குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 76
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
ஓம் விஷ்ணவே நம : என்று சொல்லுக்க ' வேதத்தில், கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட விஷ்ணுவுக்கு நமஸ்காரம், அவனை நான் வணங்குகிறேன். அவன் பொருட்டே இந்த ஆத்மா ' என்று அர்த்தம். இதை பகவானே விளக்கிச் சொல்கிறான். எப்போது என்றால், அவன் விதுரருடைய கிரஹத்திற்கு எழுந்தருளியபோது.
விதுரருடைய கிரஹத்துக்கு போகிறான் பரமாத்மா. பீஷ்மாச்சார்யார் துரோணாதிகளெல்லாம் அவனுக்காக பூர்ண கம்பத்தை வைத்துக் கொண்டு காத்திருக்கிறார்கள். எப்போதும் உலக வழக்கம் இதுதான். எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு காத்திருந்தால் எதிர்பார்த்தவர் வரமாட்டார். எதுவுமே இல்லாத வீட்டில் ஒருவர் எதிர்பாராது வந்து நிற்பார்.. அதிதி,,,
அப்படித்தான் பரமாத்மாவும் அர்ப்பணம் செய்ய எதுவுமே இல்லாத விதுரன் வீட்டிலே போய் நிற்கிறார்.
விதுரன் பாவம் ஆசனத்தை போட்டு தடவி தடவிப் பார்க்கிறார். ஒரு வாழைப்பழத்தை எடுத்து பழத்தை கீழே போட்டுவிட்டு சோலை பகவானிடம் தருகிறாராம் அவனும் பக்தனின் பக்தியை மெச்சி சோலை ஆனந்தமாக சாப்பிடுகிறான் விதுரருக்கு பகவான் தோலை சாப்பிடுவது தெரியவில்லை. பகவானுக்கும் அதன் சுவை வித்தியாசமாக தெரியவில்லை..
ஆகையால் பகவான் எதிர்பார்ப்பது பக்தியைதான்... வஸ்துவை அல்ல.. ஆயிரம் அண்டா சர்க்கரை பொங்கல் வைத்துக் கொண்டு இவ்வளவையும் நான் தான் பண்ணினேன் என்கிறார் ஒருவர் இதைகாட்டிலும் கேட்டவர் ஒத்து பாடுகிறார்." இவ்வளவு நெய் குத்தி வேறெங்கே பண்ணுவார்கள். இங்கு தானே நடக்கிறது " . இப்படிப் பேசினால் பகவான் அந்த சர்க்கரை பொங்கலை திரும்பிக் கூட பார்க்க மாட்டான் .
நாம் ஒன்றுமே சமர்பிக்க வேண்டாம் . ஒரு அஞ்சலி செய்தாலே போதும். அதை ஏற்றுக் கொள்வான்.
விதுரருடன் கௌரவர்கள் சபைக்கு செல்கிறான் பரமாத்மா. துரியோதனன் கேட்கிறான்.. ' பீஷ்ம துரோணர்களெல்லாம் காத்திருக்கிறார்கள், சக்ரவர்த்திகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள், எங்களையெல்லாம் தாண்டி நீ உன் சாமான்ய புத்தியை காட்டி, சாமான்ய கிரஹத்தில் சாப்பிட்டுவிட்டு வந்திருக்கிறாய் " என்கிறான். எனன அகங்கார பேச்சு !
அவனுக்கு பகவான் நிதானமாக பதிலளிக்கிறான்:
சுத்தம் பாகவதஸ்யான்னம்
சுத்தம் பாகீரதி ஜலம்
சுத்தம் விஷ்ணுபத த்யானம்
சுத்தம் ஏகாதசி வ்ரதம்
பகவானே சொன்ன வார்த்தைகள். அவன் எதை எதை சுத்தம் என்று சொன்னாரோ அதை கெட்டியாக பிடித்துக் கொள்ள வேண்டும். துரியோதனனுக்கெதிரிலேயே சொன்னவார்த்தைகள். நாம் துரியோதனன் போல் அவ்வளவு தப்பு பண்ணவில்ஸையே. அதனால் நமக்கு கட்டாயம் அவன் அனுக்கிரகம் பண்ணுவான்.... அவன் சொன்ன வார்த்தைகளை கெட்டியாக பிடித்துக் கொண்டால்..
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்.
No comments:
Post a Comment