ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ... 🙏🙏🙏
தஸாவதாரம்
ஸ்ரீகிருஷ்ணாவதாரம்
பகுதி 34
பதினாறா மாயிரவர் தேவிமார் பணிசெய்ய துவரை யென்னும்
அதில்நா யகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்
புதுநாண் மலர்க்கமலம் எம்பெருமான் பொன்வயிற்றில் பூவே போல்வான்
பொதுநா யகம்பாவித்து இருமாந்து பொன்சாய்க்கும் புனல ரங்கமே.
பெரியாழ்வார் திருமொழி 04.09.04
விளக்கம்
துவரை என்னும் அதில்
-
ஸ்ரீத்வாரகை யென்கிற பட்டணத்தில்
பதினாறு ஆம் ஆயிரம் தேவிமார்
-
(ஆயர் மங்கைகளாகிய) பதினாராயிரம் தேவிமார்
பணி செய்ய
-
சேவை பண்ண,
நாயகர் ஆகி
-
(அவர்களுக்கு) நாயகராய்க் கொண்டு
வீற்றிருந்த (அவர்களின் நடுவே)
மணவாளர்
-
மணவாளப்பிள்ளை
(அழகியமணவாளப் பெருமாளாய்)
மன்னு
-
நித்தியவாஸம் பண்ணுகிற
கோயில்
-
கோயிலானது;
புதுநாள் கமலம் மலர்
-
அப்போதலர்ந்த செவ்விய தாமரை பூவானது
எம்பெருமான்
-
எம்பெருமானுடைய
பொன் வயிற்றில்
-
அழகிய திருநாபியிலுள்ள
பூபோல்வான்
-
தாமரைப்பூவோடு ஸாம்யம் பெறுவதற்காக
பொதுநாயகம் பாவித்து
-
சகலநிர்வாஹகத்தைப் பாவித்து
இறுமாந்து
-
(அப்பாவனையாலே) கர்வங்கொண்டு
பொன் சாய்க்கும்
-
(மற்ற தாமரைகளின்) அழகைத் தள்ளிவிடா நின்றுள்ள
புனல்
-
நீர்வளத்தையுடைய
அரங்கம்
-
திருவரங்கமாம்.
கோமதி துவாரகா
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா பூரி த்வாரவதி என்ற முக்தி தரும் க்ஷேத்ரங்களுள் ஒன்றுதான் துவாரகை, ராதை, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரவிந்தா, நக்னஜித், பத்ரா, லக்ஷ்மணா என்ற எட்டு மனைவியர்களுடன் கோவில் கொண்டுள்ள இடம், ருக்மணி பிராட்டியாருக்கு இரண்டு மைல் தள்ளியே தனிக்கோயில் உள்ளது. சுமார் இருபது மைல் வரை தேவ பூமி என்றழைக்கப் படுகிறது.
இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம், துவாரகை கடல்பகுதியில், 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. குஜராத் மாநிலம் லோத்தல் பகுதியில் தொல்லியில் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையில் ஆய்வு நடந்தது. பழமையான நகரமான துவாரகை கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆய்வின்போது துவாரகையின் ஒருபகுதியான பேட் துவாரகையில் கி.மு.1528ம் ஆண்டைச் சேர்ந்த மண்பாண்டத்தையும், கடற்கரையில் 560மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றையும் கண்டனர். இப்பகுதி கிருஷ்ணர் ஆண்ட துவாரகை என முடிவு செய்தனர். இந்த முடிவுகளை எஸ்.ஆர்.ராவ், தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாரகா என்னும் நூலாக ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த ஆய்வு மூலம் மகாபாரதம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பது உறுதியானது. மகாபாரத முடிவில் வந்த கலியுகம் தொடங்கி, 5113 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பே துவாரகை மூழ்கியதால், இந்நகரம் மூழ்கி 5200 ஆண்டுகளாகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. பேட் துவாரகை: கோமதி நதிக்கரையில் அமைந்த துவாரகாவுக்கு துவாரமதி, துவாரவதி, குசஸ்தலை என்ற பெயர்களும் உண்டு. துவாரகை அருகிலுள்ள பேட் துவாரகையிலும் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இங்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்ட கட்டடத் தொகுப்புகள் தென்படுகின்றன. சுவரைக் கட்ட பயன்படுத்திய கற்கள், 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக உள்ளது. பேட் துவாரகை ஒரு தீவுப்பகுதியாகும். இங்கு தான் கிருஷ்ணர், சத்தியபாமா, ஜாம்பவதி ஆகியோர் பொழுதுபோக்க வந்துள்ளனர். ஆங்காங்கே பூந்தோட்டம், ஏரிகளும் உள்ளன. மூழ்கிய துவாரகை: கடலில் மூழ்கிய துவாரகையில், அடிப்படை வசதியுள்ள குடியிருப்பு, வியாபார இடங்கள், அகன்ற சாலை, அழகான துறைமுகம் இருந்துள்ளன. தங்கம்,வெள்ளி, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கட்டடங்களும் இங்கு பிரசித்தமாக விளங்கியுள்ளன. குருக்ஷேத்ர யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்குப்பின், துவாரகை முழுவதும் கடலுக்கடியில் மூழ்கியது. இதனை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை பிரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாத்தார். தற்போது இப்பகுதி சோம்நாத் எனப்படுகிறது. அழிந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பலில் சென்று பக்தர்கள் பார்ப்பதற்கு இந்தியக்கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. தேவலோக தச்சன் விஸ்வகர்மா இந்நகரத்தைக் கட்டியதாக புராணங்கள் சொல்கின்றன. துவாரகாநாத்ஜி மந்திர்: துவாரகை அழிந்த பிறகு, அங்கு மூன்று முறை கோயில் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாமே கடலில் மூழ்கியிருக்கலாம் அல்லது பிற சமயத்தாரால் அழிக்கப்பட்டிருக்கலாம். தற்போது உள்ள கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன் வஜ்ரநாபனால் கட்டப்பட்டது. இது துவாரகாநாத்ஜி மந்திர் எனப்படுகிறது. மூலவர் கல்யாண நாராயணர் என்ற திருநாமத்துடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் திருநாமம் கல்யாண நாச்சியார்.
துவாரகாதீஷ் கோவில் கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ளது. இந்த நதியில் நீராடுவது முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது சிறப்பானது.ஆனால் விடியற்காலையிலேயே நீராடிவிட வேண்டும். அப்போது தான் நதிநீர் கடலுக்குச் செல்கிறது, பிறகு நேரமாக கடல் நீர் நதிக்கு வந்து விடுகிறது. ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக 'கோமதி சக்கரம்' (துவாரகா சிலா) இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். இங்குள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், லட்சுமி சாளக்கிராமம் அழைக்கப்படுகிறது. தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். பூஜை அறையில் வைப்பதோடு, மோதிர வடிவத்திலும், கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் இந்த கோமதி சக்கரத்தைப் பயன்படுத்தலாம். திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக இருக்கும் கோமதி சக்கரம்.
கோவிலுக்கு கோமதி நதி வழியாக 56 படிக்கட்டுகள் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும். இக்கோவில் கோபுர உயரம் 51.8 மீட்டர். நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரத்தின்மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கோபுரத்தைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் அற்புதமானது.
கண்ணனை ஆன்மிகக் குருவாகவும் சாரதியாகவும் கண்டான் காண்டீபன். மானம் காத்த தெய்வமாகக் கண்டாள் பாஞ்சாலி. நண்பனாகக் கண்டான் குசேலன். தங்களை ஆகர்ஷிக்கும் கிருஷ்ணனாக ,காதலனாகக் கண்டனர் கோபிகையர். பாரதியோ சேவகனாக கண்டான். ஆனால், அவனை மன்னனாக இன்றளவும் காண்கின்றனர் துவாரகாபுரி மக்கள்.
துவாரகை, கட்ச் வளைகுடா அருகில் உள்ளது. வடமேற்குக் கோடியில் புள்ளியைப் போல் அமைந்துள்ளது. நம்முடைய தெற்குக் கடற்கரையிலிருந்து செல்வதற்கு பல மணி நேரம் பிடிக்கும். மோட்சதாயிகா(முக்தி தருபவன்) என்று போற்றப்படுபவனை தரிசிப்பது என்றால் லேசான விஷயமா எனா? பண்டைய வேத சாஸ்திரங்கள், இந்தப் புண்ணிய தலம் கிருஷ்ணருடைய ராஜ்ஜியமாக இருந்ததாகத் தெரிவிக்கின்றன. அவர் தன்னுடைய யாதவ குலத்தை ஜராசந்தனிடமிருந்து காப்பதற்கு, மதுராவை விட்டு இங்கு வந்து கடலில் ஓர் பொன்னாலான நகரத்தை விஸ்வகர்மாவின் உதவியுடன் நிர்மாணித்தார். அதற்கு குசஸ்தலி (அ )துவாரவதி என்றும் பெயரிடப்பட்டது. அதுவே பின்னால் துவாரகா என்று மாறியது. யாதவர்களும் கிருஷ்ணரும் மறைந்த பின்னர் அந்தப் பிராந்தியமே கடலில் மூழ்கியது. கிருஷ்ணரின் மாளிகை மட்டுமே மிஞ்சியது.
இன்றைய துவாரகை
கிருஷ்ணனின் கொள்ளுப் பேரனான வஜ்ரனபி என்பவன் அந்த மாளிகைக்கு அருகிலேயே ஒரு கோவிலைக் கட்டினான். இன்றைய துவாரகை கோமதி நதியும் அரபிக் கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைதியாக அமர்ந்துள்ளது. செழிப்பான வியாபாரத் தலமாக இருந்த இந்த இடம், தற்போது தேசத்தின் ஒரு ஓரத்தில் சிறு புள்ளியாக, சிற்றூராக இருந்து வருகிறது. இருப்பினும் லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்வசம் இழுக்கும் உன்னதத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. காசியைப் போலவே இதற்கும் அகன்ற படித்துறைகள் உண்டு.
கோபுர உச்சியில் கிருஷ்ணனின் கொடி பட்டொளி வீசி பறக்கிறது. மூன்று முறை மாற்றுகிறார்கள். சுமார் துவாரகைக்கு பத்து கிலோமீட்டர் முன்பே கொடியை தரிசிக்கலாம்.
கோமதி நதியில் முழுக்கு போட்டு விட்டு கோவிலை நோக்கிச் செல்கிறோம். இதற்கு இரண்டு வாயில்கள். மார்க்கெட்டிலிருந்து வரும் மோட்சத் துவார் எனப்படும் பிரதான வடக்கு வாயில் வழியாக உள்ளே நுழைகிறோம். ஊரிலேயே மிக உயர்ந்து நிற்கும் இதன் கோபுரம் தூரத்திலிருந்தே தெரிகிறது. கோவிலைச் சுற்றிலும் மதில் சுவர். ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட சாரதா பீடம் கோவில் வளாகத்திலேயே உள்ளது. கோவில் நிர்வாகமும் அதன் பார்வையில்தான். கருவறையில் துவாரகாதீஷ் ஸ்ரீகிருஷ்ணன் சிரசில் கொண்டையுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இக்கோவிலை ஜெகத்மந்திர் என்றும் அழைக்கிறார்கள்.
தல சிறப்பு பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101 வது திவ்ய தேசம்.கருப்புநிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரி எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். இத்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது. இது சாதாரண கட்டிடமல்ல அபூர்வமான பொருள்களைக் கொண்டு கோயில் கட்டப் பட்டுள்ளது. இங்கு அன்னை தேவகி ஸ்ரீகிருஷ்ணருக்கு முன் சன்னதியிலும் அண்ணன் பலராமன், துர்வாச மகரிஷி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கு மன்னராக கண்ணன் வீற்றிருப்பதாக ஐதீகம். துவாரகை கிருஷ்ணருக்கு தினமும் 17முறை பிரசாதம் (போக்) படைக்கப்படுகிறது. இதை போக் என்பர். உடையும் தொடர்ந்து மாற்றப்படுகிறது. காலையில் சுவாமியை எழுப்பும் நிகழ்ச்சி உடாபன் எனப்படும் மதியம் ராஜ்போக். துவாரகை கிருஷ்ணனை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் பாடியுள்ளனர்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் தொடரும் ....
தஸாவதாரம்
ஸ்ரீகிருஷ்ணாவதாரம்
பகுதி 34
பதினாறா மாயிரவர் தேவிமார் பணிசெய்ய துவரை யென்னும்
அதில்நா யகராகி வீற்றிருந்த மணவாளர் மன்னு கோயில்
புதுநாண் மலர்க்கமலம் எம்பெருமான் பொன்வயிற்றில் பூவே போல்வான்
பொதுநா யகம்பாவித்து இருமாந்து பொன்சாய்க்கும் புனல ரங்கமே.
பெரியாழ்வார் திருமொழி 04.09.04
விளக்கம்
துவரை என்னும் அதில்
-
ஸ்ரீத்வாரகை யென்கிற பட்டணத்தில்
பதினாறு ஆம் ஆயிரம் தேவிமார்
-
(ஆயர் மங்கைகளாகிய) பதினாராயிரம் தேவிமார்
பணி செய்ய
-
சேவை பண்ண,
நாயகர் ஆகி
-
(அவர்களுக்கு) நாயகராய்க் கொண்டு
வீற்றிருந்த (அவர்களின் நடுவே)
மணவாளர்
-
மணவாளப்பிள்ளை
(அழகியமணவாளப் பெருமாளாய்)
மன்னு
-
நித்தியவாஸம் பண்ணுகிற
கோயில்
-
கோயிலானது;
புதுநாள் கமலம் மலர்
-
அப்போதலர்ந்த செவ்விய தாமரை பூவானது
எம்பெருமான்
-
எம்பெருமானுடைய
பொன் வயிற்றில்
-
அழகிய திருநாபியிலுள்ள
பூபோல்வான்
-
தாமரைப்பூவோடு ஸாம்யம் பெறுவதற்காக
பொதுநாயகம் பாவித்து
-
சகலநிர்வாஹகத்தைப் பாவித்து
இறுமாந்து
-
(அப்பாவனையாலே) கர்வங்கொண்டு
பொன் சாய்க்கும்
-
(மற்ற தாமரைகளின்) அழகைத் தள்ளிவிடா நின்றுள்ள
புனல்
-
நீர்வளத்தையுடைய
அரங்கம்
-
திருவரங்கமாம்.
கோமதி துவாரகா
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா பூரி த்வாரவதி என்ற முக்தி தரும் க்ஷேத்ரங்களுள் ஒன்றுதான் துவாரகை, ராதை, சத்யபாமா, ஜாம்பவதி, காளிந்தி, மித்ரவிந்தா, நக்னஜித், பத்ரா, லக்ஷ்மணா என்ற எட்டு மனைவியர்களுடன் கோவில் கொண்டுள்ள இடம், ருக்மணி பிராட்டியாருக்கு இரண்டு மைல் தள்ளியே தனிக்கோயில் உள்ளது. சுமார் இருபது மைல் வரை தேவ பூமி என்றழைக்கப் படுகிறது.
இந்திய தேசிய கடல் ஆராய்ச்சிக் கழகம், துவாரகை கடல்பகுதியில், 1983 முதல் 1990 வரை 18 ஆராய்ச்சிகளை மேற்கொண்டது. குஜராத் மாநிலம் லோத்தல் பகுதியில் தொல்லியில் ஆய்வாளர் எஸ்.ஆர். ராவ் தலைமையில் ஆய்வு நடந்தது. பழமையான நகரமான துவாரகை கடலுக்குள் இருப்பதை கண்டுபிடித்தனர். ஆய்வின்போது துவாரகையின் ஒருபகுதியான பேட் துவாரகையில் கி.மு.1528ம் ஆண்டைச் சேர்ந்த மண்பாண்டத்தையும், கடற்கரையில் 560மீட்டர் நீளமுள்ள சுவர் ஒன்றையும் கண்டனர். இப்பகுதி கிருஷ்ணர் ஆண்ட துவாரகை என முடிவு செய்தனர். இந்த முடிவுகளை எஸ்.ஆர்.ராவ், தி லாஸ்ட் சிட்டி ஆப் துவாரகா என்னும் நூலாக ஆங்கிலத்தில் வெளியிட்டார். இந்த ஆய்வு மூலம் மகாபாரதம் உண்மையில் நடந்த நிகழ்ச்சி என்பது உறுதியானது. மகாபாரத முடிவில் வந்த கலியுகம் தொடங்கி, 5113 ஆண்டுகள் ஆகிறது. அதற்கு 87 ஆண்டுகளுக்கு முன்பே துவாரகை மூழ்கியதால், இந்நகரம் மூழ்கி 5200 ஆண்டுகளாகிறது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது. பேட் துவாரகை: கோமதி நதிக்கரையில் அமைந்த துவாரகாவுக்கு துவாரமதி, துவாரவதி, குசஸ்தலை என்ற பெயர்களும் உண்டு. துவாரகை அருகிலுள்ள பேட் துவாரகையிலும் கிருஷ்ணர் வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. இங்கு 18 மீட்டர் அகலம் கொண்ட இரண்டு பிரதான சாலைகள், ஒன்றுக்கொன்று தொடர்புடைய குடியிருப்புகள், மூன்று பிரம்மாண்ட கட்டடத் தொகுப்புகள் தென்படுகின்றன. சுவரைக் கட்ட பயன்படுத்திய கற்கள், 3600 ஆண்டுகளுக்கு முந்தைய தொன்மை வாய்ந்ததாக உள்ளது. பேட் துவாரகை ஒரு தீவுப்பகுதியாகும். இங்கு தான் கிருஷ்ணர், சத்தியபாமா, ஜாம்பவதி ஆகியோர் பொழுதுபோக்க வந்துள்ளனர். ஆங்காங்கே பூந்தோட்டம், ஏரிகளும் உள்ளன. மூழ்கிய துவாரகை: கடலில் மூழ்கிய துவாரகையில், அடிப்படை வசதியுள்ள குடியிருப்பு, வியாபார இடங்கள், அகன்ற சாலை, அழகான துறைமுகம் இருந்துள்ளன. தங்கம்,வெள்ளி, நவரத்தினங்கள் இழைக்கப்பட்ட கட்டடங்களும் இங்கு பிரசித்தமாக விளங்கியுள்ளன. குருக்ஷேத்ர யுத்தம் முடிந்து 36 ஆண்டுகளுக்குப்பின், துவாரகை முழுவதும் கடலுக்கடியில் மூழ்கியது. இதனை முன்கூட்டியே அறிந்த கிருஷ்ணர் யாதவர்களை பிரபாஸ் என்ற உயரமான மலைப்பிரதேசத்திற்கு அழைத்துச் சென்று பாதுகாத்தார். தற்போது இப்பகுதி சோம்நாத் எனப்படுகிறது. அழிந்த துவாரகையை நீர்மூழ்கிக்கப்பலில் சென்று பக்தர்கள் பார்ப்பதற்கு இந்தியக்கடல் அகழ்வாராய்ச்சிக்கழகம் ஏற்பாடு செய்து வருகிறது. தேவலோக தச்சன் விஸ்வகர்மா இந்நகரத்தைக் கட்டியதாக புராணங்கள் சொல்கின்றன. துவாரகாநாத்ஜி மந்திர்: துவாரகை அழிந்த பிறகு, அங்கு மூன்று முறை கோயில் கட்டப்பட்டிருக்கிறது. எல்லாமே கடலில் மூழ்கியிருக்கலாம் அல்லது பிற சமயத்தாரால் அழிக்கப்பட்டிருக்கலாம். தற்போது உள்ள கோயில் 1500 ஆண்டுகளுக்கு முன் வஜ்ரநாபனால் கட்டப்பட்டது. இது துவாரகாநாத்ஜி மந்திர் எனப்படுகிறது. மூலவர் கல்யாண நாராயணர் என்ற திருநாமத்துடன் மேற்கு நோக்கி காட்சி தருகிறார். தாயார் திருநாமம் கல்யாண நாச்சியார்.
துவாரகாதீஷ் கோவில் கோமதி நதிக்கரையை ஒட்டிய உயரமான இடத்தில் அமைந்துள்ளது. இந்த நதியில் நீராடுவது முன்னோர்களுக்கு வழிபாடு செய்வது சிறப்பானது.ஆனால் விடியற்காலையிலேயே நீராடிவிட வேண்டும். அப்போது தான் நதிநீர் கடலுக்குச் செல்கிறது, பிறகு நேரமாக கடல் நீர் நதிக்கு வந்து விடுகிறது. ஆன்மிக வளங்களை தாங்கி நிற்கக்கூடிய பொருட்களில், நம்மால் அதிகம் அறியப்படாத பொருளாக 'கோமதி சக்கரம்' (துவாரகா சிலா) இருக்கிறது. இது சங்கு போன்ற ஒரு வகை சிறிய கல் ஆகும். இங்குள்ள கோமதி நதியில் அதிகமாக கிடைப்பதால், அந்தப் பெயர் வந்து விட்டது. வட மாநிலங்களில் பிரபலமாக உள்ள ஸ்ரீமகாலட்சுமி அம்சம் பொருந்திய இந்த வகைக் கல், லட்சுமி சாளக்கிராமம் அழைக்கப்படுகிறது. தென் மாநிலங்களில் அதிகம் அறியப்படாமல் இருப்பதற்கு காரணம், அதனை ரகசியமாக பலரும் பயன்படுத்தி வந்ததுதான். பூஜை அறையில் வைப்பதோடு, மோதிர வடிவத்திலும், கழுத்தில் அணியும் சங்கிலி வடிவிலும் இந்த கோமதி சக்கரத்தைப் பயன்படுத்தலாம். திருமகளின் அருளை எளிதாக பெற்றுத்தரும் பொருட்களில் ஒன்றாக இருக்கும் கோமதி சக்கரம்.
கோவிலுக்கு கோமதி நதி வழியாக 56 படிக்கட்டுகள் ஏறித்தான் உள்ளே செல்ல வேண்டும். இக்கோவில் கோபுர உயரம் 51.8 மீட்டர். நான்கு நிலைகளைக் கொண்ட கோபுரத்தின்மேல் உயர்ந்து நிற்கும் கூர்மையான கோபுரத்தைப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. 72 தூண்களைக் கொண்ட பெரிய நுழைவாயில் மண்டபமும் அற்புதமானது.
கண்ணனை ஆன்மிகக் குருவாகவும் சாரதியாகவும் கண்டான் காண்டீபன். மானம் காத்த தெய்வமாகக் கண்டாள் பாஞ்சாலி. நண்பனாகக் கண்டான் குசேலன். தங்களை ஆகர்ஷிக்கும் கிருஷ்ணனாக ,காதலனாகக் கண்டனர் கோபிகையர். பாரதியோ சேவகனாக கண்டான். ஆனால், அவனை மன்னனாக இன்றளவும் காண்கின்றனர் துவாரகாபுரி மக்கள்.
துவாரகை, கட்ச் வளைகுடா அருகில் உள்ளது. வடமேற்குக் கோடியில் புள்ளியைப் போல் அமைந்துள்ளது. நம்முடைய தெற்குக் கடற்கரையிலிருந்து செல்வதற்கு பல மணி நேரம் பிடிக்கும். மோட்சதாயிகா(முக்தி தருபவன்) என்று போற்றப்படுபவனை தரிசிப்பது என்றால் லேசான விஷயமா எனா? பண்டைய வேத சாஸ்திரங்கள், இந்தப் புண்ணிய தலம் கிருஷ்ணருடைய ராஜ்ஜியமாக இருந்ததாகத் தெரிவிக்கின்றன. அவர் தன்னுடைய யாதவ குலத்தை ஜராசந்தனிடமிருந்து காப்பதற்கு, மதுராவை விட்டு இங்கு வந்து கடலில் ஓர் பொன்னாலான நகரத்தை விஸ்வகர்மாவின் உதவியுடன் நிர்மாணித்தார். அதற்கு குசஸ்தலி (அ )துவாரவதி என்றும் பெயரிடப்பட்டது. அதுவே பின்னால் துவாரகா என்று மாறியது. யாதவர்களும் கிருஷ்ணரும் மறைந்த பின்னர் அந்தப் பிராந்தியமே கடலில் மூழ்கியது. கிருஷ்ணரின் மாளிகை மட்டுமே மிஞ்சியது.
இன்றைய துவாரகை
கிருஷ்ணனின் கொள்ளுப் பேரனான வஜ்ரனபி என்பவன் அந்த மாளிகைக்கு அருகிலேயே ஒரு கோவிலைக் கட்டினான். இன்றைய துவாரகை கோமதி நதியும் அரபிக் கடலும் சங்கமிக்கும் இடத்தில் அமைதியாக அமர்ந்துள்ளது. செழிப்பான வியாபாரத் தலமாக இருந்த இந்த இடம், தற்போது தேசத்தின் ஒரு ஓரத்தில் சிறு புள்ளியாக, சிற்றூராக இருந்து வருகிறது. இருப்பினும் லட்சக்கணக்கான பக்தர்களைத் தன்வசம் இழுக்கும் உன்னதத் தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. காசியைப் போலவே இதற்கும் அகன்ற படித்துறைகள் உண்டு.
கோபுர உச்சியில் கிருஷ்ணனின் கொடி பட்டொளி வீசி பறக்கிறது. மூன்று முறை மாற்றுகிறார்கள். சுமார் துவாரகைக்கு பத்து கிலோமீட்டர் முன்பே கொடியை தரிசிக்கலாம்.
கோமதி நதியில் முழுக்கு போட்டு விட்டு கோவிலை நோக்கிச் செல்கிறோம். இதற்கு இரண்டு வாயில்கள். மார்க்கெட்டிலிருந்து வரும் மோட்சத் துவார் எனப்படும் பிரதான வடக்கு வாயில் வழியாக உள்ளே நுழைகிறோம். ஊரிலேயே மிக உயர்ந்து நிற்கும் இதன் கோபுரம் தூரத்திலிருந்தே தெரிகிறது. கோவிலைச் சுற்றிலும் மதில் சுவர். ஆதி சங்கரரால் நிறுவப்பட்ட சாரதா பீடம் கோவில் வளாகத்திலேயே உள்ளது. கோவில் நிர்வாகமும் அதன் பார்வையில்தான். கருவறையில் துவாரகாதீஷ் ஸ்ரீகிருஷ்ணன் சிரசில் கொண்டையுடன் நின்ற திருக்கோலத்தில் பக்தர்களுக்குக் காட்சியளிக்கிறார். இக்கோவிலை ஜெகத்மந்திர் என்றும் அழைக்கிறார்கள்.
தல சிறப்பு பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 101 வது திவ்ய தேசம்.கருப்புநிறம் கொண்ட கண்ணன் மேற்கு நோக்கி நின்ற கோலத்தில் காட்சியளிப்பது இத்தலத்தின் தனி சிறப்பு. இவ்வூர் ஒரு காலத்தில் சுதாமபுரி எனப்பட்டது. இங்கு தான் சுதாமர் எனப்படும் குசேலர் பிறந்தார். இவருக்கு தனிக்கோயில் இங்குள்ளது. சுதாமர் கோயில் என அழைக்கின்றனர். இத்தக் கோயில் ஐந்து மாடிகளைக் கொண்டது. இது சாதாரண கட்டிடமல்ல அபூர்வமான பொருள்களைக் கொண்டு கோயில் கட்டப் பட்டுள்ளது. இங்கு அன்னை தேவகி ஸ்ரீகிருஷ்ணருக்கு முன் சன்னதியிலும் அண்ணன் பலராமன், துர்வாச மகரிஷி ஆகியோருக்கு சந்நிதிகள் உள்ளன. இங்கு மன்னராக கண்ணன் வீற்றிருப்பதாக ஐதீகம். துவாரகை கிருஷ்ணருக்கு தினமும் 17முறை பிரசாதம் (போக்) படைக்கப்படுகிறது. இதை போக் என்பர். உடையும் தொடர்ந்து மாற்றப்படுகிறது. காலையில் சுவாமியை எழுப்பும் நிகழ்ச்சி உடாபன் எனப்படும் மதியம் ராஜ்போக். துவாரகை கிருஷ்ணனை பெரியாழ்வார், நம்மாழ்வார், திருமங்கையாழ்வார், திருமழிசையாழ்வார், ஆண்டாள் பாடியுள்ளனர்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் தொடரும் ....
No comments:
Post a Comment