குறையொன்றுமில்லை இரண்டாம் பாகம் ( தொடர்ச்சி ) பகுதி 74
முக்கூர் லஷ்மி நரஸிம்ஹாசாரியார்
வசிஷ்டர் ஆசிரமத்தில் அவருக்கு வேண்டிய பாலை நித்தியம் கொடுத்து வந்தது நந்தினி. அப்படிப்பட்ட காமதேனுவின் ஒத்துழைப்பு பசுக்கள் பாலைக் கறக்க வேண்டும் என்கிறது வேதம் மந்திரம் . அந்த பால் எல்லோருக்கும் விநியோகமாக வேண்டும். எனவே நீ பசுக்களை ரக்ஷிக்க வேண்டும் .
' சர்வ ரக்ஷகனாகயிருக்கக்கூடிய நாராயணா, விஷ்ணு ! பசுக்களை ரக்ஷித்து யஜ்ஞத்திற்கு வேண்டிய பாலை கொடுத்து, தயிரைக் கொடு, நெய்யைக் கொடுத்து நீதான் உதவ வேண்டும் ' என்ற பிரார்த்தனையுடன்தான் யக்ஞாதிகளில் காரியங்கள் ஆரம்பம் ஆகும்.
கர்ம காண்டத்தில் சாத்வீக தியாகம் என்று சொல்லிக் தரப்படுகிறது. ஓவ்வொரு கர்மாவும் ஆரம்பிக்கும் போது அது அவனுடைய ப்ரீதி க்காக அவனே தன் ஆத்மாவைக் கொண்டு நடத்திக் கொள்கிறான் என்ற வினயத்தோடு ஆரம்பிக்க வேண்டும்.
' நான் பண்ணுகிறேன் ' என்று சொல்ல கூடாது ! ' நான் சொல்கிறேன் கேள் ' என்பவரிடம் விஷயமே கேட்கக்கூடாது. ' சாத்வீக பாவம், சாத்வீக தியாகத்துடனா யஜ்ஞ காரியங்கள் அமர தொடங்க லௌண்டும். அடியேனுடைய விண்ணப்பம் ' என்று சொல்பவருடைய வார்த்தையை கேட்க வேண்டும்
யஜ்ஞதுதுக்கான அடுத்த மந்திரம் என்ன சொல்கிறது என்பதை வித்யாரண்யர் சுவாமி அழகாகச் சொல்கிறார். தர்ப்பத்தை அறுத்துக் கொண்டு வர வேண்டும். யாகத்துக்கான முதல் காரணம் இது . நுணி தீர்கமான நல்ல தர்ப்பம் வேண்டும்.
புத்தி கூர்மைக்கு தர்ப்பத்தை உதாரணம் சொல்வதுண்டு . ஏக ஸந்த கிராஹி- ஒருமுறை சொன்னாலே புரிந்து கொள்பவன். குசாக்ர புத்தியுடையவன். கூர்மையான தர்ப்பத்துக்குள்ளே விச்வாமித்ர தர்ப்பம் ரொம்ப கூர்மை .
அந்த மாதிரி தர்ப்பம் இருந்து அதில் பவித்ரம் செய்து போட்டுக் கொண்டால் பெரும் பயனைத்தரும். அப்போது செய்யும் சங்கல்பத்துக்கு பங்கம் ஏற்படாது . இப்படிப்பட்ட தர்ப்பத்தை கிரஹித்து வருவதிலிருந்து யஜ்ஞ காரியம் ஆரம்பமாகிறத . இதில் சிரத்தை காட்ட வேண்டும் . முதலில் நல்ல நாள் பார்க்க வேண்டும். அது விளையும் இடத்துக்கு போக வேண்டும்.
தீர்த்தத்தினுடைய இன்னொரு ஸ்வரூபம் தான் தர்ப்பம். ' தீர்த்தம் வேறு தர்ப்பம் வேறு என்று நினைக்காதே ' என்கிறது வேதம்.
ஒரு முறை இந்திரன் வஜ்ராயுதத்தை கையில் எடுத்து விருத்தராசுரன் மீது பிரயோகம் பண்ணினான். ஆனால் வஜ்ராயுதத்ததால் அவனை ஒன்றும் செய்ய முடியவில்லை. ஏதோ வைக்கோலால் தட்டுகிற மாதிரி அசுரனை தட்டிவிட்டு விழுந்து விட்டது.
பிரம்மா இதை பார்த்தார். வஜ்ராயுதத்தை எடுத்து கமண்டலத்திலேயிருந்த தண்ணீரில் ஒரு நனைப்பு நனைத்துக் கொடுத்தார்... ' இப்போது இதை ப்ரயோகம் பண்ணு' என்றார். இந்திரன் அவ்வாறே பண்ணினான்.
அந்த வஜ்ராயுதமானது விருத்தராசுரனை கண்ட துண்டமாக வெட்ட ஆரம்பித்து விட்டது ! கையை வெட்டுகிறது; காலை வெட்டுகிறது; ஒவ்வொரு அங்கமாக செதுக்குகிறது! ரத்தம் கொட்டுகிறது அவன் உடம்பிலிருந்து.
பார்த்தான் அசுரன். பிராணன் போகிற தறுவாயிலாவது அவன் நல்லது செய்யலாம். ஆனால் அவனுக்கு கெட்ட புத்தி. அவன் புத்தி எப்படி வேலை செய்தது?
( வளரும் )
ஸ்ரீவைஷ்ணவிஸம் முக நூலில் பதிவு செய்தவர் திருமதி நளினி கோபாலன் அவர்கள்
No comments:
Post a Comment