ஸ்ரீமதே ராமாநுஜாய நமஹ... ஸ்ரீமத் வரவரமுநயே நமஹ... 🙏🙏🙏
தஸாவதாரம்
ஸ்ரீகிருஷ்ணாவதாரம்
பகுதி 33
பிரபாஸ க்ஷேதரம் (சோம்நாத்), குஜராத்;
ஸ்ரீகிருஷ்ணரின் பிரிவை விட்ட இடத்தில் இருந்து தொடருவோம். பகவான் தன்னுடைச் சோதியான வைகுண்டத்திற்குச் சென்ற இந்த ப்ரபாஸ க்ஷேத்திரம் குஜராத்தின் செளராஷ்டிராவின் தென் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரத்தின் பெருமையை ஸ்காந்த புராணமும் சொல்லுகின்றது. ப்ரபாஸ காண்டம் என்ற பெயரிலேயே ஒரு காண்டம் உள்ளது ஸ்காந்தத்தில். ப்ரபாஸ காண்டத்தில் முதலில் சோமநாத்தைப் பற்றியும், பின்னர் கிர் மலைக்காடுகள் பற்றியும், பின்னர் மவுண்ட் அபு (அற்புத மலைகள்)பற்றியும், கடைசியில் துவாரகை பற்றியும் குறிப்புகள் வருகின்றன. சோமநாத்தில் உள்ள தீர்த்தம் பற்றிச் சொல்லும் அத்தியாயத்தில் இந்த தீர்த்தத்தின் மகிமை பற்றிச் சொல்லப் பட்டிருக்கின்றது.
பிரபாஸ க்ஷேத்திரத்தில் ஹிரண்யா, கபிலா, ஸரஸ்வதிநதி சங்கமிக்கும் சமுத்திரம் சோமநாதர், (அம்பிகையுடன் கூடிய சோமநாதர்), சோமன் என்ற பெயரால் அழைக்கப் படும் சந்திரன், சோமநாதரின் தரிசனம் ஆகியவையுடன் பித்ரு தர்ப்பணம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. கிரஹணம் சம்பவிக்கும் சமயம் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடி கடல் நீராடி சோமநாதருக்கு வழிபாடுகளும், முன்னோருக்கு நீத்தார் கடனும் செய்தனர். பின்னால் காலப் போக்கில் ஸரஸ்வதி நதி மறைந்து போய் விட்டது. இங்கே உள்ள சமுத்திரக் கரையில் கிருதஸ்மார மலை என அழைக்கப் பட்ட மலையில் இருந்து இந்த க்ஷேத்திரம் மேற்கே அமைந்திருந்தது. இந்த கிருதஸ்மார மலையும் இப்போது காணக்கிடைக்காத ஒன்று. ஸரஸ்வதி, பிப்பலனுக்குக் கிடைத்த அக்னியை ஏந்திக் கொண்டு வந்து சமுத்திரத்தில் விட்டதால் புனிதம் இழந்து இருக்கின்றாள். ஆனால் கிருதஸ்மார மலை அரசனோ ஸரஸ்வதியைக் கண்டு மணக்க எண்ணுகின்றான். அவள் புனிதமாய் இல்லை என்றாலும் பரவாயில்லை என அவளைத் தன்னில் தாங்குகின்றான். ஸரஸ்வதியோ தான் அக்னியை சமுத்திரத்தில் விட்டபின்னர் புனித நீராடிவிட்டு வருவதாய்ச் சொல்லுகின்றாள். ஸரஸ்வதியின் கை அக்னி கிருதஸ்மாரனைத் தாக்குகின்றது. அக்னியின் கடுமை தாங்காமல் மலை அரசன் தூள் தூளாய்ப் போய் சாம்பல் ஆகிவிடுகின்றான். உடைந்த மலைக் கற்கள் எங்கும் பரவுகின்றன. அந்தக் கற்களே இப்போது கோயில்கள் கட்டப் பெருமளவில் பயன்படுவதாய் உள்ளூர் மக்கள் சொல்லுகின்றனர்.
ஸ்ரீகிருஷ்ணர் சோம்நாத்திற்கு அருகே உள்ள வெராவல்லில் தான் பாலிகா தீர்த்தம் என்னும் தீர்த்தக் கரையில் அரச மரத்தடியில் யோகத்தில் ஆழ்ந்திருந்தபோது பாதத்தில் ஜரா என்னும் வேடன் அம்பு எய்து விடுகின்றான். இந்த அரசமரத்தைச் சுற்றியும் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வெராவலில் இருந்து ஒன்றரை மைல் நடந்தே, ஸ்ரீகிருஷ்ணரை பலராமர் மெல்ல மெல்ல இங்கே கொண்டு வந்து சேர்க்கின்றார். இங்கே வந்ததும் ஓர் ஆலமரத்தடியில் படுக்க, பலராமரோ தங்கள் இருவருக்கும் முடிவு வந்துவிட்டதை உணர்ந்து, அங்கே உள்ள ஒரு குகைக்குள் சென்று பாதாளத்தில் மறைகின்றார். அந்தக் குகை தாவுஜியின் குகை என்ற பெயரில் ஒரு கோயிலாக அமைந்துள்ளது. ஸ்ரீகிருஷ்ணரும் அங்கேயே தன் உயிரைப் போக்கிக் கொண்டு வைகுந்தம் சென்று விடுகின்றார். பாம்பாக உருமாறிச் சென்ற தன் அண்ணனையும், தன்னைத் தானே தன் சுய உருவிலும், பிரம்மா, சிவன் போன்ற மற்றத் தெய்வங்களையும் கண்ட ஸ்ரீகிருஷ்ணன் தாமரை போன்ற தன் நயனங்களை அழுந்த மூடிக் கொண்டார். ஸ்ரீகிருஷ்ணரின் பாதங்கள் ஒரு சிற்ப உருவில் பதிந்துள்ளது. பின்னர் மெல்ல மெல்ல தன் மானுட உடலை விடுத்துத் தன் சுய உருவோடு யோக முறைப்படி கலந்தார் என பாகவதம் சொல்லுகின்றது. ஒரு கீதா மந்திரும் அமைத்திருக்கின்றனர். அருகேயே ஹிரன்யா நதிக்கரையில் லட்சுமி நாராயணன் கோவில் அனைவருக்கும் உள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் அருள் பரிபூரணமாய்க் கிட்டட்டும். இந்த இடம் யாதவா ஸ்தலி என்றும் அழைக்கப்படுகிறது.
டாகூர் துவாரகா, ஆனந்த, குஜராத்.
நாடியாத் எனும் ஊருக்கு முன்னதாக அமைந்துள்ளது, டாகோர் நகரம். இங்கு அருள்புரியும் இறைவனின் திருநாமம் ரணசோட் ராய்; 'யுத்தத்தைத் துறந்து ஓடிய தலைவன்' என்று அர்த்தம். ஸ்ரீகண்ணன் வடமதுரையை ஆட்சி செய்த காலத்தில், அந்த நகரின் மீது 18 முறை படையெடுத் தான் ஜராசந்தன். ஒவ்வொரு முறையும் இவன் தனது படைகளை இழந்ததுதான் மிச்சம்! 17 மற்றும் 18வது யுத்தத்துக்கு இடையில், கால யவனன் எனும் தீயவன், யாதவர்களும் தன்னைப் போன்று பலம் உடையவர்கள் எனும் சேதியை நாரதர் மூலம் அறிந்து, மூன்று கோடி வீரர்களுடன் படையெடுத்து வந்தான். உடனே, பலராமனுடன் ஆலோசித்த கண்ணன், கடலின் நடுவே 12 யோசனை அளவுள்ள அரணையும், துவாரகை நகரையும் நிர்மாணித்தார் (1 யோசனை= 10 மைல்). பிறகு, தமது வல்லமையால், மதுரா மக்களை துவாரகையில் சேர்த்தார். பின்னர் மீண்டும் மதுராவுக்கு வந்து, பலராமருடன் ஆலோசித்து, தாமரை மாலையை அணிந்து, ஆயுதம் ஏதுமின்றி, பட் டணத்தின் வாசலில் இருந்து புறப்பட்டார். நாரதர் மூலம் கண்ணனின் அங்க அடையாளங்களை அறிந்து வைத்திருந்த கால யவனன், அவரைப் பின் தொடர்ந்தான். யோகிகளாலும் நெருங்கமுடியாத பரமபுருஷனைப் பிடிக்க முயன்றான் அவன்!
வெகுதூரம் சென்ற கண்ணன், இறுதியில் ஒரு மலைக் குகைக்குள் சென்று மறைந்தார். அவரைத் தொடர்ந்து குகைக்குள் நுழைந்த கால யவனன், அங்கே படுத்திருந்த நபரைக் கண்ணன் என்று கருதி, கோபத்துடன் உதைத்தான். அந்த நபர் விழித்தெழுந்து பார்த்ததும், கால யவனன் எரிந்து சாம்பல னான். அந்த நபர்... முசுகுந்தன்; இஷ்வாகு வம்சத்தில் வந்த மாந்தாதாவின் மைந்தன். போர் ஒன்றில் தேவர்களுக்கு உதவிய தால், அவர்களிடம் இருந்து ஒரு வரம் பெற்றிருந்தார் முசுகுந்தன். வெகுகாலம் உறங்காமல் இருந்த முசுகுந்தன், நன்கு உறங்குவதற்கு ஏற்றவாறு ஆள் அரவமற்ற ஓர் இடத்தைக் காட்டும்படி வேண்டினார். தேவர்களும் இந்தக் குகையைக் காட்டி, ''நீங்கள் இங்கே படுத்துக்கொள்ளலாம். உங்களை எவரேனும் எழுப்பினால், நீங்கள் எழுந்து பார்த்ததும், அவர்கள் எரிந்து சாம்பலாவார்கள்'' என வரமளித்தனர். முசுகுந்தன் பெற்ற அந்த வரத்தை, கால யவனனை அழிக்கப் பயன்படுத்திக்கொண்டார் பகவான். ஆக, கால யவனனுடன் யுத்தம் செய்யாமல் ஓடியதால், ரணசோட் ராய் என்று கண்ணனுக்குப் பெயர் அமைந்ததாம்!
கோமதி துவாரகையின் மூலமூர்த்தியே, தற்போது டாகோர் துவாரகையின் மூலவராகத் திகழ்கிறாராம். இதற்குக் காரணம், போடானா எனும் பக்தர்!
துவாரகாதீசனிடம் அளவற்ற அன்பு வைத்திருந்த போடானா, தள்ளாத வயதிலும் வருடந்தோறும் துவாரகைக்குச் சென்று, கண்ணனைத் தரிசிப்பது வழக்கம். அடுத்தடுத்த காலங்களில் தன்னால் துவாரகைக்குச் செல்ல முடியுமோ முடியாதோ எனும் கலக்கத்துடன் பகவானை வேண்டிக் கொள்வார். அவருக்காக டாகோருக்கே செல்லத் தீர்மானித்தார் பகவான்.
எருதுகள் பூட்டப்பட்ட போடானாவின் வண்டியில் அமர்ந்து இறைவன் வந்தாராம். வண்டியை ஓட்டிய போடானா பாதி வழியிலேயே களைப்படைய, பின்பு கண்ணனே வண்டியை ஓட்டிவந்தாராம். அர்ஜுனனுக்காக குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டிய பரந்தாமன், பக்தர் போடானாவுக்காக மாட்டுவண்டியை ஓட்டினான். அதுதான், இறை அன்பு! டாகோர் சாலையில் ஒரு வேப்ப மரத்தைப் போற்றித் தொழுகின்றனர் பக்தர்கள். போடானாவுடன் வந்தபோது, சற்றே இளைப்பாறுவதற்காக இந்த மரக் கிளையில் சாய்ந்து நின்றாராம் கண்ணன். இன்றும், அந்த மரக் கிளையின் இலைகள் மட்டும் இனிப்பாக திகழ்கின்றன!
இதனிடையே, மூலவரைக் காணாமல் துவாரகையே கவலையில் ஆழ்ந்தது. பகவானும் இதையறிந்தார். துவாரகையில் இருந்து தன்னைத் தொடர்ந்து வந்துவிட்ட கோமதி நதியின் கரையில் தன்னை ஒளித்து வைக்கும்படி, போடானாவைப் பணித்தார். அந்தப் பக்தரோ, 'எங்கே நம் இறைவனைக் கண்டு அழைத்துச் சென்றுவிடுவார்களோ' என்று பதறினார். அப்போது, 'உள்ளவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறியுமவனான' என கண்ணபிரான், தனது சோதிவாய்த் திறந்து போடானாவிடம் பேசினான். 'தன்னைத் தேடி வருவோரிடம், தனது விக்கிரகத்தின் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொன்னால், வந்தவர்கள் நகைகளுடன் திரும்பிச் செல்வார்கள்; வருந்தாதே!' என்றார் பகவான். ஆனால், போடானாவோ எடைக்கு எடை பொன் தரும் அளவுக்குச் செல்வந்தன் இல்லை! அவன் மனைவி, கடவுளின் கருணையை நன்கு உணர்ந்தவள். தராசின் ஒரு தட்டில் கடவுளின் விக்கிரகத்தையும் மற்றொரு தட்டில் தனது சிறு மூக்குத்தியையும் வைத்தாள். என்ன ஆச்சர்யம்! மூக்குத்தி வைத்த தட்டு, கனமாகிக் கீழிறங்க, கண்ணனின் விக்கிரகம் உள்ள தட்டு மேலே உயர்ந்து நின்றது. வந்தவர்கள் குழம்பியபடி கிளம்பிச் சென்றனர். பக்தியானது, எதையும் சாதிக்க வல்லது என்பதற்கான சாட்சி இது! சரி துவாரகை நாயகனே டாகோரில் தரிசனம் தருகிறார் எனில், துவாரகையில் நாம் வணங்கும் கிருஷ்ண விக்கிரகம் எப்போது, யாரால் நிறுவப்பட்டது? நாளை காணலாம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் தொடரும் ....
🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம் 🙏*
தஸாவதாரம்
ஸ்ரீகிருஷ்ணாவதாரம்
பகுதி 33
பிரபாஸ க்ஷேதரம் (சோம்நாத்), குஜராத்;
ஸ்ரீகிருஷ்ணரின் பிரிவை விட்ட இடத்தில் இருந்து தொடருவோம். பகவான் தன்னுடைச் சோதியான வைகுண்டத்திற்குச் சென்ற இந்த ப்ரபாஸ க்ஷேத்திரம் குஜராத்தின் செளராஷ்டிராவின் தென் கடற்கரையில் அமைந்துள்ளது. இந்த க்ஷேத்திரத்தின் பெருமையை ஸ்காந்த புராணமும் சொல்லுகின்றது. ப்ரபாஸ காண்டம் என்ற பெயரிலேயே ஒரு காண்டம் உள்ளது ஸ்காந்தத்தில். ப்ரபாஸ காண்டத்தில் முதலில் சோமநாத்தைப் பற்றியும், பின்னர் கிர் மலைக்காடுகள் பற்றியும், பின்னர் மவுண்ட் அபு (அற்புத மலைகள்)பற்றியும், கடைசியில் துவாரகை பற்றியும் குறிப்புகள் வருகின்றன. சோமநாத்தில் உள்ள தீர்த்தம் பற்றிச் சொல்லும் அத்தியாயத்தில் இந்த தீர்த்தத்தின் மகிமை பற்றிச் சொல்லப் பட்டிருக்கின்றது.
பிரபாஸ க்ஷேத்திரத்தில் ஹிரண்யா, கபிலா, ஸரஸ்வதிநதி சங்கமிக்கும் சமுத்திரம் சோமநாதர், (அம்பிகையுடன் கூடிய சோமநாதர்), சோமன் என்ற பெயரால் அழைக்கப் படும் சந்திரன், சோமநாதரின் தரிசனம் ஆகியவையுடன் பித்ரு தர்ப்பணம் முக்கியத்துவம் பெற்றிருந்தது. கிரஹணம் சம்பவிக்கும் சமயம் லட்சக்கணக்கான பக்தர்கள் கடற்கரையில் கூடி கடல் நீராடி சோமநாதருக்கு வழிபாடுகளும், முன்னோருக்கு நீத்தார் கடனும் செய்தனர். பின்னால் காலப் போக்கில் ஸரஸ்வதி நதி மறைந்து போய் விட்டது. இங்கே உள்ள சமுத்திரக் கரையில் கிருதஸ்மார மலை என அழைக்கப் பட்ட மலையில் இருந்து இந்த க்ஷேத்திரம் மேற்கே அமைந்திருந்தது. இந்த கிருதஸ்மார மலையும் இப்போது காணக்கிடைக்காத ஒன்று. ஸரஸ்வதி, பிப்பலனுக்குக் கிடைத்த அக்னியை ஏந்திக் கொண்டு வந்து சமுத்திரத்தில் விட்டதால் புனிதம் இழந்து இருக்கின்றாள். ஆனால் கிருதஸ்மார மலை அரசனோ ஸரஸ்வதியைக் கண்டு மணக்க எண்ணுகின்றான். அவள் புனிதமாய் இல்லை என்றாலும் பரவாயில்லை என அவளைத் தன்னில் தாங்குகின்றான். ஸரஸ்வதியோ தான் அக்னியை சமுத்திரத்தில் விட்டபின்னர் புனித நீராடிவிட்டு வருவதாய்ச் சொல்லுகின்றாள். ஸரஸ்வதியின் கை அக்னி கிருதஸ்மாரனைத் தாக்குகின்றது. அக்னியின் கடுமை தாங்காமல் மலை அரசன் தூள் தூளாய்ப் போய் சாம்பல் ஆகிவிடுகின்றான். உடைந்த மலைக் கற்கள் எங்கும் பரவுகின்றன. அந்தக் கற்களே இப்போது கோயில்கள் கட்டப் பெருமளவில் பயன்படுவதாய் உள்ளூர் மக்கள் சொல்லுகின்றனர்.
ஸ்ரீகிருஷ்ணர் சோம்நாத்திற்கு அருகே உள்ள வெராவல்லில் தான் பாலிகா தீர்த்தம் என்னும் தீர்த்தக் கரையில் அரச மரத்தடியில் யோகத்தில் ஆழ்ந்திருந்தபோது பாதத்தில் ஜரா என்னும் வேடன் அம்பு எய்து விடுகின்றான். இந்த அரசமரத்தைச் சுற்றியும் ஒரு கோயில் அமைக்கப்பட்டுள்ளது. வெராவலில் இருந்து ஒன்றரை மைல் நடந்தே, ஸ்ரீகிருஷ்ணரை பலராமர் மெல்ல மெல்ல இங்கே கொண்டு வந்து சேர்க்கின்றார். இங்கே வந்ததும் ஓர் ஆலமரத்தடியில் படுக்க, பலராமரோ தங்கள் இருவருக்கும் முடிவு வந்துவிட்டதை உணர்ந்து, அங்கே உள்ள ஒரு குகைக்குள் சென்று பாதாளத்தில் மறைகின்றார். அந்தக் குகை தாவுஜியின் குகை என்ற பெயரில் ஒரு கோயிலாக அமைந்துள்ளது. ஸ்ரீகிருஷ்ணரும் அங்கேயே தன் உயிரைப் போக்கிக் கொண்டு வைகுந்தம் சென்று விடுகின்றார். பாம்பாக உருமாறிச் சென்ற தன் அண்ணனையும், தன்னைத் தானே தன் சுய உருவிலும், பிரம்மா, சிவன் போன்ற மற்றத் தெய்வங்களையும் கண்ட ஸ்ரீகிருஷ்ணன் தாமரை போன்ற தன் நயனங்களை அழுந்த மூடிக் கொண்டார். ஸ்ரீகிருஷ்ணரின் பாதங்கள் ஒரு சிற்ப உருவில் பதிந்துள்ளது. பின்னர் மெல்ல மெல்ல தன் மானுட உடலை விடுத்துத் தன் சுய உருவோடு யோக முறைப்படி கலந்தார் என பாகவதம் சொல்லுகின்றது. ஒரு கீதா மந்திரும் அமைத்திருக்கின்றனர். அருகேயே ஹிரன்யா நதிக்கரையில் லட்சுமி நாராயணன் கோவில் அனைவருக்கும் உள்ளது. ஸ்ரீகிருஷ்ணர் அருள் பரிபூரணமாய்க் கிட்டட்டும். இந்த இடம் யாதவா ஸ்தலி என்றும் அழைக்கப்படுகிறது.
டாகூர் துவாரகா, ஆனந்த, குஜராத்.
நாடியாத் எனும் ஊருக்கு முன்னதாக அமைந்துள்ளது, டாகோர் நகரம். இங்கு அருள்புரியும் இறைவனின் திருநாமம் ரணசோட் ராய்; 'யுத்தத்தைத் துறந்து ஓடிய தலைவன்' என்று அர்த்தம். ஸ்ரீகண்ணன் வடமதுரையை ஆட்சி செய்த காலத்தில், அந்த நகரின் மீது 18 முறை படையெடுத் தான் ஜராசந்தன். ஒவ்வொரு முறையும் இவன் தனது படைகளை இழந்ததுதான் மிச்சம்! 17 மற்றும் 18வது யுத்தத்துக்கு இடையில், கால யவனன் எனும் தீயவன், யாதவர்களும் தன்னைப் போன்று பலம் உடையவர்கள் எனும் சேதியை நாரதர் மூலம் அறிந்து, மூன்று கோடி வீரர்களுடன் படையெடுத்து வந்தான். உடனே, பலராமனுடன் ஆலோசித்த கண்ணன், கடலின் நடுவே 12 யோசனை அளவுள்ள அரணையும், துவாரகை நகரையும் நிர்மாணித்தார் (1 யோசனை= 10 மைல்). பிறகு, தமது வல்லமையால், மதுரா மக்களை துவாரகையில் சேர்த்தார். பின்னர் மீண்டும் மதுராவுக்கு வந்து, பலராமருடன் ஆலோசித்து, தாமரை மாலையை அணிந்து, ஆயுதம் ஏதுமின்றி, பட் டணத்தின் வாசலில் இருந்து புறப்பட்டார். நாரதர் மூலம் கண்ணனின் அங்க அடையாளங்களை அறிந்து வைத்திருந்த கால யவனன், அவரைப் பின் தொடர்ந்தான். யோகிகளாலும் நெருங்கமுடியாத பரமபுருஷனைப் பிடிக்க முயன்றான் அவன்!
வெகுதூரம் சென்ற கண்ணன், இறுதியில் ஒரு மலைக் குகைக்குள் சென்று மறைந்தார். அவரைத் தொடர்ந்து குகைக்குள் நுழைந்த கால யவனன், அங்கே படுத்திருந்த நபரைக் கண்ணன் என்று கருதி, கோபத்துடன் உதைத்தான். அந்த நபர் விழித்தெழுந்து பார்த்ததும், கால யவனன் எரிந்து சாம்பல னான். அந்த நபர்... முசுகுந்தன்; இஷ்வாகு வம்சத்தில் வந்த மாந்தாதாவின் மைந்தன். போர் ஒன்றில் தேவர்களுக்கு உதவிய தால், அவர்களிடம் இருந்து ஒரு வரம் பெற்றிருந்தார் முசுகுந்தன். வெகுகாலம் உறங்காமல் இருந்த முசுகுந்தன், நன்கு உறங்குவதற்கு ஏற்றவாறு ஆள் அரவமற்ற ஓர் இடத்தைக் காட்டும்படி வேண்டினார். தேவர்களும் இந்தக் குகையைக் காட்டி, ''நீங்கள் இங்கே படுத்துக்கொள்ளலாம். உங்களை எவரேனும் எழுப்பினால், நீங்கள் எழுந்து பார்த்ததும், அவர்கள் எரிந்து சாம்பலாவார்கள்'' என வரமளித்தனர். முசுகுந்தன் பெற்ற அந்த வரத்தை, கால யவனனை அழிக்கப் பயன்படுத்திக்கொண்டார் பகவான். ஆக, கால யவனனுடன் யுத்தம் செய்யாமல் ஓடியதால், ரணசோட் ராய் என்று கண்ணனுக்குப் பெயர் அமைந்ததாம்!
கோமதி துவாரகையின் மூலமூர்த்தியே, தற்போது டாகோர் துவாரகையின் மூலவராகத் திகழ்கிறாராம். இதற்குக் காரணம், போடானா எனும் பக்தர்!
துவாரகாதீசனிடம் அளவற்ற அன்பு வைத்திருந்த போடானா, தள்ளாத வயதிலும் வருடந்தோறும் துவாரகைக்குச் சென்று, கண்ணனைத் தரிசிப்பது வழக்கம். அடுத்தடுத்த காலங்களில் தன்னால் துவாரகைக்குச் செல்ல முடியுமோ முடியாதோ எனும் கலக்கத்துடன் பகவானை வேண்டிக் கொள்வார். அவருக்காக டாகோருக்கே செல்லத் தீர்மானித்தார் பகவான்.
எருதுகள் பூட்டப்பட்ட போடானாவின் வண்டியில் அமர்ந்து இறைவன் வந்தாராம். வண்டியை ஓட்டிய போடானா பாதி வழியிலேயே களைப்படைய, பின்பு கண்ணனே வண்டியை ஓட்டிவந்தாராம். அர்ஜுனனுக்காக குதிரைகள் பூட்டிய தேரை ஓட்டிய பரந்தாமன், பக்தர் போடானாவுக்காக மாட்டுவண்டியை ஓட்டினான். அதுதான், இறை அன்பு! டாகோர் சாலையில் ஒரு வேப்ப மரத்தைப் போற்றித் தொழுகின்றனர் பக்தர்கள். போடானாவுடன் வந்தபோது, சற்றே இளைப்பாறுவதற்காக இந்த மரக் கிளையில் சாய்ந்து நின்றாராம் கண்ணன். இன்றும், அந்த மரக் கிளையின் இலைகள் மட்டும் இனிப்பாக திகழ்கின்றன!
இதனிடையே, மூலவரைக் காணாமல் துவாரகையே கவலையில் ஆழ்ந்தது. பகவானும் இதையறிந்தார். துவாரகையில் இருந்து தன்னைத் தொடர்ந்து வந்துவிட்ட கோமதி நதியின் கரையில் தன்னை ஒளித்து வைக்கும்படி, போடானாவைப் பணித்தார். அந்தப் பக்தரோ, 'எங்கே நம் இறைவனைக் கண்டு அழைத்துச் சென்றுவிடுவார்களோ' என்று பதறினார். அப்போது, 'உள்ளவாருள்ளிற்றெல்லாம் உடனிருந்து அறியுமவனான' என கண்ணபிரான், தனது சோதிவாய்த் திறந்து போடானாவிடம் பேசினான். 'தன்னைத் தேடி வருவோரிடம், தனது விக்கிரகத்தின் எடைக்கு எடை பொன் தருவதாகச் சொன்னால், வந்தவர்கள் நகைகளுடன் திரும்பிச் செல்வார்கள்; வருந்தாதே!' என்றார் பகவான். ஆனால், போடானாவோ எடைக்கு எடை பொன் தரும் அளவுக்குச் செல்வந்தன் இல்லை! அவன் மனைவி, கடவுளின் கருணையை நன்கு உணர்ந்தவள். தராசின் ஒரு தட்டில் கடவுளின் விக்கிரகத்தையும் மற்றொரு தட்டில் தனது சிறு மூக்குத்தியையும் வைத்தாள். என்ன ஆச்சர்யம்! மூக்குத்தி வைத்த தட்டு, கனமாகிக் கீழிறங்க, கண்ணனின் விக்கிரகம் உள்ள தட்டு மேலே உயர்ந்து நின்றது. வந்தவர்கள் குழம்பியபடி கிளம்பிச் சென்றனர். பக்தியானது, எதையும் சாதிக்க வல்லது என்பதற்கான சாட்சி இது! சரி துவாரகை நாயகனே டாகோரில் தரிசனம் தருகிறார் எனில், துவாரகையில் நாம் வணங்கும் கிருஷ்ண விக்கிரகம் எப்போது, யாரால் நிறுவப்பட்டது? நாளை காணலாம்.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
வானமாமலை ராமானுஜ ஜீயர் திருவடிகளே சரணம் 🙏🙏🙏
நாளையும் ஸ்ரீகிருஷ்ணாவதாரம் தொடரும் ....
🙏 சர்வம் கிருஷ்ணார்ப்பனம் 🙏*
No comments:
Post a Comment