடியில் ஒருநாள் சிறப்பானதாகிவிட்டது. பல கோயில்களில் முழுக்க முழுக்க மலர்களாலேயே அலங்கரிப்பதும் உண்டு. அம்மன் ஆலயங்களில் இது பூச்சொரிதல் என்றும், முருகன் கோயில்களில் மலர் முழுக்கு என்றும் அழைக்கப்படுகிறது. ஆடிக் கிருத்திகை வழிபாட்டால், தீயன யாவும் ஓடிப்போகும்; நல்லன எல்லாம் தேடி வரும் என்பது ஐதிகம்.

குரு பூர்ணிமா ஆடி மாதப் பௌர்ணமி அன்று மாணவர்கள் தங்களுக்கு கல்வி அறிவு புகட்டிய ஆசிரியர போற்றும் முகமாக குரு வழிபாடு எனும் குரு பூஜை செய்வார்கள். இதனை துறவிகள், வியாச பூஜை என்றும் வியாச பூர்ணிமா என்றும் அழைப்பர். இவ்வழிப்பாட்டை வேத வேதாந்தக் கல்வி பயின்றவர்கள் தங்களது குருமார்களை நினைவு கூறும் வகையில் ஆடி மாதத்தில் வரும் முதல் பௌர்ணமி அன்று சிறப்பாக குரு பூஜை செய்வது மரபு.

மாணவர்கள் தங்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்த குருவினை வழிபடுவதுடன், தட்சிணாமூர்த்தி, பகவத் கீதை அருளிய கிருஷ்ணன், வேதங்களை தொகுத்த வியாசர், உபநிடதங்களுக்கு விளக்கம் எழுதிய ஆதி சங்கரர், மத்வர் மற்றும் இராமானுஜர் போன்றவர்களையும் குரு பூர்ணிமா நாளில் வழிபட்டு குருவின் திருவருள் பெறுவர். ஆடிப் பௌர்ணமி அன்றுதான் ஹயக்ரீவ அவதாரம் ஏற்பட்டது. இவர் கல்விக்குரிய கடவுள். இவர் வழிபாடு தொன்மையானது. புத்தர்கள் புத்தரை குரு பூர்ணிமா நாளில் சிறப்பாக வழிபடுவர்.

ஆடிப்பூரம் ஆண்டாள் அவதாரம் செய்த திருநட்சத்திரம். கன்னிப் பெண்களும் திருமண பாக்யம் கைகூடாமல் இருக்கும் பெண்களும் இந்த நாளில் விரதம் இருந்து பக்தியுடன் ஆண்டாள் அருளிச் செய்த 'வாரணமாயிரம்' என்று தொடங்கும் பாசுரத்தை பாடி வர திருமண உறவு கூடிவரும். பார்வதி தேவி ருதுவான நாளும் ஆடிப் பூரமே. அதனால் சிவன் கோவில்களிலும் ஆடிப் பூரம் அன்று அம்பாளுக்கு சிறப்பான வழிபாடுகள் உண்டு.

வரலட்சுமி நோன்பும் ஆடி மாதம் கடைசி வெள்ளியன்று வரும். இதுவும் பெண்கள் மிகவும் போற்றி வழிபடும் ஒரு பண்டிகை. வீட்டில் சௌகர்யங்கள் பெருகவும், இல்லத்தரசிக்கு மாங்கல்ய பலம் கூடவும் பெண்கள் மேற்கொள்ளும் நோன்பு இது. வீட்டிற்கு மகாலட்சுமியை வரவேற்று பூஜை செய்து உபசரித்தாள் அவள் அருள் கிடைக்கும். இந்தக் கிழமைகளில் கோவில்களில் திருவிளக்குப் பூஜையும் நடைபெறும். நாகதேவதைக்குப் பால் தெளித்து விசேஷ பூஜையும் செய்வார்கள்.

இத்தனை சிறப்புகள் மிக்க ஆடி மாதத்தில் நல்ல காரியங்களை ஆரம்பிக்க கூடாது, செய்யக் கூடாது என்ற கருத்து நிலவுவதற்கும் காரணம் உண்டு. இந்த மாதத்தில் விரதங்கள், வழிபாடுகள், கோயில் திருவிழாக்கள் மாறிமாறி வந்துகொண்டே இருக்கும். ஆன்மீகத்திலும் இறை வழிபாட்டிலும் மனப்பூர்வமாக ஈடுபட வேண்டியிருப்பதால் மற்ற காரியங்களில், விசேஷங்களில் கவனம் செலுத்துவது சிரமம். இறைவனை துதிப்பதற்கும், அவன் சிந்தனையாகவே ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று தரிசனம் செய்வதற்கும் இடையூறாக மற்ற விழாக்கள், நிகழ்ச்சிகள் இருந்துவிட கூடாது என்பதற்காகவே மற்ற சுப விசேஷங்கள் இந்த மாதத்தில் தவிர்க்கப்படுகிறது.

ஆடியின் மகத்துவத்தை அறிந்து கொண்டோம் அல்லவா? இந்த நாட்களில் நம் மனதை தெய்வ சிந்தனைகளில் செலுத்தி, மன சுத்தியுடன் பூஜை முறைகளை க்ரமங்களுடன் செய்து, தெய்வ கடாக்ஷத்தினைப் பெறுவோம் !

ஓம் சக்தி ! பராசக்தி !

Free online Sanskrit Course

Free online Sanskrit Course by MHRD, India 
Spoken Sanskrit: Basic and Intermediate Levels
To Join Click here  

Course Status : Upcoming
Course Fee : Free
Duration : 12 weeks
Start Date : 25 Jul 2022
End Date : 14 Oct 2022
Exam Date : 30 Oct 2022 IST
Enrollment Ends : 01 Aug 2022

Course layout
Week 1 : Introduction: Some Unique characteristics of Sanskrit -Basic introduction of oneself -Simple verbs Daily vocabulary
Week 2 : Introducing different declensions and tenses - 1
Week 3 : Introducing different declensions and tenses - 2
Week 4 : Practice with various verbs in different moods and tenses Summary of the Sentence structure with different questions
Week 5: Introduction: Some Unique characteristics of Sanskrit,Revision of the main features of Part 1 of Introduction to Basic Spoken Sanskrit,Different verb forms,Daily vocabulary
Week 6,7: Introduction of different declensions in the plural and tenses – 1,Daily Vocabulary,Poetic verses, conversations and stories
Week 8: Practice with various verbs in different moods and tenses,Summary of the Sentence structures using the plural with different questions
Week 9: Introduction of a few more words ending with consonants and their declensions,An Alternative Conjugation of verbs,Daily vocabulary,Poetic verses, conversations and stories
Week 10: Introduction to their different declensions in singular, dual and plural,New verb forms,Daily Vocabulary,Poetic verses, conversations and stories
Week 11: Introduction to Sandhi,Vowel with vowel / Vowel with consonant / Consonant with consonant / Aspirant with vowel or consonant,Poetic verse, reading and comprehension, conversations
Week 12: Practice with a variety of word endings, various verbs in different moods and tenses,Summary of the Sentence structures using the plural with different questions

Books and references
 1.Kumari, S. (1993) Sanskrita Chitrapadakoshah, Mysuru: Bharatiya Bhasha Sansthanam 
 2.Samkrita-vyavahaara-saahasree( Samskrit-English), New Delhi: Sanskrita Bharati 
 3.Sampad, & Vijay. (2005). The Wonder that is Sanskrit. Pondicherry: Sri Aurobindo Society. 
 4.Satvlekar, S. D. (2013). SanskritSwayamShikshak. Delhi: Rajpal&Sons (Rajpal Publishing).
 5.Shastri, V K. (2012). Teach Yourself Samskrit, Prathama Diksha. Delhi: RashtryiaSanskritaSamsthana. 
 6.Vishwasa (2014). Abhyāsa-pustakam, New Delhi: SamskritaBharati.

#SanskritEducation

Easy Sanskrit with pictures

courtesy: Sri. Trilokinath Mishra

*🕉️ नमः सुरभारत्यै मात्रे 🙏🌹*


ये जनाः संस्कृतं नावगच्छन्ति।
=(जो लोग संस्कृत नहीं समझते हैं)

तेषां कृते उपयोगी अभ्यासः। =(उनके लिए उपयोगी अभ्यास)

चलचित्रे अभ्यासम् ईक्षन्ताम्! =(वीडियो में अभ्यास देखें)
  *(((अप् शब्दरूपाणि वाक्यानि च)))*
👇👇👇👇👇👇👇👇👇

#सर्वे_भवन्तु_संस्कृतज्ञाः
#अधरे_अधरे_भवेत्_संस्कृतम्

*जयतु संस्कृतम्।। जयतु भारतम्।।*

Thursday, July 14, 2022

easy Sanskrit stories


मान्य महोदया:!
I opened newly easy Sanskrit stories youtube channel. Please do subscribe.
I request all sankrit family members.
 

Thursday, July 7, 2022

Veda pathasala at Nanganallur Chennai

Kalikambal Vidya peetam at State bank colony Nanganallur has started Patasala. Along with vedha u can learn all your school subjects including sanskrit and also help you till college studies.For further details contact 9952458562 / 9382163448

UPANAYANAM BOYS GRAB THIS GOLDEN OPPORTUNITY 
ALSO NEED FULL TIME BRAHMIN MALE COOK/ Dhampathi cook if they are 60 and above. Salary and accommodation provided.

Sanskrit joke - Grammar

*याचकः* - डुदाञ् डुदाञ् 
*गृहिणी* - गमॢँ गमॢँ

Saturday, July 2, 2022

Green paint - Change your outlook towards the world - Positive story

ஒரு ஊரில் ஒரு #கோடீஸ்வரன் இருந்தான். அவனுக்குக் கடுமையான தலைவலி ஏற்பட்டது. பல ஊர்களிலிருந்து மிகப் பெரிய வைத்தியர்கள் வந்து பார்த்தும், வண்டி வண்டியாக மருந்துகள் சாப்பிட்டும் அந்தத் தலைவலி குணமாகவில்லை.

ஒருநாள் அந்த ஊருக்கு ஒரு சன்யாசி வந்தார். அவர் பணக்காரனை வந்து பார்த்தார். பார்த்துவிட்டு, அவருக்கு ஏற்பட்ட தலைவலிக்குக் கண்ணில் இருக்கும் ஒரு நோயே காரணம் என்று கூறினார். அந்தக் கண்ணைக் குணப்படுத்தஒரே ஒரு வழிதான். 

அந்தப் பணக்காரன் பச்சை நிறத்தைத் தவிர வேறெதையும் பார்க்கக்கூடாது என்று கூறிவிட்டுப் போய்விட்டார்.

பணக்காரன் முதலில் தன் வீட்டில் இருக்கும் எல்லாவற்றையும் பச்சையாக மாற்றினான். தலைவலி குணமாகி விட்டது. சன்னியாசி கூறியது சரிதான். உடம்பு சரியாகவே வீட்டைவிட்டு வெளியே போகத் தொடங்கினான். வெளியே போனால், இயற்கை எல்லா வண்ணங்களையும் அள்ளித் தெளித்திருந்தது. ஆனால், அவற்றைத்தான் அவன் பார்க்கக்கூடாதே!

நிறையப் பச்சைப் பெயிண்டையும் பிரஷ்ஷையும் கொடுத்து சில ஆட்களை நியமித்தான். அவன் போகும் வழியில் இருக்கும் ஆடு, மாடு, மனிதர், குடிசை, வண்டி, மேசை, நாற்காலி எல்லாவற்றுக்கும் பச்சை நிறத்தை அடிப்பது அவர்களுடைய வேலை.

அவர்களும் முதலாளி சொன்னபடியே செய்து வந்தார்கள். சில மாதம் கழித்து மீண்டும் சன்னியாசி அதே ஊருக்கு வந்தார். வேலையாட்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, அவர் மீதும் பச்சை வண்ணம் அடிக்கப் போனார்கள்.

சன்னியாசிக்கு ஆச்சரியமாகிவிட்டது. காரணம் கேட்டார். அவர்கள் 'தங்கள் முதலாளியின் கட்டளை இது' என்று கூறினார்கள்.

சன்னியாசி அதற்கு, "என்னை உங்கள் முதலாளியிடம் அழைத்துப் போங்கள்" என்றார். பணக்காரனுக்குத் தன் நோயைக் குணப்படுத்திய சன்னியாசி மீண்டும் வந்ததைக் கண்டு ஒரே மகிழ்ச்சி. வணங்கி அவரை உபசரித்தான்.

"இந்த ஊரில் எல்லாவற்றுக்கும் ஏன் பச்சைப் பெயிண்ட் அடிக்கிறீர்கள்?" என்று சன்னியாசி கேட்டார்.

"ஐயா, நீங்கள் சொன்னபடிதான் நான் செய்கிறேன்" என்றான் அவன் மிகப்பணிவோடு. "நான் என்ன சொன்னேன்?" என்றார் சன்னியாசி. "பச்சைநிறத்தைத் தவிர வேறெதையும் நான் பார்க்கக்கூடாது என்று கூறினீர்களே ஐயா" என்றான்.

"மகனே! நீ லட்ச லட்சமாகப் பணத்தைச் செலவழித்திருக்க வேண்டாம். ஒரு நூறு ரூபாய் கொடுத்து பச்சைக் கண்ணாடி வாங்கியிருந்தால், உன்னைச் சுற்றியிருக்கும் பொருள்களெல்லாம் பிழைத்திருக்கும். உன் பணமும் வீணாகி இராது. உன்னால் இந்த உலகம் முழுமைக்கும் பச்சைப் பெயிண்ட் அடிக்கமுடியுமா?" என்று கேட்டார் சன்னியாசி.

நம்மில் பலரும் இந்தக் கதையில் வரும் பணக்காரனைப் போலத்தான் இருக்கிறோம். நம்மைத் திருத்தி அமைத்துக் கொள்வதற்கு பதிலாக, உலகத்தை எப்படியாவது மாற்றியமைத்து விடுவது என்று மிகவும் முயற்சிக்கிறோம். அது சாத்தியமல்ல. மிகுந்த காலமும், உழைப்பும் விரயமான பிறகு தான் 'திருந்த வேண்டியது நாம்தான்' என்பது புரிகிறது

Friday, July 1, 2022

Kalabhairavashtakam in tamil

#காலபைரவாஷ்டகம் - நங்கநல்லூர் J K SIVAN
ஆதி சங்கரர்  

அஷ்டகம் -5

5. धर्मसेतुपालकं त्वधर्ममार्गनाशकं । कर्मपाशमोचकं सुशर्मदायकं विभुं ॥
स्वर्णवर्णशेषपाशशोभितांगमण्डलं । काशिकापुराधिनाथकालभैरवं भजे ॥५॥

Dharma sethu palakam, thwa dharma marga nasakam, Karma pasa mochakam , susharma dayakam vibhum,
Swarna varna sesha pasa shobithanga mandalam, Kasika puradhi nadha Kalabhairavam bhaje. 5

''தர்மஸேது பாலகம் த்வதர்மமார்க னாஶகம் கர்மபாஶ மோசகம் ஸுஶர்ம தாயகம் விபும் |
ஸ்வர்ணவர்ண கேஶபாஶ ஶொபிதாங்க னிர்மலம் காஶிகாபுராதினாத காலபைரவம் பஜே || 5 ||

''பொன்னார் மேனியனே, பரமேஸ்வரா, பராத்பரா, தர்ம ரக்ஷகா,தர்ம பரிபாலன மூர்த்தி, அதர்மத்தை விநாசம் பண்ணுபவனே, கர்ம பாசத்தில் கட்டுண்ட எமை கட்டவிழ்த்து விடுவித்து ரக்ஷிப்பவனே, அசாத்தியமான திரிமூர்த்தி, வார்த்தைகளுக்கு எட்டாத ருத்ரா, புண்ய க்ஷேத்ரமான காசிகா நகர அதிபதி கால பைரவா, உனக்கு எண்ணற்ற நமஸ்காரங்களை சமர்ப்பிக்கிறோம் . ஏற்றுக்கொண்டருள்வாய்.

சிவனைப்பற்றி, அவனது காலபைரவ மஹத்வத்தைப் பற்றி சிந்திக்கும்போது கொஞ்சம் சிதம்பரம் நடராஜ ஆலய மஹிமையைப் பற்றி கொஞ்சம் சிந்திப்போமா?

எந்த காலத்திலோ, ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது ரிஷிகள், முநீஸ்வரர்கள் பலர் தவமிருந்து அறிந்த உண்மைகளை நமக்கு அறிவித்ததை இப்போது, பல கோடி டாலர்கள் செலவு செய்து எட்டு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து என்ன கண்டுபிடித்திருக்கிறார்கள்?

சிதம்பரம் நடராஜர் கால் பெருவிரலில்தான் மொத்த பூமியின் காந்த மையப்புள்ளி இருப்பதாக தெரிந்து கொண்டிருக்கிறார்கள். Centre Point of World's Magnetic Equator)

எந்த செலவும் செய்யாமல் எந்த டெலஸ்கோப்பும் இல்லாமல் பேசாமல் ஒரு மரத்தடியிலோ, கோவில் ப்ராஹா ரத்திலோ, தனிமையாக இயற்கையாக, கண்ணை மூடிக்கொண்டு, சிந்தனையைக் குவித்து பிரபஞ்சத்தை தன்னுள் கண்டு அனுபவித்து அந்த ஞானிகள், மகான்கள் போதித்த கணக்கற்ற ஞானமுத்துக்களில் ஒன்று தான் இது. இதனைக் கண்டறிந்த நமது ஞானிகளை இக்கால விஞ்ஞானிகளோடு ஒப்பிடுவது மகா பாபம். அணுத்துகள் எப்போதுமே அசைந்துகொண்டே இருக்கும் என்ற உண்மையை ஆடும் நடராஜர் வாயிலாக உணர்த்தும்படி சிலை அமைத்து பூமியின் மையப்புள்ளியில் மறைமுகமாக அமர்த்திய அவர்கள் சாதனை எப்பேற்பட்டது.?

5000 வருடங்களுக்கு முன்பே திருமூலர் இதை தனது திருமந்திரத்தில் குறிப்பிட்ட திருமூலரின் சக்தி எப்படிப் பட்டது.புரிகிறதா? திருமூலரின் திருமந்திரம் உலகிற்கே வழிகாட்டி. இதை உணர்ந்து கொள்ள எல்லோருக்கும் இன்னும் ஒரு நூற்றாண்டு கூட தேவைப்படலாம். அவர் சாதாரணமாக இப்போதைய தமிழ் சினிமாக்களுக்கு காதல் சீனுக்காக ''ஜாலிலோ ஜிம்கானா'' என்று அர்த்தமில்லாமல் ஏதோ, காசுக்காக எழுதவில்லை. ஒரு பாடல் ஒரு மந்திரம். மூவாயிரம் மந்திரங்கள் கொண்டது திருமந்திரம். ஒரு மந்திரம் எழுத ஒரு வருஷமாம். மூவாயிரம் வருஷம் மரத்தடியில் உட்கார்ந்து சிந்தித்து எழுதியது என்கிறார்கள். நம்பாமல் சிரிப்பவன் சிரிப்பாய் சிரிக் கட்டுமே நமக்கெதற்கு அந்த பிரச்னை.!!

சிதம்பரம் நடராஜர் கோயில் ரகசியம், ஆச்சர்யங்களில் சில:

நமது முன்னோர்கள் எதையுமே ஒரு தெளிவான சிந்தனையோடு தான் செய்பவர்கள். அவர்கள் கட்டியிருக்கும் பிரம்மாண்டமான கற்கோவில்கள் சில அற்புதங்களை உள்ளடக்கியவை அல்லவா?

(1) சிதம்பரம் நடராஜர் கோயில் அமைந்திருக்கும் இடமானது உலகின் பூமத்திய ரேகையின் சரியான மையைப் பகுதி என்று கூறப்படுகின்றது. ( Center Point of World's Magnetic Equator ).

 (2) பஞ்ச பூத கோயில்களில் ஆகாயத்தை குறிக்கும் தில்லை நடராஜர் ஆலயம், காற்றை குறிக்கும் காலஹஸ்தி ஆலயம், நிலத்தை குறிக்கும் காஞ்சி ஏகாம்பரேஸ்வர ஆலயமும் சரியாக ஒரே நேர்கோட்டில் அதாவது சரியாக 79 Degrees, 41 minutes East தீர்க்க ரேகையில் (LONGITUDE ) அமைந்துள்ளது, இன்று Google map உதவியுடன் நாம் வானத்தின் மேல் இருந்து பார்ப்பதை போன்று பார்த்தால் மட்டுமே விளங்கும் இந்த துல்லியம் அன்றைக்கு கணிக்கப்பட்டது. இது தற்போதைய சயன்ஸ் சாஸ்திரங்கள் வியக்கும் வானவியலின் உச்சகட்ட அதிசயம்.\

(3) மனித உடலை அடிப்படையாக கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் கோயிலில் 9 நுழைவு வாயில்களும், மனித உடலில் இருக்கும் 9 வாயில்களை குறிகின்றது.

((4) விமானத்தின் மேல் இருக்கும் பொற் கூரை 21,600 தங்கத்தகடுகளை கொண்டு வேயப்பட்டுள்ளது, இது மனிதன் ஒரு நாளைக்கு சராசரியாக 21600 தடவைகள் சுவாசிக்கிறான் என்பதை குறிக்கின்றது (15*60*24 = 21,600).

(5) இந்த 21,600 தகடுகளை வேய 72,000 தங்க ஆணிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது, இந்த 72,000 என்ற எண்ணிக்கை மனித உடலில் இருக்கும் ஒட்டுமொத்த நாடிகளை குறிக்கின்றது.இதில் கண்ணுக்குத் தெரியாத உடலின் பல பாகங்களுக்கு சக்தியை கொண்டு சேர்ப்பவையும் அடங்கும்.

(6) திருமூலர் சொல்லியது:

மானுடராக்கை வடிவு சிவலிங்கம்
மானுடராக்கை வடிவு சிதம்பரம்
மானுடராக்கை வடிவு சதாசிவம்
மானுடராக்கை வடிவு திருக்கூத்தே

அதாவது " மனிதன் வடிவில் சிவலிங்கம், அதுவே சிதம்பரம், அதுவே சதாசிவம், அதுவே அவரின் நடனம்". என்ற பொருளைக் குறிகின்றது.

(7) "பொன்னம்பலம்" சற்று இடது புறமாக அமைக்கப்பட்டுள்ளது, இது நம் உடலில் இதயத்தை குறிப்பதாகும்.இந்த இடத்தை அடைய ஐந்து படிகளை ஏற வேண்டும், இந்த படிகளை "பஞ்சாட்சர படி" என்று அழைக்கப்படுகின்றது, அதாவது "சி,வா,ய,ந,ம" என்ற ஐந்து எழுத்தே அது. "கனகசபை" பிற கோயில்களில் இருப்பதை போன்று நேரான வழியாக இல்லாமல் பக்கவாட்டில் வருகின்றது. இந்த கனக சபை தாங்க 4 தூண்கள் உள்ளன,இது 4 வேதங்களை குறிக்கின்றது,

(8)பொன்னம்பலத்தில் 28 தூண்கள் உள்ளன, இவை 28 ஆகமங்களையும், சிவனை வழிபடும் 28 வழிகளையும் குறிக்கின்றன, இந்த 28 தூண்களும் 64 + 64 மேற் பலகைகளை கொண்டுள்ளது (BEAM ), இது 64 கலைகளை குறிக்கின்றது, இதன் குறுக்கில் செல்லும் பல பலகைகள்(CROSS BEAMS) , மனித உடலில் ஓடும் பல ரத்த நாளங்களை குறிக்கின்றது.

(9) பொற் கூரையின் மேல் இருக்கும் 9 கலசங்கள், 9 வகையான சக்தியை குறிக்கின்றது.அர்த்த மண்டபத்தில் உள்ள 6 தூண்கள், 6 சாஸ்திரங்களையும்,அர்த்த மண்டபத்தின் பக்கத்தில் உள்ள மண்டபத்தில் உள்ள 18 தூண்கள், 18 புராணங்களையும் குறிக்கின்றது.

(10) சிதம்பரம் நடராஜர் ஆடிக்கொண்டிருக்கும் ஆனந்த தாண்டம் என்ற கோலம் "cosmic dance" என்று பல வெளிநாட்டு அறிஞர்களால் அழைக்கபடுகின்றது.

''நவீன விஞ்ஞானமே வாயைப் பிளக்காதே''. நாங்கள் இன்னும் கூட நிறைய சொல்லமுடியும். இதற்கே அசந்து போய் விட்டாயே. போய் சூடாக ஒரு டோஸ் டிகிரி காப்பி குடி.

Lalita is Krishna in male form _ padma purana

Bhagavan Krishna blesses Narada with his darshana and reveals that He is Lalita who is also known as Radhika. Bhagavan also reiterates that it is Lalita herself who is Krishna in male form. 

अहं च ललितादेवी राधिका या च गीयते ।
अहं च वासुदेवाख्यो नित्यं कामकलात्मकः ॥ ४४ ॥
सत्यं योषित्स्वरूपोऽहं योषिच्चाहं सनातनी ।
अहं च ललितादेवी पुंरूपा कृष्णविग्रहा ॥ ४५ ॥
आवयोरंतरं नास्ति सत्यंसत्यं हि नारद ।
एवं यो वेत्ति मे तत्त्वं समयं च तथा मनुम् ॥ ४६ ॥ (Padma Purana 5.75.44-46)

Remember GOD, dont hurt anyone - HH Bharati teertha Mahaswamigal

அடுத்த ஜென்ம சுகம்: 

ஆச்சார்யாள் அருளுரை!

நாம் நம்முடைய சக்திக்குத் தகுந்த ரீதியிலே தர்மத்தை ஆஸ்ரித்து சிரேயஸ்ஸை அடைய வேண்டியது நம்முடைய கர்தவ்யம். நமக்கு அவஸ்யமானது பகவத்பாதாள் ஜனங்களுக்கு ஒரு வார்த்தை சொன்னார்.

"உன்னுடைய ஜீவிதத்திலே உனக்கு கிடைக்கக்கூடிய சமயத்தை (காலத்தை) வீணாக்காமல் அதை பகவானுடைய நினைவிலே கழிக்க வேண்டும்."

பகவத்பாதாள், "இந்த விஷயத்தை மறக்காதே; உனக்கு கிடைக்கக்கூடிய ஒவ்வொரு சமயத்தையும் பகவானுடைய சேவையிலே, பகவானுடைய சிந்தனையிலே, பகவந் நாம ஜபத்திலே உபயோகம் செய். இந்த விஷயத்தை எப்போதும் ஞாபகத்தில் வைத்துக்கொள். இரண்டாவது, முடிந்த அளவில் பிறருக்கு உதவி செய். யாருக்கும் தொந்தரவு செய்யாதே" என்று சொன்னார்.

சரீரத்தை விட்டுவிட்டுப் போகிறபோது எதை எடுத்துக்கொண்டு போகப் போகிறோம்? ஒன்றும் கிடையாது. வரும்போது தனியாகத்தான் வந்தோம். அதேபோல் தனியாகத்தான் போகப் போகிறோம்.

அப்போது நம்மோடு யார் வருவார்? அப்போது நம்மோடு வரப்போவது ஒரே ஒர் ஆசாமி மட்டுமே. அவனுக்குத்தான் "தர்மம்" என்று பெயர்.

அதுதான் நம் அடுத்த ஜென்மத்தில் சுகத்தைக் கொடுக்கும். அதனால், நாம் அடுத்த ஜென்மத்திலே சுகமாய் இருக்க வேண்டும் என்று நினைத்தால் இப்போது தயங்காமல் தர்மத்தை ஆச்ரயிக்க வேண்டும்.

தர்மாசரண விஷயத்தில் பகவத்பாதாள், "தர்மத்தை தாராளமாக செய். அதுதான் உனக்கு இரஷை ஆகும். அதுதான் உனக்கு உண்மையான நண்பன். இப்படி உனக்கு கிடைக்கக்கூடிய நேரத்தை பகவானுடைய சேவையில் உபயோகம் செய்து கூடுமான வரையிலும் பிறருக்கு உதவி செய்.

யாருக்கும் தொந்தரவு செய்யாமல் இரு. இந்த தர்மத்தைக் கடைப்பிடித்துக் கொண்டு ஸத்புருஷர்கள் உடைய சகவாஸத்தில் இரு. அவர்கள்தான் உனக்கு நல்வழியைக் காண்பிப்பார்கள்" என்று சொன்னார்.

ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளின் அருளுரைகள்

ஓம் ஸ்ரீ குருப்யோ நம: 🙏🌹🙏